​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 29 December 2022

சித்தன் அருள் - 1250 - அகத்தியர் வாக்கு - 3


கேள்வி: தர்மம் செய்வதற்கான வழிகளை கொஞ்சம் சுருக்கமாக அருள வேண்டும்!

குருநாதர்: "அப்பனே எதை என்று அறிய அறிய. அப்பனே, நிச்சயம், பின் ஆசைகளை நிறுத்திக்கொண்டு, பயன் பெறாது இது என்று அறிந்து, இதுவும் எதற்கும் உதவாது என்று தானம் அளித்தால் தான்  தர்மமாகிப் போய்விடும்!

அப்பனே! அதுமட்டும் இல்லாமல், நாம் எத்தனை தர்மங்கள் செய்தாலும் நம்தனுக்கு உதவாது என்று செய்ய வேண்டும். அப்பனே, எதையும் எதிர்பார்க்காமல், நம்தனுக்கு புண்ணியம் கிடைக்கும் என்பதை உள்ளத்தில் வைத்துக்கொண்டு செய்தால் அதுவும் ஒரு பாபம்தான்..

அப்பனே! இதை தெரிந்து கொண்டாயா, அப்பனே? அப்படி செய்தால், பின்னர் இறைவனாலும்  ஒன்றும் செய்ய இயலாது. அதனால்தான் அப்பனே! பல பெரியோர்கள், எதையும் எதிர் பார்க்காமல், அதனையும் கொடுத்துவிடு என்று சொல்வார்கள். அவந்தனுக்கு புண்ணியம் சேருகின்றது அதனால், எது என்று அறிய.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நம
    நன்றி ஐயா🙏🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரா தாய் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

    ReplyDelete
  3. அருமை ஐயா🙏🙏🙏
    ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete