​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 12 September 2016

சித்தன் அருள் - 437 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"ஒவ்வொரு வழிபாட்டையும் செய்துவிட்டு, அதை இறைவன் ஏற்றுக் கொண்டுவிட்டாரா? என்று கேட்பது எப்படி இருக்கிறது? என்றால் ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதிவிட்டு, தேர்வை திருத்துகின்ற குருநாதனிடம் "எனக்கு எந்த அளவுக்கு மதிப்பெண் போடப்போகிறாய்? போட்டிருக்கிறாய்?" என்று கேட்டால், அந்த குருவின் மனநிலை எவ்வாறு இருக்கும்?  ஆக, உன் கடமையை, உறுதியாக, தெளிவாக செய்து கொண்டே போ. இறைவன் அருள் என்று வரும்? எப்படி வரும்? என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதே. வெற்றி இருக்கிறதா? என்று பார்த்து செய்வதற்கு, ஆன்மீகம் ஒன்றும் உலகியல் காரியம் இல்லையப்பா. இது அனைவருக்கும் பொருந்துமப்பா!"

No comments:

Post a Comment