​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 8 September 2016

சித்தன் அருள் - 433 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"எல்லாம் இறைவன் படைத்த உயிர்கள். இதில் உயர்வு, தாழ்வு பேதமில்லை. பொதுவாக, சாத்வீக உயிரினங்களிலே பல்வேறு முனிவர்களும், சமயத்தில் ரிஷி பத்னிகளும் அவதாரம் செய்வார்கள். இவர்களே வரம் கேட்டு வந்து, தங்களுடைய பால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பாக்கியம் வேண்டும் என்பதற்காக இவ்வாறு பிறவி எடுப்பார்கள்.  தேவர்களும், தேவதை வர்க்கங்களும், கந்தர்வர்களும் சாபத்தினால் இவ்வாறு பிறப்பதும் உண்டு. எனவேதான், எத்தனையோ உயிரினங்கள் இருக்க, பசுக்களுக்கு யாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். மான், மயில் மற்றும் கிளி போன்ற உயிரினங்களில் கூட முனிவர்கள், தேவதை வர்கங்களாக இருப்பதால் தான், பெரும்பாலும் இவற்றுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது. முன்னரே பல புண்ணியங்களை செய்து, தவத்திலே சிறந்து விளங்குகின்ற ஒரு முனிவரோ, ரிஷிபத்னியோ இவ்வாறு பிறவி எடுக்கும்பொழுது அறியாமையால், மனிதர்கள் தீங்கு இழைத்தால், எந்த அளவுக்கு பாவம் வரும் என்பதை ஒரு மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்."

No comments:

Post a Comment