13. கந்த சஷ்டி கவசம் தினமும் 36 முறை சொல்ல விருப்பம். ஆனால் நேரம் அதிகம் ஆகிறது. சுருக்கமாக சொல்லும் விதம் இதுதான் என்று பலரும் பலவித மாக. சொல்கிறார்கள். இது பற்றி அருள் கூர்ந்து பதிலுரைக்க வேண்டுகிறேன்.
அப்பப்பா! சுடுகாட்டுக்கு சென்றாலும் அதிக நேரமாகின்றதே! இதற்க்கு என்ன வழி என்று நீ கூறு!
(குருநாதா! திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வது போல் "எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்!")
நிச்சயம் தன்னில் கூட! இப்படி சொன்னால் எப்படியப்பா! பின் வேலைக்கு செல்ல சொல். அதிக நேரம் வேலை செய், பணம் தருகிறேன் என்றால் செய்வானா இல்லையா? அவனை கேள்! நிச்சயம் செய்வானப்பா! அப்பா! காசுகள் யாங்கள் கொடுக்கின்றோம்! சொல்லச்சொல்ல!
14. குருவே இக்கலியுகத்தில் ஒருவன் நல்லவனாக இருக்க விரும்பினாலும் அவனை சுற்றி உள்ளவர்கள் அவ்வாறு இருக்க விடுவதில்லை என்ன செய்ய வேண்டும்?
அப்பா! முதலில் நீ நல்லவனாக இருந்தாலே அனைவரும் மாறி விடுவார்கள். அப்பனே! நீ நல்லவனாகவே இல்லையே! எப்படியப்பா? முதலில் நீ நல்லவனாக இரு. யாங்கள் பார்த்துக் கொள்வோம், இப்படி ஒரு குழந்தையா என்று! உன்னை நெருங்குவாரா என்ன? எதை என்று நான் சொல்ல.
15. குருவே தங்களின் ஆசீர்வாதமும் அன்னையின் ஆசீர்வாதமும் வேண்டுகிறேன்?
நிச்சயம் இருக்கின்றதப்பா! சரியான ஆள் இவன். வரச்சொல்! ஆசீர்வாதம் உண்டு!
16. திருப்பதி ஏழுமலையானை எல்லா ராசிக்காரர்களும் வணங்கலாமா அல்லது அதில் ஏதேனும் விதிவிலக்கு உள்ளதா?
அப்பப்பா! நிச்சயம் காப்பதே அவன். வழிபடவில்லை என்றால் வாழ்க்கையே முடிந்துவிட்டது.
17. வாயில்லா ஜீவராசிகளை அதிக அளவில் உணவாக உட்கொள்கின்றனர் இதை மனிதர்கள் தவிர்க்கவேண்டூம் ஐயா இதற்கு ஒரு வழி கூருங்கள்.
இறைவன் தான் இதற்கு சாட்டை அடி அடிப்பான். பின் நிச்சயம் எவ்வளவுக்கு எவ்வளவு உயிரினங்கள், தன் குழந்தைகள் அழுகின்றதோ, அவ்வளவுக்கு பூகம்பங்களும் கூட, கடல் நீரினாலும் கூட, மலைகளினாலும் கூட, இன்னும் இன்னும் சண்டைகளினாலும் கூட பாதிக்கும்.
18. இப்பூமியில் அதிக அளவு மழை பொழியவேண்டூம் ஐயா.
அப்பப்பா! அதிக அளவு பெய்தாலும், நீங்கள் எல்லோரும் தண்ணீருக்குள்ளே போய் விடுவீர்கள். புரிகின்றதா ஒன்று. இங்கு நீர்தான் அதிகமாக இருக்கின்றது. அதே புரியவில்லையே. பின் இறைவனுக்கு தெரியும் எவ்வுயிரை எப்பொழுது காக்க வேண்டும் என்று. எப்பொழுது மழை பெய்விக்க வேண்டும் என்று. மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்பவே அனைத்தும் தருகின்றான், மழை ஆயினும் சரி!
19. தியானத்தின் முதல் வகுப்பில் இருப்பவர்களுக்கு, பிரமிட் த்யானம் பயனளிக்குமா, அல்லது அது ஒரு கட்டுக்கதையா?
அப்பப்பா! முதலில் இவனை ஒழுங்காக இருக்கச்சொல்.
20. வேல் பூஜை பற்றிய விளக்கம் தேவை!
வேல் பூஜை ஒருவன் செய்து கொண்டிருந்தால், பின் சக்திகள் குவிந்துவிடும். பின் அனைத்தும் உணரும் தன்மை கிடைத்து விடும். இதனால், சக்திகள் அதிகமாகி, அனைத்தும் சாதிக்கும் திறன் வந்துவிடும். முருகனே நேரில் வந்து வேல் ஒன்றை கையில் கொடுத்துவிடுவான். எதற்கும் தைரியத்தையும், பின் வேல் நிச்சயம் காப்பு அளிக்கும்.
21. லோப முத்திரை அன்னை அகத்தியர் அப்பா பாதமே போற்றி அப்பா நவகிரக தீபம் ஏற்ற சொன்னீர்கள் மூன்று நாள் பிரம்ம முகூர்த்த கனவு ஒரு நாள் அகத்தியர் அப்பா லோபாமுத்திரா அம்மா இருவருக்கும் என் கையால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டேன் அப்பா இரண்டு நாள் திரு ஜானகிராமன் அய்யா ஜீவ நாடி உடன் எங்கள் இல்லத்திற்கு வருவது போல் கனவு கண்டேன் அப்பா.
அப்பா! இது கனவில்லை, நிஜம்!.
22. ஐயா வணக்கம் லோப முத்ரா அன்னை அகத்தியர் அப்பா பாதமே போற்றி அப்பா எந்த கோவிலுக்கு சென்றாலும் வணங்கும்பொழுது அகத்தியர் அப்பா திரு ஜானகிராமன் அய்யா நன்றாக இருக்க வேண்டும் புண்ணியம் சேரவேண்டும் என்று வேண்டிக் கொண்டால் வந்து சேர வேண்டும் அப்பா அதற்கு என்ன செய்ய வேண்டும் அப்பா தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும் அப்பா
அப்பப்பா! இல்லத்தில் நானே இருக்கின்றேன்!
23. குடும்பத்தில் அல்லது உறவினர்களில் யாரேனும் கர்பமாக இருந்தால், குல தெய்வ கோயிலுக்கு சென்றாலும் பூஜைகள் செய்யக்கூடாது என்று பொதுவாக கடைபிடித்து வருகிறார்கள் .. இது சரி தானா அப்பா ? இல்லை இது மூட நம்பிக்கையா ?
அப்பா! உண்ணக்கூடாது யாரும்! என்று சொல்லச் சொல் பார்ப்போம்! இவ்வாறு இருக்கும் பொழுது, உயிர் கொலை செய்யக்கூடாது என்று சொல்லச் சொல் அப்பா! அவன் அவன் விருப்பம் போல், வரும் காலத்தில், சாமிதான் சொல்கின்றது என சொல்வான் அப்பா! புத்திகெட்ட மனிதனப்பா!
24. திருமண வயதில் உள்ள ஆண்/பெண்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஜோதிடர்களும் ஒவ்வொரு பலன்/கருத்து சொல்கிறார்கள். பொருத்தம் பார்ப்பது சரியான விஷயமா அப்பா ? எது சரியான முறை ? மனம் மற்றும் குணம் பார்த்தால் போதுமானதா ? சரியான முறையை அப்பா நீ திருவாய் மலரவேண்டும்.
அப்பா! இதற்கு சரியான தருணம், சரியான இடத்தில் சொல்வேனப்பா! இதன் ரகசியங்கள், நிச்சயம் எடுத்துரைக்க வேண்டும். வரும்காலத்தில் திருமணங்கள் என்பது நிச்சயம் பொய்யாக கூடும். இதனால், பிரம்மாவின் சம்மதத்துடனேயே இதை எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பா! இதனால், நிச்சயம், வருங்கால மனைவி, கணவர் பற்றி நீங்களே அறிந்து கொள்ளலாம். அதுவரை பொறுத்திரு, நிச்சயம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஅப்பா நன்றி 🙏
ReplyDeleteஏழுமலையான் எல்லா ராசிக்காரர்கள் ளும்வணங்கலாமா இதெல்லாம் ஒரு கேள்வியா அகத்தியர் ஐயாவின் பக்த ராய் இருந்து இப்படி ஒரு கேள்வியா கேப்பிங்களா எல்லா ராசி கார்களும் சாப்பிடறாங்க தூங்கறாங்க இறைவன் கொடுத்த காற்றை இலவசமாய் சுவாசிக்கறாங்க இந்த ராசி ராசிகார் தான் சாப்பிடனும் இந்த ராசிகார் சாப்பிட னும் இந்த ராசிகார் சாப்பிட கூடாது என்று ஏதாவது உள்ளதா ஊடங்களில் உள்ள ராசி பலன் ஜோதிடர் கள் சொல்லும் ஜோதிடம் இவை எல்லாம் வீணே என்றும் கிரகங்கள் தன் பாதையை விட்டு விலகி இருபது வருடம் ஆகிவிட்டது என நம் ஐயா ஏற்கனவே உறைந்து விட்டார் நீங்கள் செய்யும் புண்ணிய ம் மட்டும்தான் நம் கூட இருக்கும் சக்தி என்று குருநாதர் சொல்வதை படிக்க வில்லையா
ReplyDeleteஐயா தந்தையே அகத்தியர் அப்பா கலி யுகத்தில் எங்களை காக்க வந்தபரமாத்மாவே மகாபாரதம் ராமாயணம் காலஷேமம் படிப்பது போல் சித்தன் அருளையும் படித்து ஜனங்கள் மத்தியில் பரப்ப ஒரு நல்ல பேச்சு திறமை மிக்க ஒரு ஆத்மாவை தேர்ந்தெடுங்கள் இறையே
ReplyDeleteThai thanthaae potri.
ReplyDeleteநன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteOm Agatheesaya Namaha. !
ReplyDelete19th question was my doubt.
I am very grateful to Agathiar Peruman his upadesam
Many many thanks to you.
Chitra
Chennai.
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete