​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 15 January 2024

சித்தன் அருள் - 1556 - தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்றைய தைப்பொங்கல் நன்னாளில் நீங்களும், உங்கள் குடும்பமும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நலமாய் வாழ அகத்தியப்பெருமான், லோபாமுத்திரா, இறைவனிடம் பிரார்த்தித்து, வாழ்த்துகிறேன். எல்லா நலமும், அனைவரின் ஆசிகளும் பெற்று, நோயின்றி, அமைதியாய் வாழுங்கள். 

ஒவ்வொருவரின் அருகிலும்/கரத்திலும்/எண்ணத்திலும் தர்மம் செழிக்கட்டும், தானம் சிறக்கட்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!