​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 11 September 2016

சித்தன் அருள் - 436 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"ஏறத்தாழ நான்காயிரத்து சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னால், இந்த தமிழகத்திலே, ஸ்ரீரங்கம் பகுதியிலே மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது. பிரளயம் வடிந்து, மீண்டும் இடம் பெயர்ந்த மக்கள் எல்லாம் மாண்ட பொழுது, தொடர்ந்து மழை பெய்தது. பிரளயம் என்றால் உலகமே அழிந்து விடாதப்பா. ஆங்காங்கே சிறு, சிறு அழிவுகள் ஏற்படும். அப்போதெல்லாம், அரங்கத்தில் இருந்து, அரங்கனை பூசை செய்யும் பாக்கியத்தை, இங்கு வந்து செல்லும் பலரும் பெற்றிருக்கிறார்கள். ஒரு முறை அரங்கனுக்கு "தளிகை" ஏதும் செய்யவியலாத சூழல் ஏற்பட்ட பொழுது, அவரவர்கள், தம் வீட்டிலே உள்ள, தரக்குறைவான தானியத்தை எடுத்து வந்து, "இதுதான் இருக்கிறது" என்று கொடுத்து, அதை ஏதோ ஒரு கஞ்சி போல் வைத்து படைக்க, அதை "பால் சாதமாக" அரங்கன் மாற்றி அருளினார். அப்படி அரங்கனை சோதித்தவர்களில் எம் சேய்களும் உண்டு."

2 comments:

  1. OM,this blog is for what,please tell.

    ReplyDelete
  2. This blog is to lead our soul in dharma path and to attain mukthi through siddha path.

    ReplyDelete