​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 22 April 2025

சித்தன் அருள் - 1842 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி வாக்கு- நிறைவு தொகுப்பு!


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - நிறைவுப் பகுதி 13.

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தன் அருள் - 1796 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1805 - பகுதி 2 
3. சித்தன் அருள் - 1808 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1823 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1825 - பகுதி 5
6. சித்தன் அருள் - 1826 - பகுதி 6
7. சித்தன் அருள் - 1830 - பகுதி 7
8. சித்தன் அருள் - 1833 - பகுதி 8
9. சித்தன் அருள் - 1835 - பகுதி 9
10. சித்தன் அருள் - 1837 - பகுதி 10
11. சித்தன் அருள் - 1839 - பகுதி 11
12. சித்தன் அருள் - 1841 - பகுதி 12
)


(வணக்கம் அடியவர்களே. இப்போது நாம் இவ் சத்சங்க வாக்கின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். புண்ணியங்கள் அனுதினமும் அவசியம் செய்க. உங்கள் குழந்தைகளுக்கும், பிள்ளைகளுக்கும் கட்டாயம் முதலில் புண்ணியங்கள் பல செய்ய வையுங்கள் முதலில். வாருங்கள் இவ் தொடர் வாக்கின் நிறைவுப் பகுதிக்குச் செல்வோம்.) 

( நம்மில் பலருக்கும் ஏன் கடன் சுமைகள் என்று தெரியாது. அனைத்திற்கும் காரணம் நாம் முற்பிறவியில் செய்த தவறுகளே. இது குறித்த வாக்கு ஒன்று)

அடியவர் :- ஐயா கடன் தொல்லை அதிகமாக உள்ளது. 

குருநாதர் :- அப்பனே , பிறவிக் கடனை எப்பொழுது தீர்க்கப்போகின்றாய்? 

அடியவர் :- சொல்லுங்க ஐயா.

குருநாதர் :- அப்பனே பிறவிக் கடனைப் பற்றிச் சொல்கின்றேன் அப்பனே. அதாவது ( ஒரு மகிமை புகழ் மாநகரத்தில் உள்ள மாபெரும் இறைவிக்கு ) அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட உந்தனுக்கு உதவிகள் செய்கின்றேன் என்றெல்லாம் முற்பிறவியிலே ( நீ கூறினாய்). ஆனாலும் பின் (மகிமை புகழ் இறைவி) ___தாயே மிகப் பெரிய அளவில் உன்னை உயர்த்திவிட்டாள். ஆனாலும் அனைத்தும் பின் அதாவது என்னென்ன பின் சொன்னாயோ அதையெல்லாம் நீ செய்யவில்லை அப்பனே. இதனால் ____ ( இறைவியின் பெயர்) தாயிடம் சென்று பின் அதாவது இப்பிறப்பில் எதைச் செய்தேன். எப்பிறப்பில் எந்தனுக்குத் தெரியவில்லை தாயே..மன்னித்து விடு. நிச்சயம் இப்பிறப்பிலாவது எந்தனுக்கு அறிந்தும் கூட. இதனால் அப்பனே இவ்வாறு அவளிடத்தில் வேண்டிக் கொண்டு  நிச்சயம் பிற உயிர்களுக்கு தானம் செய். நிச்சயம் அவள் நினைத்தால் நிச்சயம் அனைத்தும் நிறைவடைந்துவிடும் வாழ்க்கையும் கூட. இன்னும் உயரத்தில்தான் இருக்கின்றது. இதைச் செய் முதலில். 

( வணக்கம் அடியவர்களே, நமது வாழ்வில் நமது கடன்களுக்குப் பின்னால் இப்படி ஒரு விதியில் சிக்கல்கள் இருக்கும். எந்த மனிதர்களாலும் இதனை அவிழ்க்க இயலாது. புண்ணியங்கள் செய்யச் செய்யச் சித்தர்கள் உங்களுக்கு வழி காட்டுவார்கள். புண்ணியம் செய்வது ஒன்றே மட்டுமே நம் வாழ்வில் உயர்வடைய நமக்கு உள்ள ஒரே வழி.) 

( பல தனிவாக்குகள் ) 

புண்ணியங்கள் நிறைந்த உலகத்தில் (மனிதன்) பாவத்தைச் சேர்த்துக்கொண்டே இருக்கின்றான் இக்கலியுகத்தில். ( தனி வாக்குகள்.) 

(ஒரு அடியவருக்கு) வயது ஒரு தடையே இல்லை எங்களிடத்திலிருந்தால். 

(மற்றொரு அடியவருக்கு) அப்பனே அறுபடைகளுக்கும் சென்று வா. நீ நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். 

( இப்போது சத்சங்கத்தின் நிறைவுப் பகுதி. கருணைக்கடல் இவ் சத்சங்கத்தின் ஒட்டு மொத்த வாக்குகளைப் பின்வருமாறு உரைத்தார்கள்.) 

குருநாதர் :- அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே. (இங்கு வந்த) அனைவருக்கும் (வாக்குகள்) சொல்லிவிட்டேன். மாற்றங்கள் ஏற்றங்கள் அனைவருக்குமே உண்டு.  யான் சொல்லியவற்றை நிச்சயம் கடைப்பிடிக்க நன்று. அனைவருக்குமே, இங்குள்ள அனைவருக்குமே பல பிரச்சினைகள் வாழ்க்கையில். அவை மட்டும் இல்லாமல் பாவங்கள், அவையெல்லாம்  ஆனாலும் உங்களுக்குச் சந்தோசம் அடைய வேண்டியவற்றைக் கூடச் சொல்லி, நிச்சயம்  பலவினைகள் , பலவற்றையும் கூட. நிச்சயம் யான்தான் மாற்றி அமைக்க வேண்டும். 

அதனால்தான் நீங்கள் புண்ணியம் செய்யுங்கள்.  சொல்லி விட்டேன். (நீங்கள் புண்ணியங்கள்) அதைச் செய்யாமல்,  என்னாலும் (உங்கள் வினைகளை, விதிகளை) மாற்ற முடியாது !!!!!!!!! சொல்லிவிட்டேன் !!!!!!

அனைவருக்குமே, அதாவது என்னை நம்பி ஓட வந்துவிட்டீர்கள். அதனால் வாக்குகள் செப்பிவிட்டேன். அடுத்த முறை நீங்கள் நிச்சயம் பின் இவ்வாறு ( பல புண்ணியங்கள் ) செய்திட்டு வந்தாலே , நிச்சயம் சில சில வழிகளிலும் கூட நிச்சயம் உத்தரவிட்டுச் செய்யச் சொல்வேன். உயர்வும் வைப்பேன். எம்முடைய ஆசிகள் !!!!!. 

அனைவருக்கும் எம்முடைய ஆச்சிகள் !!!!! ஆசிகளப்பா !!!!! .

( வாக்கு முடிந்தும் மீண்டும் சில அடியவர்கள் கேள்விகள் கேட்க , கருணைக்கடல் மீண்டும் வாக்குகள் அருளினார்கள்.) 

அடியவர் :- (தெரியாமல் சிலவற்றைக் கேட்டதால்) மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா. 

குருநாதர் :- அம்மையே கவலை விடு. நிச்சயம் தெரியாதவர்களுக்கும் கூட நல்வழிப்படுத்துவதே… என்னுடைய ஆசிகள் அம்மையே. இதனால் அடுத்த முறை (பல வகை புண்ணியங்கள்) யான் சொல்லியவற்றைச் செய்து கொண்டு வா. நிச்சயம் அருளாசிகள். இன்னும் உன் வாழ்க்கையேப் பற்றி யான் சொல்லுகின்றேன் அம்மையே. 

குருநாதர் :- 

அப்பனே ஆசிகள். அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே. அனைவரையுமே யான் பார்த்துவிட்டேன். அப்பனே பின் இன்னும் இன்னும் அப்பனே ஆசிகள்!!!! ஆசிகள்!!!! போதுமப்பா!!!! அடுத்த முறையும் (வாக்கு) கேளுங்கள் அப்பனே. அவரவர் வினையைக்கூடத் தீர்க்க அப்பனே அறிந்தும் கூட ….

( இப்போது எதையுமே கேட்காத மற்றொரு அடியவருக்கு உரைத்த அமுத வாக்கு)

அப்பனே எனையே நம்பிக்கொண்டு வந்துவிட்டாய் ஓடோடி. எம்முடைய ஆசிகள் கடைநாளும் உண்டு என்பேன் அப்பனே. நலமாகவே எக்குறையும் கொள்ள வேண்டாம் அப்பனே.  இவ்வுலகத்தில் அனைவருமே அனாதைகள்தான் அப்பனே. (உனை) பார்த்திட்டேன் அப்பனே. அதனால் யானே சொந்தம் என்பேன் அப்பனே லோபாமுத்திரையோடு. கந்தனும் இருக்கின்றான். ஈசனும் இருக்கின்றான். யான் சொந்தம் இருக்கும் பொழுது கவலையை விடு அப்பா. யான் உந்தனுக்கு என்னென்ன தேவையோ அதைத் தருகின்றேன் அப்பனே. அனைவருமே கேட்பார்கள் அதை இதை என்று அப்பனே. நீ எதையும் கேட்கமாட்டாய் என்பது எனக்குத் தெரியுமப்பா!!!!! கவலையை விடு. அனைத்துமே உந்தனுக்குத் தருகின்றேன் அப்பனே. 

இதேபோலத்தான்  இருக்க வேண்டும் அனைவருமே. எதையும் கேட்கக்கூடாது. பின் குழந்தைகள், பின் அவை இவை என்றெல்லாம், அவை வேலைகள் என்றெல்லாம் , அவையெல்லாம் மறையக்கூடியது அப்பா. பின் மறையக்கூடாததை ( இறைவனை ) பின் உயர்ந்த உள்ளத்தில் இருக்கவேண்டும் என்பேன் அனைவரிடம் கூட. உயர்ந்த உள்ளம் இருந்துவிட்டால் அங்கு இறைவன் நிச்சயம் குடிகொள்வான் என்பேன். ஆனால் இல்லையே.  

ஆசைகள்!!!!! பேராசைகள்!!!! அவ் ஆசைகள், பேராசைகளே மனிதனைக் குழியில் தள்ளிவிடுமப்பா. கவலையை விடு. 

“அப்பனே சொந்த பந்தங்கள் அனைத்தும் யானே.” !!!!!! 

சொல்லிவிட்டேன் அப்பனே. ஆசிகள் !!!!!!!!! ஆசிகள் !!!!!!!!!
மறுவாக்கும் சொல்கின்றேன். பல ரகசியங்களும் அப்பனே. போதுமப்பா !!!!! அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் !!!!!

(சத்சங்க நிறைவு வாக்கு) 

குருநாதர் :- அப்பனே எம்முடைய ஆசிகள் !!!!!!!!! நிச்சயம் அனைவருக்குமே நிச்சயம் யான் சொல்லியதை 
 நீர் , மோர் தானங்கள் செய்யச் சொல் அப்பனே. அடுத்த வாக்கும் உரைக்கின்றேன் அப்பனே. அதி விரைவிலேயே வருவேன். பார்ப்பேன். ஆசிகள்!!! ஆசிகள்!!! அனைவருக்கும் ஆசிகள்!!! 


( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் நிறைவு அடைந்தது. இவ் சத்சங்க வாக்குகளை அடியவர்கள் அனைவருக்கும் வகுப்பு எடுத்து உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள். நம் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் முதலில் சிவபுராணம் படித்து, இவ் சத்சங்க வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி பின் அன்னமிட அவ் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். தர்மம் செழித்து ஓங்குக. ) 

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 

https://maps.google.com/?q=11.024868,76.916664

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete