​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 30 December 2022

சித்தன் அருள் - 1251 - அகத்தியர் வாக்கு - 4


கேள்வி: "கோவில்களின் பராமரிப்பில் நிறைய அளவுக்கு தவறுகள் நடக்கிறது, அரசியல் ரீதியாக எல்லோரும் தலையிட்டு, எல்லாவற்றையும் கெடுத்து விடுகிறார்கள், நிறைய கோவில்களை இடிக்கிறார்கள். பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசாங்கத்தின் தலையீடும் உள்ளது!"

குருநாதர்:"அப்பனே! எதை என்று அறிய! இவை எல்லாம் பார்த்திட்டு, இறைவனே அமைதியாக இருக்கிறான் என்றால், என்ன அர்த்தம் என்று நீ கூறவேண்டும்!"

"எல்லாம் கர்மாப்படி நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்!"

குருநாதர்:  "அப்பனே! எதை என்று அறிய, அப்பனே! கலியுகம் என்றாலே, அழியும் காலம் என்றுதான் அர்த்தம். ஆனால், நிச்சயம் இறைவன், தன்னை பார்த்துக் கொள்வான் அப்பனே! மனிதன் எதை என்று கூற? தன்னை பார்த்துக் கொண்டால் போதுமானது.

"இந்த கேள்வியை குறிப்பாக கேட்க காரணம் என்னவென்றால், அதில் எத்தனையோ கோவில்கள், அனைத்து கோவில்களும், சித்தர்கள், கட்டின ஆலயங்கள், புண்ணியத்தலங்கள்!"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய, அறிய, அப்பனே! எங்களால், கட்ட முடிந்ததை யாராவது இடிக்கச்சொல் பார்ப்போம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தீசாய நம
    நன்றி ஐயா🙏🙏

    ReplyDelete
  2. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நம!

    ReplyDelete
  4. அருமை ஐயா
    நன்றி ஐயா🙏🙏🙏

    ReplyDelete
  5. ஓம் லோபமுத்திரா தாய் திருவடிகள் போற்றி ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete