​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 22 May 2025

சித்தன் அருள் - 1866 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-14 !


தட்டச்சு செய்ய விடுபட்ட சில கேள்வி பதிலை கீழே தருகிறேன்.

1. புண்ணியங்களை சேர்த்துக்கொள்ள கோவிலுக்கு போவது, மகான்கள் சமாதிகளுக்கு  செல்வது, அன்னதானங்கள் போன்றவை வழி செயல்படலாம் இல்லையா?

என்ன செய்தாலும், முதலில், எண்ணங்கள் உயர்வாக செலுத்த வேண்டும். அதுவே முதல் வகையாகும். பின் எண்ணங்கள் சரியில்லாமல், எதை செய்தாலும் வீணே! 

2. உண்மையாகவே கோவிலுக்கு போய் இறைவனை காண வேண்டும் என்று எண்ணம் இருக்க, அதுவே ஒருவனை நடத்தி கூட்டி செல்ல வேண்டாமா?

அவ்வாறு எண்ணங்கள் இருந்தாலும், எண்ணங்கள் உயர்வாக இல்லை என்றால், இறைவனே, மனதை மாற்றி, வேண்டாம் என்று சொல்லிவிடுவானப்பா! 

சித்தம் தெளிந்தவன் "சித்தன்"
சித்தம் கலைந்தவன் "மனிதன்"

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!


3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete