​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 15 October 2025

சித்தன் அருள் - 1953 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு - 13!







அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 13 ( நிறைவு பகுதி) 

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.


(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

01.சித்தன் அருள் - 1903 - பகுதி 1 
02.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
03.சித்தன் அருள் - 1911 - பகுதி 3
04.சித்தன் அருள் - 1914 - பகுதி 4
05.சித்தன் அருள் - 1915 - பகுதி 5
06.சித்தன் அருள் - 1916 - பகுதி 6
07.சித்தன் அருள் - 1917 - பகுதி 7
08.சித்தன் அருள் - 1918 - பகுதி 8
09.சித்தன் அருள் - 1923 - பகுதி 9
10.சித்தன் அருள் - 1931 - பகுதி 10
11.சித்தன் அருள் - 1932 - பகுதி 11
12.சித்தன் அருள் - 1950 - பகுதி 12)

(இரண்டாம் நாள் 23.06.2025 அன்று காலையில் உரைத்த வாக்கு்) 

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். 
…….

குருநாதர் :- தந்தையை தேடி வந்துவிட்டீர்கள். ஆனால் தந்தை செய்ய மாட்டானா என்ன ?

குருநாதர் :- 
நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இதனால் நான் சொல்வதை கேட்டால், நிச்சயம் பின் இறைவன் உங்கள் இல்லத்திற்கே வந்து, நிச்சயம் அனைத்தும் செய்து வைப்பான். கவலைகள் விடுங்கள்.


குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- 
ரொம்ப எளிமையான நம்ம பிரச்சனையிலிருந்து வெளிய வருவது, வெளிய வந்துருவது எவ்வளவு ஒரு எளிதான ஒரு பயங்கரமா சூட்சுமமான விஷயம். உண்மையிலேயே சொல்றேன், ஒரு சித்தர் வந்து நமக்கு வந்து ஒரு குருநாதர் வந்து இந்த அளவுக்கு வந்து வாக்குகள் வந்து இவ்வளவு எளிதா நம்ம பிரச்சனை எல்லாம் தீர்க்கிறது. வந்து வழி சொல்றது வந்து உண்மையிலேயே சொல்றேன், இது வந்து யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு. நம்ம எல்லாம் வந்து இன்னைக்கு வந்து இந்த சத்சங்கத்துல கூடிக்கொண்டு, அவருடைய அந்த பேச்சை கேட்கிறதே ஒரு பெரிய புண்ணியம். அவர் குருநாதர், அவர் செஞ்சதை ஃபாலோ பண்ணோம்னா இன்னும் ரொம்ப சந்தோஷம்.


குருநாதர் :- 
இன்னும் உங்களுக்கு ஆற்றலை தருகிற, ஆற்றல் தருகிற ஒரு உபாயம் சொல்கின்றேன். அனுதினமும் இரவில் உறங்குவதற்கு முன்பே,  நிச்சயம் அழகாக  அருந்தும் நீரையும் கூட இட்டு, துளசி இலைகளையும் கூட, சில வேம்பு இலைகளையும் கூட, வில்வ இலைகளையும் கூட, நிச்சயம் அதனுடன் ருத்ராட்சம் கூட, அதனுடன்  பசுஞ்சாணம்  கூட இட்டு, பின் சரியாகவே அதிகாலையிலே,  வெறும் வயிற்றிலே அருந்தி வர, நிச்சயம் உங்களுக்கு சில ஆற்றல்கள் கிடைக்கும். அனைவருக்குமே இதை தெரிவியிங்கள். இதனால் அவ் ஆற்றலை வைத்துக்கொண்டு, இன்னும் யான்  சொல்கின்றேன், அவ் ஆற்றலை வைத்துவிட்டால், அதாவது அனைவருக்குமே ஒரு ஆற்றலைத் தர வேண்டும். அவ் ஆற்றலை தந்தால்தான், நிச்சயம் தன்னில் கூட ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அப்பொழுதுதான், பின் இவ்வாற்றல் இறைவனிடம் ஆற்றல் சமமாகின்ற பொழுது, வெற்றிகள் கிடைக்கும். இதை நிச்சயம் செய்து கொண்டே இருங்கள். இவ்வாறாக, பின் பொதுவாகவே சில  காலங்கள் (செய்து) வந்து கொண்டே இருக்கின்ற பொழுது, உங்களை யான் சுலபமாக பக்குவப்படுத்தி விடுவேன். 

சுவடி ஓதும் மைந்தன்:-
ஜெனரலா சொல்றாரு, ஐயா, எல்லாரும் கேட்டுக்கோங்க. எல்லா பரிகாரமும் இதுலதான் உங்களுக்கு.

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

ஐயா, அதாவது குருநாதர்  இறை ஆற்றலை, அந்த இறைவனை  ஈர்ப்பதற்கு ஒரு எளிதான,  உங்களுக்கு அந்த நல்ல ஆற்றல், உங்களை ஈக்குறதுக்கே ஆற்றல் சொல்றாரு.

நம்ம பிரச்சனை எல்லாம் தீர்றதுக்கு,  ஒரு எளிதான வழி சொல்லி இருக்காரு. தினமும் இரவு படுக்க போறதுக்கு முன்னாடி, குடி தண்ணீர் சரிங்களா? வீட்ல எல்லாருக்கும் சேர்க்கிற மாதிரி குடி தண்ணீர் எடுத்து, அதுல 

(1) ருத்ராட்சம்
(2) வில்வம், 
(3) துளசி, 
(4) வேப்பிலை, 
(5) பசுஞ்சாணம்,  (200) 
(6) அருகம்புல்

இதை எல்லாம் நீர் எல்லாம் இட்டு, நைட் கூட ஊறட்டும். காலையில எந்திரிச்சு, அந்த நீரை வந்து எல்லா பேரும் அருந்துங்க. 


சுவடி ஓதும் மைந்தன்:- இதன் மூலம் நீங்களே உங்களுடைய ஆற்றல் அதிகமாகும் பொழுது,  உங்களை சில கஷ்டங்கள் நெருங்காது. அந்த ஆற்றல் உங்களை அதிகரிக்கும் போது, இறையாற்றலும் வந்து அட்டாச் ஆகும்.

குருநாதர் :- அறிந்தும் எவ்வாறாக இறைவனை வணங்கினாலும், சில நபர்களுக்கு ஒன்றுமே நிச்சயம்  நடப்பதில்லை. ஏனென்றால் இறைவனின் ஆற்றல் பன்மடங்கானது. ஆனால் அதை நிச்சயம் சிறு ஒரு பங்காவது உங்களிடத்தில் இருந்தால்தான், நிச்சயம் அவை தன்  சக்திகள் உங்களை நிச்சயம் ஈர்க்கும். ஈர்ப்பதற்கு (வழி) சொல்லிவிட்டேன்.

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- 

அதாவது அந்த இறை ஆற்றலை  ஈர்க்கிறதுக்கு வழி சொல்லிட்டாங்க. இறையாற்றல் நம்மள சுத்தி பரவி கிடக்கு. இறைவன் எனப்படுவது யாரு? மீன்காந்த அலைகள், எங்கும் பரவி இருக்கக்கூடிய சூரிய ஒளியிலிருந்து வரக்கூடிய அந்த மீன்காந்த அலைகள் தான் இறையாற்றல். அது எல்லாம் பிரபஞ்சம் எல்லாம் பரவி கிடக்கு. ஆனா அதை ஈர்க்கிறதுக்குரிய வழிமுறைகள் நமக்கு தெரியல. அதுல ஒரு அருமையான வழிமுறையை குருநாதர் சொல்லித் தராரு. சரிங்களா? அருகம்புல், அருகம்புல் வந்து என்ன? அது வந்து காந்த சக்தி மிகுந்தது. வேப்ப இலை, வெப்ப சக்தி மிகுந்தது. சரிங்களா? துளசி, இரண்டும் நிறைந்தது. சரிங்களா? அதுக்கப்புறம் பசுஞ்சாணம், காந்த ஆற்றல். சரிங்களா? ருத்ராட்சம், காந்த ஆற்றல். சரிங்களா? இந்த மூலிகைகள் அனைத்தும், ஆறு மூலிகையும், காந்த வெப்ப ஆற்றல்கள் மிகுந்த ஒரு உணவு பொருள். இந்த பொருளை நாம நீர்ல இட்டு, அந்த நீர் மீன்காந்த அலைகளை அதிகமாய் ஈர்க்கும். அப்போ இந்த பொருளை அதுல இட்டு இருக்கிறப்போ, அதிகப்படியான அந்த மீன்காந்த இறையாற்றல் ஈர்த்து, அதை நைட் பூரா எட்டு மணி நேரம் வச்சப்போ, அது குடி தண்ணீர் தீர்த்தம் ஆயிடும். காசி தண்ணிக்கு ஈக்குவலான ஒரு தீர்த்தமாகி, அதை காலையில எந்திரிச்சு வெறும் வயித்துல அருந்துறப்போ, அந்த இறையாற்றல் இந்த உடம்பை அதிகப்படியா ஈர்க்கும். சரிங்களா? ஆனா மாமிசம் நிச்சயம் சாப்பிடக்கூடாது. முட்டையா இருந்தாலும் சரி, மாமிசத்தை விடணும். கட்டாயம் விட்டாதான் இந்த இறை அனுபவம் ஈர்க்க முடியும். இதெல்லாம் வேலை செய்யணும்.


குருநாதர் :- 
அப்பனே, அது மட்டுமில்லாமல் காகத்திற்கு அனைவருமே நிச்சயம் தன்னில் கூட உணவே இடுகின்றார்கள். அப்பனே ஏனென்றால் காகத்திற்குத் தெரியும் அப்பா. 

“””””அப்பனே, நிச்சயம் பூகங்கள் எப்பொழுது வருகின்றது என்பது அப்பனே. ஆனால் மனிதன் அதை அறிவதே இல்லை அப்பா.”””””

ஆனாலும், அப்பனே நிச்சயம்  விநாயகப் பெருமானுக்கு அனுதினமும் அப்பனே, ஏதாவது பதீபம் ஏற்றி,

“”””ஓம் கங் கணபதே நம”””” 

என்று சொல்லிக்கொண்டே வருந்தால் அப்பனே, நிச்சயம் அடுத்தடுத்து மனிதனுக்கு என்ன ஆபத்துக்கள் வரலாம். அதாவது, உங்களுக்கு என்ன ஆபத்துக்கள் வருது என்று அப்பனே, நீங்களே உணர்ந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

அதனால், அப்பனே, சொல்லிவிடுகின்றேன். நீங்கள் உங்களையே வெல்ல வேண்டும் முதலில் என்பேன் அப்பனே. அப்பொழுதுதான் அப்பனே,  மற்றவர்களிடம் நீங்கள் நிச்சயம் வெற்றி பெற செய்யலாம் என்பேன். அப்பனே, உங்களையே நீங்கள் வெல்ல முடியவில்லை என்றால், அடுத்தவனை எப்படி அப்பா வழி நடத்துவது?

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் ராகுவானவன் நேற்றைய புரிதலில் சொல்லிவிட்டேன். புவியை, நெருங்குவதால் கதிர்வீச்சுக்கள் அதிகமாக இருக்கும் அப்பா. அப்பனே அவ் கதிர்வீச்சுக்கள் தடுப்பதற்கு ஒரே வழித்தான் அப்பா, 
அருகம்புல் அப்பனே. 

“””””அனுதினமும் (அருகம்புல்) உட்கொள்ள , நிச்சயம் எதிரொளிக்கும் திறன் உடம்பு பெறும் அப்பா. இதனால் நோய்கள் வருவதை தடுக்கலாம் அப்பா.””””””

சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் அடுத்து வருது, அதாவது. ராகு வந்து பூமியை இடிக்கிறார்.

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- 

அதாவது கலியுகத்துல நோய்கள் வரும்ன்றார். ராகு தேவனுடைய தாக்கம் கலியுகத்துல அதிகமா இருக்கும். ஏன்னா இந்த (ராகு) கிரகம்  பூமிக்கு கலியுகத்துல அதிகமா பூமிக்கு அருகில் நெருங்கி வரக்கூடிய கிரகம். அப்படிங்கிறப்போ அந்த கதிர்வீச்சு பூமியில அதிகமா இருக்கும். ஏன் அதிகமா இருக்குன்னு கேட்டீங்கன்னா, கலியுகத்துல மக்களுடைய எண்ண அளவுல தீமையாயிருச்சு. யாரும் பிறரை பத்தி யோசிக்கிறது கிடையாது. தான் எனக்கு நமக்கு இப்படி வாழ்ந்துட்டு பிறர் உயிரை கொன்னு வாழ்றப்போ, நம்ம உடல் உறுதால பிறர் உயிரை கொன்னு பிறரை துன்புறுத்தி வாழக்கூடிய மனநிலைமை கொண்ட காரணம் நம்ம. ஏன் அந்த எண்ணங்கள் வருதுன்னு கேட்டீங்கன்னா, இந்த கிரகங்கள் தாக்கத்தினால வருது. அப்போ நீங்க முதல் நல்லவங்களா மாறனும், உங்க எண்ண அலைகள் மாறனும், எண்ணங்கள் மாறனும்னா, குருநாதர் சொல்ற மாதிரி அதிகாலை எழுந்து இந்த இந்த தீர்த்தத்தை குடிச்சிட்டு, அதுக்கப்புறம் அருகம்புல்ல வெறும் வாயத்துல சாப்பிட்டு, அதுக்கப்புறம் விநாயகப் பெருமானை குளிக்கிறப்போ, அவருடைய பாடல்களை படிக்கிறப்போ, ஆட்டோமேட்டிக்கா அந்த ராகு கேதுக்களால் வரக்கூடிய அந்த கதிர் அலைகள். ஏன்னா சூரியன் இந்த அந்த சூரியனுடைய கதிர்கள்ல இருந்து ராகு அலை கேதுகளையும் சேர்ந்து கலந்து வருது. அது அதிகப்படியா கலந்து வருது. கலியுகத்துல அதை தடுக்குறதுக்கு இந்த உடம்பு வந்து பக்குவப்படுத்தணும். அதுக்குரிய ஒரு வழிமுறை தான் குருநாதர் வருதுன்னு சொல்லி இருக்காரு.


குருநாதர் :- 
அப்பனே, அது மட்டுமில்லாமல் ராகுவானவன் புவியை நெருங்குவதால், மறுபக்கத்தில் அப்பனே, கேதுவானவனும் நெருங்குவான் அப்பா. இதனால், அப்பனே, நிச்சயம் அனைவருக்குமே மனக்குழப்பங்கள் அதிகமாகி அப்பனே, பின் இறை நம்பிக்கையே குறைவாகும் என்பேன் அப்பனே. 

குருநாதர்:- அப்பனே, இதனால்தான் அப்பனே, நிச்சயம் என் பக்தர்கள், அப்பனே, பின் அதாவது மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். அப்பனே, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- முதல் வகுப்புல தேர்ச்சி பெறணும். கீழாக எல்லாம் இருக்கக்கூடாது. மத்தவங்களுக்கு சொல்லும் நிலைமையில் நீங்கள் இருக்கணும். மத்தவங்களை வழி நடத்துற அளவிலே நீங்க இருக்கணும். உங்களுக்கு வந்து எனக்கே கஷ்டம். அதெல்லாம் சொல்லக்கூடாதுன்றாரு அகத்தியர். 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அது மட்டுமில்லாமல் இவை இரண்டும் அப்பனே மிகப்பெரிய கிரகங்கள் அப்பா. இவை தான் பூமியை ஒட்டிக் கொள்ளுகின்ற பொழுது, பூமி அப்படியே நின்று விடும் அப்பனே. என்ன ஆகும் தெரியுமா அப்பா? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- 

பூமி வந்து ஒரு சுழற்சி வேகத்துல சுத்துது. ராகு கேதுக்கள் ரெண்டும் வாயு கிரகங்கள். கண்ணுக்கு தெரியாது. இது வந்து பூமியை நெருங்கி, அதுவும் சுத்துறப்போ, இது ரெண்டுடைய சுழற்சி வேகத்துல பூமியோட சுழற்சியோட வேகத்தை கட்டுப்படுத்தும்ன்றாரு. பூமியோட சுழற்சி நின்னு போச்சுன்னா என்ன ஆகும்? 


குருநாதர் :- அப்பனே, யாரும் சொல்லாத ரகசியத்தை யார் சொல்கின்றேன். பூமியை விட, அப்பனே, ராகுவும் கேதுவும் பின் பன்மடங்கு பெரியவர்கள் என்பேன் அப்பனே. 

அப்பனே, இதுவரை யாரும் பின் கண்டுபிடிக்கவில்லை அப்பா. அக்கிரகங்களை பற்றி, என் மக்களுக்கு யார் சொல்வேன் வருங்காலத்தில். 

குருநாதர் :- அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே, அதாவது சித்திரை தன்னிலிருந்து, அப்பனே, பின் ராகுவானவன் வேகம் எடுத்து புவியை நெருங்கிக் கொண்டே வருகின்றான். 

குருநாதர் :- அப்பனே அதாவது தன் வளையத்தில் சமமாகவே சூரியனும் அதாவது பின் இருந்து மற்ற கிரகங்களும் கூட சுழல்கின்ற பொழுது, அவை  வேகமாக  வருகின்ற பொழுது, (ராகு,கேது) இவை சுழுகின்ற பொழுது, இடையில் கூட ஏதாவது அப்பனே ஒன்றில் பின் நிச்சயம் உராயுந்தால், அவ்வளவுதான் அப்பா. நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- 

பாருங்க. அதாவது இந்த கிரகம் வந்து உன் பக்கத்துல வர்றப்போ, அந்த ஏதாவது உராயுதல் ஏற்பட்டுச்சுன்னா தாங்காது. அவ்வளவுதான். அந்த (பூமித் தட்டு) பிளேட் வந்து நம்ம பிளேட்ல நகர்ந்து போச்சுன்னு சொல்லிட்டு பூகம்பம் வருது. அதனால சுனாமி வருது. இதே போல இது நடந்துச்சு. அப்படின்னா இந்த பூமி அழிஞ்சு போகும் அப்படின்றார். 


குருநாதர் :- அப்பனே, இதனால் ஒரு பக்கத்திலிருந்து ராகுவும்,  மற்றொரு பக்கத்திலிருந்து கேதுவும் பூமியை பிடிக்க அப்பனே வேகமாக. இதனால் இதை இரண்டும் அழுத்திக் கொண்டால் என்னவாகும்? 

குருநாதர் :- அப்பனே, இதனால்தான் அப்பனே உலகத்தை அப்பனே காக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்பொழுது உங்களுக்கு உங்களுக்கு திருமணம் ஆகவில்லையே, வேலை கிடைக்கவில்லையே என்ற இவை பெரியதா? அனைவரையும் காப்பது பெரியதா அப்பா?

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- பாருங்க, இது சிரிக்கக்கூடிய விஷயம். உண்மையிலேயே சிந்தனை செய்யக்கூடிய விஷயம். எவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கு! அடுத்த செகண்ட் நம்ம எல்லாம் உயிரோடு இருப்போமான்னு தெரியாது. நைட் முட்டுச்சுன்னா காலை யாரும் எந்திரிக்க மாட்டான். ஆனா நம்ம என்ன பண்றோம்? அடுத்த வருஷம், அடுத்த மாசம், பத்து வருஷம், 15 வருஷத்துக்கு நமக்கு என்னென்ன வேணும்ன்றத பத்தி பேசிட்டு இருக்கிறோம். நாளைக்கு உயிரோடு இருக்கியாப்பா? அதை முதல் பாரு. அதுக்குரிய விஷயங்களை செய் அப்படிங்கிறார். 


குருநாதர் :- அப்பனே, இதனால்தான் அப்பனே, நிச்சயம் சித்தர்கள் அதாவது பின் புவிதன்னிற்கு வந்து, அப்பனே, பின் மக்கள் பாவம்.  மூட நம்பிக்கையில் ஒழிந்து கொள்வார்கள் என்பதற்கு ஒவ்வொரு சித்தனைம் அப்பனை மக்களை காப்பாற்றிக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பா. 

குருநாதர் :- அப்பனே, இங்கு கெட்டவனும் நல்லவனும் என்பவன் யாரும் இல்லையப்பா. ஆனால் தெரியாமல் அப்பனே, பின் நடந்து கொண்டிருக்கிறது. அவன் தனக்கும் பாவமன்னிப்புகள் கொடுத்து, அப்பனே, பின் சரி செய்து கொண்டுதான் இருக்கின்றோம். அப்பனே, எங்களுக்கு அனைத்தும் ஒன்றுதான். 

குருநாதர் :- 
அது மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட இரு குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால் ஒரு குழந்தை நிச்சயம் உங்களுக்கு பிடித்தால் போல். ஆனால்   மறுகுழந்தையோ என்னென்னவோ தவறுகள் செய்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் மீண்டும் மறுகுழந்தையை பின் விட்டுவிடுவீர்களா என்ன???? எங்கே சென்றுவிடு என்று சொல்லிவிடுகின்றீர்களா என்ன ???

நிச்சயம் பின் அழுதாவது இப்படி இரு. இப்படி இருடா கண்ணா என்றெல்லாம் பின் கொஞ்சிக் கொஞ்சி, நிச்சயம் மாற்றி விடுவீர்கள் அல்லவா? அதே போலத்தான் நாங்களும்.

குருநாதர் :-  இதனால், நிச்சயம் தன்னில் கூட கவலைகள் இல்லை. இதனால் வெற்றிகள் மனிதனுக்கு உண்டு. ஆனாலும் மனிதன் தன்னைத்தானே அறிவதில்லையே. அதனால்தான் தோல்விகள்.

(……………..)

(குருநாதர் வாக்குகளை சிரத்தையுடன் , பலருக்கு பகிர்ந்து,  நல் புண்ணியச் சேவை புரியும் அனைத்து சித்தர்களின் அடியார்களுக்கான பொது வாக்கு.) 


குருநாதர் :- அப்பனே, இதனால் அப்பனே கேதுவானவன் மீண்டும் அதிவிரைவில் வருவதால், பின் எவ் திருத்தலத்திற்குச் சென்றாலும், எவ் பரிகாரத்தை நிச்சயம் செய்தாலும், அப்பனே ஒன்றும் ஆகாது அப்பா.

அப்பனே, நிச்சயம் அவை வேகமாக வருகின்ற பொழுது நல்லது சொன்னாலும் கேட்க மாட்டார்கள் அப்பா மனிதர்கள். 

இதனால் அப்பனே, நிச்சயம் எங்களுடைய ஆசி பெற்றவர்களை, பின் எப்படி பக்குவப்படுத்தி, அப்பனே, மற்றவர்களுக்கு பின் தெரிவித்து, அப்பனே, இப்படி இருந்தால் உலகத்தை வெல்லலாம் என்று, அப்பனே, நிச்சயம் எளிதாக வேண்டி (தூண்டி) விடுவோம் அப்பனே. 

(…………….) 

குருநாதர் :- அதனால், அப்பனே, உங்களுக்கு தேவையானதை யான் நிச்சயம் தருவேன் அப்பனே. ஏனென்றால் நீங்கள் பின் என் அருகிலே இருக்கின்றீர்கள். 

இதனால் மீண்டும் மீண்டும் இப்படித்தான். நிச்சயம் தாயிடம், தந்தையிடம், தன் பிள்ளை எவை என்று கேட்காமலே, அதாவது தாயும் தந்தையும் நிச்சயம் தன்னில் கூட பின் யானாகவே இருப்பதால், நிச்சயம் தன் பிள்ளைக்கு, தன் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். இதனால் நட்பன்புகளை உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அவ்வளவுதான்.

குருநாதர் :- 
இதனால் அனைவருக்குமே நிச்சயம் தன்னில் கூட நான் சொல்லிவிட்டேன். நிச்சயம் அதை செய்து கொண்டே வாருங்கள். அனைவருக்கும் வாக்குகள் உண்டு.

குருநாதர் :- 
அப்பனே, ஏன் நவகிரக நவகிரக தீபத்தை ஏற்றச் சொன்னேன் என்றால், அப்பனே பல வழியில் சொல்லிவிட்டேன். 

மீண்டும், அப்பனே ஒரு வழியில் சொல்லிவிடுகின்றேன் அப்பனே. 

கிரகங்கள் மாறுபட்டு, பின் சரியாக, பின் வேகத்தில் இயங்காமல், அவை, அவை தன் பின் எதை என்று கூட இழுத்துக் கொண்டே, இழுத்துக் கொண்டே அப்பனே. 

இதனால் அவ்வாறாக இழுத்துக் கொள்கின்ற பொழுது, மிகப்பெரிய ஒரு சக்தி, கண்ணிற்கு தெரியாமல், ஒரு சக்தி, அதிவேகமாக புவியை நோக்கி, பின் எங்கு அடிக்கின்றதோ, அங்கு, அதாவது அதிக அளவு மனிதர்கள் எங்கு இருக்கின்றார்களோ, அங்கு வந்து அது புகுந்து விடும் அப்பா அவ் சக்தி. 

இதனால், அப்பனே பின் மக்கள், கும்பல் கும்பலாகவே இறப்பார்கள் என்பதை எல்லாம் யான் தெரிவித்து விட்டேன் முன்பே. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- 

அப்பே, முன்பே, அதாவது, கிரகங்கள் தன்னுடைய ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு டிஸ்டன்ஸ்னு ஒன்னு இருக்கு. அந்த டிஸ்டன்ஸ் தாண்டி, அதாவது, ஒரு தொலைதூரம்னு ஒன்னு இருக்கு. அந்த தொலைதூரத்தை தாண்டி, பூமியை நோக்கி நெருங்குச்சுன்னா, அப்படின்னா, பூமிக்கு கஷ்டம். அதாவது, பக்கத்துலயும் வரக்கூடாது, தூரமும் போகக்கூடாது. தூரம் போனா, ஆற்றல் வராது. பக்கத்துல வந்து அகித ஆற்றல் வரும். அகித ஆற்றலும் பிரச்சனை, குறைவான ஆற்றலும் பிரச்சனை. அதனால, இறைவன் வந்து சமநிலையில, இந்த பூமியை சுற்றி இருக்கக்கூடிய ஒன்பது கிரகங்களையும், சூரியன் உட்பட, சரியான தூரத்துல நிறுத்தி வச்சிருக்கிறார். சரிங்களா? இந்த கால சூழ்நிலைகள் மாறுபாட்டால வந்து, இந்த கிரகங்களுடைய சுற்றுப்பாதையிலிருந்து விலகி, பூமி அடியில வர்றப்போ, இது அதிகப்படியான கதிர்வீச்சுகள் பூமிக்கு கிடைக்கும். அந்த கதிர்வீச்சுகள் அதிகமா கிடைச்சாலும், பூமிக்கு பாவம். அதனால, பூமிக்கு நிறைய பிரச்சனைகள் வரும். அதான் குருநாதர் சொல்றார். 

குருநாதர் :- அப்பனே, நல் மனதோடு நிச்சயம் சில பாடல்களை, இதனால்தான், அப்பனே, கூட்டு பிரார்த்தனை, அப்பனே, நிச்சயம் செய்யச் சொன்னேன். 

அப்பனே, நிச்சயம் அனைவரும், மனதிற்கு ஏற்ப, மனதிற்கு, அப்பனே, அதாவது, தீய எண்ணங்கள், நல்ல எண்ணங்கள் என்பதை எல்லாம், அப்பனே, இதனால், அப்பனே, எண்ணத்திற்கு தகுந்தார் போல், வாழ்க்கை என்பதை எல்லாம் தெரிவித்து விட்டேன் அப்பனே. அனைவருக்கும் பின் தெரிந்ததே. அப்பனே இதே போலத்தான், எண்ணத்திற்கு தகுந்தவாறு. 

அதேபோல், அப்பனே, நிச்சயம், ஒவ்வொரு கிரகத்திற்கும் கதிர்வீச்சுக்கள் அதிகம் அப்பா.

இதனால், அப்பனே, உடம்பில் மாமிசம், உங்கள் (நர) மாமிசம் வேறு, மற்ற மாமிசங்கள் ( அசைவம்)  வேறு அப்பனே. 

(அசைவம்) இவைகள் அனைவரும் உண்றிட்டு இருந்தால் (அசைவ உணவு சாப்பிட்டுக்கொண்டே இருந்தால்) , அப்பனே அவ்ஒளியானது பின் எளிதாக வந்து, மனிதனை நிச்சயம் கவிழ்த்து விடும் அப்பா கும்பல் கும்பலாகவே. 

அதனால்தான், அப்பனே, நிச்சயம், மாமிசத்தை உண்டாதீர், உண்டாதீர் என்றெல்லாம் அப்பனே. 

நிச்சயம், ஒவ்வொன்றாக தெரிவிப்பேன் அனைவருக்கும். அப்பனே, இதை தெரிவிக்காமல், மனிதன், அதை நடக்கும், இதை நடக்கும், நான் இதை கட்டிக் கொடுக்கின்றேன், அதை கட்டிக் கொடுக்கின்றேன். இவ் மந்திரத்தைச் சொல், அவ் மந்திரத்தை சொல் என்பதை எல்லாம் பொய் அப்பா, பொய். 

அடுக்கடுக்காக மனிதன் பொய் கூறுவான் அப்பா. ஏனென்றால், இவ்வுலகத்தில் கலியுகத்தில் பக்தி என்பது பொய்யாக வேண்டும் அல்லவா?


குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- 

அதுல பெரிய உண்மையை சொல்லி இருக்கிறார் குருநாதர். ஏன் மாமிசம் சாப்பிடக்கூடாது? அப்படிங்கறது ஏன்னா, பூமியுடைய கதிர்வீச்சு வந்து என்னன்னா, இந்த பூமிக்கு வரக்கூடிய கதிர்கள் வந்து தாக்கம் வந்து ஒவ்வொரு கிரகத்திலிருந்து மாறுபட்டு அதிகமா பூமிக்கு வந்துட்டு இருக்குது. அப்போ நம்ம மாமிசம் சாப்பிடுறப்போ, நாம நினைக்கிறோம், 50 வருஷத்துக்கு முன்னாடி சாப்பிட்டேன், 40 வருஷத்துக்கு அப்போ இந்த கதிர்வீச்சு எல்லாம் அந்த அளவுக்கு இல்ல பூமியில. ஆனா இப்போ கலியுகத்துல தற்போதைய காலகட்டத்துல கதிர்வீச்சுகள் பூமிக்கு அதிகமா வருது. பிறகு கதிர்வீச்சுகள் அப்படின்றப்போ, இந்த மாமிசத்தினால ஆன உடம்பு பிற பிற உயிர்கள் சரிங்களா? ஒரு ஆடோ, ஒரு கோழியோ இல்ல, ஒரு மாடப்பிற ஜீவராசிகளை கொன்னு சாப்பிடுறப்போ, தோஷம் வருதுன்னு ஒன்னு. அது ஒரு பக்கம் இருக்கட்டும், பாவம் வர்றதுன்னு ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா அதுக்கு மேல என்ன பண்றோம்னு கேட்டீங்கன்னா, அந்த மாமிசத்தை சாப்பிடுறப்போ, அந்த மாமிசத்தில் இருக்கக்கூடிய மூலக்கூறுகள் ஏன்னா, ஒவ்வொரு உடம்பும் வந்து என்ன அணுக்களால் ஆனது தான் சரிங்களா? அந்த அணுக்களுக்கு உணவு கதிர்வீச்சு தான். அப்படின்றப்போ, அந்த மிருகமானது ஒவ்வொரு கிரகத்தில் வரக்கூடிய சில கதிர்வீச்சுகளை எடுத்து வாழ்வதற்கு இறைவன் படைச்சிருக்கிறார். அப்ப அந்த கதிர்வீச்சு காம்பினேஷன் கொண்ட ஒரு மிருகத்தை கொண்டு நாம அந்த மாமிசத்தை உண்றப்போ, அந்த கதிர்வீச்சு மனிதனுக்கு உதவாது. அப்ப அது வந்து என்ன ஆகும்? நம்ம உடம்புக்குள்ள வந்து நமக்கு தேவையில்லாத கதிர்வீச்சை அது பெற்றுவிட்டு, நமக்கு வந்து என்ன ஆகும்? நிறைய தீமை.


குருநாதர் :- அப்பனே, அது அது மட்டுமல்லாமல் தேவலோகத்திலிருந்து அப்பனே, நிச்சயம் அதாவது புவிக்கு, அப்பனே, (சித்திரக்) குள்ளர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள். புவி அழியப்போகின்றது. நிச்சயம் காப்பாற்றுவோம் என்று மறைமுகமாகவே அப்பனே. அவர்களும் தானாகவே உங்களை காப்பாற்றுவார்கள் அப்பா. 

————————————————-
குருநாதர் ஆசியால், புவியை,  நம்மைக் காக்க வரும் தேவ தூதர்கள் ( சித்திரக் குள்ளர்கள் ) குறித்து கீழ்கண்ட பதிவில் தெரிந்து கொள்ளவும். 

https://youtu.be/vOnxEjgAR_U?si=3VkTKa5diqG4o4xi

The interstellar comet 3I/ATLAS is traveling at a speed of over 130,000 mph (210,000 km/h). When it reaches its closest point to the Sun (perihelion) in late October 2025, its speed will increase to approximately 42 miles per second (68 km/s) relative to the Sun. This astonishing velocity is evidence of its long journey through interstellar space. 

————————————————


சுவடி ஓதும் மைந்தன் :- 

அதை ஏலியன்ஸ் சொல்றாங்க இல்லையா? ஐயா, மனுஷன் அந்த தேவலோகத்திலிருந்து அந்த ஏலியன்ஸ் இருக்காங்க இல்ல? தெரிஞ்சு போச்சு. உலகம் இன்னும் வந்து புவி என்பது ரொம்ப இது ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு, அவங்க ஓடி வரும் பொழுது, உங்க எண்ணங்களுக்கு தகுந்தா இருந்துச்சுன்னா, அவங்களும் உங்களை காப்பாத்திடுவாங்கப்பான்றாங்க. ஐயா, புரியுதுங்களா? 

குருநாதர் :- 

“”””””””அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, என் பக்தர்களுக்கு இவை தன் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பேன் அப்பனே. “””””””

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் உடனே தெரிவிக்கணும். இது எல்லாருக்கும் உடனே தெரிவிச்சுக்கணும்னா, அந்த சித்திரக் குள்ளர்களும் வந்து ஏலியன்ஸும் வந்து அங்க நீங்க நல்ல மனதோட மற்றவரை வேண்டிக்கினாங்கன்னா, வந்து பரவாயில்லைன்னு சொல்லிட்டு, அவங்களே உங்களை காப்பாத்திடுவாங்களாம். உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் இருக்குது இல்ல? எனக்கு அது வேணும், இது வேணும்ன்றாங்கள. கல்யாணம் ஆகல, குழந்தை பெட்டி பெறல, எனக்கு வேலை கிடைக்கலன்னு சொல்றாங்க இல்ல? அது என்ன பண்ணுவாங்களாம்? அந்த ஏலியன்ஸ் இருக்காங்க, பார்த்தீங்களா? அவங்க வந்து இருக்கிறாங்க. வந்து ஏன்னா, உலகம் வந்து பெரிய லெவல்ல பாதிப்பு அடைய போகுது. அது வருகின்ற போது, உங்களுக்கு குறைகள் எல்லாம் நீங்கிடுமான்றார்.

அடியவர்:- 
நீங்க ஏலியன்ஸ்ன்னு சொல்றீங்க இல்லையா? அது தேவதூதர்களா அல்லது விண்வெளி?

குருநாதர் :- தாயே, நிச்சயம் தேவதூதர்களே. 

சுவடி ஓதும் மைந்தன் :- 
தேவதூதர்கள் அவங்க வந்துட்டு இருக்காங்கம்மா. அதனால கவலைப்பட தேவையில்லை. உங்களை காப்பாத்திடுவாங்க, சேப்டி பண்ணிடுவாங்க. 

குருநாதர் :- இதனால், அப்பனே, நிச்சயம் மூட நம்பிக்கையில் ஒழிந்துள்ளார்கள் அப்பா மனிதர்கள்.  அதனால்தான் அப்பனே நாங்கள் பாவம் என்று சொல்கின்றோம். 

சுவடி ஓதும் மைந்தன் :- 
மனிதர்களே மூட நம்பிக்கையிலேயே நம்மளை அது காப்பாத்தும், இது காப்பாத்தும், அது காப்பாத்தும்னு நினைச்சிருக்காங்களாம். ஆனால் ஒன்னு கூட காப்பாத்தாதேப்பா. 


குருநாதர் :- அப்பனே, இன்னும் தெளிவு பெற, அப்பனே. ஆனால் உங்க சந்ததிகள் வளரும் அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :- 
நீங்க எல்லாம் தெரிஞ்சுக்கோங்கப்பா. நீங்களாவது தெரிஞ்சுக்கினீங்கன்னா, வரக்கூடிய சன்னதிகள் வளரும். நீங்க விருப்பப்படி, அவங்க வாழ்ந்துருவாங்கப்பா. 

குருநாதர் :- இதனால், அப்பனே, உங்களையே உங்களை காக்க முடியவில்லை. தேவதூதர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

ஐயா, நம்மளையே நம்மளால காப்பாத்த முடியல. அப்படின்னு சொல்றாரு. அப்ப அதை காப்பாத்துறதுக்கு தேவதூதர்கள் வராங்க. நமக்கு உதவி செய்வதற்கு நிறைய பேர் இருக்கிறாங்கன்னு குருநாதர் சூட்சமமா சொல்றாரு. அதான். 

குருநாதர் :- அப்பனே, அறிந்தும் ஏன் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால், நிச்சயம் உலகம் அழிவு நிலைக்கு. இதனால் அவர்கள் குள்ளர்கள் வருவார்கள் அப்பா. வருவார்கள். கவலைகள் இல்லை.

குருநாதர் :- 
அப்பனே, நீங்களும் தூதர்கள் ஆகலாம். எப்படி?

அடியவர்கள் :- ( சில உரையாடல்கள்) 

குருநாதர் :- அதனால்தான் இவ்நாள் வரை, அதாவது சொல்லிக்கொண்டே இருந்தேன். நன்மைகள் செய்யுங்கள், பிறருக்காக உடையுங்கள். பின் உங்களை எது என்று அறிய, அறிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- 
அதனால்தான் உதவி செய்யணும். உங்களுக்காக நீங்க வாழக்கூடாது, மற்றவருக்காக வாழனும். 

குருநாதர் :- எது என்று புரிய. தாயே, தந்தையே, ஒன்றை பார்த்து உங்களை கேட்கின்றேன். அதாவது வேலை, நிச்சயம். அதாவது தாய் தந்தை சிறுவயதிலிருந்து வளர்க்கின்றார்கள். ஆனாலும், நிச்சயம் வேலை வேண்டும் என்று நிச்சயம் சொல்கின்றான் ஒரு மனிதன். ஆனாலும், நிச்சயம் அவ்வேலை யாருக்காக செய்வது? 

சுவடி ஓதும் மைந்தன் :- 
ஒரு வேலை வேணும்ன்றாரு செய்றான். அது யாருக்காக செய்றாங்க? 

அடியவர் :- குடும்பத்திற்காக

குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட. பின் உனக்காக இல்லை, மற்றவருக்காக செய்கின்றாய். அதற்கு கூலியும் கொடுக்கின்றான். பாருங்க, பெருந்தரணை, நிச்சயம் திருமணம் செய்கின்றீர்கள். உனக்காக திருமணம் செய்கின்றீர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- 
மற்றவருக்காகத்தான் யோசிக்க கூடாது. கூடாது யோசிக்கின்றதெல்லாம் யோசிங்க. எதுக்காக நம்ம நினைச்சு, நமக்கே நினைச்சுட்டு இருக்கிறோம். கிடையாது, கிடையாது. சந்ததி வளர்றதுக்காக மத்தவங்களுக்காக தான் நீங்க செஞ்சுட்டு இருக்கீங்க. 

குருநாதர் :- அறிந்தும், ஆனால் எவை என்று புரிய, எதை என்றது அறிய. அதாவது இன்னும் இன்னும் எதை என்று அறிந்து கொண்டு, நிச்சயம் பின் உங்களுக்காக நீங்கள் வாழ்வதே இல்லை, வாழ்வதே இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- 
உங்களுக்காக ஒருபோதும் நீங்கள் வாழ்வதே இல்லை. 
சொல்லுங்க எப்படின்னுட்டு ? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

யாராவது ஒருவரா வாழ்ந்திருக்கீங்களா? உங்களுக்கு பிடிச்சதுன்னு ஏதாவது ஒரு வேலை செய்ய முடியுதா? நல்லா யோசித்து பாருங்க. 

சுவடி ஓதும் மைந்தன்:- 
அதனால, உங்களுக்காக நீங்கள் வந்து வாழ்வதே இல்லை, மற்றவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 


குருநாதர் :- இதனால், தாயே, இதை பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்களை நல்லது செய்து விடுங்கள். நிச்சயம் புண்ணியங்கள் ஆகிவிடும். இதனால், பின் உங்களை நம்பி இருக்கின்றார்களே, அவர்களும் நன்றாக வாழ்ந்து விடுவார்கள். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

ஒன்னும் இல்ல. அந்த வட்டத்தை சின்ன வட்டம் போட்டிருக்கிறோம். அந்த வட்டத்தை கொஞ்சம் பெருசா எடுத்துட்டு இருக்கிறோம். நம்மள சுத்தி ஒரு வட்டம் வச்சிருக்கிறோம். நம்ம குடும்பத்தை சுத்தி, அந்த குடும்ப வட்டத்தை பிறருக்கு நம்ம கொஞ்சம் பெருசா போட்டு, ஒரு பத்து பேரை உள்ள அணைச்சுக்கிட்டோம்னா, ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு நீங்க சந்தோஷம்னு எதை நீங்க நினைக்கிறீங்களோ, இறைவன் கிட்ட கொடுத்துருவாரு. உங்களுக்கு சந்தோஷம் நீங்க நினைக்கிறீங்களோ, அதை கொடுப்பாரு.


குருநாதர் :- 
அறிந்தும் புரிந்தும், இதனால் நிச்சயம் தன்னில் கூட கவலைகள் இல்லை. தேவதூதர்கள் வந்து கொண்டிருக்க, பின் நிச்சயம் பின் கவலை மாற்றுவார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- 
அப்ப எல்லாம் இடிக்கி வருது. யார் பாதுகாக்க போறாங்க?

குருநாதர் :-  இவ் கிரகங்களைத் தடுத்து நிறுத்த அவர்களால் முடியும்.

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

அப்பா, பாருங்க, எல்லாம் அப்படி. அவங்களே தேவையில்லை. சித்தரே, உன் குருநாதரே, நம்ம நான் பண்றதுக்கு இல்லப்பா. நீங்க மனசு மாறும், ஆட்டோமேட்டிக்கா உங்க பிரச்சனையை சரி பண்ணுவாங்க. இந்த பூமியை சுத்தி இருக்கக்கூடிய சூழ்நிலைகள், அவங்க மாத்திட்டு, மாத்திட்டு போயிருவாங்க.


குருநாதர் :- 

“”””””””இதனால் கோடிக்கணக்கில் குள்ளர்கள் ( தேவ தூதர்கள் ) பின் வருவார்கள். அதை நிறுத்த, அப்பொழுதுதான் நிச்சயம். “””””””””

சுவடி ஓதும் மைந்தன் :- 
கோடிக்கணக்குல அந்த தேவதர் வரும்போது, அது பாஸ்ட்டா ( fast ) வரும்பொழுது, அது மட்டும்தான் நிக்க முடியும். 

குருநாதர் :- நிச்சயம் வருகின்ற பின், அதாவது பின் வேகத்திற்கு, (குள்ளர்கள்) இவர்களே பின் தள்ளிக்கொண்டு, தள்ளிக்கொண்டு, இதால் சில மாதங்களில் நிச்சயம் பின் நின்றுவிடும் (ராகு கேது கிரகங்கள்). 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

அவங்க கூட்டம், கூட்டமா கும்பலா வந்து உடனே எல்லாம் மாறிடும் அப்படின்றாரு.

சுவடி ஓதும் மைந்தன் :- 

அப்ப என்ன பண்றாருன்னா, அது வேகத்துக்கு ராகு கேதுவும் இவங்க கோடிக்கணக்குல இருக்கும்போது, இவங்களையே தள்ளிவிடும். அந்த போர்ஸ் அப்ப அது வந்து இருக்கும்போது, 
ஐயா, அது  பாஸ்ட்டா வந்து நிற்கும் பொழுது, அதே ஒரு ரெண்டு மூணு மாசம், நாலு மாசம் கூட ஆகலாம். ஆனா அது நெருங்காது. அவ்வளவு சீக்கிரத்துல அந்த கரெக்டா. ஐயா, இது ஒரு ஒரு சூட்சுமமான விஷயம். ஆமா, இப்ப வராங்க. அவங்க வந்து அது இத்துன்னு வருது. அவங்கள அந்த ஒழுங்கா நெருங்கி விடாம, அந்த போர்ஸ், 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

அவங்க வர்றப்ப, ஒரு ஆற்றல் உருவாகும் பாருங்க. அவங்க கோடிக்கணக்கா உள்ள வரப்போ, அந்த ஆற்றலானது கிரகங்களாக ஒரு பொசிஷன்ல போய் ஆட்டோமேட்டிக்கா நின்றுரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- 
அதே மாதிரி அந்த போர்ஸ். பாஸ்ட்ல இவங்க தடுக்கும் பொழுது, அப்ப அதுக்கு தேவையான சமநிலை எங்க நிக்குமோ, அங்க நிக்க வைப்பாரு. அதுக்கே வந்து சில மாதங்கள் ஆகும். அது நீட்டுச்சுன்னா கொஞ்சம் க்ளோஸ் ஆகும். ராகு கொஞ்சம் நின்னுட்டாருன்னா, கொஞ்சம் எல்லாருக்கும் வந்து நல்லதாகும். எல்லாமே ஆகான்றாரு. ஐயா, புரியுதுங்களா? எல்லாருக்கும் புரியுதுங்களா? 


குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட, அதாவது சொல்கின்றேன், நீங்கள் கேட்டுத்தான் அவர்கள் வந்தார்களா என்ன? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

நம்ம கேட்டுதான் அவங்க வந்தாங்களா? இல்ல, அப்படின்றப்போ, நம்ம என்ன செய்ய வேண்டியது? குருநாதர் சொன்னதை ஐயா கொடுத்திருக்கிறார். அந்த யோசனையை நாம செயல்படுத்துனோம்னா, அவங்க ஆட்டோமேட்டிக்கா, அவங்க வந்து, அவங்களே சரி பண்ணிட்டு போயிருவாங்க. 

குருநாதர் :-  இதனால் உங்கள் மனது பின் நல் மனதாக இருந்தாலே, அவர்களே அனைத்தும் செய்து சரி செய்து, அதனால் நீங்களே சரி செய்து கொள்ளலாம்.

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

அடுத்த லெவல் சூட்சுமம் சொல்றாரு. அதுக்குரிய சக்தி இறைவன் நமக்கு கொடுத்துருவாராம். பிரச்சினையே விடுங்க, தேவதூதர்களை விடுங்க, நம்மளே தேவதூதன் ஆக்கிடுவாரு. அது குருநாதர் அந்த எண்ணம் வந்தாலே, நம்மளே தேவதூதன் ஆக்கலாம்ன்றாரு.


சுவடி ஓதும் மைந்தன் :- 
அதனால, நீங்க அந்த எண்ணம் நல்ல எண்ணம் இருந்தாவே போதுமா? அந்த நல்ல எண்ணமே உங்களை எல்லாமே குடுத்துரும். உங்களுக்கு அந்த உங்களுக்கு நல்ல எண்ணமே இருந்தா, அந்த நல்ல எண்ணமே உங்களை வாழ வச்சிரும்ன்றாரு.

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

அதாவது வேதத்துல முதல் வாக்கியம் அகம் பிரம்மாஸ்மி. நான் கடவுள். அந்த கடவுள் என்ற எண்ணத்தை தடுக்கிறது என்ன? மாயை, கர்மம், ஆணவம், மும் மலங்கள். சரிங்களா? இந்த மும்மலங்கள்தான்,  பிறர் நலனை நாம யோசிக்க விடாம தடுக்குது. மாயையில இருக்கிறோம். ஆணவத்துல இருக்கிறோம். வினையினால கஷ்டப்படுறோம். எளிதா வழி சொல்றேன். இந்த மூணுலையும் அப்படியே அழகா நம்ம தப்பிச்சிரலாம். தப்பிச்சா, நாமே கடவுள், நானே தேவதூதன் என்று உணரனும் என்று குருநாதர் சொல்ரார். 


குருநாதர் :- 
அப்பனே, அது மட்டுமில்லாமல், இவை சம வேகங்களாக, அதாவது அதிக வேகம் எடுத்து வருவதால், அப்பனே, நிச்சயம் சில நட்சத்திரங்கள் கூட, அப்பனே, பின் அதாவது எது என்று புரிய. அப்பனே, இது வேகத்திற்கு இவை தன் ஈர்க்கும் பொழுது, அவ் நட்சத்திரங்கள் கூட, அப்பனே, பூமியில் தான் விழும். அப்பா, இதனால் அப்பனே, வெடி வெடிக்கும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன்:- 
வெடி வெடி வெடிக்கும்ன்றாரு. அப்படியே வந்து பூமி வந்து பிளவும் ஐயா. அப்படித்தான் அர்த்தம்.
நட்சத்திரமும் வந்து பூமியை தாக்கும். தாக்கும் போது அது பிளவும்ன்றாரு. பூகம்பம்.

அதாவது ராகு கேது அந்த வேகத்துல வரும்போது, பாஸ்ட் அந்த வேகத்துல வரும்பொழுது, அந்த நட்சத்திரம் கூட வந்து ஐயா, அந்த நட்சத்திரங்கள் அது வந்து இப்படி இப்படி இருக்குது இல்ல. இப்படி ஈர்த்துரும் ராகு கேதுக்கு அப்படி சில நட்சத்திரங்கள் வந்து. 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம் நட்சத்திரம் விழுந்து கொண்டே தான் இருக்கின்றது  அப்பனே. நிச்சயம் அப்பனே, பூமியை விட, அப்பனே, பல கோடி பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் இருக்குதப்பா. அவை விழுந்திடும் என்பேன் அப்பனே. 


குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

ஆமா, நமக்கு தெரியும் நிறைய வின் கற்கள் பூமியை நோக்கி வந்துட்டு இருக்கு. நட்சத்திரங்கள் விழுந்துட்டு இருக்குது. இதெல்லாம் விழுந்தா என்ன ஆகும்? இதெல்லாம் மேல விழாம சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும், தெய்வங்களும் தடுத்துட்டு இருக்காங்க. நமக்கு மறைமுகமா நமக்கு உதவி செஞ்சுட்டு இருக்காங்க. 

குருநாதர் :- அதனால்தான் அப்பனே, அதாவது இவையெல்லாம் நட்சத்திரங்கள் அதிக அளவு  இப்புவி தன்னில்  விழக்கூடாது என்பதற்காக, அப்பனே என் உடம்பை ஒரு நட்சத்திரமாக வைத்திருக்கின்றேன் அப்பனே. காணலாம் என்பேன் அப்பனே மாதத்திற்கு ஒருமுறை நீங்களே. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அகத்தியர் என்ன சொல்றாரு? அந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதிகமா விழக்கூடாதுன்னு சொல்லிட்டு, அவர் உடம்பை, அவர் உடம்பையே ஒரு நட்சத்திரமாக்கி வச்சிருக்காராம். அது மாதத்துல ஒருமுறை பார்க்கலாம். 

அடியவர் :- எந்த நாள் பாக்கலாம்?

குருநாதர் :- தாயே, எதை என்று புரிய. மற்றவர்களை காப்பாற்றுவோம் என்ற எண்ணம் வரவில்லையே உந்தனக்கு தாயே. எந்த நாள் என்று மட்டும் குறிப்பிடுகின்றாயே? நிச்சயம் முயற்சி செய்.

குருநாதர் :- நிச்சயம் இவ்வாக்குகள் உடனடியாகவே என் மக்களுக்கு தெரிவீர்கள். அனைவரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயம் பின் அனைவரும் பின் கையிலே (Mobile) வைத்திருக்கிறீர்களே. 
அவர் கைபேசி உபயோகியுங்கள் தெரியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- 
(Mobile app) ஆப் இருக்குங்க ஐயா. அகத்தியரோட நட்சத்திரம் காணலாம். எல்லாரும் கைப்பேசி வச்சிருக்கீங்களே. உபயோகம் ஆகட்டும்னு சொல்றாரு. என் மக்களுக்கு தெரிவிச்சா, அதுல யாராவது ஒருத்தர் சொல்லுவாரு. இங்க இதுல இந்த நட்சத்திரம் இருந்து இங்க பார்த்தீங்கன்னா, நட்சத்திரம் அகத்தியர் நட்சத்திரம். அதுல வருமா? ஐயா, புரியுதுங்களா? 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட. அதனால் நிச்சயம் பழையதாகவே வைத்துக் கொள்ளாதீர்கள் அறிவுகளை.  புதிதாக பின் புதுப்பித்து உங்களை நீங்கள் வெல்வீராக. யாங்கள் இருக்கின்றோம் பக்கபலமாக. 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன். கைபேசியை நிச்சயம் தன்னில் கூட பின் புது புதுமையாக பின். நிச்சயம் தன்னில் கூட பின் அறிவுகளை நிச்சயம் தன்னில் கூட ஓரிடத்திற்கு சென்று, அதாவது (Mobile app download) பதிவை இறக்கி. நிச்சயம் பின் மேலே அதாவது ஒரு பிம்பத்தைக் கண்டால், நிச்சயம் அதாவது என் பெயரை தெரிவிக்கும். 

(குருநாதர் அடியவர்களை விண்மீன்கள் நட்சத்திரங்களை பார்க்கும் மொபைல் ஆப் - Mobile app - அதனை பயன்படுத்தி அங்குள்ள அடியவர்களை பயன்படுத்த உத்தரவிட்டார்கள்.) 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இவ்வாறுதான் சப்த ரிஷிகளும் உடம்பை அங்கு வைத்துள்ளார்கள். 

குருநாதர் :- நிச்சயம் அனுதினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரிசையாக செல்வார்கள். நிச்சயம் தன்னில் கூட சப்த ரிஷிகளும் கூட.  

குருநாதர் :- 
நிச்சயம்  இவ்வாறாக நிச்சயம் பார்த்துவிட்டால் ஆசிகள் நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக (சப்தரிஷிகளும்) பின் அதாவது நிச்சயம் மிகப்பெரிய நட்சத்திரங்கள் கீழே விழாமல் தடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். பின் இவைதான் நிச்சயம் திடீரென்று அதாவது எதையும் எண்ணாமல் யான் சொல்வதை நீங்கள் கேட்டால் நீங்களும் அதை பார்க்கலாம். 

(சப்த ரிஷி மண்டலம் - Ursa Major constellation) 

அடியவர் :- ( எந்த நேரம் என்று கேட்க) 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு ஆசிரியன் தேர்வில் இவ்வாறு கேள்வி கேட்பார்கள். அதற்கு பதில் தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வான். அவ்வளவுதான். நீதான் நிச்சயம் தன்னில் கூட. ஆனால் சோம்பேரியாக கேட்கின்றாயே. தாயே நியாயமா? 

அடியவர் :-  ஐயா, கனோபஸ் நட்சத்திரம் இதுதான் அகத்திய நட்சத்திரமா? 

(அங்குள்ள ஒரு அடியவர் Canopus என்ற நம் அன்பு குருநாதரின் நட்சத்திரத்தை அனைவருக்கும் எடுத்து காட்டினார்.) 

குருநாதர் :- 
அறிந்தும் நிச்சயம், அவ் தேவதூதர்களும் மனிதன், அதாவது இறைவன் படைத்த உயிர்களை கொன்று குவிக்கின்றார்களே என்றெல்லாம் வருத்தம்தான் படுகின்றார்கள். எப்படி, ஏது என்று புரியாமல் கூட.  ஆனாலும் உங்களுக்காக அவர்கள் (உதவி புரிய) இறங்கி வருகின்றார்கள்.

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

ராகு கேது கதிர்வீச்சு கதிர்வீச்சு பூமியில ரொம்ப அதிகமா பட்டுட்டு இருக்குது. ஆனா அறியாமையில மிருகங்களை கொன்று தின்கிறப்போ,  மிருகங்கள் கிட்ட அதிகப்படியாக ராகு கேது கதிர்வீச்சுக்கள் இருக்கும். அப்போ அந்த மாமிசத்தை நாம உண்றப்போ, நம்மளும் அதிகப்படியாக அந்த ராகு கேது கதிர்வீச்சுக்கள் ஈர்க்கத் துன்பம் அதிகமாகும். அவங்க இதை பார்த்து,  அந்த தேவதூதர்கள் வருத்தப்படுறாங்க. இந்த மாதிரி வாழ்ந்துட்டு இருக்காங்களே. அப்படின்றப்ப இந்த மாமிசத்தை நிறுத்தி, எப்படி பிறருக்காக வாழ்றப்போ, அந்த ராகு கேது கதிர்வீச்சுல இருந்து ஆட்டோமேட்டிக்கா நம்ம தப்பிப்போம்.

குருநாதர் :- 
அப்பனே, அறிந்தும் கூட நிச்சயம் என் மக்களுக்கு இவையெல்லாம் நிச்சயம் வருங்காலத்தில் அங்காங்கு நிச்சயம் பரப்புவேன் அப்பனே. இன்னும் மக்களுக்கு தெளிவுபடுத்தி, அப்பனே, அனைத்தும் கொடுப்பேன் அப்பனே, நீங்கள் என்னென்ன வேண்டிக்கொள்கிறீர்களோ, அவையெல்லாம் யான் நிச்சயம் கொடுத்து விடுவேன் அப்பனே. கொடுத்தும் விட்டேன். நடக்கும் அப்பா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-

நீங்க என்னெல்லாம் கேட்டிருக்கீங்களோ, அதெல்லாம் கொடுத்துட்டு தான் இருக்கிறதுனால இன்னும் கொடுப்பேன். நான் சொல்ற இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்க. உங்களுடைய பிரச்சனைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். அவங்க தேவதூதர் பார்த்து பண்றாங்க. 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் பின் அவரவர் இல்லத்தில் அப்பனே. நிச்சயம் அதாவது (என்) உருவப்படம் என்று நினைத்து விடாதீர்கள். அப்பனே, யானே இருக்கின்றேன். அதனால் என் முன்னே, அப்பனே, (உங்கள் இல்லத்தில்) அங்கே அப்பனே, அதாவது நிச்சயம் கேட்காவிடிலும் யான் அறிவேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இதனால் பின் இல்லத்திலே பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன், ஒவ்வொரு இல்லத்திலும் கூட.  இதனால் அப்பனே, நிச்சயம் மனதார அப்பனே, பின் என் அதாவது முன்னிலையில் நில்லுங்கள் அப்பனே. இவ் முன்னே பின் நிற்பதற்கும், அப்பனே, நிச்சயம். அப்பனே, தந்தை முன், அப்பனே, நிற்பதற்கு சமம். 


சுவடி ஓதும் மைந்தன் :- 
எல்லார் வீட்ல அகத்தியர் போட்டோ இருக்குங்களா? எல்லாரும் இருக்கிறீங்க. நீங்க எதுனா வந்து கேட்டீங்கன்னா, என் முன்ன வந்து கேளுங்க. அது போட்டோ இல்ல, நானே தான் அது உயிரோடு தான் இருக்கிறேன். அப்ப நீங்க முன்னாடி நின்னா, அமைதியா அப்பாகிட்ட கை கட்டி நின்னாவே போதும். (அகத்தியர்) நான் வந்து உங்களுடைய எண்ணத்தை நான் பார்த்துப்பேன். நான் உங்களுக்கு பண்ணி தரேன்றார். இதைவிட யாருங்க இதை சொல்லுவாங்க? இதைவிட யார் சொல்லுவாங்க? 

குருநாதர் :- அப்பனே, இதனால்தான் சித்தனின் ரகசியத்தை, சித்தனின் ரகசியத்தை யாரும் இவ்வுலகத்தில் தெரிந்து கொள்வதே இல்லை அப்பா. ஆனாலும் அப்பனே, நிச்சயம் தெரிந்து கொள்வதற்காகவே, நிச்சயம் அப்பனே, சித்தன் எங்கும் பறந்து கிடப்பான். அப்பா, காற்றிலும் கூட அப்பனே. 

குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்பனே, கலியுகத்தில் சித்தன் என்று யார் என்று தெரியாமல் யார்தான் சித்தன் என்று பட்டம் விட்டுக்கொண்டு, அப்பனே, நிச்சயம் கல் போன்று அமர்ந்திருப்பான் அப்பா. அப்பனே, நிச்சயம் இவன் மிகப்பெரிய திருடன் அப்பா. 

குருநாதர் :- அப்பனே, (தன்னை) சித்தன் என்பவன் முதல் வகை திருடன் அப்பா. 
பக்தன் என்பவன் இரண்டாம் வகை திருடன் அப்பா. 
தன்னைத்தானே பக்தன் என்று, தன்னைத்தானே இறைவன் என்று, தன்னைத்தானே சித்தன் என்று, தன்னைத்தானே அம்பாள் என்று, தன்னைத்தானே அனைத்தும் யானை என்று, இப்படி பின் சொல்லிக்கொண்டே இருந்தால், கலியுகம் முற்றுப்பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

குருநாதர் :- 
அப்பனே, நிச்சயம் உடம்பிற்கு ஏதுவுமே தேவையில்லை. அப்பா, இறைவனின் உடம்பு என்பேன் அப்பனே. அதில் அனைத்தும் இறைவனுக்கு சொந்தமானது விட்டுக்கொண்டு, யான் இறைவனிடம் பேசுகின்றேன் என்று அப்பனே, நிச்சயம் புளுகுவான் அப்பா.  சொல்லுவான் எல்லா பொய்யும் சொல்லுவான்.


குருநாதர் :- அப்பனே, இதனால் மனிதன் என்பவன் தன் பிரச்சனைக்காக சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பா. ஆனால் சித்தர்கள் அப்படி இல்லை அப்பனே. இவ்வுலகம் எங்களுடையது என்பேன் அப்பனே. உலகத்தை காக்கவே அப்பனே, நாங்கள் சொல்வோம். அதை பயன்படுத்தினால், நீங்களும் எங்கள் பிள்ளைகள். அப்படி சுய நலத்திற்காக வாழ்ந்தால், நாங்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்ய மாட்டோம்.



குருநாதர் :- 
அப்பனே, இதனால்தான் தெளிவு. அப்பனே பெறு குருவின் பெறு. அப்பனே, அதாவது முதலில் பாடலை அப்பனே புரிகின்றதா?

அடியவர் :- (பின் வரும் திருமூலர் சித்தர் எழுதிய திருமந்திரம் பாடலைப் பாடினர் அங்கு) 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.


குருநாதர் :- அப்பனே எங்களை அழைக்கக்கூட தேவையில்லை என்பேன் அப்பனே. இக்கலியுகத்தில் அப்பனே, நிச்சயம் நல்ல எண்ணங்களாக வைத்துக் கொள்ளுங்கள். போதுமானது அப்பனே. 

குருநாதர் :- 
இதனால், அப்பனே, நிச்சயம் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பா. அனைவரும், அப்பனே, ஒவ்வொரு பக்குவங்களையும் பெற்றுள்ளீர்கள் என்பேன் அப்பனே. அதற்காகத்தான் அப்பனே, இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. அவ்வ பக்குவத்தை உங்களுக்கு கொடுக்கவில்லை என்றால் இறைவன் அப்பனே, நீங்கள் இங்கு வந்து அமர்ந்திருக்க மாட்டீர்கள் என்பேன் அப்பனே.

குருநாதர் :- அப்பனே, இதற்கு அடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னை கூட இன்னும் வாக்குகள் சொப்புவேன். அப்பனே, ஆசிகள், அப்பா. 

அப்பனே, பின் நிச்சயம் அப்பனே, தெளிவு பெற்றீர்களா அப்பனே? 

குருநாதர் :-.அப்பனே் இதனால், இன்னும் அங்கங்கு அப்பனே, வாக்குகள் அப்பனே. எங்களுடைய வாக்குகள் போய்க்கொண்டே இருக்கும் அப்பா. இதனால் அப்பனே, உங்களை நீங்களே வெல்லலாம். 
என்பேன் அப்பனே. மற்றவர்களையும் வெல்லலாம். என்பேன் அப்பனே. 

குருநாதர் :-.அப்பனே, அம்மையே, இதனால் நிச்சயம் தெரியாமல் இறைவனை வணங்கினாலும், இறைவன் ஒன்றும் செய்வதில்லை. பின் நிச்சயம் வணங்கிக் கொண்டே இருந்து, கடைசியில் இறைவா, ஒன்றுமே கொடுக்கவில்லை என்று சொல்வதுண்டு. அவ்வளவுதான். 


குருநாதர் :- தன் கடமையை ஒழுங்காகவே செய்து கொண்டு வந்தாலே போதுமானது. அனைத்தும் பின், நிச்சயம் யானே தருவேன் ஆசிகள். 

==========================
மதுரை 23.5.2025 - மதிய/மாலை வேளையில்  உரைத்த வாக்கு:-
==========================

அப்பனே நிச்சயம்தன்னில் கூட அனைவருமே சொல்லி விட்டேன் அப்பனே. நிச்சயம் மீண்டும் ஒரு சந்தர்பத்தை கொடுத்தேன் அப்பனே. அப்பனே உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் யான் கொடுக்கின்றேன் அப்பனே. பணம் வேண்டுமா? திருமணம் வேண்டுமா? இன்னும் என்னென்ன வேண்டும் என்று. அப்பனே யான் சொல்லிய வேலையை சரியாகச் செய்க அப்பனே. 

அப்பனே ஒன்றை மட்டும் கடைசியில் சொல்கின்றேன். அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அப்பனே வேலை கொடுத்திருக்கின்றேன் உங்களுக்கு. அவ் வேலையை நீங்கள் சரியாகச் செந்தால், உங்கள் வேலையை யானே செய்வேன் அப்பா. யான் மற்றவர்களுக்காக வணங்குங்கள் என்று சொன்னேன் அப்பனே. ஆனால் நீங்கள் எதை என்று புரிந்து கொள்ள (இயலவில்லை). ஆனாலும் நிச்சயம் அப்பனே அதாவது கூலி ( ஊதியம் ) கொடுக்கின்றேன் உங்களுக்கு. அதனால் வேலை கண்டிப்பாக, நிச்சயமாக செய்தால் உங்களுக்கு கூலி கொடுப்பேன். சொல்லிவிட்டேன். இதுதான் இப்பொழுது நிலமைக்கு செப்ப முடியும் அப்பா. 

அடியவர் :- சேவையை , கூலி என்ற அளவுக்கு (குருநாதரை) பேச வைத்துவிட்டோம். 

குருநாதர் :- அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். யான் சொல்லியதை நிச்சயம் பின் இயக்கிட்டால் ( செயல்படுத்தினால் ) சிறப்பாக அனைத்தும் செய்வேன். அனைத்தும் செய்வேன். மீண்டும் மீண்டும் இதையே தெரிவிப்பேன். அனைவருக்கும் வாக்குகள் உண்டு. 

அப்பனே என்னுடைய ஆசிர்வாதங்கள் அப்பனே. யான் சொல்லியதை ஏற்று நட. 

தாயே! அப்பனே! நிச்சயம் அப்பனே,  ஈசனை வேண்டிக்கொண்டு செல்லுங்கள். அகத்தியன் சொல்லியிருக்கின்றான் இவையெல்லாம். நிச்சயம் முழு முயற்சியோடு யாங்கள் செய்கின்றோம். 
 அனைவரும் ஈசன் இடத்தில் சென்று நிச்சயம் யான் அதாவது அகத்தியன் சொல்வதை நிச்சயம் செய்கின்றேன். நிச்சயம் அறிந்தும் கூட யான் அகத்தியன் சொல்வதை நிச்சயம் செய்கின்றேன். நிச்சயம் நீயே அனைத்தும் கொடு என்று அனைவருமே சொல்லுங்கள். அப்பப்பா !!!!! சிறு குழந்தைகளுக்குப் போல் சொல்கின்றேன் அப்பனே. மற்றவர்களுக்காக உழையுங்கள் , உழையுங்கள் என்று. யாராவது சொன்னீர்களா இதுவரை அப்பனே அப்படி???  எப்படியப்பா உங்களுக்கு கஷ்டங்கள் வராமல் போகும்??? யானும் ஒரு விடயத்தை தெரிவித்தேன் அப்பனே. ஆனாலும் அனைவரும் பின் அகத்தியனே நிச்சயம் செய்கின்றோம். 
இதனால்  எங்களுக்கு அனைத்தும் தந்தருள வேண்டும் என்று நிச்சயம் யாராவது கேட்டீர்களா என்ன? 

நிச்சயம் அப்பனே (திருநெல்வேலியில் உள்ள பாவங்களை நாசம் செய்யும் பாவநாசத்தில் - பாபநாசம் ) யானும் லோபாமுத்திரையோடு அங்கே இருக்கின்றோம். அப்பனே அங்கு கேளுங்கள் நிச்சயம் என்ன வேண்டும் என்று (அங்கு) போய். 


(சத்சங்கம் நிறைவு)

அகத்திய மாமுனிவர் - கனோபஸ் நட்சத்திரம் பற்றிய விவரங்கள்:

- *பெயர்*: கனோபஸ் (Canopus)

- *தமிழ் பெயர்கள்*: அகத்தியம், அகத்தியர் (விண்மீன்), அகத்திய நட்சத்திரம்

- *நட்சத்திரக் கூட்டம்*: கரினா (Carina) விண்மீன் குழு

- *வகை*: மஞ்சள் வெண்மை நிற மிகப்பெரிய நட்சத்திரம் (Yellowish-white supergiant star)

- *திசை*: தெற்குப் பகுதி

- *பிரகாசம்*: இரவு வானில் 
இரண்டாவது மிக பிரகாசமான நட்சத்திரம்

- *தூரம்*: பூமியிலிருந்து சுமார் 310 ஒளியாண்டுகள்

- *பார்வை நேரம்*: ஜனவரி முதல் மார்ச் வரை தென் இந்தியாவில் தெற்குப் பகுதியில் இரவு வானில் தெளிவாகக் காணலாம்

தமிழ் பாரம்பரியத்தில் கனோபஸ் "அகத்தியர் விண்மீன்" என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது தென்திசை வானில் ஒரு சூரியன் போல பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரமாக வர்ணிக்கப்படுகிறது.

_______________________________________________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்காநகரம் மீனாட்சி தாயார் ஆட்சி செய்யும் மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

—————————————-

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் நிறைவு அடைந்தது.) 

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. அய்யா வணக்கம். கோடகநல்லூர் அகத்தியர் அபிஷேக ஆராதனை எப்பொழுது என்று தெரிவிக்க உத்தரவு வந்துள்ளதா? ஓம் அகத்தீஸ்வராய நமஹ.

    ReplyDelete
  2. வணக்கம் அகத்தியர் அடியவர்களே

    குருநாதர் அனுதினமும் இறையாற்றலை பெருக்குவதற்கு அருந்த சொல்லும் தீர்த்தத்தில்

    வில்வம் துளசி அருகம் புல் ருத்ராட்சம் வேப்பிலை இதனுடன்
    பசுஞ்சாணம் இங்கு பசு தானம் என குறிப்பிடப்படுவது சுத்தமான பசுஞ்சாண விபூதி. அதாவது சுத்தமான திருநீறு இதை அனைத்தையும் இரவில் ஒரு பாத்திரத்தில் இட்டு வைத்து அதிகாலையில் அருந்த வேண்டும்

    பசுஞ்சாண விபூதி... கவனத்தில் கொள்க.

    ReplyDelete
    Replies
    1. Thank you Deepan sir. I had doubt Bec we can't get cow dung .but we can try to get pure viboodhi... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

      Delete
  3. Thank You! Thank You!! Thank You!!!

    ReplyDelete
  4. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete