​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 18 September 2016

சித்தன் அருள் - 443 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"தண்டிப்பதோ, தண்டனை தருவதோ, பிற உயிர்களை துன்புறுத்துவதோ, எமக்கோ, இறைவனுக்கோ வேலையல்ல. எல்லோருக்கும் நன்மை புரிவதுதான் எமது வேலையப்பா. ஒரு குழந்தை கோபித்தால், உடனே தாயும் தந்தையும் குழந்தை மீது கோபம் கொள்வார்களா? எம்மையும், இறையையும் ஒரு மனிதன் ஏன் இகழ்கிறான். தான் நினைத்தது நடக்கவில்லை, தன் ஆசை நிறைவேறவில்லை, என்ற வேதனையில்தானே ஏசுகிறான்? நிறைவேற்றி தந்தால் என்ன நடக்கும்? என்று இறைக்குத் தெரியும். ஒன்றை தந்தால்தான், இறைவன் அருளுகிறான் என்று மனிதன் தவறாகவே நினைக்கிறான். பல சமயங்களில் இறைவன், தராமலேயே ஒரு மனிதனை காப்பாற்றுகிறான். எனவே, "ஒன்றை தந்தால் என்னவாகும்? தராவிட்டால் என்னவாகும்? என்பது இறைக்குத்தான் தெரியும், என்பதால் இறைவன் இத்தகைய ஏச்சு, பேச்சுக்களை எல்லாம் பொருட்படுத்துவதேயில்லை."

No comments:

Post a Comment