​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 30 October 2025

சித்தன் அருள் - 1973 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை கூட்டுப்பிரார்த்தனை வாக்கு - 2


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய திருஅண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு. - பகுதி 2

நாள் - 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணி - மாலை 6 மணி வரை.
வாக்குரைத்த ஸ்தலம் :-  ராஜா ராணி மஹால் , அவலூர் பேட்டை பை பாஸ் ஜங்ஷன் அருகில் , திருவண்ணாமலை.

ஆதி முதல்வனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன் அகத்தியன். 

( பகுதி 2) 

அப்பனே, இதனால்தான், இன்னும் கலியுகத்தில், அப்பனே, அதாவது, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவ்வாறெல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில். இவை யாவுமே சொல்லிவிட்டேன் அப்பனே.  மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே.

அதாவது, அப்பனே, சந்திரன் கிரகமானது. அப்பனே, தன் நேர்கோட்டில் இருந்தால்தான் நல்லெண்ணங்கள் உதிக்கும் என்பேன்  அப்பனே.

நல்லவற்றை பேச முடியும் என்பேன் அப்பனே. 
நிச்சயம், நல்லவற்றையே, அப்பனே, பின் எண்ண முடியும் என்பேன்  அப்பனே.  
நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, புண்ணியத்தை சேர்த்து முடியும் என்பேன்  அப்பனே,
உண்மை எதுவும் புரியவில்லை என்றால், தெரிந்து கொள்ள முடியும் என்பேன்  அப்பனே.

ஆனால், பின், சந்திரன் கிரகமானது, தன் நேர்கோட்டிலிருந்து சற்று விலகி இருப்பதால் . அப்பனே, அனைவருமே பைத்தியக்காரர்கள் போல்தான் யோசிப்பார்கள் அப்பனே.

பின் இல்லத்தில் தாய் தந்தையரை அப்பனே, பேச்சை கேட்க மாட்டார்கள் அப்பனே. நிச்சயம், தன்னில் கூட, ஒருவர் ஒருவர், அப்பனே, கோபம் கொள்ளுதல்  அப்பனே.
பின், அதாவது, கணவன் மனைவி இடையே பிரச்சனைகள், சண்டைகள் அப்பனே.
இவையெல்லாம் தோன்றும் அப்பா.  

அதனால் அப்பனே, மீண்டும், சந்திரன் கிரகமானது, நேர்கோட்டில் உங்களால் எப்படி வரவழைக்க முடியும் என்பேன் அப்பனே?

ஆனால், மனிதனோ, நிச்சயம், அவ்வாறு, இவ்வாறு நடந்து கொண்டால், நிச்சயம், மனக்குழப்பங்கள் போகும் என்பதையெல்லாம். 

“”””” அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே, எச்சரிக்கையாக இருங்கள். “””””

சந்திரன், அப்பனே, தன் நேர்கோட்டு பாதையில் சற்று விலகி நிற்பதால் அப்பனே, நிச்சயம், அப்பனே, மனிதன் ஏமாற்றுவான் அப்பா. 

“”””அப்பனே, நிச்சயம், நம்புவான். அப்பா, ஏமாற்றத்தை தான் நம்புவான். அப்பா,””””

ஆனாலும், நிச்சயம், சந்திரன், நேர்கோடாக , ஆனாலும், அப்பனே, தியானங்கள், நிச்சயம்….
அப்பனே, நல்மனதாக யோசித்தல்….
அப்பனே, பின், இறைவனை சரணாகதி அடைந்துவிட்டால் , அப்பனே, நீங்கள் ஏமாறவும் மாட்டீர்கள் அப்பனே.
நிச்சயம்  தன்னில் கூட, பாவத்தை சேர்த்துக்கொள்ள மாட்டீர்கள் என்பேன்  அப்பனே, 

அப்பனே பார்த்துவிட்டேன் அப்பனே, பின், பல கோடி மக்களை அப்பனே.
நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், பக்தி என்பது தெரியவில்லையப்பா. பக்தியானது சரியாக தெரிந்திருக்க வேண்டும் என்பேன்  அப்பனே.

அதாவது, மின்சார கம்பிகளில் எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம், அப்பனே, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன்  அப்பனே.

நிச்சயம், மின்சார கம்பியில் நடப்பது சாதாரணம் இல்லை என்பேன்  அப்பனே. அதேபோல, அப்பனே, பக்தியில் நடப்பது, அப்பனே, சாதாரணம் இல்லை என்பேன்  அப்பனே. 

சரியாக நடந்தால்தான். இல்லையென்றால், அனைத்தும் உடைந்து போயிடும் என்பேன்  அப்பனே, நிச்சயம், தூள் தூளாக. சொல்லிவிட்டேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- 
(பக்தி என்பது மின்சார கம்பியில் நடப்பதற்குச் சமமானது. அது மிகவும் நுண்மையான, ஆபத்தான பாதை. சரியான வழியில், சமநிலையுடன், பாதுகாப்பாக நடந்தால்தான் இறைவனை அடைய முடியும். தவறான முறையில் முயன்றால், அது ஆபத்தில் முடிவடையும். சிலருக்கு வழிகாட்டுதல், ஆதரவு தேவைப்படும். பக்தி என்பது மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய ஆன்மிகப் பயணம் என்பதே அகத்திய மாமுனிவரின் உன்னதமான சாரம்.)
குருநாதர் :-

அப்பனே, இதனால்தான், அப்பனே, சித்தர்கள், நிச்சயம், நீங்கள் எல்லாம் பாவங்கள் எதை என்று புரிய. அதனால்தான், நிச்சயம், தன்னில் கூட, பின், உங்களை, நிச்சயம், வந்து சந்தித்து, அப்பனே, வாக்குகளாக, உண்மை நிலை தெரிந்து கொண்டால், நீங்கள் உங்களுக்கே மன்னர்கள் என்பேன்  அப்பனே.

நிச்சயம், அப்பனே, அப்படி தெரிந்து கொள்ளவில்லை என்றால், அப்பனே, பின், உங்களுக்கே, நீங்களே எமன். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- 
(ஒருவர் உண்மை நிலையை உணர்ந்தால், அவர் ராஜா போல உயர்ந்த நிலையை அடைவார். இல்லையெனில், அவர் எமனாகவே மாறுவார் — அதாவது தானே தன்னை அழிக்கிறான். யாரும் ஒருவரை கெடுக்கவில்லை; அவர் தானே தன்னைக் கெடுக்கிறார். இறைவன் இதை அறிந்து, அதற்கேற்ப அனுபவங்களை அளிக்கிறார். உண்மை நிலையை அறிந்து வாழ்வதே வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம்.)

குருநாதர் :-

“””””” இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இறைவன், அப்பனே, உங்களை சரியாக, சரியான பாதையில் தான் எடுத்துச் செல்கின்றான் என்பேன்  அப்பனே. “””””””

“””””””” ஆனால், இடையே, அப்பனே, பின், அவ்வாறு, அவன், அப்படி வாழ்கின்றானே, இப்படி வாழ்கின்றானே என்ற எண்ணம், அப்பனே, மனதில் தோன்றி, அப்பனே, அப்பொழுதுதான் பாவம் ஆரம்பிக்கின்றது என்பேன்  அப்பனே. “””””””””

இதனால், அப்பனே, பின், தன் மனத்தாலே  அனைத்தும், பின், நிச்சயம், கெடுத்து, அப்பனே, தானும், பின், தன்னை விட்டு உள்ளவனும் கெடுக்கின்றான் என்பேன்  அப்பனே. இது அழிவு காலம் அப்பா, வருங்காலத்தில் அப்பனே.

நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எப்படி பரிகாரம் செய்தாலும், எப்படி, எப்படி, எதை செய்தாலும், அப்பனே, உலகம் அழிவு நிலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது என்பேன்  அப்பனே. உங்களால் தடுக்க முடியுமா என்றால், அப்பனே, நிச்சயம் முடியும். 

ஏனென்றால், உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே, உண்மையை உணர்ந்து கொண்டால், அப்பனே, நீங்கள், அப்பனே, நிச்சயம், இன்னும் பல பேருக்கு உண்மையை சொல்லலாம் என்பேன்  அப்பனே. பின், பிழைத்து விடுவார்கள் என்பேன்  அப்பனே.

“”””” இதனால் , பின், என்னுடைய பக்தர்கள், நிச்சயம், தன்னை கூட உண்மை நிலையை தெளிந்து , அப்பனே, மற்றவர்களை கூட தெளிந்து, அப்பனே, வைத்தால், உங்கள் விதியை யான் மாற்றுவேன் அப்பனே.  “”””””

விதியை யாராலும் மாற்ற முடியாது அப்பா.  அப்பனே, நிச்சயம், ஏற்கனவே பிரம்மன், இவ்வாறுதான் நீங்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் அழகாக எழுதி வைத்துவிட்டான்  அப்பா.  அதை மாற்றும் சக்தி, மனிதனுக்கு, இவ்வுலகத்தில், எவ்வளவு சக்திக்கும், நிச்சயம் இல்லை. அப்பா.

ஆனால், எங்களால் மாற்ற முடியும். ஆனாலும், நீங்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, எங்களால் மாற்ற முடியும். அப்பா. சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- 
(விதி என்பது பிரம்மதேவரால் எழுதப்பட்ட ஒரு மாற்றமில்லா நெறி. அதை எந்த மனிதனாலும், எந்த சக்தியாலும் வெல்ல முடியாது. ஆனால் வாழ்க்கையின் உண்மை மாற்றம், நம் மனதின் தூய்மை மற்றும் நம் செயல்களின் நேர்மையில் இருக்கிறது. சித்தர்கள் கூறுவது போல, ஒருவர் நல்ல மனதோடு, உண்மையோடு வாழ்ந்தால், இறைவனின் அருளால் விதி கூட நிச்சயம் மாற்றப்படும். இறைவன் கேட்பது நம் உள்ளத்தின் உண்மை, நம் தவத்தின் தீவிரம். தவறு செய்தால், அதை உணர்ந்து திருந்தி, இறைவனை வணங்கி, அருள் நாடி வாழ்வதே நம் வழி. விதியை வெல்ல முடியாது, ஆனால் நம்மை உயர்த்தி, விதியை மாற்ற வைக்கும் மனதின் சக்தியை வளர்த்துக்கொள்ளலாம். இதுவே வாழ்க்கையின் உண்மை நம்பிக்கை.)

குருநாதர் :- 

அப்பனே இறைவன் கலியுகத்தில் நிச்சயம்  அமைதியாக இருக்கின்றான் என்பேன்  அப்பனே.   இதனால்தான் அப்பனே  இவ் கூட்டுப் பிரார்த்தனை அப்பனே.  

நிச்சயம்  ஒரு பிள்ளை தன் தந்தையிடம் கேட்டால், அதை வாங்கிக்கொடு என்றால், தந்தை, நிச்சயம்  அமைதியாக இருப்பான். 

“”””””அதாவது, அவனுக்கு பத்து பிள்ளைகள். அப்பனே  ஆனால், பத்து பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து, தந்தையே, வாங்கிக்கொடு , வாங்கிக்கொடு என்று ஒரு கையை பிடித்து, காலை பிடித்து, நிச்சயம், தன்னில் கூட, காலை, அதாவது, தலையை பிடித்து இழுத்தால், பின், தொல்லைகள், வாங்கிக் கொடுத்து விடுவோம் என்று, தந்தை, வாங்கிக் கொடுத்து விடுவான் அப்பா.””””””

அதே போல தான், அப்பனே  கூட்டு பிரார்த்தனை கூட, அனைவரும், அப்பனே  சேர்ந்து, நிச்சயம், யாருக்காவது,  கஷ்டம் வந்தாலும், இறைவா, இவர்களுக்கு, நிச்சயம், தன்னில் கூட என்றெல்லாம் அப்பனே  நீங்கள் வேண்டினால், அப்பனே  பின், என்னடா பிரச்சனை, இவர்கள் தொல்லை தாங்க முடியவில்லையே என்று இறைவன், அப்பனே  இப்படித்தான், அப்பா, வருவானப்பா. 

அதனால்தான் அப்பனே  உங்களை இதை நிச்சயம், தன்னில் கூட. 

மீண்டும் சொல்கின்றேன் அப்பனே  

தங்களுக்காக எண்ணிக்கொள்ளாதீர்கள் என்பேன்  அப்பனே.
 

—----------------------------------------------------------------------------------------------------------------------------------

—----------------------------------------------------------------------------------------------------------------------------------

“”””” நிச்சயம், மற்றவருக்காக, அப்பனே  வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே  நிச்சயம், அவ்வாறு, மற்றவருக்காக, வாழ கற்றுக் கொண்டால், அப்பனே  புண்ணியம் உன்னிடத்தில், சுலபமாக, ஏறிக்கொண்டே போகும் என்பேன்  அப்பனே. “””””” 

—----------------------------------------------------------------------------------------------------------------------------------

—----------------------------------------------------------------------------------------------------------------------------------

சுயநலமாக, சுயநலமாகவே, வாழ்ந்து வந்தால், தன்னிடத்திலிருந்து, புண்ணியம் எல்லாம் பிடுங்கி, இறைவன், அப்பனே  வைத்துக் கொள்வான் என்பேன்  அப்பனே.  இவந்தனக்கு  புண்ணியம், அதாவது, இருக்கின்றது. இதை பயன்படுத்த தெரியவில்லை. இன்னும் கஷ்டத்தை கொடுப்போம் என்று அப்பனே . 



 

அப்பனே, அது மட்டுமில்லாமல், அதனால்தான் அப்பனே, ஒழுக்கம் நிச்சயம், மிகச்சிறந்தது என்பேன்  அப்பனே, 

சிறுவயதிலிருந்து, ஒழுக்கத்தை  கற்பித்துவிட்டால், அப்பனே, அவன் ஒழுக்கமே, அவனை உயர்வான இடத்தில் அழைத்துச் செல்லும். 

இவையெல்லாம் பெரியோர்கள் அப்பனே, சொன்னதே.  இவையெல்லாம், சரியாக, அப்பனே, எடுத்தால், பின், அடுத்தடுத்து , வருவது, மிக கடினம், கடினமான காலங்கள் . அப்பா, 

அதனால், அப்பனே, உங்களை, நீங்கள் இயக்கி, அப்பனே, உங்களை, நீங்கள் பார்த்துக்கொண்டு, பார்த்துக் கொண்டால் மட்டுமே, அப்பனே.

நிச்சயம், உங்கள் பிள்ளைகள். அதாவது, ஒவ்வொரு தாயும், நிச்சயம், ஒவ்வொரு தந்தையும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும். தான் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணுகின்றான் அல்லவா? அப்பனே, இதற்கு, நிச்சயம், தன்னில் கூட, நல்லவற்றையே நிச்சயம் சொல்லித்தாருங்கள். வருங்காலத்தில், நிச்சயம், பின், நல்லது செய்தால் மட்டுமே, வருங்காலத்தில், பிழைக்க முடியும். அப்பா.

இல்லையென்றால் சிறுகாலத்தில், நன்மைகள் நடக்குமே தவிர, அவைகள், நிச்சயம், தன்னில் கூட, இறைவன் எப்பொழுது, நிச்சயம், பிடுங்குவான் என்பதே தெரியாது. அப்பா.

இதனால், அப்பனே, மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. அப்பனே, நிச்சயம், உயிரும், உடம்பும், அப்பனே, நிச்சயம், உங்களுக்கு சொந்தமே இல்லை அப்பா. அதனால் அப்பனே, நீங்கள் எதையுமே, அப்பனே, இறைவனிடம் கேட்க தகுதியும் இல்லை அப்பா.

நிச்சயம், மனித பிறப்பு என்றால், நிச்சயம், பின், சாபத்தோடு பிறந்தவன் தான். 

அப்பனே, அந்த சாபத்தை எப்படி முதலில் எடுப்பது என்பது எல்லாம், அப்பனே, நிச்சயம் தெரியவில்லையே.பாவங்கள் மனிதர்களே.

அப்பனே, இவ் சாபத்தையே நீக்க முடியவில்லை. இறைவன் எப்படி அப்பா கண்ணுக்குத் தெரிவான்? 

அப்பனே, நிச்சயம் ஓடலாம். அப்பனே, நிச்சயம் இறைவனை நினைத்துக் கொள்ளலாம். அப்பனே, நிச்சயம் எதை செய்தாலும், அவ் சாபத்தை எப்படி நீக்குவது என்பது உங்களால், நிச்சயம் தெரிந்து கொள்ளவே முடியாது என்பேன்  அப்பனே, 

அப்பனே  நிச்சயம், நிச்சயம் அவ்  சாபத்தை பெற்றுக்கொண்டே இருந்தால், அப்பனே, நிச்சயம் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன்  அப்பனே, 


இதனால் எப்படி நீக்க முடியும்? அப்பா, 

அப்பனே, இதனால், நிச்சயம் தன் பாவத்தை, பாவ கணக்கை நீங்களே எடுப்பீர்கள் என்பேன்  அப்பனே.  அதாவது சாதகத்தை. 

(கஷ்டம் வரும்போது ஜாதக கட்டத்தை எடுத்து , ஜோசியரிடம் செல்வது. ஜாதகம் என்பது நமது  பாவகணக்கு. அதனை பார்த்தாலும் , பிறரிடம் எடுத்துச்சென்று பரிகாரங்கள் கேட்டாலும் - பாவங்கள். அப் பாவத்தை நீங்கள் செய்யும் புண்ணியத்தால் மட்டுமே அடித்து நொறுக்க இயலும்).

அப்பனே, ஓடுவீர்கள் என்பேன்  அப்பனே, என்ன நடக்கிறது? ஏது , அதாவது சனி அவன் வந்துவிட்டான் , ராகு அவன் வந்துவிட்டான் , கேது அவன் வந்துவிட்டான் , அப்பனே, வரட்டும் என்பேன்  அப்பனே, நிச்சயம் எது என்று அறிய அறிய  நல்லதை, நிச்சயம் கலியுகத்தில் கொடுக்க போவதில்லை அப்பனே.

இன்னும் குருபலன் வந்துவிட்டது. பின் அனைத்தும் நல்லதாக நடக்கும், ஆனால் நிச்சயம் கொடுப்பதில்லை. ஏன் ?

அப்பனே, நிச்சயம் அறிந்தும், இறைவனுடைய அடியாட்கள் கிரகங்கள் அப்பா. 

நீங்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சென்று கொண்டிருக்கும் பொழுதே, பின் ஒவ்வொரு கிரகம், நிச்சயம் தன்னில் கூட, அதாவது (கிரகங்கள் ) அவனவன் அங்கே நின்று, அடப்பாவி, இத்தனை தவறு செய்துவிட்டு, வெட்கம் இல்லையா என்று திட்டுவார்கள் அப்பா.  

சந்திரன்,சூரியன் , செவ்வாய் , புதன்  (கிரகங்கள்) நிச்சயம், நீ மறுபிறவி எடு, அங்கே பார்த்துக் கொள்வேன் என்றுதான் உன்னை அனுப்புவார்கள் அப்பா.  அப்படி கிரகங்கள் உங்களுக்கு எப்படி அப்பா  நல்லது செய்யும்?

நிச்சயம் பார்க்க முடியும். அதாவது, முதல்லயே சொல்லிவிட்டேனே, நாய் போல் திரிய வேண்டும். எதையும் எண்ணாமல்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- 
(இறைவனை காண விரும்பினால், ஆசைகள் இல்லாமல், எளிமையாக வாழ வேண்டும். நாய் போல வாழும் மனப்பான்மை வேண்டும் — அதாவது, எதையும் கேட்காமல், கிடைத்ததை ஏற்றுக்கொண்டு, தாழ்மையுடன், நம்பிக்கையுடன் இருப்பது. நாய் ஒரு சாப்பாடு கிடைத்தால் அதை எடுத்து சாப்பிட்டு அமைதியாக போய்விடும்; அதுபோல், மனிதனும் இறைவனிடம் எதையும் கோராமல், எதையும் எதிர்பார்க்காமல், முழுமையான ஒப்புதலுடன் வாழ வேண்டும். அந்த மனநிலையில்தான் இறைவனை உணர முடியும்.)
குருநாதர் :-

ஆனாலும், அப்பனே, திரிவதற்கு, அப்பனே, ஆள் இல்லையேப்பா. 

அப்பனே, நிச்சயம், ஒவ்வொருவருக்கும், அப்பனே, விதியை யான் சொல்வேன் பொறுத்திருந்தால்  என்பேன் அப்பனே.

(ஒவ்வொருவரின்  விதியும், எங்களால் சித்தர்களால் உரைக்க முடியும். பொறுத்திருக்க வேண்டும்.)

அப்பனே, நிச்சயம், துன்பத்தோடே  அப்பனே, மனிதன் கடந்து சென்று கொண்டே இருக்கின்றான் அப்பனே.  நிச்சயம், எங்களை அழைத்தும் துன்பங்களோடு, நீங்கள் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  அதனால்தான், அதை விலக்குவதற்கே  அப்பனே, அதை நீக்குவதற்கே , சித்தர்கள், ஐயோ, நிச்சயம், தன்னில் கூட, கலியுகத்தில், இறைவனை நம்பிக் கொண்டிருக்கின்றானே. உண்மை எது என்று தெரியவில்லையே என்று நிச்சயம், சித்தர்கள், உங்களுக்காக, எழும்பி வந்து, செப்பிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே.

அப்பனே, பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. எத்தனை ஆட்கள் ஈசனை நம்பிக் கொண்டிருக்கின்றார்கள் அண்ணாமலையில் என்பேன் அப்பனே. ஆனாலும், அப்பனே, துன்பத்தோடே  வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே, 

அப்பனே, உண்மை நிலையில் தெரியவில்லையே அப்பனே

நிச்சயம், தன்னில் கூட அப்பனே, நிச்சயம், அந்த சாபத்தை நீக்க வேண்டும். 

“”””” அந்த சாபத்தை, எங்களால் மட்டுமே நீக்க முடியும் என்பேன்  அப்பனே. “””””

அதை வந்து, அதை வந்து, எங்களால் மட்டுமாய், நீக்க முடியும் என்றால், வந்து, 

அப்பனே, ஈசனை பாடி, துதித்தும், ஈசனை சந்தோஷமும் படுத்திக்கொண்டே. ஆனாலும் அப்பனே ஈசன் கூட, அமைதியாகத்தான் இருக்கின்றான். 

அப்பனே, நிச்சயம், தன்னில் கூட இருந்தால், அப்பனே, ஈசன் உங்களுக்கு கொடுக்க ஆரம்பித்தால், அப்பனே, அவ்வளவு தரித்திரங்கள் செய்திருக்கின்றான் மனிதன். அத்தனை ஆன்மாக்களும், இறைவா, நீ இறைவனா என்று, ஈசனை கேட்டுவிடும் . 
(மனிதன் துன்பப்படுத்திய அனைத்து உயிர்களும் — ஆடு, மாடு, கோழி, எறும்பு, பூச்சிகள் போன்ற ஆன்மாக்கள் — இறைவனிடம் நியாயம் கேட்கின்றன. அவன் பாவம் செய்திருக்கிறான், ஆனால் ஏன் அவனுக்கு நல்லது செய்கிறாய் என்று இறைவனிடம் சண்டையிடுகின்றன. இது கர்மத்தின் விளைவாக, ஒவ்வொரு உயிரின் வேதனையும் இறைவனிடம் உரிமையுடன் பேசி உங்களுக்கு அருள்கள் கிடைப்பதை தடுக்கும்)

ஏனென்றால் , நிச்சயம், தன்னில் கூட, உங்களுக்கே  ஒருவன் கெட்டதை செய்கின்றான். நிச்சயம் ஆனால் மற்றவர்கள் அவனுக்கு நல்லது செய்தால், உங்களுக்கு என்ன கோபம் வரும், நீங்களே தெரிவியுங்கள் ?

அப்பனே, நிச்சயம், ஒவ்வொன்றாக சொல்லுகின்ற பொழுது, சிலவற்றை யான் சொன்னேன். அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால், அது மட்டும் இல்லாமல், மற்ற சித்தர்களும் செப்புவார்கள். அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால், அப்பனே, நிச்சயம், சிறிது சிறிதாக பாவத்தை குறைத்து, புண்ணியங்கள்.
(உங்கள் புண்ணியங்கள் உங்களுக்கு கிடைக்கும்)

அப்பனே, அதாவது, அப்பனே, நிச்சயம், உங்கள் புண்ணியங்கள் எல்லாம், அப்பனே, தேங்கி கிடக்கின்றது என்பேன்  அப்பனே.

அதைத்தான், அப்பனே, நிச்சயம், இதை பல வாக்குகளிலும் எடுத்துரைத்து விட்டேன். அப்பனே. அதையெல்லாம், அப்பனே, நீங்கள், நிச்சயம், அனுபவிப்பதே இல்லை என்பேன்  அப்பனே. 

பாவத்தை மட்டும் அனுபவித்து, அப்பனே, புண்ணியங்கள், அப்படியே விட்டுவிட்டு சென்றிடுவீர்கள் என்பேன்  அப்பனே. ஆனாலும், இதற்கும் ஒரு பிறவி எடுத்தாக வேண்டும் என்பேன்  அப்பனே.

அதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இப்பிறப்பிலே, அப்பனே, அப்பனே  புண்ணியத்தை அனுபவியுங்கள் நீங்கள்.

அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம், அப்பனே, புண்ணியங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பேன்  அப்பனே.  அப்பொழுதுதான் எங்களாலும் உரைக்க முடியும். அப்பா. இதனால் இங்கு வந்திருப்பவர்களும் புண்ணிய சில பெற்றிருக்கின்றார்கள். அப்பா. அதனால்தான் அப்பனே, யாங்களும் வந்து வாக்குகள் சொல்ல முடியும் என்பேன்  அப்பனே.

இதனால் பாவங்கள், புண்ணியங்கள் அப்பனே, நிச்சயம், புண்ணியக்காரர்கள் வந்தாலும், பாவங்கள் அப்படியே நின்று விடும் என்பேன்  அப்பனே.

—------------------------------------------------------------------------------------------------------

(வாக்கு உரைக்க முடிவதற்கான தகுதி, அவர் பெற்ற புண்ணியத்தின் அடிப்படையில் அமைகிறது. இங்கு வந்திருப்பவர்கள் சிலர் புண்ணியம் பெற்றவர்கள் என்பதால், அவர்கள் பெற்ற புண்னனிய பலத்தினால் வாக்கு உரைக்க முடிகிறது. ஆனால், புண்ணிய ஆன்மாக்கள் இருந்தாலும், பாவங்கள் அப்படியே நின்று விடும். புண்ணியம் அதிகமாக இருந்தாலும், சில பாவங்கள் வராமல், நின்று விடும் வாய்ப்பு உள்ளது. இது பாவம்–புண்ணியம் என்ற இரு சக்திகளின் ஆழமான ஆன்மீக விளக்கமாகும். அவ் புண்ணிய ஆத்மாக்களால் பலமான வாக்குகள் அனைவர்க்கும் கிடைக்கின்றது என்பது அடியவர்கள் அறிய வேண்டும்)

—------------------------------------------------------------------------------------------------------

குருநாதர் :-
நிச்சயம், பின் மனிதர்களிடத்தில் அவ்  பாவம் இருந்தால், பின் நிச்சயம் வாக்குகள் செப்பாதே என்று பிரம்மனும் தடுப்பான். 

நிச்சயம், அதனாலதான் புண்ணியம் நிறைந்த பகுதியில் நாங்கள், நிச்சயம், தன்னில் 
கூட அனைவரையும் வரவேற்று இருக்கின்றோம். 

அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இதனால், அப்பனே, புண்ணியம் இல்லாத பகுதியில் வாக்குகள் செப்பினால், அப்பனே, மனிதனுக்கு பாவங்கள் ஏறிக்கொண்டே போகும். 

அப்பனே, ஈசன், அப்பனே, இருப்பிடமாக இவ் அண்ணாமலை அப்பனே,  நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவ் பாவமும், அப்பனே, சேராதப்பா. 

அதனால்தான், அனைவரும் வரவேற்று இருக்கின்றேன் அப்பனே.  (இங்கு  ஒரு ஒரு இடமும்) அப்பனே, நிச்சயம், புண்ணியங்கள், அப்பனே, நிறைந்து காணப்படும் அப்பனே. பாவங்கள் அண்டாதப்பா. ஆனால், மனிதனுக்கு தெரிவதே இல்லை என்பேன்  அப்பனே. 

நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இல்லத்திலிருந்தும், அப்பனே, எதையோ செய்து, பாவத்தை சம்பாதிக்கொண்டே இருக்கின்றான். 
அப்பனே பின் பாவம் மட்டும் வருமப்பா.


( மனிதன் புண்ணியம் இல்லாத இடத்தில் ஜோதிடம் , நாடி, அருள் வாக்கு  போன்ற வாக்கு உரைத்தால், அதனால் பாவங்கள் அதிகரிக்கலாம். ஆனால் அண்ணாமலை போன்ற தெய்வீக இடங்களில் வாக்கு உரைத்தால் பாவங்கள் சேராது. அங்கு புண்ணியம் நிறைந்திருக்கும், பாவங்கள் அண்டாது. அதனால் அனைவரும் அங்கு வரவேற்கப்படுகிறார்கள். மனிதனுக்கு இது தெரியாமல், இல்லத்தில் இருந்து பல செயல்கள் மூலம் பாவங்களைச் சம்பாதிக்கிறான். இறுதியில், அவர்களுக்கு பாவம் மட்டுமே சேரும். )

குருநாதர் :-

அப்பனே  சித்தர்கள் யாருக்கு மட்டுமே உணர்ந்தவர்கள் இதை.

அப்பனே, நிச்சயம், பல பேர் அப்பனே, இப்படி இருப்பவர்கள் எல்லாம் நோய் நொடிகள் வந்துவிடும்  அப்பா, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட பைத்தியம் போகும் நிலை. அப்பனே, இன்னும், அப்பனே, இழப்பு பலமாக வந்துவிடும் அப்பா.  அப்பனே, பின்பு இறைவனிடம் நிச்சயம் கேட்பான்,  நான் நல்லதுதான் சொன்னேன் என்று (எனக்கு ஏன் இந்த நிலை என்று இறைவனை கேள்வி கேட்பார்கள்) . 

(அருள் நிறைந்த புண்ணிய பூமியாக குருநாதர் தேர்ந்தெடுத்த இந்த இடத்தில், அனைவரையும் அழைத்து, தன்னுடைய வாக்குகளை பகிர்ந்து வருகிறார்)

அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, நீங்கள் மற்றவர்கள் சொல்லி சொல்லி, அப்பனே, உங்கள் மூளையும், அப்பனே, அதாவது, சலவை ஆகிவிட்டீர்கள் அப்பனே.

இதனால், பின் அறிவின் வழியாகவே (அறிவியல் பூர்வமாகவே), நான் எடுத்து எடுத்துரைக்க போகின்றேன். வருங்காலத்தில், அப்பொழுதுதான், சில விஷயங்கள், அப்பனே, நீங்களே குழப்பிக்கொள்வீர்கள். 

அப்பனே, முதலில் வருவது, அப்பனே, ராகுவும், கேதுவும், சனியுமே  அப்பனே. நிச்சயம், மனித உடம்பில், அப்பனே, முக்கிரகங்களின் கூட,  கதிர்வீச்சுகள், இக்கலியுகத்தில், அதிகம் இருக்கின்றதப்பா. அதை முதலில், பின் வெளியே எடுத்து, அதாவது, தூர வீச வேண்டும் என்பேன் அப்பனே. எப்படி வீசுவது உங்களுக்கு தெரியவில்லையே? அதையும் வருங்காலத்தில், யான் செப்புவேன்.

—---------------------------------------------------------------------------------------------------------------

(மனித உடம்பில் ராகு, கேது போன்ற கிரகங்களின் கதிர்வீச்சு அதிகமாகக் குவிகிறது. இந்த கதிர்வீச்சுகள் பூமியிலும் ஜீவராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் உணவுகள் மூலம் அதை உட்கொள்ளும்போது, அந்த கதிர்வீச்சுகள் நம்முள் அதிகமாக சேருகின்றன. இது நம்முடைய நெஞ்சைத் தொட்டு, ஒரு குறியீடாக இறைவனால் பதியப்படுகிறது. அந்த குறியீட்டை உடைத்து, தீய கதிர்வீச்சுகளை நீக்கி, நல்ல கதிர்வீச்சுகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் குருநாதரால் மட்டுமே கூறப்பட முடியும்.)

—---------------------------------------------------------------------------------------------------------------


குருநாதர் :-
அப்பனே, அதனையும் யான் செப்புவேன். 
அப்பனே, பின் ராகு கதிர்வீச்சுக்கள் குறைய வேண்டும். 
அப்பனே, கேதுவின் கதிர்வீச்சுக்கள், அப்பனே, குறைய வேண்டும் என்பேன்  அப்பனே.
சனியின் பின் கதிர்வீச்சுக்கள், உடம்பில் இன்னும் குறைய வேண்டும் என்பேன்  அப்பனே.

இக்கலியுகத்தில், அதிகமாக, அப்பனே, உடம்பில் பதிந்துள்ளது என்பேன்  அப்பனே. அப்பொழுது, நிச்சயம், அப்பனே, எப்படியப்பா, நிச்சயம், தன்னில் கூட, இறைவன் கூட, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இறைவனின் கதிர்வீச்சுக்கள், இக்கதிர்வீச்சுக்கள், அதிகமாக இருந்தால், இறைவனுடைய கதிர்வீச்சுக்கள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, நம் மீது, நம் மேல் விழாதப்பா. 

அப்பனே, எதை, ஏன், எதற்கு, இன்னும், சிவபுராணத்தை பற்றி, எடுத்துரைக்க போகின்றேன் அப்பனே.  

நிச்சயம், அப்பனே  பின், மீண்டும், ஓதி வாருங்கள் ஒருமுறை.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய திருஅண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை முதல் வாக்கு நிறைவு) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. வணக்கம் ஓம் அகஸ்தியர் மாதா லோபமுத்ரா தேவி திருவடிகள் போற்றி, இந்த பதிவை வெளியிட்ட சித்தனருள் வலைத்தள குழுவினருக்கு நன்றி. குரு அருளால் இறை அருளால் திருவண்ணாமலை கூட்டு பிரார்த்தனை குழு ஒருங்கிணைப்பாளர்கள் இயன்றவரை மிக சிறப்பாக வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கும், உலக நன்மைக்காக இதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தவர்களுக்கும் எல்லா நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். நன்றி

    ReplyDelete