​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 31 October 2025

சித்தன் அருள் - 1975 - அன்புடன் அகத்தியர் - மதுரையில் நடந்த கூட்டு பிரார்த்தனையின் விளக்கம்!










வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!

சமீபத்தில் மதுரையில் நடந்த கூட்டு பிரார்த்தனையில்

சித்தன் அருள் பதிவு எண்

சித்தன் அருள் - 1960 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு - 1

இடைக்காடர் சித்தர் மதுரையில் ஆலயத்தில் செய்ய வேண்டிய சில பரிகார காரியங்களை குறிப்பிட்டார் இதை பொதுவாக்கில் வெளியிட்ட பொழுது அடியவர்கள் சிலர் விளக்கம் கேட்டிருந்தனர் அதற்கான விளக்கம் இது. 

எவை என்று அறிய பின் இவ்வாறாகவே பின் அதாவது பிரம்மன் வந்திருக்கின்றான் என்று கணபதிக்கு தெரிய. கணபதியும் குழந்தை ரூபத்தில் ஓடி வந்தான். பின் எதை என்று அறிய பிரம்மனும் பார்த்து, இதுவும் ஒரு தலைவலிடா என்று. 

எது என்று புரிய. இதனால்தான் முதலில் வேண்டிக்கொள்ளுகின்ற பொழுது நின்றிருப்பானே, நின்றிருப்பானே. பிள்ளையோன் ( முதலில்  முக்குறுணி விநாயகர்,  விபூதி விநாயகர் - தரிசனம்.)

இவ்விடம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு வாசலில் உள்ளே செல்லும் பொழுது இடதுபுறத்தில் தூணில் கணபதி நின்ற கோலத்தில்  இருப்பார் .

1. வடக்கு கோபுரம் வாயிலாக உள்ளேன் நுழைந்தவுடன் வடக்கு ஆடி வீதி அதில் இடது புறமாக அரசமரம் வேப்ப மரத்திற்கு கீழாக ஒரு விநாயகர் நின்ற விநாயகர் இருக்கிறார்.

2. சொக்கநாதர் சன்னதி நுழையும் பொழுது இடது புறமாக அணுக்கை விநாயகர் நின்ற விநாயகராக இருக்கிறார்.

3. மீனாட்சி அம்மன் சன்னதி முன்புறம் பொற்றாமரை க் குளத்திற்கு வெளிப்பக்கமாக நின்ற விநாயகர் இருக்கிறார்.

விநாயகர் குரிய ஆறுபடை திருத்தலங்களில் நான்காம் படைவீடு மதுரையில் குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைந்திருக்கும் சித்தி விநாயகர் திருத்தலம் என்பது கூடுதல் தகவல்.

இடைக்காடர் வாக்கு :- இவை அறிவித்து எதை புரிய, எதை என்று அறிய அழகாக மீனாட்சி அறிந்தும் எவை என்று அறிய பின் (சந்தனம் ) அரைத்து எதை என்று அவ்விபூதியை நிச்சயம் எதை என்று அறிய இல்லத்திலும் வைத்து பூஜைகள் செய்து அனுதினமும் பின் நீரும்,  அறிந்தும் இவை என்று பின் ருத்திராட்சம் நீரில் இட்டு அருந்தி வர சிறப்பாகும். சில சில நோய்களும் பின் இடத்தையும் மாற்றலாம். பொறுமையாக . இவைதன் அதிர்ஷ்டம் வாய்க்கும் .

இவ்விடம்.

மீனாட்சி அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் கொடி மரத்தருகே பொற்றாமரை குளம் அருகே மதுரையில் பிறந்த மூர்த்தி நாயனார் தனது கைகளையே சந்தனமாக தன்னுடைய திருகரங்களை அரைத்த சந்தனம் அரைக்கும் கல் இருக்கும் இடத்தில் 

மதுரையில் திருஞானசம்பந்தர் பாடி திருவருள் செய்த தேவாரப் பதிகம் 

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர்வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.

திருஞானசம்பந்தர்

இந்தப் பதிகத்தின் பலகை அமைந்திருக்கும் இடத்தில் திருநீற்றுக் கல் ஒன்று உள்ளது. இங்கிருந்து விபூதியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று வைத்து வழிபடலாம். இந்த விபூதியில் நேரில் கலந்து ருத்ராட்சமும் இட்டு ஊற வைத்து அருந்தி வர இடைக்காடர் சித்தர் கூறியிருக்கின்றார். முழு வாக்கும் மேற்கூறிய பதிவு எண்ணில் சென்று படிக்கவும்.

குருநாதர் அகத்தியர் பெருமான் ஏற்கனவே மதுரை சத்சங்கத்தில் தெரிவித்தபடி வில்வம் ருத்ராட்சம் வேப்பிலை துளசி அருகம்புல் இவற்றை நீரில் இட்டு விபூதியையும் கலந்து அதிகாலையில் அருந்தி வரலாம்.

குருநாதர் அகத்தியர் பெருமான் சொன்னது மற்றும் இடைக்காடர் சொன்னதை அடியவர்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம்!!


பிருகு மகரிஷி... தனது வாக்கில் 
சித்தன் அருள் 1948 ல்

அனைத்து சித்தர்களும் வெவ்வேறு கருத்துக்களாக வருகின்ற பொழுது அனைத்திலும் கடைசியில் பார்த்தால் ஒன்றே...

ஆனாலும் நீங்கள் தான் குழப்பிக் கொள்வீர்கள்.. பின் அங்கு அப்படி இங்கு இப்படி... எங்கு ஏது எவை என்று.. அறிய!!!

(அனைத்து சித்தர்களின் வாக்குகளும் ஒரே கருத்தை ஒரே உபதேசத்தை வலியுறுத்தும்)

குழப்பங்கள் அறிந்தும் புரிந்தும் அறிய... சரியான வழியிலே நிச்சயம் அகத்தியன் சொல்லியிருந்தாலும்.. அதைக் கூட தட்டிக் கழிக்கும்... பாவங்கள்!!

(குருநாதர் அகத்தியப் பெருமான் வழிமுறைகளை சொன்னாலும் அதை புரிந்து கொள்வதற்கும் செய்வதற்கும் தடுக்க பார்க்கும் மனிதருடைய பாவங்கள்)

அதாவது குருநாதர் அகத்திய பெருமாள் போகர் பெருமான் இடைக்காடர் பெருமான் என சித்தர்கள் அனைவரும் பல்வேறு பரிகாரங்களை சொன்னாலும் அவை அனைத்தும் மனித குலத்திற்கு நன்மைக்கு!!

அனைத்தும் ஒன்றுதான் நீரில் இட்டு அருந்தி வரும் இந்த வழிமுறை ஆயினும் சரி சரவண தீபம் கோலம் நவகிரக நவதானிய தீப கோலம் என சித்தர்கள் அனைவரும் உரைப்பது ஒன்றுதான் அனைத்தும் மனித குலத்தின் நன்மைக்காக.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் அடியவர்கள் விபூதி தொட்டி விநாயகர் எனும் இடத்திலும் விபூதியை சேகரித்துக் கொள்ளலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete