​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 24 September 2016

சித்தன் அருள் - 448 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எத்தனைதான் ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்தாலும், ஒருவனுக்கு பிணி வரவேண்டும் என்ற விதி நிலை வந்துவிட்டால், பிணி வந்தே தீருமப்பா. இறைவனைத் தொடு. உனக்கு "சிகிச்சையே" தேவையில்லையப்பா. எத்தனையோ வகையான சிகிச்சை முறைகள் காலாகாலம் சித்தர்களால் மனிதர்களுக்கு  தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது. மூலிகைகளை ஏற்பது, எந்த உணவையும் ஏற்காமல் விரதத்தோடு இருந்து சில பிணிகளை நீக்குவது, வெறும் நீரை மட்டும் பருகி சில பிணிகளை நீக்குவது, உடலிலே சில இடங்களில் சில குறிப்பிட்ட அழுத்தங்களைத் தந்து நோய்களை நீக்குவது, எந்த வகையான அழுத்தங்களையும் தராமல், குறிப்பிட்ட இடத்தை உற்று நோக்கி "திருஷ்டி" சிகிச்சை என்ற ஒன்று இருக்கிறது. இப்படியெல்லாம் பல்வேறு சிகிச்சை முறைகள் இருப்பது உண்மை.  ஆனால், தெள்ளத் தெளிவாக கற்றுணர்ந்த மனிதர்கள் இன்று குறைவு. எப்பொழுதுமே அரைகுறை  அறிவு, ஆபத்தைத்தான் தரும் என்பதை புரிந்துகொண்டு, ஒரு துறையில் தெளிவான அறிவு இல்லாத மனிதர்கள், இது போன்ற எந்த முயற்சியும் செய்தல் கூடாது.

2 comments:

  1. Sir, this answer was given by Maharishi, when someone raised a question about "Reiki" healing technique, in the Satsang of nadi reader Tanjore Ganesan sir. This is the context to this reply by Maharishi.

    ReplyDelete