​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 26 April 2025

சித்தன் அருள் - 1845 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-3 !


25. மைத்ரேய முஹூர்த்தம் : கடன் தீர்வதற்கான நேரமாக மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை அப்பா ?

அப்பப்பா! நிச்சயம் தலைகீழ் நின்றாலும் கூட விதியை மாற்ற முடியுமா என்ன? அப்பனே! ஏன் கடனை வாங்குகிறான்? கடனை தன் சுயநலத்துக்காக வாங்கிக்கொண்டு நிச்சயம் அதை கட்ட முடியவில்லை என்றால், இதை எல்லாம் செய்தால் ஒன்றும் முடியாதப்பா. பின் கஷ்டப்பட்டால்தான் வாழ்க்கையப்பா! புரிந்து கொள்ளுங்கள் அப்பா! 

26. ஒரு மனிதனுடைய இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிப்பது அவனுடைய தனிப்பட்ட ஜாதகமா ? அல்லது கோச்சாரத்தில் இருக்கும் கிரஹ நிலைகலா ? அல்லது அவனுடைய வினை பயனா ? இறைவன் / சித்தர்கள் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களுக்கு இறைவன் மற்றும் சித்தர்கள் நேரடியாக வழிநடத்துகிறார்களா ?

 அப்பா! இவற்றில் ஏதும் இல்லை என்று சொல். வருவான்/வருவாள் என்னிடத்தில், நிச்சயம் உணர்த்துகின்றேன். 

27. ஆசீவகம் மதம் பற்றி .. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களால் பின்பற்றி வந்த மதம் என்று சொல்லப்படுகிறது .. காவல் தெய்வங்களான ஐயனார், பாவாடைராயன், ஐயப்பன், கருப்ப சாமி போன்ற தெய்வங்கள் சித்தர்கள் போல் இருந்து மருத்துவம், கல்வி, தற்காப்பு மற்றும் அணைத்து கலைகளில் சிறந்து விளங்கினார்கள் என்று ஒரு வரலாற்று பதிவாக சொல்லப்படுகிறதே அப்பா .. இது எந்த அளவிற்கு உண்மை ? தமிழர்களின் பொக்கிஷங்கள் இதில் மறைந்து இருக்கிறதா ?

அப்பா! அழிந்து போய்விட்டது அப்பா! இதனை பற்றி ரகசியமாக இன்னும் வாக்குகளை செப்புவேன்.  

28. Manifestation / Visualization (காட்சிப்படுத்தல்) / Law of attraction (ஈர்ப்பு விதி) : தான் ஒரு லட்சியம் வைத்துக்கொண்டு, அது நடந்து விட்டதாக காட்சி படுத்துதல்.  பல இளைஞர்கள் இதை பின்பற்றி வருகிறார்கள். இது நேர்மறையான விளைவுகள் தருவதாக சொல்லப்படுகிறது. இது போன்ற விஷயங்கள் எவ்வளவு தூரம் உண்மை அப்பா ? இதனால் ஏற்படுவது நன்மையா அல்லது தீமையா ?

அப்பா! அனைத்தும் பொய்! சாவது மெய்!

29. குருநாதா ஒரு கேள்வி இவ்விடத்தில். மனிதனுடைய தெளிவான, நல் எண்ணங்கள் சில விஷயங்களை நடைமுறைப்படுத்தி தரும் என்பது உண்மை தானே?

அப்பா! இதற்கெல்லாம், ஒன்று இரண்டு மூன்று என வகுப்புகள் தேர்வடைந்திருக்க வேண்டும். அதனால் தான் அப்பா! முதல் வகுப்பிலே தேர்ச்சி பெறவில்லை, பத்தாம் வகுப்பு கேள்வியை கேட்கின்றார்கள் அப்பா! எப்படியப்பா? அதை சொன்னாலும் புரியாதப்பா! அதனால் தான் பதிலை சுருக்கமாக அழகாக முடித்துக் கொண்டேன் அப்பா. 

30. Time Loop concept, Dimensions, Time Travel, Past and Future time travel, Portal : ஒரு இடத்தில் இருந்து இன்னொரு உலகம் / இடத்திற்கு செல்லும் ஒரு பாதை / மார்க்கம், எதிர்காலம் மற்றும் கடந்த காலம் செல்கின்ற முறை சித்தர்கள் மரபில் இருக்கிறதா இல்லை இது வெறும் மனிதர்களின் ஒரு கற்பனை தானா அப்பா ? பல அறிவியல் ரீதியான விஷயங்கள் இதை குறித்து சொல்லப்படுகிறதே!

அப்பா! அனைத்தும் சொல்லிக்கொண்டே வருகின்றேன். அதெல்லாம் ஒதச்சொல்லப்பா. அனைத்தும் புரிந்து விடும். 

31. ராஜ ராஜ சோழனை பற்றி சிறு வயதில் இருந்தே ஒரு பிரமிப்பு. அப்பா உங்கள் பல வாக்குகள் படித்து வருகிறேன், ராஜ ராஜ சோழனை பற்றி மிகவும் பெருமையாக குறிப்பிடுகிறீர்கள். அவரை பற்றின பல ரகசியங்களையும் வாக்குகளில் கூறி வருகிறீர்கள். அவரின் சமாதி எங்கு இருக்கிறது அப்பா ? தற்போது கும்பகோணம் மாவட்டம் உடையாளூர் எனும் கிராமத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. உண்மை தானா அப்பா ? ஓர் சிவன் ஆலயத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  இந்த கேள்வியின் காரணம், வரலாற்று சிறப்புமிக்க தமிழ் மன்னனின் நினைவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான் அப்பா.

அப்பா! ஏன் எதற்கு? என் பேச்சை கேட்டானப்பா! என் பக்தனப்பா! இதனால் இப்பொழுது கூட சொல்கின்றேன். என்னை பற்றி பெருமையாக பேசக்கூடாது. இவ்வாறெல்லாம் ஆச்சி புரிய வேண்டும் என்றான். கூடு விட்டு கூடு பாயும் வித்தை எல்லாம் அவனுக்கு சொல்லியிருக்கிறேன். பல ஆலயங்கள் இருக்கின்றது. அங்கெல்லாம் உடம்பை விட்டு அடுத்தது, அடுத்து என்று (சென்றிருக்கிறான்). அவனுக்கும் சீடர்கள் பலர் இருந்தனர். அதை பற்றி ரகசியமாக எடுத்துரைப்பேன். அவனுடைய கதை நீல மானது. இப்பொழுது சொன்னாலும் புரியாது. எடுத்துரைக்கின்றேன், இப்படி இருந்தால், இவ்வுலகத்தில் அனைத்தும் சாதிக்கலாம் என்று. 

32. காவல் தெய்வம் மற்றும் எங்கள் குலதெய்வமான பாவாடைராயன் ஐயாவை பற்றி சிறு குறிப்பை/வரலாற்றை வேண்டுகிறேன் அப்பா. மேல்மலையனுர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் தனி சன்னதி கொண்டுள்ளார். இருப்பினும் வரலாறோ, குறிப்போ எதுவும் இது வரை இல்லை. இந்த தருணத்திற்காக பல ஆண்டுகள் நான் காத்துகொண்டு இருக்கின்றேன் அப்பா. திருவாய் மலர வேண்டுகிறேன்.

அப்பா! நிச்சயம் கேட்பது சரியே! நிச்சயம் அவ்வவ் இடத்தில் சொன்னால் தான் அனைத்தும் புரியுமப்பா! இதை அத்திருத்தலத்தில் வைத்து சொன்னால் தான் கேட்பவனுக்கும் நல்லது, இவ்விதழை ஓதுபவனுக்கும் நல்லது.  

33. மகாபாரதத்தில் அர்ஜுனன்  பாசுபதாஸ்திரம் வேண்டும்பொழுது சிவ நிந்தனை ஏற்பட்டதின் காரணமாக மறுபிறவியில் கண்ணப்ப நாயனாராக பிறந்தார் என்ற ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.  இது உண்மை தானா அப்பா?

அப்பா! இக்கேள்விக்கு பதில், இப்பொழுதில்லை. அப்பா! அர்ஜுனன் எப்படிப்பட்டவன்! பின்னர் கண்ணப்பன் எப்படிப்பட்டவன். இதனால், அர்ஜுனன் போர் நடத்தினான் அங்கு போய்விட்டு வரச்சொல், பின் கண்ணப்பன் இருந்த இடத்திற்கும் போய் வரச்சொல். பின் உரைப்பேன் ரகசியமாக. இன்னும் தேர்வே எழுதவில்லையாம்! கேள்விகள் கேட்கின்றானாம். 

34. நர-நாராயணர்'ன் அவதாரம் தான் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனா அப்பா!

அப்பா! அனைத்தும் நீங்கள் உணர்ந்ததே. நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

(கேள்வியை உங்களிடம் கேட்டால், எங்களிடம் பதில் சொல்லச் சொன்னால் எப்படி குருநாதா?)

அப்பா! இங்கிருக்கும் பத்மநாபனை நாடச்சொல். நிச்சயம் நவதிருப்பதிக்கு செல்லச்சொல். நிச்சயம் இதனைப்பற்றி உரைப்பேன்! அவர்களைப்பற்றி தெரிவித்துவிட்டால், நிச்சயம், சோம்பேறியாகி விடுவார்கள் மனிதர்கள். 

35. அப்பா உங்கள் வாக்கில், முன்னோர்கள் மோட்சம் அடைய,  நவராத்திரி பொழுதில் (நவ தானியங்கள் மற்றும் உப்பு) வைத்து வழிபாடு செய்து, ஐப்பசி அமாவாசையில் கடலில் விட,  மார்கழி மாதம் "விஷ்ணு சஹஸ்ரநாமம்" கேட்டு, அதை தொடர்ந்து தை மாதத்தில் ஒரு ஆன், பெண் அவர்களை வீட்டுக்கு அழைத்து அன்னமிட்டு, வேட்டி மற்றும் சேலையை சமர்ப்பிக்க சொல்லி இருந்தீர்கள். பெருமாள், முன்னோர்களை மோட்சம் அடைய செய்வார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தீர்கள் அப்பா. இதை பின்பற்றினவர்களுக்கு எப்படி உணர முடியும் அப்பா ? தங்களது முன்னோர்களுக்கு மோட்சம் கிடைத்ததா இல்லையா என்று ? இல்லை சரியாக இதை ஸ்ரத்தையோடு செய்தோமா என்று?

அப்பா! நிச்சயம் தேர்வை எழுதிவிட்டார்கள். என்றாலும், மதிப்பெண்களை ஆசிரியர் கூறினால் தானே தெரியுமப்பா? அதற்குள் இவை எல்லாம் யோசித்து யோசித்து இருந்தால், பின் விடைகள் வந்து கொண்டே இருக்குமப்பா! 

36. நவகிரக தீபம் : அப்பனே உங்கள் வாக்கின் படி, எந்த சிந்தனையும் இல்லாமல்,  மற்றவர்களுக்காக இதை செய்யச் சொன்னீர்கள். அண்ணாமலையாரும் நான் பார்த்து கொண்டு இருக்கிறேன் நீ சொல்வதை யாரெல்லாம் கடைபிடித்து வருகிறார்கள் என்று. அப்பனே உன் அருளால் எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து 4 மாதங்கள் என் தாயும், நானும் ஏற்றி வழிபட்டோம். இது போன்று பல அடியார் பெருமக்கள் கடைபிடித்து வந்தார்கள். இதனால் ஏதேனும் சிறிதளவாவது மற்றவர்களுக்கு பயன்பட்டதா ? கிரகங்களினால் ஏற்படுகின்ற விளைவுகள், மனிதர்களுக்கான பாதிப்புகள் சற்றேனும் குறைந்ததா ?

அப்பனே! நிறைய அளவுக்கு பூகம்பங்கள் வந்தது. இதை சொன்னால் மனிதன் பயப்பட்டுக் கொண்டே வாழ்வான். அதனால், எதையும் பாராமல், நிச்சயம் தீபங்கள் ஏற்றிக் கொண்டு வாருங்கள் என்று.  நிச்சயம்  அவ் புண்ணியங்கள் அவர்களை காத்து நின்றது. இருப்பினும், மனிதன் மாமிசத்தை உண்பதை விடவில்லை. அதுவே பல இடங்களில் பாதிப்பை உண்டாக்கியது. இதற்குத்தான் அப்பா. அகத்தியன் சொன்னால் ஒரு அர்த்தம் உண்டு. ஒரு ஆசிரியன் வகுப்பறையில் சொன்னால் தொடர வேண்டும். அப்படி இருந்தால் தான் தேர்விலும் தேர்ச்சி பெற முடியும். அதே போலத்தான், உங்களுக்கு சொல்வதெல்லாம், புண்ணியம் அதிகரிக்கவே. அதை கூட குற்றப்படுத்தினால் எப்படியாப்பா. புண்ணியங்களே சாரும் அவர்களை. 

37. நாம் தினசரி கடமைக்காக செய்யும் விஷயங்களில் எது தீய கர்மா என்று பகுத்தாய்ந்து தெளிவு பெறுவது மிகவும் சவாலாக உள்ளது. சிந்தித்து செயல்படு என்று குருநாதர் சொல்கிறார். நமது கர்மாவை பொறுத்து தானே நமது சிந்தனையும் அமையும்.அப்படி இருக்க , நாம் சிந்திப்பது சரியா என்பதுதான் குழப்பமாக உள்ளது. 

அப்பா! சிந்திப்பதே, நல்லதா? கெட்டதா? இருப்பினும் யான் வந்து வாக்குகள் செப்பிக்கொண்டு இருக்கின்றேன். அகத்தியன் வருவது என்பது சாதாரண விஷயமா? இதை யோசிக்கச்சொல், பின்பு உரைப்பேன் ரகசியமாக. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. அப்பா நன்றி! அகத்தியா அகத்தியா அகத்தியன் தந்தையே தாயே அனைத்தும் நீயே 🙏

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக!

    கேள்வி பதிலை தொகுத்து வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையா.
    37-வது கேள்வி அடியேனின் கேள்வி. கேள்வி பதிவிடப்பட்டது பாக்கியம். அதைவிட குருநாதரின் பதில் கிடைத்தது மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன். தன்னலமற்ற இந்த சேவையை செய்யும் ஆசிரியருக்கும் திரு ஜானகிராமன் ஐயாவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

    ReplyDelete

  4. 33. மகாபாரதத்தில் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டும்பொழுது சிவ நிந்தனை ஏற்பட்டதின் காரணமாக மறுபிறவியில் கண்ணப்ப நாயனாராக பிறந்தார் என்ற ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. இது உண்மை தானா அப்பா?

    அப்பா! இக்கேள்விக்கு பதில், இப்பொழுதில்லை. அப்பா! அர்ஜுனன் எப்படிப்பட்டவன்! பின்னர் கண்ணப்பன் எப்படிப்பட்டவன். இதனால், அர்ஜுனன் போர் நடத்தினான் அங்கு போய்விட்டு வரச்சொல், பின் கண்ணப்பன் இருந்த இடத்திற்கும் போய் வரச்சொல். பின் உரைப்பேன் ரகசியமாக. இன்னும் தேர்வே எழுதவில்லையாம்! கேள்விகள் கேட்கின்றானாம்.



    சண்டிகருக்கு அருகே உள்ள குருசேத்திரம்... அர்ஜுனன் போர் புரிந்த ஊர்... அடுத்து கண்ணப்ப நாயனார் வாழ்ந்த இடம் ஆந்திர மாநிலம் காளகஸ்தி.. அங்கு மலையின் மீது கண்ணப்ப நாயனார் வழங்கிய கோயிலும் உள்ளது.. கேள்வி கேட்ட அடியவர் செல்ல வேண்டிய திருத்தலங்கள் இவை இரண்டும்

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete