​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 6 July 2012

அகத்தியரும் நாடியும்!

சமீபத்தில் ஒருவரிடம் அந்த நாடி வாசித்தவரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது தெரிய வந்த ஒரு உண்மை.  உண்மைகளை எடுத்து சொல்லி, மனிதர்களை நல வழிப்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தில் அகத்தியர் பல விஷயங்களை உரைத்திருந்தாலும், கடைசியில் அவர் மனம் வருத்தப்படுகிற அளவுக்கு மனிதர்கள் நடந்துள்ளனர்.  இதனால் கோபப்பட்ட அகஸ்தியர் "இனிமேல் இந்த மனிதர்களுக்கு நல்  வழி உறைப்பதில்லை" என்று சபதம் பூண்டு சென்றுள்ளார்.  சில நாட்களிலேயே அந்த நாடி படித்தவர் மறைந்துவிட, இன்று வரை ஒருவரையும் அவர் நாடி படிக்க தெரிவு செய்யவில்லை.  அடியேனும் தினமும் அகத்தியரிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.  ஒரு சிலர் தவறால் கோபப்பட்ட முனிவரின் மனம் மாற வேண்டும்.  கஷ்டப்படும் நிறைய பேர் வாழ்க்கையில் ஒளியூட்டவேண்டும்.  மன்னித்து அருள் புரிய வேண்டும் என்று.  இதை படிக்கும் அடியவர்களும், மனித குல மேன்மைக்காக அவரிடம் தினமும் வேண்டிக்கொள்ளுங்கள் "சீக்கிரமே ஒரு நல்ல மனிதரை தெரிவு செய்து நாடி வாசிக்க, மக்கள் நலம் பெறவேண்டும்" என்று.  நம் உண்மையான கூட்டு பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக அகஸ்திய முனிவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புவோம்.  எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்.