மும் மூர்த்திகளும் நாம் கேட்கும் வரங்களை வாரி வழங்கி நம்மை வாசனையில் சிக்க வைத்து மறுபடியும் பிறவி சூழலில் மாட்டிவிட்டு போய் விடுவார். அவர்களுக்கும் மேல் "பராபரம்" என்று ஒன்று உண்டு. அதை காட்டும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. நான் சொல்லும் வழியில் சென்றால் "பராபரத்தை" கண்டு உணர முடியும் என்று சுப்பிரமணியர் தனது "சுப்பிரமணிய ஞானம்" என்கிற வெளிப்பாட்டில் கூறுகிறார் அகத்தியரிடம். அவர் இதை அகத்தியருக்கு மட்டும் தான் உபதேசித்துள்ளார். சுப்ரமண்யரோ, அகத்தியரோ நமக்கு உரைத்தால் அன்றி இதன் உண்மையை உணர முடியாது. "பராபரத்தை" உணர்ந்தவன் பிறவித் தளையிலிருந்து விடுபடுகிறான்.
சுப்பிரமணியர் (சித்தர்களின் தலைவர்)