​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 24 December 2022

சித்தன் அருள் - 1246 - அன்புடன் அகத்தியர் - குருநாதருடன் ஒரு அனுபவம்!


வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!!

சித்த மார்க்கம் என்பது சாதி மதம் இனம் மொழி இவற்றை அனைத்தையும் கடந்த ஒன்று!!!!!

அன்பே சிவம்!!!! என்பதையும் ஒன்றே குலம் !!ஒருவனே தேவன் !!என்பதையும் சித்தர்கள் எப்பொழுதும் வலியுறுத்தி கொண்டே வருவார்கள்!!!!

நம் குருநாதர் அகத்தியர் பெருமானின் வாக்குகளையும் சித்தர்களின் வாக்குகளையும் உணர்ந்து படித்து வருபவர்களுக்கு சித்தர்களின் பாதையில் வருபவர்களுக்கு இது தெரிந்த ஒன்று....

இறைவன் ஒருவனே!!!! அதாவது ஏகன் அனேகனாக இருக்கின்றான் என்பதை தெளிவாக சித்தர்கள் தன்னுடைய வாக்குகளில் செப்பிக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றார்கள்!!!!

காகபுஜண்டர் மகரிஷி காசியில் தன் வாக்கில் ( சித்தன் அருள் 1178)

இன்னும் பல

இறைத்தூதர்களையும் அழைத்து!! அழைத்து!! ஆனால்

மூலன் (திருமூலர்) கூற்றுப்படி

இறைவன் ஒன்றே!!!

ஆனாலும் இறைவன் ஒன்றே !!! என்பதை எப்படி யாங்கள் உரைப்பது!! என்றால்..... நீங்கள் எல்லாம் சரியாகப் புரிந்து கொண்டால் தான் அதையும் யாங்கள் உரைக்க வருவோம்!!!!!!

நிச்சயம் ஒரு நாள்

அனைத்தையும் சொல்வோம்!!!!

நம்குருநாதர் அகத்தியபெருமான் சுசீந்திரம் தாணுமாலயன் ஆலய வாக்கில் (சித்தன் அருள் 1063)

இதனையும் என்று கூற நீங்கள் செய்த புண்ணியங்கள் பின் நிச்சயமாய் திருத்தலத்திற்கு பின் இங்குள்ள சக்திகள் எவ்வாறு என்பதைக்கூட பின் விநாயகப் பெருமான் முருகன் பின் இன்னும் கூட பைரவன் இவை என்று கூற அனைத்து தெய்வங்களும் சேர்ந்து அழைக்கும்.

ஆனாலும் மூலன் (திருமூலர்) கூற்றுப்படி ஒன்றே தெய்வம் ஒன்றே.

இதனையும் என்று கூற இத் தலத்தை(சுசீந்திரம் திருக்கோயில்) பற்றியும் விவரமாக விவரிவித்தால் இதனையும் என்று கூற அனைத்திற்கும் ஈசனே காரணம். ஈசன் ஒருவனே என்பது தான் இங்கு நிச்சயமாக ஆனாலும் அவரவர் விருப்பப்படி அவரவர் வடிவிலும் பின் வணங்குகின்றார்கள் என்பதை இதைப் பற்றிக் கூட யான் தெளிவாக தெரிவிக்கின்றேன் வரும் காலத்தில்.

சித்தன் அருள் 1204 ல் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது கேள்வி பதில்களில்

ஈசன் வேறா??  பின் பார்வதி வேறா??? என்றெல்லாம் ஆனாலும் மூலனின் கூற்றுப்படி இறைவன் ஒன்றே

ஆனாலும் பல அவதாரங்கள் உங்களுக்குச் சொல்லிவிட்டாலும் மனிதர்களுக்கு புரியாது !!!

சித்தர்களின் தன்மைகள் அதனால் மனிதனுக்கு ஏற்றவாறே உரைத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பன்களே!!! 

மதுரா வாக்கில் கூட குருநாதர் அப்பனே!! எதையென்று அறிய அறிய அதனால்..... அப்பனே மூலன்(திருமூலர்) கூட ஒன்றே குலம்!!! ஒருவனே தெய்வம்!!!.......

அப்பனே எதை எதை என்று ஆராய்ந்து ஆராய்ந்து இதையும் கூட அப்பனே இன்னும் இன்னும்... வரும் வாக்குகளில் எதற்காக இதை சொன்னான்!!! என்பதையும் கூட நிச்சயமாய் எடுத்துரைப்பேன் அப்பனே நலமாகவே!!!!

சிவராத்திரி அன்று காசியில் ஈசன் உரைத்த தன்னுடைய வாக்கில் கூட 
பின் எத்தனையோ எத்தனையோ ஞானிகளை உருவாக்கினேன். உருவாக்கிவிட்டு பல நூல்களையும் எழுதச் சொன்னேன்.

ஆனாலும் இதையெல்லாம் மனிதனிடத்தில் போய் சேர்ந்தது.

ஆனாலும் இதனை கூட பயன்படுத்த தெரியாத மனிதனை முட்டாள் தான் என்று கூறுவேன்.

இதையும் பல சித்தர்களும் என்னிடத்தில் கூறிவிட்டார்கள்.

ஆனாலும் உரைத்ததை உரைக்குமாறே பின் பின் அழிவைத் தேடிக் கொள்வான்.

மதங்கள் இதனை என்று வெறுத்தால் கூட உண்டு என்பதற்கு ஒன்று இல்லை.இதனை அழகாக

சுட்டிக்காட்டினான் என்பக்தன் மூலன் (திருமூலர்).

ஆனாலும் இதை மனிதன் ஏற்பதாக தெரியவில்லை.

தெரியவில்லை நலன்கள் எவ்வாறு உருவாவதற்கு மேன்மை நிலைகள் உண்டு என்பதற்கிணங்க பல சித்தர்களும் வழிகாட்டியாக மக்களை அழகாக கொண்டு சென்றனர். 

என்று வாக்குகள் தந்திருந்தார்.

மனிதர்களாகிய நாம் மட்டும் தான் மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டு என் இறைவன் பெரியவன் உன் இறைவன் பெரியவன் சிறியவன் என்ற மனப்பான்மையோடு மத சண்டை இன மோதல்கள் என வாழ்ந்து வருகின்றோம்.

இயேசு நபிகள் நாயகம் முதல் இறைத்தூதர்கள் மனம் வருந்தும்படியான செயல்களை மனிதகுலம் செய்து கொண்டே வருகின்றது.

ஆனால் சித்த மார்க்கத்தில் இவ்விதமான கருத்து மோதல்களும் வேறுபாடுகளும் இல்லவே இல்லை. சித்தர்களுக்கு அன்பு ஒன்றுதான் பெரியது அந்த அன்பையே தெய்வம் என நமக்கு வழியாக காட்டி உபதேசித்து வருகின்றார்கள். மதரீதியான இன ரீதியான மொழி ரீதியான வேறுபாடுகள் எதுவும் சித்தர்கள் பார்ப்பது கிடையாது அனைவரும் அவர்களுடைய பிள்ளைகள் தான்!!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் எத்தனையோ மனிதர்களுக்கு உபதேசம் செய்து நல் வாழ்க்கையை தந்திருக்கின்றார். அந்த மனிதர்கள் யார் ?என்ன மதம் ? என்ன இனம் என்ற வேறுபாடு பார்ப்பதே இல்லை !!!

உண்மையான பக்தியும் நல்ல ஒழுக்கமும் தொண்டு உள்ளமும் இருந்தால் குருநாதரே தேடிச்சென்று வாக்குகள் தந்த வாழ்க்கைக்கு வழிகாட்டி அருளாசிகள் தருவார் !!அப்படி ஒரு சம்பவம் தான் நாம் இப்பொழுது பார்க்கப் போவது!!!

அகத்தியரின் ஜீவநாடி சுவடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை குருநாதர் அடிக்கடி வட இந்திய யாத்திரைக்கு செல்ல பணித்ததுண்டு!!!

அப்படி சில இடங்களுக்கு செல்லும் பொழுது அங்கு இருக்கும் அகத்தியர் அடியவரை திரு ஜானகிராமன் ஐயா அவருடன் இணைத்து பயணிக்க வைப்பதும் உண்டு.

அப்படி ஒரு சமயம் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை வட இந்திய யாத்திரைக்கு குருநாதர் சுவடியில் உத்தரவு தர அதன்படியே ஜானகிராமன் அய்யாவும் யாத்திரைக்கு வந்தார். குருநாதரின் உத்தரவுப்படி ஒரு அகத்திய அடியவர் அவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து ஒரு தற்காலிக ஓட்டுநரை அழைத்து வந்திருந்தார்.

அந்த ஓட்டுநர் ஒரு மலையாளி கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் பெயர் வர்கீஸ் ஆபிரகாம். இவர் கேரளாவை சேர்ந்திருந்தாலும் வாழ்வது வட இந்தியாவில் அதற்கு முன்பு சிறிது காலம் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்திருந்தார் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சரியான வேலைகள் அமையாமல் மனைவி மக்களுடன் வட இந்தியாவில் தான் வசித்து வருகின்றார். மனைவி ஒரு மருத்துவமனையில் செவிலியர் பணி இரு பெண் குழந்தைகள் அவருக்கு.

வெளிநாட்டில் இருந்து திரும்பி அவருக்கு சரிவர வேலை வாய்ப்புகள் அமையாததால் மிகவும் சோர்வுடன் தான் இருந்தார் அந்த அகத்தியர் அடியவருக்கு இவர் மிகவும் நெருங்கிய நண்பர் அதனால் திரு ஜானகிராமன் ஐயாவை வாகனத்தில் அழைத்து வர அவரை அழைத்துக்கொண்டு சென்றிருந்தார்.

திரு ஜானகிராமன் ஐயா அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு வரும் வழியில் அடியவரும் ஜானகிராமன் ஐயாவும் குருநாதரை பற்றி பேசிக்கொண்டே வரும் பொழுது அதை கவனித்துக் கொண்டே இருந்த வர்கீஸ் குருநாதரை பற்றி மேலும் அறிந்து கொள்ள சில கேள்விகளை எழுப்பினார் அதற்கு அந்த அடியவரும் குருநாதரை பற்றி குருநாதரின் மகத்துவத்தை பற்றி எடுத்துரைக்க அவரும் கேட்டுக் கொண்டே வந்தார்.

நல்லபடியாக பயணத்தை முடித்துக் கொண்டு அந்த அகத்தியர் அடியவரிடம் வர்கீஸ் தயங்கிக் கொண்டு நீங்கள் அகத்தியரை பற்றி கூறிய ஒவ்வொன்றையும் நான் கேட்டுக் கொண்டேன். நான் ஒரு கிறிஸ்தவன் இருந்தாலும் அகத்தியரை பற்றி உங்களுடைய பேச்சால் தெரிந்து கொண்டேன் அவர் எனக்கும் வாக்குகள் தருவாரா என்று ஆவலுடன் தயக்கத்துடன் கேட்டார்.

அந்த அகத்தியர் அயவரும் என்ன கேட்டு விட்டீர்கள் நீங்கள்!!!! குருநாதர் அகத்திய பெருமான் பெருமான் கருணை மிகுந்தவர் அவருக்கு அன்பும் ஒன்றுதான் பெரியது. அவரை நம்பியோரை அவர் கைவிட்டதாக சரித்திரம் இல்லை. நீங்கள் அவரை நம்பி அவர் வாக்குகளை கேட்பதற்கு ஆசைப்பட்டு விட்டீர்கள் கண்டிப்பாக உங்களுக்கு வாக்குகள் தருவார். திரு ஜானகிராமன் அய்யாவின் பயண களைப்பு தீரட்டும். மாலை நேரத்தில் நீங்கள் வாருங்கள் குருநாதரிடம் தங்களுக்கு வாக்குகள் கேட்டு விடுவோம் என்று கூறி விட!!!!

வர்கீஸ் ஆபிரகாம் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் வீட்டிற்கு சென்றார். 

மாலை நேரம் அகத்தியர் அடியவரும் ஜானகிராமன் அய்யாவும் குளித்துவிட்டு ஜீவநாடிக்கு பூசைகள் செய்யும் பொழுது வர்க்கீஸ் அவர்கள் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார் அவரை அமரும்படி கூறிவிட்டு சுவடி பூஜை புனஸ்காரங்கள் முழுமையாக செய்துவிட்டு வர்கீஸ் அவரை அமர சொல்லி சுவடியை திரு ஜானகிராமன் ஐயா பிரித்து வாசிக்க தொடங்கினார்!!!!

ஆதி ஈசனின் பொற்கமலத்தை  பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்!!!! 

இதனையுமென்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை ஏசுநாதனும் பின் நல்விதமாகவே ஆசிகள் கொடுத்து விட்டான்!!!!

யான் சொல்வதை எதை என்று கூற இவ்மந்திரத்தை மட்டும் எங்கு சென்றாலும் செப்பி வரவேண்டும்!!!!

"""" நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே பரிசுத்தர்!!! பரிசுத்தர்!!! பரிசுத்தர்!!!

அவர் சதாகாலமும் ஜீவிக்கிறார்!!!

அவர் ஆதி வழி அன்பினால் நம்மை மீட்டவர்!!! அவரை துதியுங்கள் !!அவர் நல்லவர்!! அவர் கிருபை என்றும் உள்ளது!!!!

எனும் மந்திரத்தை மட்டும் செப்பி வா!!!!

பின்பு கடைசியில் அனைத்தும் கொடுத்தாயே இறைவா !!!உந்தனுக்கு நன்றி என்று கூறிவிட்டு உறங்கச் செல்!!!!

அவை மட்டும் இல்லாமல் சங்கீதம் எனும் புதிய எவை என்று கூற பின் பழைய
(புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு பைபிள் ல் இருக்கும் சங்கீதம் அதிகாரம்) சங்கீதத்தில் கடைசி அப்பனே இதையன்றி கூற...... இலவசமாக காற்று வந்தவனுக்கு துதிக்கின்றேன்!!!! இதையன்றி கூற இலவசமாக அனைத்தையும் தந்தவனுக்கு துதிக்கின்றேன் என்று சங்கீதத்தில் வரும்!! பின் அதிகாரங்கள்!!!

பின் இவையன்றி கூற நூற்றின்( அதிகாரம் 100க்கு மேல்) மேலே வரும்!! அதையும் பின் உறங்கும் பொழுது பின் நல்விதமாகவே பின் சொல்லிக் கொண்டே வந்தால் அனைத்து குறைகளும் நீங்கும் உன் எதை என்று கூற இயேசு நாதனும் உன் பிள்ளைகளை பார்த்துக் கொள்வான்!!! கவலைகள் இல்லை அப்பனே!!!

நன்றியுடனே இரு!!! அப்பனே வெற்றிகள் கிடைக்கும் பணமும் கிடைக்கும் அப்பனே கவலைகள் இல்லை!!!!

என்று வாக்குகள் குருநாதர் தந்தார். இதை அப்படியே அந்த அகத்திய அடியவர் வர்கீஸ் அவர்களுக்கு மொழிபெயர்த்து தர அவர் மனம் மகிழ்ந்து போய்விட்டார்!!!! குருநாதரை வணங்கி விட்டு குருநாதர் வாக்குகள் தந்திருந்ததை  ஒலிபதிவாக செய்து எடுத்துக் கொண்டு அதன்படியே கேட்டுக் கொண்டு இன்று அவர் நல்ல முறையில் வாழ்ந்து வருகின்றார். வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு தக்க சமயத்தில் குருநாதர் வாக்குகள் தந்தது அவருக்கு மிகவும் பெரும் ஆறுதலையும் தைரியத்தையும் தந்தது . இன்று வர்கீஸ் அவர் சொந்தமாக குளிர்சாதன கருவிகள் பழுது பார்க்கும் பணியை சொந்தமாக நடத்திக் கொண்டு வாழ்க்கையில் எந்த குறைவும் இல்லாமல் தற்போது வாழ்ந்து வருகின்றார். அந்த அகத்திய அடியவரை பார்த்தால் எப்பொழுதும் திரு ஜானகிராமன் அய்யாவும் அகத்தியரும் மீண்டும் வருவார்களா என்று பார்க்கும் போதெல்லாம் அடிக்கடி கேட்பதும் உண்டு.

நம்பிக்கையும் அன்பும் நல் பக்தியும் இருந்தால் குருநாதர் அகத்திய பெருமான் விதியில் எப்படி இருந்தாலும் அதை மாற்றி நல்வாழ்க்கை வாழ நல்வழிகள் காட்டித் தந்து விடுவார் இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் ஏராளம் ஏராளம் யுகம் யுகங்களாக நடந்து கொண்டிருக்கின்றது அகத்தியரின் கருணை வெள்ளம் பாய்ந்து கொண்டே இருக்கின்றது!!! நன்றிகள் நமஸ்காரங்கள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...... தொடரும்!

5 comments:

  1. அகத்தீசாய நம, 🙏🙇‍♂️ நன்றி ஐயா

    ReplyDelete
  2. நண்பர்கள் யாரேனும் பொதிகை மலை குழுவாக செல்ல திட்டமிட்டிருந்தால் தெரிவிக்கவும் Dec26 முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது .ஒரு நாளைக்கு 100 பேர் மட்டும் . என் கணவர் மற்றும் மகனையும் அழைத்துச் செல்ல..நன்றி
    https://keralaforestecotourism.com/app/booking/675/Agasthyrakudam-season-package.html

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நம
    நன்றி ஐயா🙏🌹🙏

    ReplyDelete
  4. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  5. எம்பெருமானே... அகத்தீசா...அன்பான வணக்கங்கள்... நீர் அணியாத வர்க்கம்... அதில் இஸ்லாமியர்களும் உண்டு... சில கிருஸ்துவர்களும் உண்டு...சித்தர்களை நோக்கும் பொழுது சாதி சமயம் மதம் தாண்டியவர்கள்தான்... ஒப்புக்கொள்கிறேன்... உங்களை பற்றி தெரியாதவர்...உங்கள் வாக்குகளை அரியாதவர்...அருள்வாக்கை வாசிக்காதவர்...வாசிக்கவாய்ப்புமில்லாதவர்...அப்படிப்பட்ட ஒரு மனித ஆத்மாவுக்கு மந்திரம் கூறி அருள்வாக்கு அளித்துள்ளீர் அய்யனே...சில அடியவர்களுள் அடியவனும் ஒருவன்...அடியவனைப்போல் பலரும்... தங்களின் அருள்வாக்கை... ஜீவநாடி அருள்வாக்கை எதிர்பார்த்து...எத்துனை பேர் காவல் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்...தங்களின் வாக்கே வேதம்...தாங்களே தகப்பன்...லோபா அம்மையே தாய்...தாங்கள் தான் குரு....இப்படி பல கோணங்களில் எங்களுக்கு தாங்கள்தான் உயிர்நாடி...அப்படியிருக்க...சித்தன் அருள் பதிவின் மூலம் உங்கள் எண்ணங்கள் கேள்விகளை தருக என்று கூறிவிட்டு... அதில் நாங்கள் பதிவும் செய்துவிட்டு ஜீவநாடியின் மூலம் தங்களின் ஜீவ அருள்வாக்கிற்காக பல வருடங்கள் பல மாதங்கள் பல நாட்கள் காத்துக்கொண்டு...காத்திருக்கும் ஜீவாத்தமாக்களை பற்றி தாங்கள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை அய்யனே...ஏன் இந்த ஓரவஞ்சனை அய்யனே... ஏன் இந்த பாரபட்சம்...ஏன் இப்படிப்பட்ட பாகுபாடு...தனிப்பட்ட அருள்வாக்கை கூற...தவரோ சரியோ தங்களைத்தான் பின்தொடர்கிறோம்...அப்படியிருக்க எங்களுக்கும் அருள்வாக்கை வழங்கினால் என்ன அய்யனே...இல்லை எங்களுக்கு அந்த அப்படிப்பட்ட தகுதி இல்லையா அய்யனே...நாங்களும் மனித பிறப்புதானே...கருணை காட்டுங்கள் அய்யனே...தங்களின் ஜீவ அருள்வாக்கை கேட்க பதிவில் காத்திருக்கும் ஆத்மாக்களுக்கு நல்படியாக வாழ மந்திரம் கூறுங்கள்...வாழ்கிறோம் வளற்கிறோம்...எங்களுக்கும் பணம் சேரட்டும்...தர்மத்தை காப்பாற்றுகிறோம்... தர்மம் எங்களை காக்கட்டும்... எங்களையும் ஒரு ஓட்டுநராக பாவித்து அதுவும் வாழ்க்கை ஓட்டுநராக பாவித்து அருள் புரியுங்கள் அய்யனே ...பிழைத்துக் கொள்கிறோம்...நாங்களும் உங்கள் பிள்ளைகள்தானே...

    ReplyDelete