வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப்பெருமானிடம் கேள்வியை சமர்ப்பித்து பதிலை பெற வேண்டி உங்களில் சிலர் கேள்விகளை அனுப்பி தந்தது ஞாபகமிருக்கும். சமீபத்தில், அகத்திய பெருமானின் ஜீவநாடியுடன், திரு ஜானகிராமனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த அனைத்து கேள்விகளையும் கேட்டு பதிலை பெற்றுள்ளேன். அவை கீழ்வருமாறு தருகின்றேன்! பொறுமையாக காத்திருக்கவும்!
1. வணக்கம் குருநாதா! ஏன் அஷ்டமி, நவமி திதிகளிலும், பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்றும், நல்ல விஷயங்களை செய்ய தொடங்குவதில்லை. நீங்கள் கூட இந்த நாட்களில் வாக்கு உரைப்பதில்லையே!
அப்பப்பா, நிச்சயம் தன்னில் கூட, அப்படியே பழக்கப்படுத்தி விட்டார்கள் அப்பா. அப்பா! நவமி என்றால் என்ன வென்று கூறு?
(நவமி என்பது அமாவாசையிலிருந்தும், பௌர்ணமியிலிருந்தும் ஒன்பதாவது நாள்)
அப்பப்பா! சித்தர்கள் சிலர்க்கு ஏன் கொடுப்பதில்லை என்பதற்கும், சிலருக்கு மட்டும் ஏன் கொடுக்கிறோம் என்பதற்கும், பல அர்த்தங்கள் உண்டு. இதற்க்கு விஞ்சான ரீதியாக, எங்கு உரைக்க வேண்டுமோ, அங்கு, அப்பொழுது உரைப்பேன் அப்பா! அதுவரை நிச்சயம், எம்முடைய ஆசிகள்!
2. திருச்சுனையில் உங்கள் உத்தரவின் பேரில் அன்னதானம் செய்து வருகிற உங்கள் பக்தை பாண்டி அம்மாளுக்கு உடல் நிலை சரியில்லையே. அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுங்கள் குருநாதா!
இவள் தன் இறந்திருக்க கூடியவள். அன்னத்தை இட்டாள். அதனால்தான் பிழைத்துக் கொண்டாள். பிழைக்கவும் வைத்ததே நானே! என்னிடத்திலேயே கேள்விகளை கேட்கின்றீர்களா?
(அப்படி அல்ல! நாங்கள் பிரார்த்தனைதான் செய்து கொள்கிறோம். அன்னதானம் செய்கிற வர்கள் நீண்ட நாட்கள் இருந்து அந்த சேவையை செய்யவேண்டும்.)
அவளது கஷ்டங்களோடு, இவ்வளவுதான் என்று பிரம்மன் விதி எழுதிவிட்டான். அவள் இடத்திற்கு யானே சென்று, மருத்துவமனையில் அவளையும் காப்பாற்றி, விதியையும் மாற்றி எழுதியுள்ளேன் அப்பா. இது எவருக்கும் தெரியாதப்பா!
3.குருமாதா சமேத குருநாதரக்கு நன்றி இந்த வாய்ப்பை அளித்தமைக்கு மற்றும் பணிவான வணக்கம்.
அப்பா மனிதர்கள் செய்யும் தவறால் அனைத்து ஜீவராசிகளும் பாதிக்கப்படுகிறார்கள். கோடையின் கடுமை மார்ச் மாதத்திலே இந்த வருடம் . இதில் இருந்து எல்லாரையும் காத்து அருள வேண்டுகிறோம்.
இதனால்தான் அனைவரையும் காப்பாற்ற, முன்னரே ரகசியமாக சொன்னேன், மற்றவர்களுக்காக வேண்டிக்கொண்டு நவதீபத்தை எல்லாம் ஏற்ற சொன்னேன். அகத்தியன் சொன்னவை எல்லாம் மற்றவர்களுக்காகவே என உணர்ந்து செய்தால், உங்கள் குடும்பம் செழிக்குமப்பா. பூகம்பங்கள் எல்லாம் இங்கும் வந்திருக்க கூடியது. ஆனாலும் தடுத்துவிட்டேன். அப்படியெல்லாம் நடந்தால் தான் ஒரு பயம் இருக்கும் என்றான் ஈசனும். இதன் ரகசியத்தை பின்னர் உரைக்கின்றேன்.
4.இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு இருக்கும் மாதவிடாய் மற்றும் PCOD பிரச்சனை போல ஆண்களுக்கும் வெரிகோசீல் (Varicocele) நோயால் குழந்தை பேறு தடைபெறுகிறது ஆண்களின் வெரிகோசீல் (Varicocele) நோயால் விந்தணு எண்ணிக்கை குறைவு மற்றும் குழந்தை பெறும் திறன் இல்லாமல் போகிறது. இந்த குறைபாட்டை சரி செய்ய சிகிச்சை முறை மற்றும் மருத்துவ குறிப்பு முறை பற்றி குருநாத பெருமான் வழிகூறினால் இதை பற்றி விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை பற்றி பலரும் தெரிந்து கொள்ள வழி கிடைக்கும் .
ஓரிதழ் தாமரை என்று ஒரு மூலிகை உண்டு. அதை உட்கொண்டாலே போதுமானதப்பா. பாலிலிருந்து பிரித்தெடுப்பார்களே மோர் என்பது, அதை தானம் செய்திட, சில சில கர்மாக்களும் விலகும். அதனால் தான் அதை அனைவருக்கும் கொடுங்கள் என்றேன். இதை புரிந்து கொள்ள மனிதனுக்கு மனமில்லையே! உடம்பிலுள்ள அழுக்குகளை களைய, இந்த ஓரிதழ் தாமரை உதவும். மனிதன் (தகாத உணவினால்) உடலுக்குள் அழுக்கை சேர்த்துக் கொண்டே வருகிறான். இதற்கு கோரை கிழங்கு நிச்சயம் தன்னில் உதவும். இதை அதிகாலையில் வெறும் வயிற்றிலும், மாலை வேளையிலும் உட்கொண்டாலே போதுமானது. நிச்சயம் மாற்றங்கள் உண்டு! உண்டு!
5. ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் சனீஸ்வரர் ஸ்தலம்,பொழிச்சலூர், இந்த திருத்தலத்தில் அகத்திய பெருமான் திருவுருவ சிலை உள்ளது அதன் மகிமை பற்றி ஐயா தயவு செய்து சொல்லுங்கள்
அப்பா! அங்கு நானே இருக்கின்றேன். அதி விரைவிலேயே அங்கு வந்து வாக்குகள் செப்புவேன்!
6. மனிதர்களுக்கு தீர்வு காண முடியாத நிலை கஷ்டம் ஏன் ஏற்படுகிறது? முன்ஜென்ம பாவங்கள் செய்து இருந்தாலும் இந்த ஜென்மத்தில் நல்லவர்களாக வாழ்ந்தாலும் கஷ்டம் ஏற்படுகிறது அத்தகைய கஷ்டத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
அப்பா! கஷ்டத்தில்தான் இறைவன் மனிதனுக்கு அருகிலேயே இருப்பான் என பல வாக்குகளில் உரைத்துவிட்டேன் யான். இன்பமாகவே இருந்தால், பின் தூரத்தில் சென்று விடுவான் இறைவன். இதற்கும் காரணங்கள் உண்டு. துன்பப்பட்டால்தான் மனம் பக்குவமடையும். அதாவது, இறைவனை காண வேண்டும், காண வேண்டும் என்று மனிதன் துடி துடித்துக் கொண்டிருக்கின்றான் அப்பா! துன்பம் வழியில் வந்தால் தான் நிச்சயம் இறைவனை காண முடியும். நிச்சயம் இன்பமாக இருந்தால் பாவத்தை சேர்த்துக்கொண்டு, பிறப்புகள் எடுத்து எடுத்து, இதனால் இறைவனை காண வழி, துன்ப வழி அப்பா!
7.செய்வினை பாதிப்பை தடுக்க வழி இருக்கிறதா?
அப்பப்பா! இருக்கின்றதப்பா! உலகமே இதன் பின்னால் தான் செல்கின்றது அப்பா! ஆனால் இதன் பின்னாடி சென்றால், அனைத்தும் உடனடியாக நடக்கும். ஆனால், அனைத்தும் உடன் அழிந்து போகும். ஆனாலும் பின் இறைவனிடத்தில் வந்தாலும், தீர்வுகள் கிட்டாதப்பா! ஆனாலும் இவைதன் எடுத்துக் கூறினாலும், சித்தர்கள் தானே எடுத்து கூறுகின்றீர்கள் என்று சொல்வார்கள் அப்பா! இதற்கும் பல தீர்வுகள் உண்டு என பல வாக்குகளிலும் எடுத்து உரைத்து விட்டேன். இதனை பல வகைகளிலும் தடுக்கவே, ஒரு சித்தன் இருக்கின்றானப்பா. அதை ரகசியமாக சொல்வேனப்பா! அறிந்தும், புரிந்தும் நடந்து கொள்ளுங்கள், எங்களிடத்தில் இவை எல்லாம் பலிக்காது. எங்களிடத்தில் வந்துவிட்டாலே, இதற்கு மதிப்பு பூஜ்யமே! ஆனாலும் இதை செய்திட்டுத்தான் வருகின்றார்கள். அதனால் தான் எத்தனை ஆண்டுகள் ஆயினும் ஒன்றுமே நடப்பதில்லை.
8.கல்வி தடை. பொருளாதர தடை.எதிரி தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?
அப்பா! கல்வித்தடை நீங்க, நிச்சயம் கூத்தனூர் தேவி, சென்று, அது மட்டும் அல்லாமல், வல்லாரை எனும் மூலிகையை எடுக்கச்சொன்னேன். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து (சில மந்திரங்களை) ஓதி வந்தாலே, படிப்பு நிச்சயம் வளரும்.
இங்கு எதிரிகள் என்றால் எவர்? நிச்சயம் தரித்திர மனிதர்களே என்பேன். அதனால் தான் அப்பா!, நிச்சயம் பொறாமை குணத்தை மாற்றுங்கள்! எண்ணத்தை உயர்வாக வைத்தால் தொழில் சாதாரணமாக கடந்து போகும் என்பேன்! உன் எண்ணங்கள் எவ்வளவு உயர்வாக இருக்கின்றதோ, உன் மனது எவ்வளவு உயர்வாக இருக்கின்றதோ, அவ்வளவு உயர்வு உன் பணிகளிலும் கிடைக்கும். நிச்சயம் தொழில் உயர்வு கிடைக்கும். ஆனால், மனமில்லையே! கூடவே உயர்வும் இல்லையே!
9. இதற்கு முன் ஒருமுறை, ஒரு ருத்ராக்ஷத்தை இரவு நீரில் இட்டுவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ருத்திரன் நீரில் இறங்கி உள்புகுந்து நம்மை காப்பான் என்றீர்கள். அப்படி செய்து பார்த்த பொழுது, அந்த நீர் வழி உள்புகுந்த அக்னியை தாங்க முடியவில்லை குருநாதா? என்ன செய்ய?
அப்பா! அதனுடன் துளசி இலையை மென்று தின்னுங்கள்.
10. .தற்போதைய காலத்தில் வளர்ந்து வரும் பிள்ளைகள் (மகள் மற்றும் மகன்) வயதுக்கு ஏற்றார் போல் உடல் பலத்தை பெற முடியாமல் தவிக்கிறார்கள் மிகவும் மெலிந்து காணப்படுதல் மற்றும் சோர்வு தன்மை, பலம் குன்றி காணப்படுதல் இது போன்ற பிரச்சனைகள் தீர குருநாதர் கருணைக்கடல் அருள வேண்டும். """"மிகவும் மெலிந்த உடலை தேற்ற"""" தீர்வு ஒன்றினை அருளுங்கள் தந்தையே.
அப்பா! சூரியனின் வேகமானது குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தான் (உடலுக்கு) தேவையான ஒளி கிடைப்பதில்லை. இதனால் தரித்திரம் நிறைந்த வாழ்க்கையாக வாழ்ந்து வருகின்றார். இதனால் தான், சித்தனுடைய பேச்சை கேளுங்கள் என்கின்றோம். கிரகங்களின் வேகத்தை எவ்வளவு மாற்றினாலும், பின் தன்னிலைக்கே வந்து விடுகின்றது. இனியும் போகப்போக நடக்கப்போவதை தெரிவித்தால், நீங்கள் பயந்து ஓடி விடுவீர்கள். இதனால், பொறுத்திருந்து, பின் மனதை பக்குவப்படுத்தி சொல்கின்றேன். அனைத்திற்கும் தீர்வு உண்டு, இல்லையென்றால் யாங்கள் வந்து வாக்குகள் செப்ப மாட்டோம்.
10. காசியில் தங்களின் உண்மை முகத்தினை ஒருவர் ஓவியமாக வரைவார் என்று கூறியிருந்தீர் அதைக் காண அடியவர்கள் மிகவும் ஆவலாக உள்ளோம்.
அப்பப்பா! உயர் கல்வியை படிப்பதற்க்கே பின் பொறுத்து ஆகத்தான் வேண்டுமப்பா. பின் நிச்சயம். அனைத்திற்கும், பின் திருமணம் என்றாலும் பொருத்தாகத்தான் வேண்டும். ஆனால் அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடுமா என்ன? அப்பனே! புண்ணியங்கள் அதிகரித்து, அதிகரித்து காட்டுகிறேனப்பா. இன்னும் பக்குவங்கள் பட வேண்டுமப்பா!
11. பொதுவாக்கு ஒன்றில் தாங்கள் தவம் செய்த குகையை பற்றி கூறுகிறேன் என்று வாய் மொழிந்தீர் மிகவும் ஆவலாக உள்ளோம் தந்தையே.
அப்பா! நிச்சயம் செய்கின்றேன் அப்பா! என்ன செய்வீர்கள் நீங்கள்? ஆட்களை கூட்டிக்கொண்டு அங்கு சென்று, "இங்குதான் அகத்தியன் தவம் செய்தான்! என்று கூறி பின் காசாக்குவான் மனிதன் கூட. நிம்மதியையே கெடுத்து விடுவான்.
(100 பேர் அப்படி வந்தாலும், ஒரு இரண்டு பேராவது நேர்மையாக இருக்க மாட்டானா?)
அப்பப்பா! நேர்மையானவன் கூட. மற்றவனை பார்த்து, ஏன் நேர்மையாக இருக்க வேண்டும் என சென்று விடுகின்றான், ஆடுகளை போலவே.
(எதற்க்காக இந்த கேள்வியை கேட்டேன் என்றால், இதற்கு முன் அன்னதானம் செய்வதை பற்றி கூறும் பொழுது, நீங்களே கூறியுள்ளீர்கள். 100 பேரிடம் கொடுக்கிற பொழுது, 10 பேர்கள்தான் ஒழுங்காக பண்ணுவார்கள். மிச்சம் உள்ள 90 பேர்கள் சரியாக பண்ணமாட்டார்கள். ஆனால், இந்த 10 பேரை பிடிக்க வேண்டும் என்றால், அந்த 100 பேருக்கு கொடுத்துதான் ஆக வேண்டும் என்றீர்கள்.)
அப்பப்பா! ஒருவன் மட்டும் மேலே அமர்ந்திருக்கிறான். மற்றவர்கள் அனைவரும் கீழே அமர்ந்திருக்கிறார்கள். இதற்கு என்ன பதில் என்று நீ கூறு முதலில்.
(அவர் இன்னும் உங்களை பற்றி புரிந்து கொள்ளவில்லை)
அப்பப்பா! என்னை பற்றி நன்றாக புரிந்து கொள்ளட்டும், பிறகு, யானே அழைத்து செல்கின்றேன்.
12. வேதாரண்யம் அகத்தியன்பள்ளி கோவிலில் சரியான நேரத்துக்கு பூஜைகள் நடப்பதில்லையே?
அப்பப்பா! பின் நிச்சயம், யாங்கள் எதையுமே, விரும்புவதில்லை. நிச்சயம் மனசாட்சியோடு நடந்தால் போதுமானதப்பா. எங்களை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும்! முதலில் உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா! உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளாததால் தான் யாங்கள் வந்து, இப்படி நடங்கள், இப்படி நடங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றோம். எங்களை பார்க்க எங்களுக்கு தெரியுமப்பா.
13. அய்யனே! ஒரு சிறு சந்தேகம். முன்பு, நீங்கள் கூறியதை ஞாபகப்படுத்தி இப்பொழுது கேட்கின்றேன். வேதாரண்யம் கடற்கரையில், ஈசான மூலையில் சென்று அமர்ந்து, அகத்தியனை நினைத்து கைநீட்டி எவன் ஒருவன் த்யானம் செய்கிறானோ, அவன் கையில் நான் எழுதிய ஓலை கிடைக்கும் என கூறியிருக்கிறீர்கள். இப்பொழுதும் கொடுக்கிறீர்களா?
அப்பப்பா! அவ் ஓலையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறான். பணத்தை சம்பாதித்து, மறைத்தது வைத்து, மற்றவர்களின் கர்மாவையும் சேர்த்துக் கொள்ளப் போகின்றான். நிச்சயம் கொடுப்பேன்! இப்பொழுது சொல்லிவிட்டால், அனைவரும் வரிசையில் வந்து நின்று விடுவார்கள். அகத்தியனே! எந்தனுக்கு, தா தா என்று! யான் கொடுக்கவில்லை என்றால், அகத்தியனா இவன் என்று சொல்லிவிட்டு போய் கொண்டே இருப்பான். பக்குவம் இல்லாமல் எதை கொடுத்தாலும், அவை வீணே! குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் என்னவென்று என ஒரு பழமொழியும் உண்டு.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteநன்றி 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteநன்றி குருவே.
ReplyDeletewonderfull
ReplyDeleteநம் அன்பான குருஜி சுவாமி அகத்தியருக்கு மிக்க நன்றி. அக்னிலிங்கம் சுவாமி மற்றும் ஜானகிராமன் சுவாமிக்கு நன்றி.
ReplyDeleteஓம் ஸ்ரீ அகத்தீசாய நமோ நமக. குருவே சரணம் சரணம்.
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete