வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அருள்மிகு ஸ்ரீ சக்திமாரி அம்மன் திருக்கோவில், பசுமலை, மதுரையில் உறையும் அம்பாளுக்கும் அனைத்து தெய்வ மூர்த்தங்களும் பாலாலயம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இறையருளால், ஆகஸ்ட் மாதம் 23ம் தியதி (ஞாயிற்றுக்கிழமை) அமிர்தயோக சுபதினத்தில் காலை 10.30 - 12.00 மணிக்குள் கும்பாபிஷேகம் செய்வதாய் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்குதான் நம் குருநாதரின்/குருமாதாவின் சன்னதியும் உள்ளது. அங்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை பற்றிய விரிவான செய்தியை கீழே உள்ள படத்தில் காண்க.
நாம் வாழும் காலத்தில் நடக்கிற சிறப்பான இந்த விசேஷத்தில் அகத்தியர் அடியவர்கள் ஒவ்வொருவரும் பங்கு பெற்று அவர் அருள்/இறை அருள் பெற்று கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
மற்ற விஷயங்களுக்கு கோவிலை தொடர்பு கொண்டு செயல்படவும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!


.jpeg)

No comments:
Post a Comment