அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 11
(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தன் அருள் - 1796 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1805 - பகுதி 2
3. சித்தன் அருள் - 1808 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1823 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1825 - பகுதி 5
6. சித்தன் அருள் - 1826 - பகுதி 6
7. சித்தன் அருள் - 1830 - பகுதி 7
8. சித்தன் அருள் - 1833 - பகுதி 8
9. சித்தன் அருள் - 1835 - பகுதி 9
10. சித்தன் அருள் - 1837 - பகுதி 10 )
(நம் குருநாதர், அன்புத் தந்தை, கருணைக் கடல் , பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அவர்கள் அங்கு உள்ள அடியவர்கள் என்னென்ன புண்ணியங்கள் செய்ய உள்ளீர்கள் என்று கேட்டு அதன் பின் அவர்களுக்கான வாக்குகள் உரைத்தார்கள். இதன் தொடரச்சியாக…)
அடியவர் 6:- ஈ, எறும்புக்கு , காக்கா, குருவிக்கு, கோமாதாவிற்கு இல்லாத ஒருத்தருக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டு இருக்கின்றேன். பைரவருக்கும். இன்று மட்டும் செய்யவில்லை ஐயா, இங்க வந்ததனால்.
குருநாதர் :- அறிந்தும் கூட அம்மையே (விதியை மாற்றும் தனி வாக்குகள்…..)
அடியவர் 7 :- எறும்புகளுக்கு தானம் செய்கின்றேன்.
குருநாதர் :- அம்மையே வாயில் சொல்லக்கூடாது. நிச்சயம் செய்ய வேண்டும். இதனால் நீ செய்தால் உன் பிள்ளைகளுக்குத்தான் புண்ணியமாகப் போகும். அனைத்தும் உன் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடு தாயே. அனைத்தும் செய்யட்டும். நன்று நன்று. ஆசிகள் ஆசிகள்.
அடியவர் 8 :- (……………………..)
குருநாதர் :- ( தனி வாக்குகள் - பிரம்ம தேவரிடம் பேசிய பின்பு மறு வாக்கு. )
அடியவர் 9 :- நீர் மோர் தானம் செய்து கொண்டு உள்ளேன்.
குருநாதர் :- ( தனி வாக்குகள் )
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- ( புண்ணியம் செய்து கொண்டு இருப்பவர்களைப் பற்றி குருநாதருக்கே தெரியும். இனி புண்ணியம் செய்ய உள்ளவர்கள் என்ன நீங்கள் செய்ய உள்ளீர்களோ அதை சொல்லிவிட்டு, குருநாதரிடம் வாக்கு பெற்றுக் கொள்ளுங்கள். )
அடியவர் 10 :- ( வாயைத் திறக்காமல் மனதிலேயே சொல்லியதால் )
குருநாதர் :- அம்மையே சொல்லிவிட்டேன்.
அடியவர்கள் :- (சிரிப்புக்கள்)
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அம்மா புரியுதுங்களா உங்களுக்கு? நீங்க மனசுலேயே சொன்னீங்க. குருநாதரும் அதே போல் உரைக்கின்றார்கள். நீங்க வாய் திறந்து சொல்லுங்கள்.
குருநாதர் :- அம்மையே, அனைத்தும் உன் நன்மைக்காகத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன். (புண்ணியங்கள்) செய்தால் சொர்கம்.
சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கங்கள்)
அடியவர் 10 :- என்னால முடிந்த அளவு வாயில்லா ஜீவராசிகளுக்கு …
குருநாதர் :- ( இவ் அம்மை ஒரே ஒரு அடி புண்ணியத்தை நோக்கி நகர ஆரம்பித்தவுடன் அதாவது என்ன புண்ணியம் செய்ய உள்ளேன் என்று முதல் முறையாக வாய் திறந்தவுடன், கருணைக்கடல் இவ் அடியவருக்குக் கருணை மழை வாக்கு பொழிந்தார்கள். ஒரு அடி எடுத்து வைத்தற்கே இப்படி என்றால்…)
நலன்களாகவே ஆசிகள் தாயே. நிச்சயம் குறைகள் நீங்கும். சில குறைகள் இருந்து கொண்டே இருக்கின்றது. நிச்சயம் சிறிது காலம் அப்படித்தான் இருக்கும். நல்முறையாக மாற்றம் அடையும். கவலையை விடு. இவ்வாறு நல்முறையாக (புண்ணியங்கள்) செய்து கொண்டே இருந்தால் (விதி) மாற்றங்கள் தாயே.
(வணக்கம் அடியவர்களே, இந்த வாக்கிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது - எவ் குறை இருந்தாலும், குருநாதர் பாதங்களை இறுகப் பற்றிக்கொண்டு , புண்ணியங்கள் அனுதினமும் தொடர்ந்து மனம் தளராமல் செய்து கொண்டே இருந்தால், உங்கள் விதிகள்/வாழ்வு குருநாதர் அருளால் மாற்றம் அடையும். உங்கள் மாத வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி உங்களால் இயன்ற புண்ணியங்கள் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் செய்யும் புண்ணியங்கள் அது ஒன்றே உங்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் மந்திரத் திறவுகோல். வாருங்கள், கருணைக்கடல் அருளும் ஞான அமுதத்தைப் பருகுவோம்.)
அடியவர் 11 :- நான் மலைப் பிறதேசத்துக்குச் சென்றால் , அங்கு அன்ன தானம் செய்வதற்கு, அங்கு நான் சென்று service செய்கின்றேன் (அகத்திய மாமுனிவர்) தாத்தா. அதற்கப்புறம் (………..) கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை கொடுக்கின்றேன் என்று சொல்லியிருக்கின்றேன். என்னால் என்ன (புண்ணியங்கள் செய்ய) முடியுமோ அதை செய்து கொண்டே இருக்கின்றேன்.
குருநாதர் :- அம்மையே எம்முடைய ஆசிகள் இருக்கின்றதம்மா. நன்முறைகளாகவே இதனால் விரும்பியதை எளிதில் அடைந்து விடலாம் என்பேன். ( ………. தனி வாக்குகள் …… ) இறைவன் பேச்சைத் தவிர யார் பேச்சையும் கேட்பதில்லை என்று (இரு). ( தனி வாக்குகள்) உயர்ந்த நிலை அடைவாய். நல் ஆசிகள்.
அடியவர் 11 :- ( சில சந்தேகங்கள் )
குருநாதர் :- (தனி வாக்குகள்) எங்கும் செல்வதில்லை இவ் அகத்தியன். சொல்லிக்கொண்டே இருப்பான் அம்மையே. யான் சொல்லியதை முதலில் பயன்படுத்து. நிச்சயம் வாக்குகள் இன்னும் உண்டு.
அடியவர் 11 :- உங்களுடைய ஆசிகள் தினமும் வேண்டும்.
குருநாதர் :- இப்பொழுது அதாவது ஏன் (இங்கு வாக்குகள் உந்தனுக்குச்) சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் என்றால், என்னுடைய அருள்கள் இருப்பதனால்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன். நிச்சயம் (யான் சொல்லியவற்றை ) கடைப்பிடி.
அடியவர் 11 :- கோளறு பதிகம் படிக்கச் சொன்னீர்கள்.
குருநாதர் :- அம்மையே முதலில் படி. இதைச் செய்தாலே அடுத்த படிக்கு யானே அழைத்துச் செல்வேன் வாக்குகள் உரைத்து.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- ( தினமும் கேளறு பதிகம் படிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 108 முறை) இதைச் செய்யவே ஒரு 5 மணி நேரம் ஆகும்.
அடியவர் 12 :- தினம் ஒரு வேளை உணவு கஷ்டப்படுபவர்களுக்குக் கண்டிப்பாகக் கொடுக்கின்றேன்.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் அப்பனே நல்லதே செய்வேன் அப்பனே. நல்முறைகளாகவே. (தனி வாக்குகள்) நிச்சயம் சில கர்மாக்களப்பா. அவ் கர்மாவை நீக்கி அப்பனே அனைத்தும் நல்குவேன் அப்பனே. உடம்பை சரியாக கவனித்துக் கொள் அப்பனே. பல இயற்கை மூலிகைகளை உட்கொள் அப்பனே. ( தனி வாக்குகள்.) நலமாக ஆசிகள். ஆசிகள்.
அடியவர் 13 :- (……………)
குருநாதர் :- (………..) உந்தனை அப்பனே ஏதாவது ஒரு வேலைக்கு பயன்படுத்த வேண்டும் என்பது என்னுடைய எண்ணமப்பா. நிச்சயம் அது போகப்போக தெரியுமப்பா. நிச்சயம் ஆசிகள். எதையும் கேட்டுவிடாதே அப்பனே. எந்தனுக்குத் தெரியுமப்பா உன் நிலைமை. ஆசிகள். ஆசிகள்.
அடியவர் 14 :- குடும்பக் கடமையைச் செய்யனும். அம்மா அப்பாவை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குருநாதர் :- அப்பனே கவலைகள் இல்லை. அப்பனே சனீஸ்வரன் சில தொல்லைகள் கொடுக்கத் தயாராகிக்கொண்டே ஆனாலும் அப்பனே பின் ராமனின் அருளும் எதை என்று அறிய அறிய அப்பனே அனுமானின் அருள்களும் இருக்க, அப்பனே நிச்சயம் சனி தோறும் அனுமானின் (ஆலயத்திற்கு) இடத்திற்குச் சென்று கொண்டே இரு அப்பனே நலன்கள். நிச்சயம் நினைப்பது பின் சிறிது தடங்களாயினும் பின் அனுமானே நிறைவேற்றி வைப்பான் அப்பனே. என்றுடைய ஆசிகள் அப்பனே. கவலையை விடு. எப்பொழுது நினைத்தாலும் ராம ஜெபத்தை மனதில் எண்ணிக்கொண்டே இரு. ஆசிகள்.
அடியவர் 15 :- அன்னதானம் செய்து கொண்டு இருக்கின்றேன் சாமி. (தனி கேள்விகள்)
குருநாதர் :- ( தனி வாக்குகள் ) இன்னும் சொல்லிக்கொண்டே இருந்தால் அப்பனே உன் மனது வேதனைக்குள்ளாகி விடும். நிச்சயம் அருளாசிகள் அப்பனே. கவலையை விடு அப்பனே. யானே எதைச் செய்ய வேண்டும் என்று என்னிடத்தில் விட்டுவிடு அப்பனே. நிச்சயம் நீ எதனையும் கேட்டுவிடாதே. எவரிடத்திலும் கேட்டுவிடாதே அப்பனே எதையும் கூட. உன் கடமையைச் செய்துகொண்டே இரு அப்பனே. ( தனி வாக்குகள்.) கவலையை விடு. ஆசிகள் ஆசிகள் லோபாமுத்திரையோடு.
அடியவர் 16 :- (……………)
குருநாதர் :- அனைவருக்குமே உண்டு என்பேன் அம்மையே வயதாக வயதாக. இதனால் அம்மையே சொல்லிவிட்டேன். பலவகையான இயற்கை மூலிகைகளை எடுத்துக் கொள். அப்பனே சொல்.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அம்மா மூலிகை எடுத்துக்கொள்ளுங்கள். திரிபலா, திரிகடுகம். காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல், வில்வம், துளசி, வேப்பிலை இதெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்.
அடியவர் 16 :- தினமும் காக்கைக்கு, மயிலுக்கு , எறும்புக்கு, கோமாதாவுக்கு செய்கின்றேன் சாமி. நீர் மோர் கொடுக்கின்றேன் சாமி. அன்னதானம் முடிஞ்ச அளவு செய்கின்றேன் சாமி.
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லதே செய்வார் அம்மா.
அடியவர் 16 :- சரிங்க சாமி.
அடியவர் 17 :- (………………)
குருநாதர் :- அப்பனே எம்முடைய ஆசிகள். சில பக்குவங்கள் படவே சில சில வருத்தங்கள் அப்பனே. ஆனாலும் கவலையை விடு. அப்பனே என்னருகிலேயே இருக்கின்றாய் அப்பனே நலமாக. கந்தனும் இருக்கின்றான் அப்பனே நலமாக. இதனால் குறையை விடு. மனிதன் என்றாலே குறைதானப்பா. ( விதி குறித்த தனி வாக்கு ) அவையெலாம் அகற்றுகின்றேன் அப்பனே. தைரியமாக இரு. யானே இருக்கின்றேன் உன்னருகில் அப்பனே. கொடுக்கின்றேன் அப்பனே விரும்பியதெல்லாம். ஆனாலும் பொறுத்திருக்க வேண்டும் அப்பனே.
( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால் April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)
ஆலய முகவரி :-
ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர், மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.
Google map:-
https://maps.google.com/?q=11.024868,76.916664
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete