​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 2 December 2022

சித்தன் அருள் - 1234 - அன்புடன் அகத்தியர் - மனுதேவி ஆலயம்!




11/10/2022 அன்று போகர் சித்த பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு  பாகம்-1

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

நம் குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்தபடியே புண்ணிய ஸ்தலங்கள் யாத்திரையில் புரட்டாசி பௌர்ணமி அன்று நாசிக் கபாலீஸ்வரர் யாத்திரையை முடித்துக் கொண்டு நஸ்தான்பூர் சனி பகவான் ஆலய தரிசனம் செய்துவிட்டு அடுத்ததாக குருநாதர் உரைத்தபடி யாத்திரையை தொடர்ந்து செல்லும் பொழுது உடன் வந்த அகத்தியர் அடியவர் ஒருவர் தனது குலதேவியான மனுதேவி ஆலயம் இங்கே தான் உள்ளது என்று சொல்ல குருநாதர் அகத்தியர் பெருமானும் யாத்திரை செல்லும் அகத்தியர் அடியவர்கள் மனதை மாற்றி... அந்த தேவி ஆலயத்திற்கு செல்க என்று சூட்சுமமாக வழிநடத்தினார்.

அந்த தேவியை செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்வது நன்று அதிசிறப்பை தரும் என்று சூசகமாக உரைத்து அங்கு செல்ல சூட்சமமாகவே உத்தரவிட்டார்.

அனைவரும் அந்த தேவியின் கோயிலை நோக்கி செல்ல!!!! மிகவும் அடர்ந்த காடு அந்தக் காட்டுக்குள் தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவை கிடையாது!!! மகாராஷ்டிரா மத்திய பிரதேச எல்லையில் அமைந்துள்ள மலை தொடர்களில் அடர்ந்த காட்டுக்கு நடுவே தேவி அம்பாள் அமர்ந்திருக்கின்றாள். கடும் இரைச்சலோடு விழும் ஒரு நீர்வீழ்ச்சி அருகே அற்புதமாக குடிகொண்டுள்ளாள் தேவி!! ஆதியில் தேவி மிகவும் உக்கிரமாக இருந்ததால் தேவியின் சுயம்பு உருவத்தை மேலும் உருவேற்றி தற்பொழுது கருணையே வடிவான முக அழகோடு அற்புதமாக காட்சியளித்தாள் தேவி !!!

காண இரு கண்கள் போதாது அவ்வளவு அழகும் தெய்வீகமும் கருணையும் நிரம்பி வழியும் தேவியின் முகம் அற்புத தரிசனம்!!!!

அந்த ஆலயத்திற்கு சென்று நல்படியாக தரிசனம் செய்து அதாவது தரிசனத்திற்கு மிகவும் கெடுபுடியான சூழ்நிலைகள் ஆனாலும் நல் முறையாக தரிசனம் அமைந்தது!!!

தரிசனம் செய்து விட்டு வந்து ஆலயத்தில் உள்ளே ஓரிடத்தில் ஜீவநாடி ஓலைச்சுவடியினை திரு ஜானகிராமன் ஐயா வாசிக்க தொடங்கியவுடன் போகர் சித்த பெருமான் வந்து வாக்குகள் தர தொடங்கினார் வாக்கில் பல அதிசயங்களை உரைக்க தொடங்கினார்!! அதாவது போகர் மகரிஷி பல ஆண்டுகளாக இந்த காட்டிலே தங்கி இருந்ததையும் முருகன் வந்து அழைத்துச் சென்றதையும் வாக்குகளாக தந்தார்!! இதையெல்லாம் போகர் பெருமான் வந்து வாக்குகளாக அவருடைய இடத்தில் இருந்து உரைப்பதற்காகவே!!! குருநாதர் அகத்திய பெருமான் அடியவர்கள் மனதை மாற்றி மனுதேவியை காண சூட்சுமமாகவே அழைத்துச் சென்றார்!!! மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் இல் இருக்கும் அடர்ந்த காட்டுக்கு நடுவே இருக்கும் தேவி ஆலயத்தில் இருந்து பழனி முருகன் பிரதிஷ்டையை பற்றியும் பூம்பாறை குழந்தை வேலப்பர் முருகன் பிரதிஷ்டை பற்றியும் எடுத்துக் கூற எடுத்துக் கூற மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது..

மிகவும் கெடுபடியாக நடந்து கொண்ட ஆலய நிர்வாகிகளும் இவர்கள் யார்? ஆலயத்தில் வந்து பனை ஓலையில் ஏதோ ஒன்று வாசிக்கிறார்களே என்று அவர்களும் அமர்ந்து விட அவர்களுக்கும் ஒரு அகத்தியர் அடியவர் மொழிபெயர்த்து கூற அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு போய்விட்டனர் வாக்குகள் உரைத்தவுடன் ஆலய நிர்வாக குழு பிரத்யேகமாக அழைத்து  சென்று தக்க மரியாதைகள் செய்து ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தின் உள்ளே அனுமதித்து ஜீவநாடி பெட்டகத்தை தாயாரின் மடியில் வைத்து ஆர்த்தி செய்வித்து மிக நீண்ட நேரம் உரையாடி பிரசாதத்தோடு அன்போடு பரிமாறி வழி அனுப்பி வைத்தனர்.

அடியவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் ஏனென்றால் மிகவும் கடுமையாக நடந்து கொண்ட ஆலய நிர்வாகமே இப்படி அன்போடு அனுமதித்து நடந்தது எல்லாம் சித்தர்களின் விளையாட்டு என ஆச்சரியப்பட்டு சந்தோஷத்தில் ஆழ்ந்தனர்.

இனி போகர் சித்த பெருமானின் வாக்குகளை பார்ப்போம்!!!

என் மனதில் குடி கொண்டிருக்கும் ராஜராஜேஸ்வரியை மனதார வணங்கி வணங்கி வேலவனையும் வணங்கி வணங்கி மூத்தோனையும் வணங்கி வணங்கி பார்வதி தேவியையும் சிவனாரையும் வணங்கி வணங்கி வாக்குகளாக ஈகின்றேன் போகமுனி!!!!

அதை இதை என்று மனிதர்கள் எங்கெங்கோ சென்றார்கள்!!! ஆனாலும் ஒரு பயனும் இல்லையப்பா!!

இல்லையடா ஆனாலும் வாயை பின் மெதுவாகவே பின் மென்று மென்று தின்றாலும் ஆனாலும் ஒரு வழியும் பிறக்கப் போவதில்லை மனிதனுக்கு!!!

ஆனாலும் எதை எதை என்று உணர்ந்து என்று உணர்ந்து நித்தம் காட்டி நித்தம் காட்டி அலைந்து திரிந்து பைத்தியமாகி அதாவது பைத்தியம் ஆகின்ற நேரத்தில்தான் இறைவன் நிச்சயமாய் உதவி செய்வான் அதை தெரிந்து கொள்ளடா!!! மனிதா!!!

மனிதா பிறப்பெடுத்து பிறப்பெடுத்து ஓடி நின்று ஓடி நின்று நதி போல அதாவது எங்கெங்கோ ஓடி ஓடி அதாவது இன்பங்களுக்காகவே ஓடி ஓடி ஆனாலும் பின் ஒன்றும் இல்லாமல் கடைசியில் இறைவனை வணங்குகின்றாய்!!

ஆனால் முதலிலேயே இறைவனைப் பிடித்து பிடித்து ஓடி வந்தால் நிச்சயம் நிச்சயம் உண்டடா பின் உண்டடா மனமகிழ்வுகள்!!! மனமகிழ்வுகள் ஏற்பட்ட பின் இறைவன் தரிசனமும் உண்டடா!!!

மனிதன் தன் நிலைமையை பற்றி யோசிப்பதே இல்லை மனிதன் அனைத்தும் தெரிந்தவன் என்று இருக்கின்றான் ஆனால் ஒன்றும் தெரிவதில்லை ஒன்றும் தெரியாதவனுக்கு கூட இவ்வளவு புத்திகள் என்றால் அனைத்தும் தெரிந்த எங்களுக்கு எவ்வளவு புத்திகள்!!!!!

இதை என்றும் அதனால் இச்சென்மத்தில் எதை எதை என்று அறிந்து அறிந்து மனிதன் செல்கின்றானோ அவையெல்லாம் நிச்சயம் யான் தாக்கிப்பிடித்து அவையெல்லாம் நிச்சயம் வரும் காலங்களில் அழித்து விடுவேன்!!!

சித்தர்கள் நாங்கள் இருக்கின்றோம் இத் தேசத்தை காக்க!!!!

ஆனாலும் எப்படி காக்க வேண்டும் என்பதையெல்லாம் ஆனாலும் நிச்சயம் அழிவின் பாதையிலே சென்று கொண்டிருக்கின்றது அழிவின் பாதையை யார் உருவாக்குகின்றானென்றால் மனிதன்!!! மனிதனே உருவாக்குகின்றான்!!

ஆனாலும் இதற்கு சம்பந்தமான யாங்கள் சித்தர்கள் பல கோடி ஆனாலும் இதை இதை எப்படி எதை என்று கூட ஆனாலும் எந்தனுக்கே யான் சொல்கின்றேன்!!!

எந்தனை பற்றி யான் பெருமையாக சொல்லவில்லை!!! பல சித்தர்கள் இருக்கின்றார்கள் ஆனாலும் என்னால் அனைத்தும் செய்ய முடியும்!!

ஏன் ஆனாலும் இறைவன் எதை எவற்றில் இருந்து பின் கொடுத்தால் நல்லவை என்று கூட யான் பல வருடங்களாக இங்கே தங்கி சமைத்து உண்டிருக்கின்றேன்!!!! என் ராஜராஜேஸ்வரி நிச்சயம் அம்மையாகவே வந்து எந்தனுக்கு பல உதவிகள் செய்தாள்!!! 

அதனால்தான் ஆனாலும் யான் அறிந்தேன் பின் எதை என்று அறியாமலே பின் மனிதனை பிழைக்க வைக்க முடியும்!!! பின் இறக்க வைக்க முடியும்!!! பின் ஆண்டுகள் நீட்டிக்க முடியும்!!! இன்னும் கூடு விட்டு கூடு பாயும் திறனும் எந்தனுக்கு உண்டு!!!

ஆனால் ஏன் பின் வெளிக்காட்டவில்லையே எந்தன் நிலைமைகளைப் புரிந்து!!!

அதனால் அம்மையே வரட்டும் என்று யான் கஷ்டங்கள் பட்டுப்பட்டு இங்கு நீரின் மூலம் எதை என்று அழிவுகள் வந்த போதிலும் யான் நிறுத்தவில்லை தேவியே!!!! தேவியே!!! என்றெல்லாம் இருந்தேன்!!!!

ஆனாலும் அழகாக என் தாயவள் வந்து நிச்சயம் அணைத்து!!!! மகனே என்ன வேண்டுமென்று???

ஆனாலும் யான் கூறினேன் இவ்வுலகத்தில் ஆனாலும் எந்தனுக்கு எதை என்று உணர்ந்த பின் அனைத்தையும் உணர்த்தி விட்டாய் அம்மையே இனி மேலும் எந்தனுக்கு என்ன வேண்டும்??! உந்தன் பாசம் தான் வேண்டும் என்று யான் கூற!!....

பல பல ஆண்டுகளாக இங்கேயே சமைத்து சமைத்து உண்டு உண்டு யான் கழித்தேன் இதனால் முருகன் என் மீதும் கோபம் கொண்டான்!! என் தாயவள் இயலாதவனுக்கு இப்படியா என்று கூறி முருகனும் ஓடோடி வந்தான் இங்கு!!!

இதனால் எதை என்று அறியாமல் ஆனாலும் முருகனுக்கு சரியாகவே புரிந்து விட்டது யான் யார்?? என்று கூட அதனால் முருகனும் பல வழிகளிலும் கூட பின் போகனே என்று இதை என்றும் அறியாத எவற்றிலிருந்து உணர்ந்த அளவிற்கு கூட உன் நிலைமைகள் புரிகின்றது இதனால் உன் மடியில் யான் உறங்கலாமா என்று முருகன் கேட்க...

யானும் சொன்னேன் தாராளமாக உறங்கலாம் முருகா என்று ஆனாலும் பின் முருகன் உறங்கினான் சந்தோசங்கள் ஆனாலும் சந்தோசங்கள் மிஞ்சியது ஆனாலும் பின் பின் பின் எதை என்று கேட்க எதை எதை என்று கேட்டு அறிதல் போகப் பெருமான் யான் எதை எவை என்று!!!

ஆனாலும் இதனையும் என்று கூற ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் ""போகப் பெருமானே!!!! பெருமானே!!! என்று!!!

ஆனாலும் யானும் அதாவது கண்களில் நீர் கண்களில் நீர் ஏன் முருகனே ஒரு!!.......

முருகப்பெருமானே!!! எந்தனை இவ்வாறு அழைக்க!! அழைக்க!! ஆனாலும் நிச்சயமாய் ஆனாலும் பின் கந்தன் ஒரு வார்த்தை கூறி விட்டான் பின்!!.... போகா!!!!! இதையென்று அறியாமல் உந்தனக்கு இங்கு யாரும் இல்லையே!!!! என்னிடத்தில் வருகின்றாயா என்று கூற!!!..

என்னிடத்தில் வந்து விட்டால் உந்தனுக்கு அனைத்தும் சொல்லிக் கொண்டே இருப்பேன் என் மடியில் அதாவது இப்பொழுது உன் மடியில் யான் தூங்கினேன்!!! என் மடியின் மீதே நீ கடைநாள் வரையிலும் தூங்கலாம் அதாவது என்று!!!

ஆனாலும் யான் யோசித்தேன்!!! யான் யோசித்தேன் யோசித்தேன் இதையென்று அறியாது ஆனாலும் இதன் தன்மையை உணர்ந்து உணர்ந்து சைகை காட்டினாள்!!! என் அம்மை!!!

சென்றுவிடு!! என்று!!

ஆனாலும் யானும் சம்மதித்தேன் சம்மதித்து இங்கிருந்து ஆனாலும் யார் எங்கிருந்து வந்தவன் என்பதை எல்லாம் இன்னும் இன்னும் குறிக்கோள் காட்டி அனைத்து வாக்குகளிலும் கூட யானே வந்து முன்னின்று செப்புவேன்!!!  எதையென்று!!!

ஆனாலும் பல வருடங்களாக இங்கு தங்கி முதலில் ஓதிமலை!!! ஓதிமலை ஒன்று இருக்கின்றது அங்கு நிச்சயமாய் யான் வந்தேன் ஆனாலும் அங்கே கூட யான் தங்கினேன்!!! பல வழிகளிலும் கூட ஞானத்தை பெற துடித்தேன்!! 

ஆனாலும் ஞானம்  எந்தனுக்கு வந்துவிட்டது ஆனாலும் முருகன் தான் கொடுக்க வேண்டும் இன்னும் பல ஞானங்கள் என்று கூட!!

இதனால் ஓதிமலையில் அங்கும் இங்கும் திரிந்தேன்!! பல ரூபங்களாக முருகனவன்  வந்து நிச்சயம் பல வழிகளிலும் கூட எந்தனுக்கு பல உண்மைகளை சொல்லித் தந்தான் !!

இதனால் அங்கு பின் எவை எதனை என்று கூட பல சித்தர்கள் அங்கே வந்தார்கள்!! வந்து வந்து எதை என்றும் அறிந்து கொள்ள ஆனாலும் எவை என்று உணர்ந்து கொள்ள அங்கே கணபதியும் வந்தான் பின் சபரி சபரிநாதன் அதாவது தற்போது நிலைமையில் கூட பின் எவை எதை எவற்றிலிருந்து வந்தவை என்று தெரியாமலே ஆனாலும் பின் சபரிநாதன் அங்கே இதனால் அங்கே பின் மூவருக்கும் பிடித்தமான ஒன்று அங்கு இருக்கின்றது இதனை உணர்ந்து உணர்ந்து அங்கு சென்று கொண்டு இருந்தாலே ஞானங்கள்!!!!

ஆனாலும் யான் பைத்தியமாக  ஆகிவிட்டேன் அங்கே!!! எவை எவற்றை என்று தெரியாத அளவிற்கும் கூட!! வரட்டும் முருகன் முருகன் என்றெல்லாம்!!!

 ஆனாலும் அங்கிருந்து பின் வழி விட்டான் எவை எதை தெரிந்து பின் ஏன் முருகனே எதை எவற்றின் பின் முருகனே வந்து பின் போகா!!!!

ஏன்? இந்த நிலைமை!!! இப்படியே காலங்களை கழித்தால் என்னதான் லாபம்??!!!

ஏதாவது ஒன்றை செய் என்று!!!

ஆனாலும் முருகா எப்படி? யான்!!! செய்வது?

எதை என்று அறிய அதனால் ஆனாலும் பின் எதை அறிந்து நீ ஏதாவது ஒன்றை எந்தனுக்கு சொல்லிக் கொடு !!! யான் செய்கின்றேன்!!! என்று!!!

ஆனாலும் முருகனோ!!!

போகனே அனைத்தும் தெரிந்தவன் நீர்!!!!! யான் என்னதான் சொல்ல வேண்டும்!!!

ஆனாலும் யானோ பின் அனைத்தும் தெரியும் முருகா!!!! நீ மிகப்பெரியவன் அதனால் நீ கொடுத்தால் தான் எந்தனுக்கு பெருமை அதனால்தான் நீ கொடுத்தாலே தவிர பின் நீ கொடுக்காவிடில் யான் பைத்தியமாகவே இருக்கின்றேன் இங்கு என்று!!!!

ஆனாலும் முருகன் விட்ட பாடில்லை!!!!

போகா!!!! பின் உந்தனுக்கு ஒரு சூட்சமத்தை விவரிக்கின்றேன்!!! இவ்வுலகத்தில் அதை யாருமே உணர்வதில்லை இன்னும் சொல்லப்போனால் இன்னும் பல ஆண்டுகள் கழிந்தாலும் பல பல பல யுகங்கள் கழிந்தாலும் நீ எதை என்று உணர்ந்து உணர்ந்து உன்னால் இப்பொழுது அதையென்று செய்ய முடியும்!!!!

பின் மீண்டும் மீண்டும் வருபவர்கள் யாராலும் அதைச் செய்ய முடியாது அதற்கான தகுதிகள் உன்னிடத்திலே இருக்கின்றன!!!!

அதற்கான மந்திரங்களையும் இப்பொழுது உந்தனுக்கு தெரிவிக்கின்றேன் என்று பின் எதை என்று அறிய ஆனாலும் முருகனே என் காதில் ஓதி விட்டான்!!!!

ஆனாலும் முருகன் காதில் ஓதி விட்டால் ஆனாலும் பின் எந்தனுக்கு யோசனைகள் வந்துவிட்டது வந்துவிட்டது என்பதை எதிர்பார்க்காத அளவிற்கு வந்துவிட்டது வந்துவிட்டது ஆனால் நிச்சயம் எங்கெங்கு எதனையும் அறிந்து அறிந்து பல மூலிகைகளை கூட அதனை யான் எதை என்று அறிந்து இதனால் முருகனுக்கு எவற்றிலிருந்து தெரியாத அளவிற்கும் கூட பின் முருகன் அதாவது எதை எதிர்நோக்கும் அளவிற்கு கூட நிச்சயம் பின் முருகன் வடிவிலே அமைத்திடு!!! அமைத்திடு!!! என்ற யோசனை!!!!

இதனால் முருகனை ஆனால் முருகனும் உருவமும் இருக்க வேண்டும் அவ் உருவத்துடனே முருகனையும் காண வேண்டும் பல மக்கள்!! காண வேண்டும் காண துடித்து காணச் சென்ற பின் பல உயர்வுகள் ஏற்பட வேண்டும்!!! உயர்வுகள் ஏற்பட்ட பின் பல பல பின் நோய்களும் அங்கே தீர வேண்டும் என்று!!!

இதனால் எதை என்று இங்கே ஆனாலும் போகன் அதாவது யான் எதை என்று முருகா!!!! யான் ஒன்றை யோசித்து விட்டேன் நீ சொன்னதால்!!!

அதனால் எங்கே செய்யட்டும் அதனால் பின் எதை என்று அறிந்து ஆனாலும் பின் ஏற்கனவே எதை என்று உணராமலே செல் ஆனாலும் அங்கிருந்து பின் பழனி தன்னில்!!!

ஆனால் பழனி தன்னில் எதனை என்று ஏற்கனவே அகத்தியனும் பல சித்தர்களும் உரைத்து விட்டார்கள்... எப்படி வந்தவன் யான் என்று கூட!!!

ஆனாலும் இதை அறிந்து அங்கேயே ஆனாலும் மூலிகைகள் பல பல காடுகளில் திரிந்து அலைந்து அலைந்து பறித்து வந்தேன்!!!

ஆனாலும் முருகனை வரச் சொன்னேன்!!!!!

முருகா வா!!!!

போகா என்னதான் வேண்டும்??

முருகா!!! அங்கு நில்!!

உன்னை அப்படியே செதுக்க வேண்டும்!!! ஆனாலும் பின் முருகனோ!! நகைத்தான்!!!

என்னை!! அப்படியா......!!!!!!!!!!!!!! செதுக்க வேண்டும்????!!!!

எதை என்று உணராத முருகா!!!!! இப்பொழுது இப்படி உயிரோட்டமாகவே இருக்கின்றாய் யானும் இங்கு உன்னை அமைத்து பின் உன் உயிரும் இங்கே தர வேண்டும் என்று!!!

பின் நகைத்தான்!!!! ஆனாலும் இதையென்று அறிந்து பின் யானும் முருகனை நினைத்து நினைத்து ஆனாலும் பின் முருகனை அங்கேயே நின்றான் மறைமுகமாகவே!!!

அவனைப் பார்ப்பது !!இங்கே செய்வது!!!

அவனைப் பார்ப்பது இங்கே செய்வது!!!

ஆனால் ஒரு மூலிகை மட்டும் கிடைக்கவில்லை ஆனால் அதுதான் பத்தாவது மூலிகை!!!( பழனி மலையில் இருக்கும் முருகனின் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்று தான் நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம் ஆனால் பத்தாவதாக மூலிகையும் சேர்ந்து தசா பாஷாணத்தால் போகர் சித்தர் வடிவமைத்திருக்கின்றார் (நவபாஷாணம் =9, தசபாஷாணம் =10)

ஆனாலும் தந்தது எனக்கு முருகா அத்தனை மூலிகைகளும் கிடைத்துவிட்டது ஆனால் ஒரே ஒரு மூலிகை மட்டும் தான் கிடைக்கவில்லை என்று!!!!

ஆனாலும் முருகனோ!!! சிரித்தான்!!!!
ஆமாமப்பா!!!!!!!  ஆனாலும் அத்தனையும் கொடுத்து விட்டால் இன்னும் வருகின்ற காலத்தில் மனிதன் திருடி உண்டு விடுவான்!!!!

அதனால் சூட்சுமமாக உந்தனுக்கு கொடுக்கின்றேன் இங்கு வா என்று கூட பின் மறைமுகமாக என் கையில் கொடுத்தான்!!! அதையும் யான் அங்கு வைத்து விட்டேன்!!!!

ஆனாலும் பின் அனைத்தையும் திருட முடியும் ஆனால் முருகன் கையில் இருந்து வந்த பின் பொருளை இன்னும் பின் அதாவது எதை என்று அறிந்து அறிந்து எவை என்று புரிந்து புரிந்து பின் அங்கேயே இருக்கின்றது!!!

அதனை யாரும் தொட கூட முடியாது!!! அதை தொட்டு விட்டால் எந்தனுக்கு அங்கே பின் உயிர் அதாவது எதை என்று அறிந்து அறிந்து யான் மனிதன் வடிவில் வந்து விடுவேன்!!!

அதனால் முருகனுக்கும் எந்தனுக்கும் ஒரு உத்தரவாதம்!!!

ஆனாலும் எதை அறிந்து அறிந்து ஆனாலும் இதை அறிந்து அறிந்து ஆனாலும் நிச்சயம் அப்பொருளை முருகனே எடுப்பான்!!!! யான் மனித ரூபத்தில் அங்கு திரிவேன்!!!! 

இதுதான் உண்மை!!!!

ஆனாலும் இப்பொழுதும் யான் திரிந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!!

ஆனாலும் மனிதர்கள் வருகின்றார்கள் திருடுகின்றார்கள் அவை வேண்டும் இவை வேண்டும் என்று மாபெரிய மனிதர்கள் திருடன் திருடன் என்று சொல்லி பின் முருகன் சன்னதிக்குள்ளே நுழைந்து விடுகின்றான்!!!

ஆனால் என்ன பயன்???

ஆனாலும் சிறிது காலம் உயர்வடையச் செய்யும் ஆனால் பின் அடியோடு அழித்து விடும் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது!!!

ஆனாலும் பின் யான் செய்தது முருகன்!!!

ஆனாலும் எதை என்று உணர உணர ஆனாலும் இன்னும் எதனை என்றும் நிமித்தம் காட்டி இன்னும் ஏராளமான விஷயங்களும் சொல்லத்தான் போகின்றேன்!!!!

பின் முருகா முருகா யான் எதற்கு எதற்கு ஆனாலும் செய்து விட்டேன் !!! என் கடமை முடிந்தது!!....  இனி யான் எங்கு செல்ல!!?????

இல்லை!! இல்லை!! இல்லை !!இல்லை!! போகா!!!

பின் உன் கடமையை இன்னும் நிறைவேற்றப்பட வேண்டும் பின் யுக யுகங்களாக நீ வாழ வேண்டும்!!! வாழ்ந்திட்டு யான் எங்கு இருக்கின்றேனோ!!!! அங்கே நீயும் இருக்க வேண்டும்!!!!

முருகா!!!! எப்படி இது? 

ஆனாலும் பின் சரி!!!! முருகா!!!! ஆனாலும் உன் தாயவள்!!! என் தாயவளும் ஆகிவிட்டாள்!!!

ஆனாலும் யானோ!!!!! எதை எவற்றிலிருந்து பைத்தியக்காரனாக இருந்து விடலாம் என்று எண்ணினேன் ஆனாலும் ஒரு வேலையும் கொடுத்தான் ஆனாலும் யான் எங்கு செல்வது!??

ஆனாலும் எதை எவை என்று ஆனாலும் அங்கிருந்து சென்று கொண்டே இரு!!!!
சென்று கொண்டே இரு!!!

யான் எதை என்று அறிந்து ஒரு பொருளை அங்கே இடுவேன் அங்கே இட்ட பொழுது அங்கேயும் ஒரு எதை என்று அறியாமல் என்னுடைய பின் உருவத்தை பதி!!!( பதித்துவிடு)  

இதனால் சரி இங்கே என் வேலை முடிந்து விட்டது என்று யான் கிளம்பினேன்!!! சென்று கொண்டே இருந்தேன் மலையின் பாதையில்... முருகன் அங்கே இட்டான் ஒரு பொருளை!!!!

அதை எடுத்திட்டு ஆனாலும் இதை என்று அறிவதற்குள் யானும் அங்கே நின்றேன்!! 

ஆனாலும் முருகனோ!!! எதை என்று உணராத தன்மையைப் பெற்று பின் போகா!!! நீ அங்கே என்னை எங்கே எதை என்று தெரியாத அளவிற்கும் அங்கே என்னை செதுக்கினாய்!!!

ஆனாலும் இங்கே என்னையே யான் செதுக்க போகின்றேன்!!!! என்று பின் குழந்தை ரூபமாகவே!!! இப்பொழுதும் கூட பின் எதை என்று உணராமலே பின் குழந்தை வேலப்பன் என்ற திருத்தலம்!!! ( பூம்பாறை முருகன் கோயில் கொடைக்கானல் )

அது முருகனால் வடிவமைக்கப்பட்டது!!!

ஆனால் உண்மைகள் தெரியவில்லை எதை என்று பின் யான் தான் எதை என்று தெரியாமலே யான் தான் அங்கு செய்தேன் செய்தேன் என்று பல மக்கள்!!!!

இதுதானப்பா கலியுகத்தில் பொய்கள் பொய்கள் நிறைந்தது!!!

அப்பனே பல பல சுவடிகள் இருந்தது அப்பனே ஆனாலும் அதையெல்லாம் எங்கெங்கோ பறந்து ஓடிப் போயிற்று!! எங்கு ஓடிப்போயிற்று??? மனிதன் அழித்துவிட்டான்!!!!

உண்மை நிலைகள் தெரிந்து கொண்டால் இவ்வுலகம் அதாவது கலியுகம் மாறிவிடும் என்று!!!

ஆனாலும் நிச்சயம் இப் பிறப்பிலும் எதை எவை என்று பின் மனித பிறப்புக்கள் இருக்கின்றது தவழ்ந்து தவழ்ந்து ஓடுகின்றது எங்கெங்கோ!!

ஆனாலும் விட்டுவிட மாட்டோம் யாங்கள்!!!! சித்தர்கள் எதை என்று மனிதர்களுக்கு தெரிவித்து தெரிவித்து பல மனிதர்களை மாற்றி மாற்றி அமைத்து ஆனாலும் இதை எதிர்கொள்ளும் சக்தி திறமைகள் சில மனிதர்களுக்கே உண்டு!! அதையெல்லாம் எதிர்கொண்டால் அவந்தனும் உயர்வு நிலைகள் பெற்று பல புண்ணிய காரியங்கள் செய்து நிச்சயம் மனிதனை திருத்தலாம் !!திருத்தலாம்!!

ஏனென்றால் கலியுகத்தில் இட்ட கட்டளை மனிதன் திருடன்!!! பொய் சொல்லுவான் ஏமாற்றுவான் அவை மட்டும் இல்லாமல் தாய் தந்தையரை வணங்க மாட்டான் எதை என்று இறைவனையும் ஏளனம் செய்வான்!!! இறைவன் இல்லை என்று சொல்லிவிடுவான்!!! எதை என்று உணர்ந்து உணர்ந்து இதனை பல முறை பார்த்திட்டேன்!!!!!

போகர் பெருமானின் மனுதேவி வாக்கு பாகம் 2 ல் தொடரும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்! 

1 comment:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete