​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 15 December 2022

சித்தன் அருள் - 1242 - அன்புடன் அகத்தியர் -குருநாதர் உபதேசம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

நம் குருநாதர் அகத்திய பெருமானை !!! குருவாக!! தெய்வமாக!! எண்ணி நிறைகுடமாக எண்ணற்ற அகத்தியர் பக்தர்கள் இந்த உலகத்தில் உள்ளனர்.

இவர்களுக்கெல்லாம் ஓலைச்சுவடியின் மூலம் குரு நாதரின் உபதேசங்கள் கிடைக்கின்றதா என்றால் அவர்களுக்கு தேவையான சமயத்தில் சூட்சுமமாக ஏதாவது ரூபத்தில்  உபதேசமோ வழிகாட்டுதலோ குருநாதர் கிடைக்கும்படி செய்து விடுகின்றார்.

ஒரு சில அடியவர்கள் ஜீவநாடி வாசிக்கும் திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு ஓலைச்சுவடியின் மூலம் உபதேசம் பெறுகின்றார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திரு ஜானகிராமன் அய்யாவை தொடர்பு கொண்டு ஜீவநாடி உபதேசத்தை கேட்கும் அடியவர்கள் அவர்களுக்கு சில விஷயங்கள் புரியாமல் போய்விடுகின்றது.

எதிரில் இருந்து பதில் தருவது தெய்வம் என்பதை மறந்து புரியாமல் சில தேவை இல்லாத கேள்விகளை எழுப்பவும் செய்கின்றனர்.

வீடு இல்லை!! பணம் இல்லை!! வேலை இல்லை பரிகாரம் என்ன??  எப்பொழுது நான் பணக்காரன் ஆவேன்?? எப்பொழுது எனக்கு உயரிய வேலை கிடைக்கும்?? எனக்கு எப்பொழுது அதிர்ஷ்டம் வரும்?? அந்த அதிர்ஷ்டத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்??? எனக்கு எப்பொழுது தலைமை பொறுப்பு வரும்?? நான் சமுதாயத்தில் எப்பொழுது பெரிய ஆள் ஆவேன்?? அரசியலில் பிரகாசிப்பேனா??? விரும்பிய பெண்ணை வசியம் செய்ய முடியுமா??? எனவும்!!!  சில  பக்தர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று எந்தனுக்கும் ஓலைச்சுவடிகள் வேண்டும்!!! பணம் வேண்டும் பதவிகள் வேண்டும்!!! பட்டங்கள் வேண்டும்!!! என்றெல்லாம் கேட்கின்றனர். இப்படி எல்லாம் அறியாமல் கேட்பதால்தான் இறைவன் என்ன உங்களுடைய வேலையாளா????? கேட்டதெல்லாம் கொடுப்பதற்கு என்றெல்லாம் சினத்திற்கு ஆளாக நேரிடுகின்றது!!!

நமக்கு நம் குருநாதர் அகத்திய பெருமானின் ஓலைச்சுவடி வாக்குகள் கிடைப்பதற்கே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

நம்முடைய சுயநலத்திற்காக எதுவும் கேட்கக் கூடாது. இதை குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் அருளுரையாக தந்து கொண்டே இருக்கின்றார் ஆனாலும் மக்கள் அதை புரிந்து கொள்வதே இல்லை.

தனிப்பெரும் கருணை தெய்வத்தை ஒரு ஜோதிடர் போலவே எண்ணிக் கொண்டு கேள்விகளை மனதில் சுமந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

நம் குருநாதர் கூறுவது என்னவென்றால்

 "" யானே பெரும் பொக்கிஷம்!!!

யானே அருகில் இருக்கும் பொழுது கவலைகள் இல்லை குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை அனைத்தையும் யான் பார்த்துக் கொள்வேன் என்று கூறுவதை யாரும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.

குருநாதர் உபதேசங்களை தொடர்ச்சியாக உணர்ந்து கொண்டு பின்பற்றி வருபவர்களுக்கு அனைத்தும் புரிந்திருக்கும்.நாம் செய்த பாவங்கள் புண்ணியங்கள் அடிப்படையிலேயே நமக்கு வாக்குகளும் சரி நமக்கு வாய்ப்புகளும் சரி விதியும் சரி அமைகின்றது.

உண்மையான பக்தியும் குருநாதர் வழிகாட்டுதல் படி நடந்து கொள்ளும் விதமும் சேவை மனப்பான்மையும் இருந்தால் குருநாதர் அகத்திய பெருமானே விதிகளை மாற்றி வைத்து பிரம்மனிடம் சண்டையிட்டு வாழ்க்கையவே மாற்றி நல்வாழ்வு தந்திருக்கின்றார் இதற்கு ஏராளம் ஏராளம் உதாரணங்கள் இருக்கின்றன இது யுகம் யுகங்களாக நடந்து கொண்டே தான் இருக்கின்றது.

குருநாதர் அகத்தியரின் வாக்குகளை கூட சரியாக படிக்காமல் அதை உணராமல் அதன்படி நடக்காமல் தன்னுடைய வாக்குகளை மட்டும் கூறினால் போதும் என்று நினைப்போரும் உண்டு அவர்களுக்கும் குருநாதர் வாக்குகள் தருகின்றார் அவர்களுக்கும் ஒரு மண்டலம் !!! இரு மண்டலம் என செய்ய வேண்டியவற்றை செய்யச் சொல்லுகின்றார் ஆனாலும் அதை யாராவது சரியாக பின்பற்றுகின்றார்களா என்றால் அதுவும் கிடையாது.

நம் குருநாதர் அந்த பரிகாரம் செய் இந்த பரிகாரம் செய் என்றெல்லாம் கூறுவது இல்லை அனுதினமும் ஏதாவது உயிரினத்திற்கு உணவளியுங்கள் அனுதினமும் தீபமேற்றி வழிபாடு செய்யுங்கள் மேன்மையான பக்தியை காட்டுங்கள். சித்தர்கள் நாங்கள் பரிந்துரைக்கும் ஆலயங்களுக்கு சென்று வாருங்கள் அனைத்தும் விலகும் அனைத்தும் நல்படியாக நடக்கும் என்று தான் அனைவருக்கும் உபதேசம் செய்து வருகின்றார். இதுவரை எத்தனை ஆலயங்களை குருநாதர் அந்த ஆலயத்தின் மகிமை பற்றியும் அந்த ஆலயத்திற்கு சென்றால் என்னென்ன நடக்கும் என்னென்ன பிரச்சனைகள் மாறும் என்பதை கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல நமக்கு கூறிக் கொண்டு வந்திருக்கின்றார்.

இதையெல்லாம் நாம் உணர்ந்து கொள்ளாமல் நம் இஷ்டத்திற்கு நடந்து கொள்வதால் தான் சித்தர்களின் சினத்திற்கு ஆளாக நேரிடுகின்றது காகபுஜண்டர் முனி வந்தாலே சினத்துடன் அனைவருக்கும் அதாவது மனித குலம் இக்குலத்திற்கு மட்டும் தன்னுடைய சினத்தை வெளிப்படுத்துகின்றார்.

இதுவரை இந்த உயிரினம் இந்த தவறை செய்திருக்கின்றது இந்த பறவையினம் இந்த தவறை செய்து இருக்கின்றது இதுவரை இந்த கால்நடை இனம் தவறிழைத்திருக்கின்றது இந்த மிருகங்கள் தவறான வழியில் செல்கின்றன என்று இதுவரை சித்தர்கள் கூறியதே கிடையாது ஏனென்றால் மனித குலமாகிய நாம் மட்டும் தான் நம் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு அனைத்தையும் அழித்துக் கொண்டு எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுகின்றோம் சித்தர்களுடைய வாக்குகளையும் முழுமையாக உணராமல் கடைசியில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் மட்டுமே இறைவனின் நோக்கி சித்தர்களை நோக்கி ஓடுகின்றோம்!!

 இந்தப் பாதையை நாம் கண்டிப்பாக மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்!!!

சித்தர்கள் மனிதர்களாகிய நமக்காகவே வந்துள்ளார்கள் நமக்கு சேவை செய்யவே காத்திருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் நமக்காக அருள் செய்வதற்கு நம்மிடம் தகுதிகள் இருக்க வேண்டும் சித்தர்கள் கூறும் வழிகளை நாம் பின்பற்ற வேண்டும் நல் பக்தி வேண்டும் தொண்டுள்ளம் தர்ம காரியங்கள் செய்யும் எண்ணம் வேண்டும்!! இறைவனே கதி என்று இருக்க வேண்டும் தூய மனதோடு எதற்கும் ஆசைப்படாமல் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் சித்தர்கள் நமக்காக ஓடோடி வந்து அனைத்தையும் செய்வார்கள்!!!

 குருநாதரிடம் வாக்குகள் கேட்கும் அடியவர்கள் புரிந்து கொள்வதற்காகத்தான் இந்த உபதேசங்கள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாள் முன்தினம்!!!

இப்படி எல்லாம் நடக்கின்றது இப்படி எல்லாம் அடியவர்கள் இறைவனை கேட்காமல் அழிந்து போகும் பொருள்களுக்கு மட்டுமே ஆசைப்பட்டு அலைந்து திரிகின்றார்கள் என்று குருநாதர் சில வாக்குகளை உதிர்த்தார்!!! அதனுடைய தொகுப்பினை இப்பொழுது பார்ப்போம் உணர்வோம்!!!

அப்பனே எவை என்று இதனையும் என்று கூற ஒரு அதாவது எப்பொழுது எதை என்று அறிய இவ் அண்ணாமலையிலே உரைக்கின்றேன்!!! அப்பனே!!

அப்படி எதை எதை என்று அறிய மனிதன் இப்படித்தான் நினைக்கின்றான் அப்பனே விதியில் இல்லாததையும் கூட பின் கேட்டதெல்லாம் எதை என்று அறிந்து அறிந்து கேட்டுக் கொண்டிருந்தாலே யான் எப்படி தருவது என்பேன் அப்பனே!!!  அதனால் தான் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து விதியின் பாதையில் சென்றாலும் மோட்சம் கிடைக்க பொறுத்திரு!! பொறுத்திரு !!! என்றெல்லாம் அப்பனே மக்களுக்கு உரைத்துக் கொண்டு இருக்கின்றேன்.

ஆனாலும் என் மீது பாசமழை பொழிந்து விட்டால் அப்பனே எப்படியாவது எதை என்று அறிந்து அறிந்து செய்து விடுவேன் விதியை மாற்றியும் கூட!!!

அப்பனே அனைவரும் கோடிகள் வேண்டும் பணங்கள் வேண்டும் என்று கேட்கின்றார்கள் அப்பனே எதற்கு என்று கேட்டால் தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள் என்னிடத்தில் அப்பனே அதை நீங்கள் செய்தால் தான் உண்டா??

அப்பனே எதை எதை என்று அறிய நீங்கள் செய்தால் தான் உண்டா!??? நீங்களும் என்னை தந்தை தந்தை என்று கூறிக்கொண்டு வருகின்றீர்கள் அப்பொழுது நீங்கள் செய்தால் என்ன??? யான் செய்தால் என்ன??

அப்பனே கடன்களை நீங்கள் உருவாக்கிக் கொண்டு என்னிடத்தில் அதற்கான வழிகளை கேட்கின்றீர்கள்!!!

அப்பனே எதை எதை என்று அறிய என்னை நம்பி வந்தவர்கள் அப்பனே எதை என்று அறிய கவலைப்படாமல் இருக்க வேண்டும் ஆனாலும் எப்படியாவது சமாளிக்கும் திறனை கூட உங்களிடத்தில் யான் கொடுத்திருக்கின்றேன். கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!

நலமாகவே அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே நான் கொடுத்துவிட்டாலும் அதன் மூலம் கர்மா சேராமல் தான் ஆராய்ந்து தான் யான் கொடுப்பேன் அப்பனே. கர்மா சேராமல் கொடுப்பதுதான் சாலச் சிறந்தது என்பேன் அப்பனே!!

அப்பனே இதனால் எதை எதை என்று அறிய ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே சித்தனை நோக்கி வருபவன் எதை என்று அறியாமலே முதலில் யான் கர்மத்தை தான்  தீர்ப்பேன் என்பேன் அப்பனே!!!
அதனால் கஷ்டங்கள் ""வந்து ""தீரும் !!!! என்பேன் அப்பனே!!!

எதை என்று அறிந்து ஆனால் அப்பனே எந்தனுக்கு கஷ்டங்களே தேவையில்லை... எதை என்று அறிந்து அறிந்து யாங்கள் பாவங்கள் தான் சுமப்போம் என்று கூறிவிட்டால் அப்பனே  நிச்சயம் எதை என்று அறிய அறிய அதனால் எந்தனுக்கும் கூட முதலில் அப்பனே எவை எவை என்று கூட அப்பனே மனிதனுக்கு கூட பல வகையிலும் கூட இன்பங்கள் இன்பங்கள் என்று கூட தேடிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!! அவையெல்லாம் தானே கர்மத்தை தேடிக்கொள்வது என்பதுதான் அர்த்தம்!!! அதனால் அப்பனே எந்தனுக்கும் வேதனையாக தான் உள்ளது எதை என்று அறிந்து அறிந்து!!!

என்னையும் வணங்கியும் இப்படி செல்கின்றார்களே என்று!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் என்னை நம்பியவர்களை நிச்சயம் யான் கர்மத்தில் விடமாட்டேன் என்னை திட்டினாலும் சரி!!!!!

அப்பனே அதனால் எதை எதை என்று அறிய அப்பனே எவை எவை என்று அறிய அதனால்  பரிகாரங்கள் எல்லாம் அப்பனே என்னிடத்தில் செல்லாது என்பேன் அப்பனே!!!!

அதனால் எதை எதை என்று அறிய அறிய இத்தனை பரிகாரங்கள் செய்தேன் இவை என்று கூற அன்னதானங்கள் செய்தேன் புண்ணியங்கள் செய்தேன் என்பதெல்லாம் நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!!

மனிதன் பாவப்பட்டவன் என்பேன் அப்பனே இதனால் மனிதன் என்றால் பாவம் என்பேன் அப்பனே அதனால் இப்பாவ பிறவிக்கு அப்பனே என்னதான் யான் சொல்வது!!!! கூறுங்கள்!!!

அப்பனே எதை என்று அறிய மனித குலத்தை காக்கவே அப்பனே சித்தர்கள் எதை என்று அறிந்து எப்படி எல்லாம் மனித குலத்தை காக்கலாம் என்றெல்லாம் வந்து கொண்டு இருக்கின்றோம் ஆனாலும் அப்பனே இதில் கூட ஏமாற்று வேலைகள்!!

அதனால்தான் இனிமேல் யாங்கள் விடமாட்டோம் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே சென்று கொண்டிருந்தால் சித்தர்கள் என்ற நிலைமை இல்லாமல் போய்விடும் என்பேன் அப்பனே!! 

நலமாகவே அதனால் நிச்சயம் எவை என்று அறிய எதையென்று உறுதியாக சொல்கின்றேன் அப்பனே

என்னை நம்பி வந்தவர்களை நிச்சயம் யான் கைவிடப் போவதுமில்லை அப்பனே நல்முறையாக கர்மத்தை அழித்து மோட்ச கதியை தான் அடையச் செய்வேன் .அடையச்செய்வேன்!!! 

அப்பனே நலமாக எதை எதை என்று அறிய உங்களுக்கு எதை என்று செய்யாவிட்டாலும் அப்பனே எதை என்று அறிய ஆனாலும் அப்பனே என்னை திட்டினாலும் சரி!!! அப்பனே எதையென்று கஷ்டங்களை அனுபவிக்கும் பொழுது பாவங்கள்  விலகிக் கொண்டிருக்கிறது... அகத்தியன் ஒன்றுமே செய்யவில்லை என்றெல்லாம் அப்பனே!!!!

யான் விட்டுவிடுவதில்லை உங்கள் பிள்ளைகளை கூட!!! ஏதாவது ஒரு முறையில் நல்வழிப்படுத்தி கொண்டே தான் இருக்கின்றேன் அதனைப் பற்றி நீங்கள் பெருமைப்படுங்கள்!!!!

இவ்வளவு புண்ணியங்கள் செய்தோமே!! இவ்வளவு நல்ல காரியங்கள் தர்ம காரியங்கள் செய்தோமே!!! என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள் அப்பனே!!! அப்புண்ணியங்கள் எல்லாம் உங்கள் பிள்ளைகளை சேரும் என்பேன் அப்பனே!!!

அப்பனே எதை எதை என்று அறிய அனைவருக்கும் அனைத்தும் செய்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!! அதனால் குறைகள் இல்லை அப்பனே நலமாகவே நலமாகவே ஈசன் அருள் பெற்று நலமாகவே வாழுங்கள்!!!

அப்பனே நாளைப் பொழுதில் அதாவது( 6/11/2022 கார்த்திகை தீபம் ஏற்றும் நாள்) அதிகாலையிலே ஈசனும் பார்வதியும் வந்து செல்வார்கள் அப்பனே நல்படியாக திருத்தலத்திற்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள்!!!

அப்பனே நிச்சயம் ஒன்றைச் சொல்கின்றேன் அனைவருக்கும் கேட்டுக் கொள்ளுங்கள் அப்பனே!!!

இறைவன் தரிசனம் காண அப்பனே மனதில் பின் எதை என்று அறிந்து எதுவுமே இருக்கக் கூடாது என்பேன் அப்பனே!!!

பந்த பாசங்களை நீக்க வேண்டும் என்பேன் அப்பனே எதன் மீதும் பற்று இருக்காமல் இருக்க வேண்டும் அப்பனே !!

அப்படி இருந்தால் அதாவது இறைவனே என்று கதியாக இருந்தால் அவந்தனுக்கு மனித ரூபத்தில் இறைவனே நிச்சயம் வருவான் என்பேன் அப்பனே !!! அப்படி யாராவது இருக்கின்றார்களா?? கூறுங்கள்!!!

அப்பனே எதை எதை என்று அறிய ஆனாலும் நிச்சயம் ஆனாலும் எதை என்று அறிய அறிய மாயை திரையை கிழித்துக்கொண்டே தான் இருக்கிறேன் அப்பனே!!

எதை எதை என்று அறிய  எதன் மீதும் பற்று இருக்கக் கூடாது என்பதுதான்....( ஆசையே துன்பத்திற்கு காரணம்) எதனால் கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட அப்பனே.... இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!!

இங்கு வந்துள்ள அனைவருக்கும் கஷ்டங்கள் கஷ்டங்கள் அப்பனே அனைவருக்கும் ஒவ்வொரு கஷ்டங்களுடன் தான் வந்திருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. இவ் சனி மாறட்டும் என்பேன் அப்பனே( தை மாதத்தில் வரும் சனிப்பெயர்ச்சி) பின் வாக்குகள் உரைக்கின்றேன் அப்பனே இன்னும் கூட!!!! தெளிவாகவே!!!

அப்பனே யான் உங்களுக்கு எதைச் செய்தாலும் அதன் மூலம் உங்களுக்கு எக்கர்மாக்களும் சேராமல் ஆராய்ச்சி செய்து தான் கொடுப்பேன் அப்பனே!! சனி மாறட்டும் என்பேன் அப்பனே!! 

அப்படியே அனைவரும் முதலில்( குருவிடம் வாக்குகளாக) எதை கேட்பது என்பதை கூட சரியாக ஆராய்ந்து விட்டால் அப்பனே நலமாகவே அனைத்தும் சொல்லுவேன் அப்பனே!!!

அப்பனே அனைவரும் அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் கேட்டுவிட்டு கடைசியாக இறைவனை கேட்கின்றார்கள்!!! இதற்கு அவர்களே புரிந்து கொள்ள வேண்டும் பக்தி என்பது என்ன? என்பதை அப்பனே!!!

அப்படி அனைவரும் தன் சுயநலத்திற்காகவே அனைத்தையும் கேட்டுவிட்டு கடைசியில் இறைவனை இழுக்கின்றார்கள். அப்பனே!!!!

அப்பனே இன்னும் கூறுகின்றேன் அப்பனே போலியான மனிதர்களை நாடி, நாடி அப்பனே எதை எதை என்று அறிய அப்பனே எவை எவை என்று அறிய ஆனாலும் அப்பனே அனைத்தும் செய்துவிட்டு அங்கு சுவடி வாசிக்கின்றார்கள் இங்கு சுவடி வாசிக்கின்றார்கள் என்றெல்லாம் ஓடோடி அப்பனே அப்பொய்யான மனிதர்களின் சுவடியில் வந்து வாக்கு கேட்டால் அதை செய் இதை செய் என்றால் அப்பனே நடந்து விடுமா என்ன????

சுவடி வாசிப்பவர்கள் எதை எதையோ கூறி அப்பனே அவர்களுக்கே அவர்கள் வாழ்க்கை பற்றி தெரியவில்லை உங்களுடைய வாழ்க்கையைப் பற்றியா? தெரிந்து விடப் போகின்றது?? அப்பனே இதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும்!!!!

அதனால் அப்பனே எதை எதை என்று அறிய  அதனால் யானே வந்து உதவிகள் செய்து விடுகின்றேன் ஏனென்றால் என்னையும் நம்பிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!! செய்தே ஆக வேண்டும் பொறுத்திருக!!!

சில விஷயங்கள் தெரிவதே இல்லை என்பேன். அப்பனே மக்களுக்கு !!!

யான் என்னென்ன செய்து கொண்டிருக்கின்றேன் விதியை எப்படி எல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதை எல்லாம் மக்களுக்கு தெரிவதே இல்லை அப்பனே!!!!

யான் விதியை ஆராய்ந்து தான் கொடுப்பேன் அப்பனே அப்படி விதியில் கர்மா சேர்ந்து விட்டால் அப்பனே மறுபிறவி வந்துவிடும் என்பேன் அப்பனே அப்பொழுது மறுபிறவி வேண்டுமா?? உங்களுக்கு அல்லது எவையென்று அறிய அறிய அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கட்டுமா??

அதனால் அப்பனே பொறுத்திருந்தால் யான் அனைத்தையும் செய்து தருவேன்!!!

ஏனென்றால் எதை என்று அறிந்து அறிந்து நம்பி நம்பி சுவடிகளை நம்பி நம்பி ஆனாலும் ஒன்றில் கூட பதில் உங்களுக்கு வரவில்லை என்பேன். இப்படியே ஏமாந்து ஏமாந்து அப்பனே கடைசியில் ஒன்றுமே நடக்கவில்லையே என்று கூட  சித்தர்களே இல்லை என்று கூட சொல்லிவிடுகின்றார்கள் அப்பனே!!

அதனால் மனிதன் செய்த தவறால் அதனால் எதை என்று அறிய அப்பனே மனிதன் மீது தான் யான்  தவறு என்பேன் அப்பனே!!

அதனால் தான் மனிதன் என்றால் யான் பாவம் வினை என்று கூட சொல்லி விடுவேன் அப்பனே!!!

அப்பனே விதியின் பாதையை நான் மாற்றி தருவேன் அப்பனே அப்பொழுது அகத்தியன் யார்? என்பதை அனைவரும் தெரிந்து கொள்வீர்கள் பொறுத்திருங்கள் !!!

அதனால் அப்பனே எதை எதை என்று அறிய அப்பனே ஒரு கூட்டமே இருக்கின்றது ஏமாற்ற அப்பனே!!!!

அப்பனே அனைத்து சித்தர்களும் இருக்கின்றார்கள் அப்பனே ஆனால் மனிதன் வார்த்தை தான் பொய்!!!!

அப்பனே!!ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்வது( பனை ஓலைகளை) அப்பனே எழுதிக் கொள்வது அதிலிருந்து இவை நடக்கும் அவை நடக்கும் என்றெல்லாம் உங்களை சந்தோஷப்படுத்துவது.... அப்பனே உங்கள் பணங்களை பிடுங்குவது அப்பனே பின் குடிப்பது கூத்தாடுவது அப்பனே எதை என்று யான் சொல்ல??? அப்பனே!!!

மீண்டும் எதை எதை என்று அறிந்து அதனால் அப்பனே யான்  உங்களிடம் உள்ள எது என்று கூட நீங்களும்( போலி சுவடி வாசிப்பவர்கள்) அவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றீர்கள் என்பது தான் கர்மா!!!!!

அப்பனே எதை எதை என்று கூற பின் ஏதோ ஒன்றை கேட்பது எதை எதை என்று அறிய அகத்தியன் என்னதான் சொல்கின்றான் என்று பார்ப்போம் என்றெல்லாம் அப்பனே!!!

ஆனால் விதியில் உள்ளதை தான் யான் சொல்வேன்!!!

அப்பனே அதனால் குறைகள் கொள்ளாதீர்கள் யாரும் எது என்று அறிய பின் எவை என்று அறிய  அனைத்தும் சொல்லிவிட்டேன் அப்பனே ஆனாலும் கவலைகள் இல்லை அப்பனே நிச்சயம் ஒரு விடிவெள்ளி உங்களுக்கு உண்டு என்பேன் அப்பனே!!!

பொறுத்திருந்து பாருங்கள் இன்னும் கூட பக்குவத்தை தான் யான் உங்களுக்கு ஏற்படுத்துவேன் அப்பனே!!!

இவ்வுலகம் மாயமானது என்பதை கூட எடுத்துரைத்து விடுவேன் உங்களுக்கு ஏனென்றால் எதை எதை என்று அறிய மனிதன் கர்மத்திற்காகவே பிறந்தவன் கர்மத்திற்காகவே பிறந்தவன் அதை அனுபவித்து விட்டு தான் எதை என்று அறியாமலே சென்று விடுகின்றான் ஆனால் அவ் ஆன்மா கவலைப்படுவதில்லை ஆனால் மனிதன் தான் ஐயோ!!!!! போய்விட்டானே போய் விட்டானே என்று கவலைகள் படுகின்றது!!!

ஆனால் அவ் ஆன்மா இந்த உலகத்தை விட்டு பிரிந்து விட்டோமே என்று சந்தோசம் அடைகின்றது!!!

அப்பனே எதை என்று கூற மனிதன் ஒரு வார்த்தை கூறுகின்றேன் அப்பனே!!!

மனிதன் நியாயமானவன் என்றால் அப்பனே ஒரு எதை என்று கூட !!....

ஒரு கோமாதா இறக்கட்டும் கவலைப்படுகின்றானா என்ன???

எதையென்று அறிய ஏதாவது ஒரு பைரவர் இறக்கட்டும் கவலைப்படுகின்றானா என்ன???

ஏன் ஒரு எறும்பு இறக்கட்டும் அப்பனே கவலைப்படுகின்றானா என்ன???

அப்பனே இவற்றிற்கெல்லாம் எவை என்று பதில் கூறாமல் மனிதன் இறந்து விட்டால் அப்பனே!!!......... அதனால்தான்.                      """"""" கர்மத்தை பார்த்து கர்மா அழுகின்றதாம்!!!!!!!!

அதனால்தான் அப்பனே மனிதப் பிறவியை கடக்க வேண்டும் என்பேன் அப்பனே!!! மனிதப் பிறவியை கடப்பது சாதாரண விஷயம் இல்லை என்பேன் அப்பனே!!

கஷ்டங்கள் பட்டால் தான் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே ஆனாலும் இன்னும் உங்களுக்கு விளக்கம் அளிக்க போகின்றேன் அப்பனே மனிதன் எவ்வாறு எல்லாம் பிறக்கின்றான் எவ்வாறெல்லாம் வளர்கின்றான் என்பதையெல்லாம் ஆனாலும் ஒவ்வொரு திருத்தலத்தை பற்றி தான் பிரம்மாவிடம் கேட்டு இன்னும் சித்தர்கள் எடுத்துரைப்பார்கள் என்பேன் அப்பனே!!!

அதனால் பொறுத்திருங்கள்!! பொறுத்திருங்கள்!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே பின் பிறக்கும் பொழுது இவ் ஆசைகள் கொண்டு வந்தீர்களா என்ன???
இறக்கும் பொழுதும் அவ் ஆசைகள் இல்லை உங்களுக்கு!!!

ஆனாலும் அப்பனே நடுவில் வந்தவை தான் பெரும் பிரச்சனையப்பா!!!!

ஆனாலும் இதனைத் தான் தடுக்க வேண்டும் இதனை தடுப்பதற்கும் பின் நிச்சயமாய் பிரம்மாவிடம் எதை என்று அறிந்து அறிந்து இதைக் கூட யான் சொல்லிவிட்டால் பிரம்மாவிற்கு என்மீது கோபம் வந்து விடும் என்பேன் அப்பனே!!! ஏனென்றால் மனிதன் தப்பித்துக் கொள்வான் என்பேன் கர்மா நிலையிலிருந்து அதனால் எடுத்துரைக்கப் போகின்றேன்!! எடுத்துரைக்கப் போகின்றேன்!! பொறுமையாக இருங்கள்!!

அப்பனே நலன்கள் ஆசிகள் ஆசிகள் !!

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

10 comments:

  1. ஓம் தத் புருஷாய வித்மஹே சிவபுத்ராய தீமஹீ தந்நோ அகஸ்திய சித்த ப்ரஜோதயாத்
    ஓம் அகத்தியர் திருவடிகளில் சரணம்
    ஓம் அகதீசாய நம

    ReplyDelete
  2. கருணைக்கு அகத்தியர்! வேறு வார்த்தைகள் சொல்ல என்னிடம் தகுதி இல்லை

    ReplyDelete
  3. அய்யனே...அகத்தியம் பெருமானே...அடியவனின் அன்பான வணக்கங்கள்... பந்த பாசத்தை விலக்கவேண்டும் என்றால் அது உடனே முடியாது...காரணம்... மனைவி கணவன் குழைந்தை என்ற மாயையில் வீழ்ந்த பிறகுதான் ஆன்மிகம் துளிர்கிறது...அரியமுடிகிறது...என்னை நம்பியவர்களையும்...அவர்களின் குழந்தைகளையும் நான் கைவிடமாட்டேன் என்ற தங்களின் அருள்வாக்கு மனதில் பதிந்துவிட்டது அதுவே பரம திருப்தி... மேலும் பல கர்மாக்களை நீக்க பிரம்மாவிடம் போராடுவேன்-அனைவருக்கும் நல்வழி காட்டுவேன்- விதியின் பாதையை மாற்றி அமைத்து தருவேன்- என்று வாக்கு தந்தது அடியவனுக்கு மிக்க மகிழ்ச்சி... இப்படி நீங்களும் அன்பாக கூறி அனைவரையும் திருத்துங்கள் அரவணையுங்கள் அய்யனே...யாரையும் குறிப்பாக நல்லாத்மாக்களை கர்மா என்ற பெயரில் வரும் பெரும் துன்பத்தை நீக்க நீங்க அருமையான ஆலயத்தை கூறுங்கள் செல்கிறேன். குசேலன் கூட கண்ணனிடம் சென்று வறுமை(யை )நீங்கி நீக்கி வாழ்ந்தான்- அதுபோல சில ஆத்மாக்களுக்கு பணம் தேவைபடுகிறது அய்யனே...என்ன செய்வது அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை...பொருள் இல்லாற்கு இவ்வுலகம் இல்லை என்று கூறியிருப்பதும் உண்மைதானே...ஆகையில் தொழில் செய்பவனுக்கு வருமானம் கொடுங்களேன் பிழைத்து போகட்டும்- நானா கடன் வாங்கக் கூறினேன் என்று கூறியிருந்தீர்கள்- மனிதனே கர்மப் பிறப்பு...கடன் வாங்கியும் குடும்பத்தை ஓட்ட வேண்டித்தான் இருக்கிறது...அக்கடனை அடைக்க நல்தொழிலும் லாபமும் கொடுத்தால் அதை அவனே அடைத்துவிடுவான்...முடியாத குறைக்குத்தானே இறைவனை நாடுகிறான்...இறைவனும் தாங்களும் கொஞ்சம் கொடுத்து உதவிதான் செய்யுங்களேன்... அவன் தன் இறுதிநாள் வரை மகிழ்ச்சியாய் வாழட்டுமே...எது எப்படியோ உங்கள் பக்தனை-உங்கள் மகனை-உங்கள் பேரக்குழந்தைகளை-உங்களை நம்பியவர்களை-அடியவர்களை-இந்த அடியவனை- கைவிட்டுவிடாதீர்கள்-எனக்கெல்லாம் யாரும் கிடையாது- என்மனைவி பெண்குழ்ந்தை தவிர - திடிரென்று பந்த பாசத்தை விட்டு வா என்றால் எப்படி அய்யனே????? தங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு குறைந்தது 22 வருடம் உங்களைத் தவிர எனக்கு வேறு யாரும் நெருங்கிய உறவுகள் இல்லை-உங்களால் தான் அடியவன் குடும்பம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது- எப் பிறப்பிலும் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றேன்- கடமையும் பட்டிருக்கின்றேன்- தாங்களே என் தாய் தகப்பன் ஆசிரியன் குரு இப்படி அனைத்தும்... இன்னும் நிறைய பதிவிட்டு உங்களோடு உரையாடவேண்டும் போல் இருக்கிறது..மீன்டும் தங்களை அடுத்த பதிவில் சந்திக்கின்றேன் அய்யனே...ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
    Replies
    1. அகத்தியர் அய்யன் இதற்கு முந்தைய பதிவில்(2,3 முன்பு) உழைப்பிற்கு ஏற்ற வகையில் வருமானம் கிடைக்க பரிகாரம் கூறியிருக்கிறார்...பின் பற்றினால் சிற்பம் ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

      Delete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. அறிவோம்...தொழிலுக்கு என சென்னீஸ்வரர் ஆலயம் கூட உள்ளது-அடியவன் கேட்டது அனைத்து கர்மாவும் நீங்க நீக்க அருகிலேயே ஆலயம்...மேலும் பணம் தேவை எனின் ஏதவது ஒர்வகையில் அவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் கருணைகாட்டுங்கள் என்ற அர்த்தத்தில். ஆலயம் சென்றால் மட்டும் தொழிலில் லாபம் வந்துவிடுமா என்ன??? கர்மாவையும் தாண்டி உதவி செய்யுங்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பதிவிடப்பட்டது...ஓம் சிவசிவ அகத்தீசாய நம சிவசிவ

      Delete
  5. Appa thanthae Kodi namaskaram appa.

    ReplyDelete
  6. வலி இல்லாமல் வழி இல்லை. வலியின் வழி வந்தால் வழி வழிகாட்டும். அனைவருக்கும் ஒரு கர்ம வலி தாங்கும் சக்தியைக் கொடுங்கள். அகத்திய பெருமானே.

    ReplyDelete
  7. தகப்பன் எ‌ன்று‌ உன்னை அழைப்பது தகுமே. நானும் இன்றளவும் என் தகப்பனை நினைத்து அழுது கொண்டு தான் இருந்தேன். அவர் சந்தோசம் நிம்மதி இவற்றை பெற்றிருக்க இனி நான் ஏன் அழ வேண்டும். நன்றி அப்பா அகஸ்தியரே.

    ReplyDelete
  8. நன்றி நன்றி தெளிவாக உணர்த்தியதற்கு
    வீடு இல்லை!! பணம் இல்லை!! வேலை இல்லை பரிகாரம் என்ன?? எப்பொழுது நான் பணக்காரன் ஆவேன்?? எப்பொழுது எனக்கு உயரிய வேலை கிடைக்கும்?? எனக்கு எப்பொழுது அதிர்ஷ்டம் வரும்?? அந்த அதிர்ஷ்டத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்??? எனக்கு எப்பொழுது தலைமை பொறுப்பு வரும்?? நான் சமுதாயத்தில் எப்பொழுது பெரிய ஆள் ஆவேன்?? அரசியலில் பிரகாசிப்பேனா??? விரும்பிய பெண்ணை வசியம் செய்ய முடியுமா??? எனவும்!!! சில பக்தர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று எந்தனுக்கும் ஓலைச்சுவடிகள் வேண்டும்!!! பணம் வேண்டும் பதவிகள் வேண்டும்!!! பட்டங்கள் வேண்டும்!!! என்றெல்லாம் கேட்கின்றனர். இப்படி எல்லாம் அறியாமல் கேட்பதால்தான் இறைவன் என்ன உங்களுடைய வேலையாளா????? கேட்டதெல்லாம் கொடுப்பதற்கு என்றெல்லாம் சினத்திற்கு ஆளாக நேரிடுகின்றது!!!

    நமக்கு நம் குருநாதர் அகத்திய பெருமானின் ஓலைச்சுவடி வாக்குகள் கிடைப்பதற்கே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    நம்முடைய சுயநலத்திற்காக எதுவும் கேட்கக் கூடாது. இதை குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் அருளுரையாக தந்து கொண்டே இருக்கின்றார் ஆனாலும் மக்கள் அதை புரிந்து கொள்வதே இல்லை.

    தனிப்பெரும் கருணை தெய்வத்தை ஒரு ஜோதிடர் போலவே எண்ணிக் கொண்டு கேள்விகளை மனதில் சுமந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

    நம் குருநாதர் கூறுவது என்னவென்றால்

    "" யானே பெரும் பொக்கிஷம்!!!

    யானே அருகில் இருக்கும் பொழுது கவலைகள் இல்லை குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை அனைத்தையும் யான் பார்த்துக் கொள்வேன் என்று கூறுவதை யாரும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.

    ReplyDelete