​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 4 December 2022

சித்தன் அருள் - 1235 - சித்தன் வாக்கு!


உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில்லையே!

பிறரின் நேர்மையான உழைப்பை, உறிஞ்சி ஒரு பிறவியிலே வாழ்ந்தவர்கள், மற்ற பிறவியில் நேர்மையாக உழைத்து, உழைத்து களைத்துப் போகவேண்டும் என்று சாபத்தை பெற்று வருகிறார்கள். இந்த சாபத்திலிருந்து வெளியே வருவதற்கு, அன்றாடமோ அல்லது அனலிவாரம் எனப்படும் ஞாயிறு தினமோ அல்லது, அவரவர் ஜென்ம நட்சத்திரம் மாதம் தோறும் வருகின்ற தினத்திலோ 108 முறை நவகிரகங்களை வலம் வந்து அதனுடன் 108 எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து தன்னுடைய மனதிலே உள்ள குற்றங்களையும் குறைத்துக் கொண்டால், கட்டாயம் எதிர்பார்த்த நற்பலன் கிட்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்!

5 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. ஐயா ஒரு முறை நீங்கள் அருள் வாக்கில் நவ கிரகங்களை சுற்ற கூடாதுன்னு அருள் வாக்கில் வந்துள்ளது தற்போது நவகிரகம் வழிபட அருலுரைக்கிறீர்கள் நாங்கள் எதை எடுத்துக் கொள்வது ஐயா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      சித்தன் அருளில் குருநாதர் தருகிற ஒரு விஷயத்தையும் மனதை இருத்தி வாசிப்பதில்லை என்று தெளிவாகிறது.

      அன்று கூறப்பட்டது இது தான்.

      "ஏதேனும் ஜோதிடம் பார்த்து சொல்கிறவன், நவகிரகங்களுக்கு சென்று நேரடியாக பரிகாரம் செய்யச் சொன்னால், செய்யாதீர்கள். நவகிரகங்களுக்கு அந்த உரிமை கிடையாது.

      இங்கு அகத்தியப்பெருமான் இப்படி கூறியதில் என்ன அர்த்தம் என்றால், சித்தர்களுக்கு, நவகிரகங்களுக்கு ஆணையிடுகிற உரிமை உண்டு. அவர்களின் சிபாரிசுடன் சென்று பரிகாரம் செய்தால் நல்லது, என்பதே.

      உண்மையாகவே சொல்கிறேன். இன்றுதான் மிகுந்த வருத்தப்பட்டேன். இத்தனை தெளிவாக சித்த மார்க்க ரகசியங்களை தெளிவாக உரைத்தும், புரிந்து கொள்ளாத மனிதர்களுக்காக சித்தன் அருளில் எழுதுகிறோமே என்று.

      அகத்தியர்தான் காப்பாற்றவேண்டும்!

      அக்னிலிங்கம்!

      Delete
  3. முழுவதுமாக அகத்தியரே என்று சரணாகதி அடைந்து இருக்கும் நல் உள்ளங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு வழியே சித்தன் அருள் மட்டும் தான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ஐயா

    ReplyDelete
  4. Daily iwe have to light 108 lamps and make 108 rounds around Navagraha
    0r on Sunday 108 lamps and 108 rounds
    Or on birth star in every month to liight 108 lamps and 108 rounds
    Or on star birthday to light 108 lamps and 108 rounds
    It's possible to do it on star birthday but daily or on Sunday and every month confused, to make it on star birthday is enough?
    A little confussion sorry if this question is wrong.
    Om sri lobamudra samedha. Agatheeswara saranam
    Om Sri Lobamudra samedha agatheeswara saram
    Om Sri Lobamudra samedha agatheeswara saranam

    ReplyDelete