11/4/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: செல்வச் சன்னதி முருகன் கோயில். தொண்டைமான் ஆற்றங்கரை. வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் ஸ்ரீ லங்கா.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!!
அப்பனே இத்திருத்தலத்திற்கு பல மகிமைகள்..அப்பனே உண்டப்பா!!!... இதனால் அப்பனே!!! இதை யார் அறிவார்??? அப்பனே!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது கலியுகத்தில் பின் மனிதன் தேடித்தேடி செல்வானப்பா!
அப்பனே எங்கேயாவது????? நிச்சயம் தன்னில் கூட வெளிச்சம் கிடைக்குமா???? என்று அதாவது வாழ்க்கைக்கு ஒரு தீர்வு கிடைக்குமா????
என்று!!!
ஆனாலும் அப்பனே இதை பயன்படுத்திக் கொண்டு அப்பனே சிலர் நிச்சயம் தன்னில் கூட.....
அப்பனே பல வகையிலும் கூட.. அப்பனே மாந்திரீகத்தை கற்றுக் கொள்வார்கள்.
அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட பின் மாந்திரீகத்தை பயன்படுத்தினால் உடனடியாக அனைத்தும் நிறைவேறி விடும்.. அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் வரவழைத்து விடலாம் என்றெல்லாம்.......கூறி பின் இவ்வளவு காசுகள் கொடுத்தால் அனைத்தும்.. உன்னிடத்தில் வரவழைத்து விடலாம் என்று.
ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அதற்கு ஆயுசு (ஆயுள்) அப்பனே வெறும்.. இரண்டு ஆண்டுகளே என்பேன் அப்பனே!!
(மாந்திரீகத்தின் பலன் காலக்கெடு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டும்)
பின்பு அப்பனே நிச்சயம் இவை முடித்திட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பன்மடங்கு அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பல ஆண்டுகள் வருத்தப்பட வேண்டியது தான் என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே மனிதனுக்கு இவையெல்லாம் பின் தெரியாதப்பா !!!!
அதனால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவையெல்லாம் பின் நீக்குவதற்கு அப்பனே நிச்சயம் அப்பனே யாங்கள் சித்தர்கள் பல திருத்தலங்களை அமைத்தோம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட. !!!
அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் பரிசுத்த ஆன்மாக்கள் மூலம் அப்பனே பின் ஞானத்தை பின் பெற்று அப்பனே பின் திருத்தி இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட!!!
(மாந்திரீகத்தை கடைப்பிடித்து பாதிக்கப்பட்டவர்களும் சரி... எங்க செல்வது எப்படி செல்வது எங்கு சென்றாலும் நலமாகும் என்று அலைந்து திரிபவர்களுக்கும் சரி!!
பரிசுத்த ஆன்மாக்கள் அதாவது ஞானிகள் ஜீவசமாதி அடைந்தவர்கள் இவர்கள் மூலம் ஞானத்தையும் நல்வழியும் கிடைக்கப்பெற்று அவர்கள் மூலம் திருந்துவதற்கு சித்தர்கள் வாய்ப்புகள் ஏற்படுத்தி தருகின்றார்கள் என்று குருநாதர் கூறுகின்றார்)
ஆனாலும் கலியுகத்தில் அப்பனே குறுக்கு வழியில்... எப்படி பின் பிழைக்கலாம்??? என்பதுதான் அப்பனே பின் நிச்சயம் யோசிப்பார்களப்பா!!!
அப்பனே நிச்சயம் உண்மை தெய்வத்தை.. அப்பனே வணங்கி நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் தெய்வம் மெதுவாயினும் நிச்சயம் அனைத்தும் கொடுக்கும் என்பதையெல்லாம் அப்பனே யோசிக்க மாட்டார்களப்பா!!!
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் எதனால்? வந்தது வினை என்றால்???? அப்பனே நிச்சயம் அப்பனே அழகாகவே பல புத்திகளை நிச்சயம் பின்.. அதாவது அப்பனே கொடுத்து அப்பனே பல வழிகளிலும் கூட அழகாகவே அப்பனே பின் அதாவது இறைவன் அனுப்புகின்றானப்பா!!!
ஆனால் மனிதர்களின் எண்ணங்களோ!?!?!?!?....
அப்பனே ஆனாலும் இதற்கு காரணம்.. அப்பனே பின் இறைவன் தானே பின் படைத்தான் என்பதை கூட..... அப்பனே நிச்சயம் தன்னில் கூட..
ஆனாலும் அப்பனே நல் புத்திகளாகத் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் படைத்தானப்பா!!
பின் ஒன்றும் தெரியாமல் தான் அப்பனே.. அதாவது பொம்மையை நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது பின் அதனை காக்க.. இருவர் கூட... நிச்சயம் வைத்தானப்பா!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் இருவர்கள் அப்பனே... சிறிது நேரம் (காலம்) அப்பனே காப்பாற்றுவார்கள்!!
ஆனாலும் அப்பனே அப்படியே விட்டுவிடுவார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும் பின் அவ் இருவர்கள் அப்பனே நிச்சயம் அதாவது தாய் தந்தையர் அப்பனே.!!
நிச்சயமாக பின் அறிந்தும் கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சரியாகவே அவ் பொம்மையை அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே வளர்த்திட்டால் அப்பனே நிச்சயம் அவ் தாய் தந்தைக்கும் புண்ணியம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட.
அதனால் அப்பனே அதாவது பின் வளர்த்ததற்கு.. தன் அதாவது அவ் பொம்மையும் கூட அப்பனே நன்றி காட்டினால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அறிந்தும் எதை என்று புரிய அப்பனே.. பின் நன்றி பின் அறிந்தும் கூட.
இதனால்தான் அப்பனே.. இதுவும் ஒரு புண்ணியமப்பா!! இவருக்கும் புண்ணியம் நிச்சயம் தன்னில் கூட அவ் பொம்மைக்கும் புண்ணியம் அப்பனே. அவ் பொம்மை என்பது குழந்தையை என்று அப்பனே.. நீங்களே அறிவீர்களாக!! அப்பனே!!!
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே எதை முதலில் அப்பனே அறிந்தும் பின் எதை என்று புரிய அப்பனே..
எதனை?? முதலில் கூட பின் உருவாக்க வேண்டும்???.. எதனையும் கூட?? எதை என்று அறிய அறிய அப்பனே புண்ணியத்தை!! உருவாக்க வேண்டும் முதலில் அப்பனே.!!!
இதனால் அப்பனே.. தாய் தந்தையர்.. தம் தன் குழந்தைகளுக்கு அப்பனே பின் புண்ணியத்தை பின் இப்படி நிச்சயம் தன்னில் கூட செலவழித்தால் தான்.. அப்பனே வெற்றிகள் உண்டாகும் என்பதையெல்லாம் அப்பனே கற்றுக் கொடுக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே உலகத்தில் அப்பனே.
ஆனாலும் மனிதனின் எண்ணங்கள் அப்பனே கீழ்தரமாகவே பின் போய்க்கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பின் இவ் மாந்திரீகத்தை பற்றி இப்பொழுது யான் நிச்சயம் உரைக்க போகின்றேன் அப்பனே!!
அப்பனே அதாவது ராமேஸ்வரத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அப்பனே ஒரு சிவனடியான்(சிவ பக்தர் ஒருவர்) அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே ஈசனையே நினைத்து நினைத்து அப்பனே பின் பார்வதி தேவியையும் கூட நினைத்து நினைத்து வாழ்ந்து வந்தான் அப்பனே!!!
அதாவது அப்பனே ஈசனையும் கூட நிச்சயம் தன்னில் கூட... அதாவது பின் பார்வதி தேவியையும் கூட... அதாவது அன்னை தந்தையாராக நினைத்து.. பின் அனைத்தும் செய்து வந்தான் என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவந்தனுக்கு பல உயர்வுகள் கிடைத்ததப்பா.. அதனால் அன்னச்சத்திரங்கள் இன்னும் இன்னும் பல மக்களுக்கு தொண்டாற்றினான் என்பேன் அப்பனே.
ஆனாலும் இதை தன் அப்பனே பின் மனதில் கொண்டு இவனை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்றெல்லாம் அப்பனே!!! பொறாமை கொண்டு சில மனிதர்கள் அப்பனே!!
ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட எதை என்று புரிய அப்பனே பின்... இவனை பின் எப்படியாவது கவிழ்க்க வேண்டும்... நிச்சயம் தன்னில் கூட...
நாம்தான் உயர வேண்டும் என்றெல்லாம்...
இவன் உயர்ந்து கொண்டே!!!........ இருக்கின்றானே!!!! என்று!!!!
ஆனாலும் அப்பனே இதற்கு அறிந்தும் கூட பின் நிச்சயம் தன்னில் கூட பின் அங்கு கூடி பேசினார்கள்!!!
நிச்சயம் இவந்தனை உடைக்க!!!...நிச்சயம் யாராலும் முடியாது இப்பொழுது..
(அவரோடு நேரடியாக மோத முடியாது)
ஆனாலும் மாந்திரீகத்தில் சென்றால் இவனை உடைத்து விடலாம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
இதனால் அப்பனே பின் ஒரு மாந்திரீகவாதியை அழைத்து நிச்சயம் பின் இவனுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று.
ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் தடுமாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பேன் அப்பனே... பல வகையிலும் கூட இவந்தன் இறக்க வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!
ஆனாலும் அப்பனே இவை தெரிவதே இல்லை என்பேன் அப்பனே.
பிரம்மாவின் தீர்ப்பு அப்பனே தீர்ப்புதான் என்பேன் அப்பனே!!!
இதனால் அப்பனே அவ் சிவ பக்தனுக்கு நிச்சயம் சிறிது சிறிதாக கால் ஊனம் ஆனது என்பேன் அப்பனே. அவை மட்டும் இல்லாமல் உடம்பு.... அப்பனே நிச்சயம் உடம்பில் நோய்கள் கண்ணில் கூட பல நோய்கள் ஏற்பட்டு விட்டது என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே பின் அவன் ஈசனை நினைத்து நிச்சயம் அப்பனே ஈசனே அறிந்தும் எவை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம்.. உன்னை நினைத்தே!!! உந்தனுக்கு பூஜைகள் செய்து வருகின்றேன் நிச்சயம்.. தாய் தந்தையாகவும் பின் உங்களைத்தான் பின் எண்ணி இருக்கின்றேன்!!
ஆனாலும் அறிந்தும் கூட எதை என்றும் கூற நிச்சயம் தன்னில் கூட...
ஆனாலும் யாரும் இல்லையே!!!!
நீதான்... பின் உங்களையே தாய் தந்தையாக எண்ணி வாழ்ந்திட்டு வந்தேன்!!
ஆனாலும் பல இன்னல்கள் அறிந்தும் கூட பல இழியோர்கள் இவ்வாறெல்லாம் செய்து விட்டார்களே!!!
பின் ஈசா!!!!.... நிச்சயம் தன்னில் கூட யான் எவ்வாறு?? என்று!!!
ஆனாலும் நிச்சயம் ஈசன் புரிந்து கொண்டான் நிச்சயம்.. நம்மீது உண்மையான அன்பு வைத்திருக்கின்றான்!!!
இதற்காகவாவது இறங்கி நிச்சயம் பின் போக வேண்டும் என்பதற்கிணங்க நிச்சயம் தன்னில் கூட... ஈசனும் கூட நிச்சயம் ஒரு முதியவன் போல் வேடமணிந்து அதாவது மறுரூபத்தில் வந்தான் அறிந்தும் கூட!!
அப்பனே அறிந்தும் கூட பின்... வந்து!!!... அப்பனே எப்படி! வாழ்ந்தவன்? நீ!!!
அனைத்தும் பெற்றிட்டு வாழ்ந்தாய்!!! இப்பொழுது நோய்வாய் பட்டுள்ளாய்!!
நிச்சயம்
உந்தனுக்கு என்ன?? எதை என்று புரிய!!!
நிச்சயம் அவந்தனும் சொன்னான் யான் அதாவது ஈசனையும் கூட பார்வதி தேவியையும் கூட நினைத்து நினைத்து வாழ்ந்திட்டேன்.
ஆனாலும் பின் வந்தது!!?!
இவந்தன் பக்திக்கு.. ஏற்றார் போல் தெரிய வரும்!!
(வந்தது ஈசன் என்று அவருடைய பக்தியால் அதன் மூலம் கிடைத்த அருளால் அவரால் ஈசன் என்று உணர்ந்திருக்க முடியும்)
ஆனாலும் நிச்சயம் ஈசன் மறைத்து விட்டான். நிச்சயம் தன்னில் கூட மதி மயக்கி கூட!!
நிச்சயம் தன்னில் கூட இதனால் அறிந்தும் எதை என்று புரியாமலும் கூட தெரியாமலும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் ஏன் எதற்கு என்றெல்லாம் நிச்சயம்.. இதனால் பின் அதாவது... ஈசனும் அதாவது முதியவனும் கூட!!!
நிச்சயம் நீ கவலைப்பட வேண்டாம்!!
அதாவது.. நிச்சயம் அதாவது நீ !!!அக்னி தீர்த்தத்தில் நீராடு முதலில்!!!
நிச்சயம் தன்னில் கூட நீராடி பின் அதாவது அனைத்து தீர்த்தங்களிலும்.. நீராடு!! நிச்சயம் சில வினைகள் போகும் என்று. !!!
(ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரே உள்ள கடலே ''அக்கினி தீர்த்தம்'' ஆகும்)
(ராமேஸ்வரத்தில் இருக்கும் 22 தீர்த்த கிணறுகளிலும் மகாலட்சுமி தீர்த்தம்
சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள்
சேது மாதவ தீர்த்தம்
கந்தமதான தீர்த்தம்
கவட்சா மற்றும் கவய தீர்த்தம்.
நள மற்றும் நீல தீர்த்தங்கள்
சங்கு மற்றும் சக்கர தீர்த்தங்கள்.
பிரம்மஹத்தி விமோச்சன தீர்த்தம்.
சூரிய & சந்திர தீர்த்தங்கள்.
கங்கை, யமுனை மற்றும் கயா தீர்த்தங்கள்.
சிவா மற்றும் சத்யாமிர்த தீர்த்தங்கள்.
சர்வ தீர்த்தம்.
கோடி தீர்த்தம்.
இந்த 22 தீர்த்தக்கிணறுகளை பற்றியும் ராவணனுக்கு உள்ள தொடர்பை பற்றியும் குருநாதர் இலங்கையில் திரிகோணமலை அருகே உள்ள ராவணன்.. வேலு புனித வெண்ணீர் ஊற்றுக்கிணறுகள்.. வாக்கில் கூறியிருக்கின்றார் சித்தன் அருள் 1656.ல் வெளிவந்துள்ளது.. அதை மீண்டும் படிக்கும் பொழுது தீர்த்தக் சின்னர்களின் மகிமை புரியும்)
பின் நிச்சயம் முதியவரே!!!!!!............ பின் அறிந்தும் கூட ஏன்... நீங்கள் மட்டும்!?! எந்தனுக்கு...!!?
எந்தனுக்கு உதவிட ஆள் இல்லை!!!
ஆனாலும் நீங்கள் மட்டும் ஏன்.. உதவுகின்றீர்கள் என்று அவந்தன் கேட்க!!
நிச்சயம் இதற்கு பல சம்பந்தங்கள் உண்டு நிச்சயம்..!!!
உனை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்... உன் கைகளாலும் யான் அன்னத்தை உண்டேன்.. இதனால் தான் என்று பின் நிச்சயம் தன்னில் கூட பின்!! என்றும் முதியவனும் கூற!!
இதனால்தான் அப்பனே எதை என்று புரிய புண்ணியங்கள் அவசியமாகின்றது இங்கு அப்பனே.
புண்ணியங்கள் இங்கு இல்லை என்றால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவரும் பின் எதனாலும் தாக்க முடியாதப்பா!! சொல்லிவிட்டேன்!!
இதனால் அப்பனே பின் நல்விதமாக நீராடி விட்டு நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் நிச்சயம் இங்கிருந்து பின் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!!
பின் முதியவன் வேடத்தில் வந்த ஈசன் அவனிடம்!!!!
பின் நீ ஒரு இருபது நிச்சயம் தன்னில் கூட.. மைல் தொலைவிற்கு செல்...
(ராமேஸ்வரத்திலிருந்துகடல் மார்க்கத்தில் அருகே இருக்கும் ஸ்ரீலங்கா செல்வ சன்னதி முருகன் இருக்கும் ஆலய பகுதிக்கு)
நிச்சயம் அங்கு ஒரு பின் சிவலிங்கம் இருக்கும்!!! அதை எடுத்துக்கொண்டு நிச்சயம் பின் சென்று கொண்டே இரு!!!
பின் உந்தனுக்கு பளு!!
எங்கு நிச்சயம் தன்னில் இருக்கின்றதோ!??!!!
அங்கே வைத்து விடு... பின் வைத்து விட்டால்
நிச்சயம் பின்.. அனைத்தும் மாறிவிடும் என்று.
(சிவலிங்கத்தை தூக்கிச் செல்லும் பொழுது பளு அதாவது எடை அதிகமாக உள்ளது!! முடியவில்லை!!!
என்று எங்கு தோன்றுகின்றதோ அங்கு அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடு !!என்று அப்படி செய்தால் அவர் உடலில் இருக்கும் வியாதிகள் மாறி பழைய நிலைமைக்கு வந்துவிடலாம் என்று முதியவர் அதாவது ஈசன் கட்டளை)
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால் அப்பனே பின் உண்மையான இறைபக்தியும் கூட அப்பனே அன்பும் இருந்தால் அப்பனே!!! இறைவனே வந்து உதவிகள் செய்வானப்பா!! நிச்சயம்!!
அப்பனே எவரையும் நம்பக்கூடாது... இறைவனையே நம்பி இருத்தல் வேண்டும்.
அன்பே மூலாதாரம் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பின் அவந்தனும் பின் ஏதாவது அப்பனே பின் முதியவன் (ஈசன்) சொன்னது போல நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே பின்!!
லிங்கத்தை!!.. அங்கு சென்று அழகாகவே அறிந்தும் கூட எடுத்து வந்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!
அவ்வாறு எடுத்து வருகின்ற பொழுது அப்பனே நிச்சயம் எதை என்று புரிய ஒரு....
அதாவது இதனையும் கூட ஈசன் தான்.. எதை என்று புரிய அப்பனே!!
(ஈசனின் ஏற்பாடு அதாவது ஈசனின் சோதனை)
பின் அறிந்தும் எதை என்று அறியாமலும் கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது
(கடல் மார்க்கமாக இலங்கை சென்று. சன்னதி முருகன் இருக்கும் இடத்தில் இருந்து சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு. வரும் பொழுது)
""""திமிங்கலம் அறிந்தும் எதை என்று அறிய அறிய.... அப்பனே முட்ட!!!
(சிவலிங்கத்தை எடுத்துச் செல்லும் பொழுது ஒரு திமிங்கலம் வந்து இடித்தது)
அப்பனே பின் அதை அப்படியே அப்பனே லிங்கத்தை விட்டு அப்பனே...
இதனால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் ஓடினான் எதை என்று புரிய!! நிச்சயம் தன்னில் கூட!!!... ஆனாலும் உயிரை காப்பாற்ற!!!
அப்பனே எதை என்று அறிய அறிய... நிச்சயம் திமிங்கலம் தள்ளிற்று!!!
இதனால் நிச்சயம் சிவலிங்கம் கீழே போயிற்று!!!...( சிவலிங்கம் கடல் நீருக்குள்)
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் இப்படி ஆயிற்றே என்று... தேடினான்!!! தேடினான்!! கிடைக்கவில்லை.
(ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை கடல் பகுதிக்கு நடந்தும் செல்ல முடியும் அப்படித்தான் கடல் பிரதேசம் முதலில் இருந்தது)
நிச்சயம் இதற்கு பரிகாரமாக யான் என்ன செய்வது?? என்று அழுது கொண்டே மீண்டும் பின் ராமேஸ்வரத்திற்கு சென்றான்!!... பின் அதாவது இங்கிருந்தே!!!!
(இலங்கையிலிருந்து) அறிந்தும் எதை என்று புரிய புரிய நிச்சயம்..
ராமேஸ்வரம் சென்று பின் அதாவது முதியவன் எங்கு?? முதியவன் எங்கே?? என்று பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய பின் அதாவது!!
யான் எதை என்று யான் சொல்ல???????????
ஆனாலும் மீண்டும் அவ் முதியவன் (ஈசன்) வந்தான்!
ஏனப்பா??? எதை என்று புரிய புரிய... அழகாக (சிவலிங்கத்தை) வைத்துவிட்டு வந்தாயா? என்று!!
நிச்சயம் இல்லை!!!
அதாவது பின் பின் யான் எடுத்துக் கொண்டே சென்றேன் லிங்கத்தை!!!... ஆனாலும் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட ஆனாலும்... பின் ஒரு திமிங்கிலம்.. எதை என்று அறியும் அளவிற்கு நிச்சயம் பின் வந்தது.
ஆனாலும் நிச்சயம் அதை தள்ளிற்று!!! லிங்கம் கீழே சென்று விட்டது!!.. எங்கே என்று தேட முடியவில்லயே... என்றெல்லாம்...
நிச்சயம் தன்னில் கூட பின் அவ்வாறாகவே... நிச்சயம் பின் இவ்வாறாக உந்தனுக்கு என்ன கட்டளை இட்டேன்?????? என்றெல்லாம் அவ் முதியவனும் கூட..
நிச்சயம் நீ மீண்டும் இன்னொரு முறை செல்!!!
.நிச்சயம் அது கிடைக்கும்!!... அதை பின் அழகாக எடுத்துச் செல் என்று!!!
நிச்சயம் தன்னில் கூட அழகாகவே அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அழகாகவே அதாவது பின் மீண்டும்.. வந்தான்.
நிச்சயம் தன்னில் கூட பின் அது... (சிவலிங்கம்) அடியில் பின் இருந்தது... ஆனாலும் அங்கிருந்தே நிச்சயம் தன்னில் கூட..எழ!!!
(சிவலிங்கம் கீழிருந்து மேலே எழும்பியது)
நிச்சயம் பின் அதை தூக்க இவனால் பின் முடியவே இல்லை... நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறாக பின் தூக்கி தூக்கி அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட...
அதாவது பின் அறிந்தும் கூட அதாவது அங்கேயே வைத்து விட்டான்... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்...அவ் முதியவன் நிச்சயம் தன்னில் வந்தான்!!!
(ராமேஸ்வரத்தில் இருந்து சன்னதி முருகன் கோவில் இருக்கும் பகுதிக்கு அதாவது சிவலிங்கம் இருக்கும் இடத்திற்கு)
அப்பா!!.. பின் அதாவது பின் வந்துவிட்டான்.. நிச்சயம் தன்னில் கூட பின்...
அதாவது பின் நீங்கள் அங்கே தான் பின் (ராமேஸ்வரத்தில்) இருந்தீர்களே!! நிச்சயம் பின் ஏன் ? இங்கு வந்து விட்டீர்கள்? என்று!!
அவ் முதியவன்!!! நிச்சயம் தன்னில் கூட... அழகாகவே நிச்சயம் பின் அதாவது... தன் சுயரூபத்தை காட்டினான் ஈசன்!!!
பின் அதாவது அவந்தனை பார்த்து!!!
குழந்தாய்!!
நிச்சயம் தன்னில் கூட
அறிந்தே நிச்சயம் எதை என்று புரிய பின் எம்முடைய ஆசிர்வாதங்கள்...
அதாவது நிச்சயம் தன்னில் கூட யானே தான் அழைத்தேன் உன்னை இங்கு.
நிச்சயம் பின் அதாவது பின் குறைகள் வேண்டாம்...
பின் இவ்வாறெல்லாம் மக்கள் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம்.
(ராமேஸ்வரத்தில் போட்டி பொறாமைகளோடு இருந்த மக்கள்)
நிச்சயம் தன்னில் கூட அதாவது இங்கேயே இருந்திடு... மறைமுகமாக!! என்று!!
நிச்சயம் அதாவது என் ஈசனாரே!!..!!!!! என்று!!!
எதை என்று கூற பின்கெட்டியாக பிடித்துக் கொண்டான்!! நிச்சயம் தன்னில் கூட...
அப்பொழுதே நினைத்தேன் யான்.
உன்னை தவிர.. யார்?? எந்தனுக்கு உதவுவது?? என்று!!
நிச்சயம் தன்னில் கூட.. அவ்வாறாகவே அறிந்தும் எதை என்றும் புரிய மீண்டும் நிச்சயம் தன்னில் கூட பின் இங்கேயே இருக்கின்றாயா???
அல்லது ராமேஸ்வரத்திற்கு வருகின்றாயா?? என்று!!
நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் அதாவது எதை என்று புரிய புரிய நிச்சயம். தன்னில் கூட
அவந்தன் ஈசனை பார்த்து... ஈசனே!!!!
இன்னும் ஒரு. வரம். பின் மேல் நோக்கிய ஆற்றல்களை... எந்தனுக்கு தா !! இறைவா!!!
பின் எதை என்று அறிய அறிய யான் அனைத்தையும் காத்திட வேண்டும் என்று நிச்சயம் தன்னில் கூட.!!!
பின் ஆனாலும் மறைமுகமாக இங்கெல்லாம் வந்து யார் ஒருவர் நிச்சயம் தன்னில் கூட வணங்குகின்றார்களோ!?!?.... அவர்கள் சாபத்தை நிச்சயம் போக்கும்..நீரே!!!..(நீங்களே )என்று!!
நிச்சயம் பின் அதே போலே நிச்சயம் தன்னில் கூட பின் போக்குகின்றேன் என்று!!! தேடி வந்தால்!!.. என்று!!
(இலங்கையில் இருக்கும் செல்வ சன்னதி முருகன் ஆலயத்திற்கு தேடி வந்தால் அவர்களுடைய சாபங்கள் தோஷங்கள் மாந்திரீக பாதிப்புகள் அனைத்தும் விலகும் ஈசனார் மறைமுகமாக இருந்து நல்வழிப்படுத்துவார்)
நிச்சயம் ஒரு மர்மமாகவே இருக்கின்றது இன்னும் கூட!!!... இன்னும் அதாவது இவ் கடல் அடியில் தன்னில் கூட பின் பலமாகவே பின் ஈசனின் லிங்கம் அழகாகவே காணப்படுகின்றது.
(ஈசனால் உருவாக்கப்பட்ட அந்த சிவலிங்கம் இந்த ஆலயத்திற்கு அருக இருக்கும் கடலுக்கு அடியே இன்னும் இருக்கின்றது.. ஈசனின் பரிபூரணம் அருள் ஆசிகள் நிறைந்த இந்த கடலில் அடிக்கடி குளிக்க குளிக்க மாந்திரீக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்)
ஆனாலும் சிலருக்கு தான் வாய்ப்பு நிச்சயம் கிட்டும்.
(கடலுக்குள் இருக்கும் சிவலிங்க தரிசனம் சிலருக்கு மட்டுமே ஈசனின் சித்தர்களின் அனுக்கிரகம் இருப்பவர்களுக்கு லிங்க தரிசனம் கிடைக்கும்)
பின் நிச்சயம் தன்னில் கூட அங்கே நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய புரிய... அங்கே நீராட நீராட !!!
பின் பரிசுத்த....
(அக்கடலில் நீராட வேண்டும்... பரிசுத்தம் ஆகலாம்)
அதாவது சில தீவினைகளும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பைத்தியம் ஆகுதல் நிச்சயம்... அதாவது எதை எதையோ பின்.. அதாவது பின் மனநிலை பாதிக்கப்பட்டதால் நிச்சயம் பைத்தியம் போல் இருப்பது!!! அவையெல்லாம் நிச்சயம் இங்கே பின் நீராட... நிச்சயம் அனைத்தும் தீரும்... பின் நீராடிக் கொண்டே இருந்தால் இன்னும் பல வகையான நோய்களும் கூட.. ஏன் எதற்கு என்று தெரியாமல் இருந்தாலும்.. அவையெல்லாம் நிச்சயம் பின் மாந்திரீகத்தால் மனிதனுக்கு பின் வந்தவையே.. என்பேன்!!
இதனால் பின் எதை என்று புரிய புரிய இங்கெல்லாம் வந்து நீராடினால் தான்.. நிச்சயம் கிட்டுமே!!!!... பின் அதாவது மீண்டும் பின் அறிந்தும் கூட வாழ்வதற்கு வழி கிட்டுமே தவிர!!! பின் அவ்வாறு இல்லையென்றால்.. கிட்டாது!!
(தேடிச்சென்று இதுபோன்று அலைந்து திரிந்து தீர்த்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால்)
இவ்வாறாகவே நோய் நொடிகளோடு வாழ்ந்து கொண்டே!!!!நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய.. மீண்டும் மீண்டும் பிறப்புக்கள்.......!?!?!!
இதனால் அறிந்தும் எதை என்று புரிய.. மீண்டும் அவன் சென்றான்!!!
அறிந்தும் கூட பின் மீண்டும் அறிந்தும் கூட!!
(ராமேஸ்வரத்திற்கு)
ஆனாலும்... பலரும் இவந்தனைப் பார்த்து நிச்சயம் உடம்பு பின் இப்படி ஆகிவிட்டதே என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின்.
(எப்படி இப்படி குணமாகி விட்டான் என்று ஆச்சரியம்)
ஆனால் இப்படி இருந்தானே?? மீண்டும் எப்படி பின் எதை என்று புரிய புரிய!!!
(எப்படி குணமாகினான் என்று)
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... மீண்டும் ஜெயித்தான் அப்பனே.
இதே போலத்தான் அப்பனே ஏன் எதற்கு சொன்னேன் என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் கடைசியில் சத்தியம்.. தான் ஜெயிக்கும் என்பேன் அப்பனே.
இறைவனை நம்பினோர் நிச்சயம் சில... தொல்லைகள் நேரிடலாம் !!! அது மட்டும் இல்லாமல் சில சில வழிகளிலும் கூட அப்பனே பின் கஷ்டங்கள் அனுபவிக்கலாம்
ஆனாலும்.. அப்பனே.. கடைசியில் அப்பனே இறை பலம் தான் வெல்லும் என்பேன் அப்பனே.
ஆனாலும் தீய பலன்கள் அப்பனே.. அதாவது மாந்திரீகங்கள் அப்பனே.. நிச்சயம் எளிதில் வென்று விடும் ஆனாலும் அப்பனே எளிதில் கவிழ்த்து விடும் என்பேன் அப்பனே.
இது போலத்தான் அப்பனே பலர் மாட்டிக் கொண்டு... அப்பனே பின் வெளிவராமல் அப்பனே சிக்கிக் கொண்டு... எதை என்று அறிய அறிய ஒன்றும் நடக்காமல் இருக்கின்றார்கள். அப்பனே.
எதை என்று புரிய இன்னும் அப்பனே பின் சித்தர்களையும் இறைவனையும் வணங்கி அப்பனே என்ன பிரயோஜனம்??? என்றெல்லாம் அப்பனே!!!
ஆனாலும் நம்பி சென்றாயே அப்பனே...!!!!!!!!
அதாவது உங்களைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்கின்றேன்... நீங்கள் பின் நம்பி சென்றீர்களே!!!!!! எதை என்று புரிய புரிய இப்பொழுது... புரிகின்றதா???? எதை என்று அறிய!! நிச்சயம் இப்பொழுது தெரிகின்றதா????
அப்பனே ஆனாலும்... அவர்களுக்கும் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே எப்படியோ எதை என்று கூட!!! (அவர்களையும் மீட்க வேண்டும்) எடுத்துக்கொண்டு வரவேண்டும்... என்பதெல்லாம் அப்பனே...
ஆனாலும் அப்பனே அவர்கள் புத்தி... மாறவில்லை என்பேன் அப்பனே.
அதாவது பின் அதாவது... என் பெயரையும் எதை என்று அறிய அறிய வைத்துக் கொண்டே!!!!!! எதை என்று கூட பின் அதாவது பின் எதை என்று கூற குழந்தைகளுக்கும் என்னுடைய பெயரை வைத்துக் கொண்டே!!!!!
அப்பனே பின் எவை என்று அறியாமலும் கூட.. திரிந்து கொண்டு அப்பனே... கஷ்டங்கள் அப்பனே நோய்களோடு வாழ்ந்து கொண்டு அப்பனே.. எதை என்று அறிய அறிய!!
இதனால் அப்பனே.. எதை என்று அறிய அறிய அப்பனே... அவர்களுக்கு பக்குவத்தை கொடுத்தாலும்..!?!?!?!?!
. யான் இப்படித்தான் செல்வேன் என்று!!!!! சாக்கடையில் தான் விழுவேன் என்று!!!!
என்றெல்லாம் அப்பனே சென்று கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
இதனால் என்ன பயன்???
அப்பனே ஒன்றும் பயனில்லையப்பா!!!
எதை என்று புரிய அப்பனே நிச்சயம் அப்பனே திறமைகள் வைத்துக் கொண்டும் ஒன்றும் பிரயோஜனம் இல்லையப்பா!!!
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... மாற்ற வைக்க !!!மாற்ற வைக்க...!! ......................ஆனாலும் அப்பனே அவ் தீய சக்திகள் அப்பனே நிச்சயம் அப்பனே.. பின் வந்து மனதை மாற்றுகின்றது.
இதனால் அப்பனே நிச்சயம்... சித்தர்களிடத்தில் வருவோருக்கு அப்பனே... எதனையும் தாங்கும் இதயம் வேண்டுமப்பா!!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பொழுதுதான் அப்பனே பின் எதை என்று புரிய புரிய அனைத்தும் கிடைக்கப்பெற்று அப்பனே... வாழ்வில் எல்லையில்லா அப்பனே வெற்றிகளையும் கூட காண்பீர்கள் என்பேன் அப்பனே நல்விதமாக!!!
யாங்கள் கொடுப்போம் அப்பனே!!!... எதை என்று புரிய புரிய அப்பனே..
"""நேர்வழியில் செல்க!!!! அப்பனே!!
தர்மத்தை கடைப்பிடிக்குக!! அப்பனே!!
நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அனைத்தும் அப்பனே யாங்கள் செய்வோம்.. என்போம் அப்பனே!!!
அதுமட்டுமில்லாமல் அப்பனே... நல்விதமாகவே அப்பனே.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட...
அப்பனே இத்திருத்தலத்திற்கு அப்பனே எவை என்று புரிய அப்பனே... பல சாபங்களை நீக்குவதற்காகவும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும்.. அப்பனே பல ரகசியங்கள் இத்திருத்தலத்தில் உள்ளது என்பேன் அப்பனே...
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... கடைசியாக அப்பனே அவந்தன் பின் எவை என்று அறிய அறிய.... போதும்!!!! என்று அப்பனே பின் ஈசனிடத்தில் ராமேஸ்வரத்தில் முறையிட்டுவிட்டு இங்கு அவன் வந்து விட்டான்ப்பா!!!
(ராமேஸ்வரத்திலிருந்து செல்வச் சன்னதி முருகன் இருக்கும் ஆலய பகுதிக்கு வந்துவிட்டார்)
ஞானியாகவே ஆகிவிட்டானப்பா!!!
வந்தவருக்கெல்லாம் என்னென்ன தேவையோ??? அப்பனே நிச்சயம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே!!
அப்பனே வருவோரல்லாம் இங்கு அன்னத்தை கொடுத்து அப்பனே நிச்சயம்... அன்னத்தை கொடுத்தாலே போதும்!!
(ஆலயத்திற்கு வந்து அன்னதானம் செய்தால்)
அவந்தனுக்கு தெரிந்துவிடும் ஞானியவனுக்கு!!! பின் இவந்தன் இப்படி என்று!!
(இந்த ஆலயத்திற்கு வந்துஅன்னதானம் தான தர்மம் செய்பவர்கள் பற்றி ஞானிக்கு தெரிந்து விடும்... நல்ல உள்ளம் என்பதை அறிந்து கொண்டு அவர்கள் வேண்டுதல்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு ஞானி அவர்களுக்கு நன்மை செய்வார்)
இன்னும் இவனுக்கு கொடுக்கலாம் என்று கொடுத்து விடுவானப்பா!!!
இதனால் அப்பனே சில தீவினைகளையும் நீக்குவானப்பா !!!
தீய சக்திகளிடம் இருந்தும் அவன் காப்பானப்பா!!!
மறைமுகமாகவே இன்னும் நீக்கிக் கொண்டே இருக்கின்றான்!!! அப்பனே நல்விதமாக அப்பனே.
இன்னும் வெற்றிகள் அப்பனே இன்னும் வாக்குகள் கூட பல உண்டு என்பேன் அப்பனே... இத்தலத்தில் மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்ற பொழுது அப்பனே... நிச்சயம் புரியுமப்பா!!! அறியுமப்பா!!!
ஆசிகள்!! ஆசிகளப்பா!!
ஆலயம் மற்றும் விபரங்கள்.
பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்.
இலங்கையின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று, வடஇலங்கையின் கதிர்காமமாக போற்றப்படும் தலம், வீரபாகு கால் வைத்த பூமி, ஐராவசு சாப விமோசனம் பெற்ற இடம், சிகண்டி முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற ஆலயம், சோழனின் தளபதி தொண்டைமான் கருணாகரன் திருப்பணி செய்த கோவில், மீனவர் அடியார் மருதர் கதிர்காமர் திருப்பணி செய்த திருத்தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில். ‘ஆறு திருப்பதிகண் டாறெழுத்து மன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே’ என்ற குமரகுருபரரின் வாக்கிற்கிணங்க, இலங்கையிலும் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளன. கதிரைமலை, உகந்தமலை, மாவிட்டபுரம், கந்தவனம், செல்வச்சன்னிதி, நல்லூர் ஆகிய இந்த ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்வதுதான் செல்வச் சன்னிதி ஆலயம். தெற்கே கதிர்காமம், வடக்கே செல்வச்சன்னிதி விளங்குவதுடன், இவ்விரு தலங்களின் வழிபாட்டு முறைகளிலும் ஒற்றுமையே காணப்படுகிறது.
இங்கு ஓடும் தொண்டமான் ஆறு “வல்லி நதி என்ற பெயருடன் விளங்கியது. இந்த நதியின் தொடு வாயிலை தொண்டமான் என்னும் அரசன் வெட்டிக் கடலுடன் சங்கமிக்க விட் டான். அன்று முதல் இந்நதியின் பெயர் “தொண்டமானாறு” ஆகிவிட்டது. கந்தப்பெருமானது அருளாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாலயத்திற்கு தெய்வீக வரலாறு உண்டு. திருச்செந்தூர் என்னும் பகுதியிலி ருந்து கந்தபெருமான் வீரவாகுத்தேவரை மகேந்திரபுரிக்கு சூரனிடத்தில் தூது அனுப்பினான். வீரவா குத்தேவர் முதன்முதலாக வட இலங் கையின் வல்லிநதிக்கரையில் உள்ள கல்லோடையில் காலடி எடுத்து வைத்தார். அவரது பாதச்சுவடுகள் இன்றும் ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் பாதச்சுவடுக ளாகக் காட்சிய ளித்துக் கொண்டிருக்கிறது. வீரவாகுத்தேவர் பெருமானது கட்டளைப்படி மகேந்திர புரிக்கு சூரனிடத்திற்சென்று திரும்பிதிருச்செந்தூர் செல்வதற்கு மீண்டும் இந்நதிக் கரைக்கு வந் தார். வந்தபொழுது சந்திக்காலம் ஆகிவிட்டது. எனவே அவருக்குக் கந்தப்பெருமானுக்குரிய சந்திப் பூஜையைச்செய்தார். இவ்வாறு சந்திக்கடன் செய்யப்பட்ட இடம் “சந்நிதி” யாக மருவிச் செல்வச் சந்நிதி என்ற பெயரைப் பெற்றது.
இத்தலத்து முருகப்பெருமான், ‘செல்வச் சன்னிதி முருகன், ஆற்றங்கரை வேலன், ஆற்றங்கரை யானை, கல்லோடையான், கல்லோடைக்கந்தன், அன்னக்கந்தன், அன்னதானக் கந்தன்’ என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார். கருவறையில் முருகப்பெருமானின் சிலா வடிவத்திற்கு பதிலாக ‘வேல்’ தான் மூலவராக இருக்கிறது. இந்த ஆலயம் அன்னதானத்திற்கு புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. இக்கோவிலைச் சுற்றி 45 அன்னதான மடங்கள், பக்தர்களின் பசிப்பிணியைப் போக்கி வருகிறது. இதனால்தான் இத்தல முருகனை ‘அன்னதானக் கந்தன்' என்று போற்றுகின்றனர்.
இவ் ஆலயமானது மூர்த்தி, தல, தீர்த்தம், சற்குரு என்பன ஒருங்கே அமையப் பெற்ற சிறப்புக்கு உரியது.
மூர்த்தி: ஆற்றங்கரை வேலன்
தலம்: செல்வச்சந்நிதி
தீர்த்தம்: வேலன் தீர்த்தம்
சற்குரு :பாலமுருகன்
தல விருட்சம் :மங்களப் பூவரசு
நீர் வளம், நில வளம், நிழல் வளம் போன்ற தன்மையில் அமைந்த பல வளங்கள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் ஆலயமாக செல்வச் சந்நிதி திகழ்கின்றமை சிறப்புக்குரியதாகும்.
இவ் ஆலயமானது சந்நிதி முருகன், சின்னக் கதிர்காமக் கந்தன், செல்லக் கதிர்காமக் கந்தன், கல்லோடைக் கந்தன், அன்னதானக் கந்தன், ஆற்றங்கரை வேலன் போன்ற பல காரணப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது.
மேலும் சித்தர்கள் அதிகம் நாடுகின்ற ‘ஈழத்துத் திருத்தலம்’ என்ற பெருமைக்குரிய ஆலயமாகும்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரி சனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.அமைவிடம் இலங்கை நாட்டின் வடமாகாணமான யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை அருகே, பழமையான தொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. பருத்தித் துறையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும், கொழும்பில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete