​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 28 December 2022

சித்தன் அருள் - 1249 - அகத்தியர் ராஜ்ஜியத்தில் லோபாமுத்திரா தாயாரின் திருநட்சத்திரம்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம்பிமலை/கோடகநல்லூர் வாக்கில், திரு ஹனுமத்தாசன் அவர்கள் நாடி வாசித்த பொழுது, அகத்தியப்பெருமான் இவ்வாறு கூறினார்.

"என் இல்லாள், லோபா முத்திரை, எம்முடனே எப்பொழுதும் இருக்கிறாள். யாராவது ஒருவராவது, லோபாமுத்திரையை பற்றி விசாரித்தீர்களா? அதில், அவளுக்கும் சற்று வருத்தம் உண்டு!" என்றார்.

அன்றே, அடியேனின் மனதுள் பதிந்த இந்த வாக்கியம், புது உருப்பெற்றது. அன்றுவரை, அகத்தியர் கோவிலுக்கு செல்லும் போதெல்லாம், அகத்தியப்பெருமானின் காயத்ரி மந்திரத்தை மட்டும் ஜெபித்து வந்த அடியேன், அன்று முதல் லோபாமுத்திரா தாயாரின் நாமத்தையும் சேர்த்து ஜெபித்து, மரியாதை செய்து வந்தேன். எத்தனையோ கேட்டும், தனிப்பட்ட அஷ்டோத்திரமோ மந்திரமோ கிடைக்கவில்லை. என்றேனும் நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேள்வி கேட்க வாய்ப்பு கிடைத்தால், தாயாரின் திருநட்சத்திரம், அஷ்டோத்திர மந்திரம் இவை இரண்டும் பற்றி கேட்டு, மிக சிறப்பாக ஆராதனை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது நாடி வாக்கின்படி இன்றைய தினம் அமைந்தது.

ஒரு அகத்தியர் அடியவர் 108 நாமாவளி மந்திரத்தை அனுப்பித் தந்தார். அகத்தியப்பெருமான் திரு நட்சத்திரத்தை அருளினார். அனைத்தும் குருவருளுடன் ஒன்று சேர்ந்த பொழுது, மிக சிறப்பாக அமைந்தது.  

அகத்தியர் ராஜ்ஜியமான பாலராமபுரத்தில் இன்று, மார்கழி மாத சதயம் நட்சத்திரத்தில், லோபாமுத்திரா தாயாருக்கு, சிறப்பான அபிஷேகத்ததுடன் பூஜைகள் நடந்தேறியது.

தாயாருக்கும், குருநாதனுக்கும், ஒரு அகத்தியர் அடியவர் சமர்ப்பித்த, வஸ்த்திரம், கல் அட்டிகை, பூமாலை சார்த்தி பூஜை, தீபாராதனை நடந்தது.

முன்னரே, எண்ணைக்காப்பு சார்த்தி, மூன்று நதி தீர்த்தங்களை அபிஷேகம் செய்து, பின்னர் பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், தேன், மாதுளை, அரிசி மாவு, சந்தானம், 108 மூலிகைப்பொடி, இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, பச்சைக்கற்பூரம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. கடைசியாக விபூதி, குங்குமம் உச்சியிலும், பாதத்திலும் அபிஷேகம் செய்யப்பட்டு, அபிஷேக பூஜை நிறைவு பெற்றது.

குருநாதருக்கும், தாயாருக்கும், சர்க்கரை பொங்கல், அப்பம் போன்றவை நிவேதிக்கப்பட்டு, கனிவகைகளுடன் தாம்பூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

அகத்தியப்பெருமான் லோபாமுத்திரா படம் பதிக்கப்பட்ட காசு வந்திருந்த அகத்தியர் அடியவர்களுக்கு, அம்மாவின் திருநட்சத்திர பரிசாக, அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அகத்தியப்பெருமானிடம் கேட்டு அடியவர்கள் ஒன்று சேர்ந்து, ஏதோ தெரிந்த அளவுக்கு எளிய மரியாதை செய்திருக்கிறோம். நிறைவாக இருந்தால், அதன் பெருமை அவரை சேரும். குறைகள் இருந்தால் அடியவர்களை சேரும். இருப்பினும் ஏற்றுக் கொள்ளுங்கள் என பிரார்த்தித்த பொழுது, மென்மையாக கோவிலிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மழை பெய்தது. தாயார் அடியவர்களின் சமர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார் என்பதற்கு, இதை விட ஒரு நற்சான்று இங்கில்லை.

ஸ்ரீ லோபாமுத்ராம்பிகா அஷ்டோத்தர சதநாமாவளி:

1. ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா மாத்ரே நம:
2. ஓம் ஸ்ரீ அகஸ்தியேஸ்வரியே மாத்ரே நம:
3. ஓம் ஸ்ரீ ப்ரஹ்மஸ்வரூபிண்யே நம:
4. ஓம் ஸ்ரீ சக்திமாயாயை நம:
5. ஓம் ஸ்ரீ தேவிரூபாயை நம:
6. ஓம் ஸ்ரீ ப்ரணசைதன்யாயை நம:
7. ஓம் ஸ்ரீ ரக்ஷபாலாயை நம:
8. ஓம் ஸ்ரீ கர்மகாரிண்யேயை நம:
9. ஓம் ஸ்ரீ மனோசைதன்யயே நம:
10. ஓம் ஸ்ரீ வாக்சைதன்யயே நம:

11. ஓம் ஸ்ரீ ரக்ஷரூபிண்யே நம:
12. ஓம் ஸ்ரீ தீபாரூடாயே நம:
13. ஓம் ஸ்ரீ ஷப்தாரூடாயே நம:
14. ஓம் ஸ்ரீ வாயுரூபிண்யே நம:
15. ஓம் ஸ்ரீ ப்ரித்வீஸ்வர்யை நம:
16. ஓம் ஸ்ரீதேவோபாசகாயை நம:
17. ஓம் ஸ்ரீ ரிஷிபத்னியாயை நம:
18. ஓம் ஸ்ரீ ரிஷிரூபிண்யை நம:
19. ஓம் ஸ்ரீ நக்ஷத்திரரூபிண்யை நம:
20. ஓம் ஸ்ரீ ஆஷரக்ஷேஶ்வர்யை நம:

21. ஓம் ஸ்ரீ நவ நவகர்மண்யே நம:
22. ஓம் ஸ்ரீ நவரசப்ரியாயை நம:
23. ஓம் ஸ்ரீ சப்தசாகரரூபிண்யே நம:
24. ஓம் ஸ்ரீ அந்தகடாஹதீப்தியே நம:
25. ஓம் ஸ்ரீ பிரபஞ்சஷப்தப்ரதாயின்யே நம:
26. ஓம் ஸ்ரீமனோலங்காராதேவியே நம:
27. ஓம் ஸ்ரீ பக்தஜன ரக்ஷகாயே நம:
28. ஓம் ஸ்ரீ சிவசக்திரூபிண்யை நம:
29. ஓம் ஸ்ரீ பரம்ஜ்யோதியே நம:
30. ஓம் ஸ்ரீ அலங்காரப்ரியாயே நம:

31. ஓம் ஸ்ரீ தீபசைதன்யயே நம:
32. ஓம் ஸ்ரீ வாஸ்துஷில்பிந்யே நம:
33. ஓம் ஸ்ரீ ரூபலாவண்யயே நம:
34. ஓம் ஸ்ரீ சாந்தீஸ்வரூபிண்யே நம:
35. ஓம் ஸ்ரீ ரிஷீஸ்வர்யே நம:
36. ஓம் ஸ்ரீ த்ரிலோக சாந்திதாயின்யே நம:
37. ஓம் ஸ்ரீ சிவபூஜநிரதாயே நம:
38. ஓம் ஸ்ரீ சக்திபூஜநிராதாயே நம:
39. ஓம் ஸ்ரீ கணேஷபூஜநிரதாயே நம:
40. ஓம் ஸ்ரீ ஷண்முகபூஜநிரதாயே நம:

41. ஓம் ஸ்ரீ போதஸ்வரூபிண்யே நம:
42. ஓம் ஸ்ரீ ரக்ஷகரணசக்தியை நம:
43. ஓம் ஸ்ரீ ஷிக்ஷகரணசக்தியை நம:
44. ஓம் ஸ்ரீ மௌபதேஷிகாயை நம:
45. ஓம் ஸ்ரீ சக்திவாரேண்யாயை நம:
46. ​​ஓம் ஸ்ரீ ஐம் ஸ்வரூபசக்தியை நம:
47. ஓம் ஸ்ரீ த்ரிலோக கர்மராக்ஷாதேவியை நம:
48. ஓம் ஸ்ரீ சௌந்தர்ய ஸ்வரூபாயை நம:
49. ஓம் ஸ்ரீ கார்யகாரணபோதினாயை நம:
50. ஓம் ஸ்ரீ நவகீர்த்திஷக்த்யை நம:

51. ஓம் ஸ்ரீ காவேரி மாத்ரே நம:
52. ஓம் ஸ்ரீ ப்ரஹ்மாண்டசக்தியை நம:
53. ஓம் ஸ்ரீ ப்ராஹ்மணப்ரியாயை நம
54. ஓம் ஸ்ரீ ஸத்யதர்மஸ்வரூபிண்யை நம:
55. ஓம் ஸ்ரீ சதுர்க்ஷா மாத்ரே நம:
56. ஓம் ஸ்ரீ சத்ருசம்ஹார சக்தியை நம:
57. ஓம் ஸ்ரீ யந்திர பால மாத்ரே நம:
58. ஓம் ஸ்ரீ தந்த்ர பால மாத்ரே நம:
59. ஓம் ஸ்ரீ ரத்னஸ்வரூபிண்யே நம:
60. ஓம் ஸ்ரீ வ்ருக்ஷப்ரியாயை நம:

61. ஓம் ஸ்ரீ அன்னரக்ஷா மாத்ரே நம:
62. ஓம் ஸ்ரீ ப்ரணரக்ஷ மாத்ரே நம:
63. ஓம் ஸ்ரீ குடும்ப ஐக்யப்ரதாயின்யை நம:
64. ஓம் ஸ்ரீ சந்தானரக்ஷகாரிண்யை நம:
65. ஓம் ஸ்ரீ புவனேஸ்வர்யே நம:
66. ஓம் ஸ்ரீ பிரபஞ்சசக்தியை நம:
67. ஓம் ஸ்ரீ வித்யாரக்ஷகாயை நம:
68. ஓம் ஸ்ரீ ஜீவரக்ஷகாயை நம:
69. ஓம் ஸ்ரீ வாராதிப சேவாதல்பராயயே நம:
70. ஓம் ஸ்ரீ மாசாதிப சேவநிராதாயை நம:

71. ஓம் ஸ்ரீ திதிசக்திதேவ்யை நம:
72. ஓம் ஸ்ரீ நக்ஷத்ரஶக்திதேவ்யை நம:
73. ஓம் ஸ்ரீ தெய்வபக்தி அநுக்ரஹதாயின்யை நம:
74. ஓம் ஸ்ரீ மானவரக்ஷதாயின்யை நம:
75. ஓம் ஸ்ரீ ஸஹரிஷிஷாந்தியை நம:
76. ஓம் ஸ்ரீ ஸஹமதாரக்ஷகாயை நம:
77. ஓம் ஸ்ரீ சைஷாந்திரூபிண்யை நம:
78. ஓம் ஸ்ரீ அம்ருதானந்தரூபிண்யை நம:
79. ஓம் ஸ்ரீ வானரக்ஷா மாத்ரே நம:
80. ஓம் ஸ்ரீ வானரக்ஷா மாத்ரே நம:

81. ஓம் ஸ்ரீ பவனரக்ஷா மாத்ரே நம:
82. ஓம் ஸ்ரீ பர்யபர்த்ரு சுகதாயின்யை நம:
83. ஓம் ஸ்ரீ வாத்யகலாவித்யா ரக்ஷகாயை நம:
84. ஓம் ஸ்ரீ மனோசக்தி ரூபிண்யை நம:
85. ஓம் ஸ்ரீ கர்மசக்தி மாத்ரே நம:
86. ஓம் ஸ்ரீ ஞானதீப மாத்ரே நம:
87. ஓம் ஸ்ரீ ஸஹதேவத்யானா மாத்ரே நம:
88. ஓம் ஸ்ரீ ஔஷத ஸ்வரூபிண்யை நம:
89. ஓம் ஸ்ரீ ராஜ்யமாத்ருகா மாத்ரே நம:
90. ஓம் ஸ்ரீ சத்யகர்ம தேவ்யை நம:

91. ஓம் ஸ்ரீ மானஸகர்ம ஷுத்திப்ரதாயை நம:
92. ஓம் ஸ்ரீ வச்சகர்ம ரக்ஷகாரிண்யை நம:
93. ஓம் ஸ்ரீ ஜீவஜ்யோத்யை நம:
94. ஓம் ஸ்ரீ பஞ்சப்ராணேஷ்வர்யை நம:
95. ஓம் ஸ்ரீ தசப்ரணேஷ்வர்யை நம:
96. ஓம் ஸ்ரீ அஷ்டாங்கவித்யாரூபிண்யை நம:
97. ஓம் ஸ்ரீ ஹடயோக விசாரதாயை நம:
98. ஓம் ஸ்ரீ ஔஷத ஶக்த்யை நம:
99. ஓம் ஸ்ரீ ஜீவசைதன்ய மாத்ரே நம:
100. ஓம் ஸ்ரீ பரமசத்ய ப்ரதீபாயை நம:

101. ஓம் ஸ்ரீகாமப்ரதாயன்யை நம:
102. ஓம் ஸ்ரீ ஆனந்தப்ரதாயின்யை நம:
103. ஓம் ஸ்ரீ மோக்ஷதாயின்யை நம:
104. ஓம் ஸ்ரீ ப்ரத்யக்ஷதேவ்யை நம:
105. ஓம் ஸ்ரீ சங்கீதப்ரியாயை நம:
106. ஓம் ஸ்ரீ ஓம்காரஸ்வரூபாயை நம:
107. ஓம் ஸ்ரீ ஶிவஶக்த்யைக்ய ஸ்வரூபிண்யை நம:
108. ஓம் ஸ்ரீ அகஸ்த்ய தர்மபத்ன்யை நம:

ll இதி ஸ்ரீ லோபாமுத்ராம்பிகா அஷ்டோத்தர ஶதநாமாவளி ஸம்பூர்ணம் l

வேறு இடங்களில் உள்ள லோபாமுத்திரா சமேத அகத்தியர் திரு சன்னதிகளிலும், இன்று மார்கழி சதயம் பூஜை சிறப்பாக நடை பெற்றது.



[பஞ்சேஷ்டி அகத்தியர் கோவில்]


[சின்னாளபட்டி ஶ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் - அன்னை லோபாமுத்ரா திருஅவதார மார்கழி சதய வழிபாடு]

[பனப்பாக்கம் அகத்தியர் கோவில்]
[ மதுரை பசுமலை அகத்தியர் சன்னதி]

[கல்யாண தீர்த்தம் பாபநாசம்]
[அகத்தியர் அடியவர் இல்லத்தில்]



[ ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம், பெங்களூரு] ↑↑

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......தொடரும்!

5 comments:

  1. அன்னை ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகள் போற்றி போற்றி
    🙏🌹🙏💐🌹
    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  2. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ
    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. அன்னை தந்தையே போற்றி போற்றி

    ReplyDelete
  5. ஓம் அன்னை லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete