51. சண்டிகேஸ்வரர் முன் வணங்கும் முறை பற்றி எடுத்து உரைக்க வேண்டுகிறேன்? (சிலர் கைதட்டுகிறார்கள்)
அப்பப்பா! இவன்தன், அவன் முன் கை தட்டினால் தான் கவனிப்பானா? அவன் முன் அமைதியாக அமர்ந்திருந்தாள் பொது அவன் கவனித்து விடுவான். அப்பா! நீ இதை எடுத்துக் கூறு இன்னும் கூட.
52. பஞ்சபாண்டவர்கள் ஐவருக்கு ஒரு மனைவி என்று மகா பாரதத்தில் சொல்லப்பட்டு உள்ளது. இதன் மெய் தன்மை அகத்தியரின் வாக்கு வழியாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்பப்பா! ஒன்றை மட்டும் மறைமுகமாக குறிப்பிடுகின்றேன். அப்பா! தவறாகவே சித்தரித்துவிட்டார்கள் அப்பா! தர்மத்தை நிலை நாட்டவே, மனிதனை தலை நிமிர்த்தவே, இதற்க்கு வாக்குகள் நிச்சயம் உண்டு. பொறுத்திருக்க வேண்டும். இதனுடைய விடை, ராமாயணம் போலவே உள்ளது. நிச்சயம் இழுத்து செல்வேன். பொறுத்திருங்கள் அப்பா!
53. ஐயா, பஞ்ச கவ்யம் உடல் ஆரோக்கியத்திற்கு நோய்களுக்கு மருந்தாக எடுத்துகொள்ளலாமா!
அப்பா! புரிந்து கொள்வீர்கள்.
54. "தமிழ்" பாரதத்தின் தேசிய மொழியாக வாய்ப்புள்ளதா?
அப்பா! இன்னும் மனிதர்களை திருத்த முடியவில்லை, திருத்திட்டு பின் இதற்கு பதிலை சொல்லுகின்றேன்.
55. பணிகின்றேன் குருவே🙏 அடியேனின் ஒரே ஒரு பொதுவான வினாவிற்கு மார்க்கம் தந்தருள வேண்டுகிறேன் இமய பர்வதத்தில் (ஷம்பாலா) என்ற தெய்வீக இடம் இருப்பதாக அறிகிறேன் அங்கு செல்ல அடியேன் விருப்பம் கொள்கிறேன் குருவே அங்கே செல்ல அடியேன் என் செய்ய வேண்டும் தயவுகூர்ந்து எடுத்துரைக்க வேண்டி தங்களை பணிகிறேன்.
நிச்சயம் உண்டு, ஆனால் இப்பொழுது இல்லை!
56.குருவே சரணம்! தலை வலிக்கான மருத்துவ தீர்வை உரைக்க வேண்டுகிறேன்!
அப்பப்பா! தலை கீழ் நிற்கச்சொல்.
57. அகத்தியர் அய்யவிற்கு வணக்கம் உலகில் கோடிக்கணக்கான மக்கள் இறைவனை வணங்குகின்றனர்.. அதில் ஒவ்வொருவரின் செயல்களையும் யார் கவனித்து இறைவனிடம் முறையிடுகின்றனர்... திருவண்ணாமலையில் நடக்கும் அத்தனை செயல்களையும் ஈசன் கவனித்து கொண்டு தானே உள்ளார்... இல்லை மக்கள் தப்பித்து விடுகின்றனரா அனைவரின் செயல்களும் இறைவன் நோக்கி கொண்டுள்ளாரா..?
அப்பப்பா! சொல்லிவிட்டேன். அனைத்தையும், சூரியனும், சந்திரனும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அனைத்தையும் பதிவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நிச்சயம், யாரும் தப்பிக்க முடியாதப்பா. அப்பனே! இதை, பல வாக்குகளிலும் கூட உரைத்துவிட்டேன், அப்பனே! இதை ரகசியமாக எடுத்துரை, நீயும் கூட. இப்பொழுதுதான் அங்கங்கு, பதிவு, கண்காணிப்பு என்று. ஆனாலும் எப்பொழுதிலிருந்தே சூரியனும் சந்திரனும் கண்காணித்துக் கொண்டிருக்கிறானப்பா! நிச்சயம், யாரும் தப்ப முடியாதப்பா. சொல்லிவிட்டேன்! இதன் ரகசியம், ஏன் ஒருவனுக்கு அவன் முடிவு தெரியவில்லை என்றால், பத்தாண்டுகள் பதிவு செய்ததை சூரியனும், சந்திரனும் ஈசனிடம் முறையிட்டு, அதன் பின்னர்தான் ஈசனும் முடிவெடுப்பான், இவன் தன வயதை நீட்டிவைக்கலாமா? அல்லது இன்றோடு முடித்துவிடலாமா என்றெல்லாம். இதற்க்கு, சந்திரனும் கூட தீர்வுகள். சூரியனுடைய கண்கள், சந்திரனுடைய கண்கள் சாதாரணம் இல்லையப்பா. நீங்கள் தவறாக பேசலாம், யாருக்கும் தெரியவில்லையே என்று. நிச்சயம் சூரியனும், சந்திரனும் பார்த்துக் கொண்டே. இதனால், இப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது என்று யோசிக்கலாம், ஆனால் பத்து வருடங்கள் மட்டுமே. அனைத்தையும் சேகரித்து, சேகரித்து, ஒரு நாள், அப்பொழுது புரிந்து கொள்வீர்கள், ஈசனுடைய ஆட்டம்.
58. அப்பா! அப்படியானால் பத்தாண்டுகள் வரை ஒரு மனிதன் என்ன தவறை வேண்டுமானாலும் செய்து கொண்டே போகலாம் அல்லவா?
அப்பப்பா! பத்து ஆண்டுகள் என்பது சூரியனுக்கு அரை நிமிடம்.
59. அகத்தியர் அப்பாவிற்கும் லோபா அம்மாவிற்கும் பணிவான வணக்கங்கள்! குலதெய்வத்திற்கு முன்னோர்கள் பலி கொடுத்து வணங்கி இருந்தால் தற்போதைய சந்ததியினரும் அவ்வாறே வணங்கினால்தான் குலதெய்வம் ஏற்றுக்கொள்ளும் என்று கூறுகிறார்கள். இது குறித்து தாங்கள் விளக்கம் அளிக்கும்படி தங்களின் பொற்பாதங்களை பணிந்து கேட்டுக்கொள்கிறேன். அப்பா! இன்னும் விவரிக்கிறேன், இதனுடைய ரகசியத்தை.
அப்பப்பா! உங்களை பார்த்து நிச்சயம் ஒரு கேள்வியை கேட்கின்றேன். குழந்தைகள் இருக்கிறதல்லவா? சிந்தித்து செயலாற்றுங்கள் அப்பா! நிச்சயம் அனைத்தும் இறைவனுக்கு குழந்தைகள்தான் அப்பா.
60. தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திரம் நட்சத்தித்தில் அதிகம் நடைபெறுவதன் தாத்பரியத்தை விளக்குமாறு தங்களின் பொற்பாதங்களை பணிந்து கேட்டுக் கொள்கிறேன். நன்றி இறைவா
அப்பப்பா! சித்திரை, வைகாசி தன்னில், அறுபடை (வீடுகளுக்கு) போகச்சொல்! இதன் ரகசியத்தை பின்னர் உரைக்கின்றேன்!
61. பிரிந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் அதற்கு பரிகாரம்!
அப்பப்பா! இப்பொழுது இல்லை, இதற்கு தீர்வுகள்.
62. ஓம் அகத்தீசாய நம. சித்தர்களை வழிபடுபவர்களுக்கு என்றும் பொருளாதார பிரட்சனை மற்றும் மாந்திரீக பாதிப்புகள் இல்லாத பாதிக்காத வண்ணம் கருணை கூர்ந்து அருள் செய்யுங்கள் குருவே.
அப்பப்பா! நிச்சயம் இருக்காதுதான் அப்பனே! அப்படி இருந்தாலும், யானே வந்து அதை அகற்றிவிடுவேன் அப்பா! அதுமட்டும் இல்லாமல், யார் ஒருவன் இதை செய்கிறானோ, அதை நீங்கள் அனுபவித்தாள், அது அவந்தனுக்கு போய் சேருமப்பா. இதனால் அவனும் கூட திருந்துவதற்கு வாய்ப்பு. ஆனாலும் இவை எல்லாம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது கலியுகத்தில். ஏன் என்றால், தான் செய்த தவறுகள் எல்லாம், கலியுகத்தில் தன்னையே கொல்லும் என்றெல்லாம் அறிந்திருக்கவில்லை. கலியுகத்தில், யாங்கள் இருக்கின்றோம், கவலையை விடுங்கள் அப்பா!
63. ஐயா காலபைரவ அஷ்டகத்தைப் பற்றிக் கூறுங்கள்
அப்பா! இதை 108 நாட்கள் படித்து வரச்சொல். பின்பு உரைப்பேன், இதன் ரகசியத்தை.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகுருவே சரணம்! தலை வலிக்கான மருத்துவ தீர்வை உரைக்க வேண்டுகிறேன்!
ReplyDeleteஅப்பப்பா! தலை கீழ் நிற்கச்சொல்.
குருநாதர் தலைகீழாக நிற்க சொல்வது.... சிரசாசனம் செய்ய வேண்டும் என்று...
நிறைய அடியவர்கள் தலைவலி பிரச்சினைகளுக்கு குருநாதரிடம் கேட்டதற்கு தினமும் சிரசாசனம் செய்து வர வேண்டும் என்று கூறி இருக்கின்றார்... தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் பொழுது ரத்த ஓட்டம் தலைக்கு சரிவர பாய்ந்து செல்லும் அதனால் தலைவலி வராது என்று குருநாதர் ஏற்கனவே கூறி இருக்கின்றார்
நன்றி வணக்கம்🙏🏿🙏🏿🙏🏿
ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteநன்றி நன்றி
ReplyDeleteSir please ask remedy for disc bulge problem to Ayya..
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை பஞ்சகவ்யம் கேள்விக்கான பதில் புரியவில்லை. யாரேனும் பதில் தரவும்
ReplyDelete"You will come to know in future" is the answer!
DeleteOk nga ayya
DeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete