​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 28 April 2025

சித்தன் அருள் - 1848 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-4 !


38. பொதுவாக, இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வந்தால் அவர்களின் ஆசி உள்ளது என்று எடுத்துக் கொள்வதா? அல்லது நமக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வதா? 

இறந்தவர்களால் தான் மோட்சம் என்று, அப்பப்பா, அதனால் தான் அவர்கள் அனைவருக்கும் சேர்த்து இவன்/இவள் செய்ய வேண்டும் அப்பா. இதனால், மோட்சத்தை கொடு கொடு என இறையிடம் இறைஞ்சுவது பற்றி, வரும் காலத்தில் எடுத்துரைப்பேன், அன்பு மகன்களே1/மகள்கள்களே!

39. குலதெய்வமே தெரியாதவர்கள், குலதெய்வத்தை அறிந்து கொள்வதற்கான எளிய வழிமுறை உள்ளதா?

அப்பப்பா! எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டார்கள். இங்கு ஒருவன் சொன்னான், அங்கு ஒருவன் சொன்னான் என்று உண்மையை மறந்து விடுவார்கள். பின்னர் கேட்டால், அங்கு அப்படி சொல்லிவிட்டார்கள் என்று முடித்துவிடுவார்கள். நிச்சயம் அமைதியாக இருக்கச்சொல். உணர்த்துகின்றேன்! உண்மை பொருளை.!

40. அகத்தியர் டிரஸ்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கப்பட்டு அதன்மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவிட அருள் புரிய வேண்டும்!

அப்பா! உன் உழைப்பால் எது செய்தாலும் புண்ணியமே! பிறர் கொடுத்து அதை செய்தால், நிச்சயம் ஒருநாள் அது உன்னை அடிக்குமப்பா. எதற்கு, என் பெயர் வைத்து இதை செய்ய வேண்டும். ஏன் உன் பெயர் வைக்கக்கூடாதா இதற்கு? 

41. அனைத்து அகத்திய சகோதர சகோதரிகளும் இணைந்து பல நற்பணிகள் செய்ய whatsapp குழு வேண்டும்!

அப்பா! இவ்வாறு குழு ஏற்படுத்தினாலும், முதலில் நன்றாகத்தான் இருக்கும். பின்னர் அடுத்தவர், அடுத்தவர் என்று பொறாமை பட்டு பின் இதை யார் செய்தால் என்ன என்று மாறும். மற்றொருவன், யானே செய்கின்றேன் என தீர்மானிப்பான். அப்பா! போட்டிக்குள் போட்டி.  இதைதானப்பா, காலங்கள், காலங்களாக யான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஒருவனுக்காவது, ஒருத்திக்காவது பின் நல் எண்ணம் உண்டா அப்பா? 

42.சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை கடல் நீரில் உட்புகுதல் எந்த ஆண்டு நிகழும்

நிச்சயம் உண்டு! இக்கேள்விக்கான பதில் இப்போது வேண்டாம். இதன் ரகசியத்தை நிச்சயம் பின் உரைப்பேன்.

43.மனிதர்கள் வாழ்நாளில் இறுதி நாளை தெரிந்து கொள்ளாததினால் பற்பல தவறுகளையும் அநியாயங்களையும் அக்கிரகங்களையும் பாவங்களையும் செய்து கர்மாக்களை சேர்த்துக் கொள்கின்றார்கள் அப்பேர்ப்பட்ட மனிதர்கள் அனைவரும் தங்களின் வாழ்நாள் இறுதி நாளை தெரிந்துகொள்ள ஆயுட்காலத்தை அறிந்து கொள்ள உபாயம் கூற வேண்டும்

அப்பப்பா! எவன் ஒருவன் அதிக பாபங்களை செய்கிறானோ, அவனுக்கு விதி முடியப்போகிறது என்று அர்த்தம்.  இறைவன் மிக மிக கெட்டிக்காரணப்பா. அதனால் தான் சாவை மறைத்து வைத்திருக்கின்றான், தெரிவித்து விடு. 

44. இந்த இடத்தில் என்னுடைய ஒரு கேள்வி உள்ளது. நான் ஒரு வங்கியில் வேலைக்கு போகிறேன் என்றால், அறுபது வயதில் ஓய்வு பெறுவேன் என தெரியும். அது போல் ஒருத்தனுடைய மரணத்தை முன் கூட்டியே தெரிவித்து விட்டால், அவன் தவறு செய்வதை குறைத்துக் கொள்வான் அல்லவா?

அப்பப்பா! வங்கியில் நீ தவறை செய்து விடு, அவர்கள் உன்னை என்ன செய்கின்றார்கள் என்று பார்த்துக்கொள்.

45. நான் கேட்க்கும் கேள்வி என்ன வென்றால், ஒருவனுக்கு தன் முடிவுகாலம் முன்னரே தெரிந்துவிட்டால், அவன் தவறு செய்வதை குறைத்துக் கொள்கிற வாய்ப்பு கிடைக்கும் இல்லையா?

அப்பப்பா! எவன் ஒருவன் 108 திருத்தலங்களுக்கு தொடர்ந்து சென்று வருகின்றானோ, அவன் ஆயுள் பாவத்தை யான் கூறுவேன் அப்பா!  

46.குருவே திருமணத்திற்காக ஜாதகம் பார்ப்பது தமிழகத்தில் வேரூன்றி உள்ளது இங்கு ஜாதகம் சரிவர பார்க்கும் ஜோதிடர்கள் யாரும் இல்லை அவர்கள் தங்களுக்கு தெரிந்த அரைகுறை அறிவோடு கூறி பணம் பெற்றுக் கொள்கின்றார்கள் இருப்பினும் ஜாதகம் மற்றும் நட்சத்திரம் ஜாதக கட்டம் இவற்றையெல்லாம் பார்த்து திருமணம் செய்வது நடைமுறையில் அவசியமா நீங்களே கூற வேண்டும்!

காசுகள் பெற்றுக் கொள்கிறான் என்றால், அவன், பாபத்தை பெற்றுக் கொள்கின்றான் என்று அர்த்தம். ஒரு நாள் வாழ்க்கை ஏற்படுத்த வழி விட்டால், மிக புண்ணியமப்பா. அதற்க்கு கூட காசுகள் தேவைப்படுகின்றது இப்பொழுது. இறைவன் யாருக்கு யார் என்று தீர்ப்பளித்துத்தான் இங்கு பிறக்க வைக்கின்றான். அதனுள்ளே, அவசரப்பட்டு, எந்தனுக்கு திருமணம் வேண்டும், தன் மகளுக்கு திருமணம் வேண்டும், தன்  மகனுக்கு திருமணம் வேண்டும் என்று உடனடியாக செய்துவிட்டு, (வாழ்க்கை எங்கோ செல்கின்றது). அதனால் தான் அப்பா, கலியுகத்தில் திருமணம் மிக கடினம். இதற்க்கு விடிவெள்ளியாக பல வாக்குகளை சொல்லிக்கொண்டிருக்கின்றேன்! அவைகளை படியுங்கள் அப்பா! இன்னும், உண்மையை சொன்னால், அதை பொய் என்று சொல்வான் மனிதன். உண்மையை கற்பித்தால் நிச்சயம் அதை பொய்யானவன் பொய் என்று சொல்வான். அனைத்தையும் அடித்து நொறுக்கிக்கொண்டு இருக்கின்றோம், உண்மை பொருளை விளக்க. ஆகவே, நன்றாக வாழப் பழகுங்கள் அப்பா! இன்னும் விளக்கங்கள் அளிக்கின்றேன் அழகாக.

47.குருவே சரணம் பிரபஞ்சத்தில்  திருமண வயது அடைந்தும் திருமணமாகாமல் உள்ளார்கள் அவர்களின் மன துயரோடு உள்ளார்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதே மன துயரோடு உள்ளார்கள் வாழ்வே வெறுத்து விரக்தி நிலை அடைந்து உள்ளார்கள் அவர்களின் மனதுயர் நீங்க ஏதேனும் உபாயம் கூற வேண்டும்

ஏன் திருமணம் நடக்கவில்லை என்பதை அவனை கேட்கச்சொல், அவன் செய்த தவறுகளை சொல்கின்றேன்.  அப்பப்பா! சொல்லிக்கொண்டே இருக்கின்றேன்! இறைவன், தகுதியானவனுக்கு செய்வான். தகுதி இல்லை என்றால், மெதுவாகத்தான் செய்வான். அதிகமாக தவறுகளை செய்து விட்டு திருமணம் ஆகவில்லை என்று கேட்பது, அடுத்தவன் வாழ்க்கையை கெடுப்பது, நிச்சயம் அடுத்தவள் வாழ்க்கையை கெடுப்பது அப்பா! எவ்வாறு நியாயம்? இறைவன் விட்டு விடுவானா என்ன? எங்கு நியாயம் இருக்கின்றதோ, அந்த பக்கத்தில் தான் இறைவன் நிற்பான். இஜ்ஜென்மத்தில் அவரவர் செய்த கர்மா, திருமணத்தை தடுக்கிறது, என்பேன்.  

48.  தந்தையே வணக்கம்.நான் மாற்று மதத்தை சார்ந்தவன்.தந்தையே தேவமாதா கன்னி மரியாவை பற்றி வாக்கு கூறவும்.சிலர் அவரை விமர்சனம் செய்கின்றனர் தந்தையே!

அப்பப்பா! பின் ஆசீர்வாதங்கள். நிச்சயம் அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதங்கள் உண்டு.  இதன் ரகசியத்தை இன்னும் செப்புவேன்! பொறுத்திருந்தால். அனைவருக்கும் புரியும் படி சொல்கின்றேன். ஒரு கற்புக்கரசியாக இருந்து, அனைவரையும் காத்தவள். நிச்சயம் வெவ்வேறு வடிவமாக எடுத்து, நிச்சயம் இன்றளவும் தன் குழந்தைகளை காத்துக் கொண்டிருக்கின்றாள். நலமாக! ஆசிகள்! ஆசிகள்!

49. குல தெய்வக் கோவில் வழிபாட்டில் ஒவ்வொரு தலைமுறையும் அடுப்பு திறக்கும் நிகழ்வு, காது குத்துதல் நடக்கிறது. இதன் முக்கியத்துவம் என்ன ? இது முன்னோர் வழிபாட்டில் ஓர் அங்கமா? ஆம் எனில் அதை சைவ வழிபாட்டில் மேற்கொள்வது எப்படி? அங்குள்ள காவல் தெய்வ பலி வழிபாட்டை தவிர்ப்பது எப்படி? குருநாதர் அறிவுரை வீட்டு பெரியோருக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் 

அப்பா! இப்பொழுது சொன்னால் புரியாதப்பா! சிலநாட்களுக்குப் பின் இதை உரைக்கின்றேன். அப்பப்பா! புத்திகெட்ட மனிதர்களப்பா! சிலர் கேட்ப்பார்கள், சிலர் கேட்க மாட்டார்கள். இப்பொழுது தேவை இல்லை இதற்கு பதில்.

50. பொறுப்பு, கடமைகளில் ஈடுபடும்போது சிறு தயக்கமும், தடுமாற்றம் , குழப்பம் வருகிறது.தூங்க செல்லும் நேரத்தில் தூக்கமின்மையும் அதிகாலை விழிக்கும் நேரத்தில் ஆழ்ந்த உறக்கமும் அல்லது அசுப கனவு(காம) ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க குருநாதர் அருள வேண்டும்.

இதற்கெல்லாம் காரணம், முதலில் கேட்டாயே (எதிர் மறை செயல்கள்) அது தான் காரணம். அவற்றை நீக்கினால் கூற முடியும். அவற்றை நீக்கியபின் இதற்கான பதிலை கூறுகின்றேன். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ குருவே சரணம் சரணம் ஓம் ஸ்ரீ அகத்தீசாய நம ஹ

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete