​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 30 April 2025

சித்தன் அருள் - 1849 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-5 !


51. சண்டிகேஸ்வரர் முன் வணங்கும் முறை பற்றி எடுத்து உரைக்க வேண்டுகிறேன்? (சிலர் கைதட்டுகிறார்கள்)

அப்பப்பா! இவன்தன், அவன் முன் கை தட்டினால் தான் கவனிப்பானா? அவன் முன் அமைதியாக அமர்ந்திருந்தாள் பொது அவன் கவனித்து விடுவான். அப்பா! நீ இதை எடுத்துக் கூறு இன்னும் கூட.

52.  பஞ்சபாண்டவர்கள் ஐவருக்கு ஒரு மனைவி என்று மகா பாரதத்தில் சொல்லப்பட்டு உள்ளது. இதன் மெய் தன்மை அகத்தியரின் வாக்கு வழியாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்பப்பா! ஒன்றை மட்டும் மறைமுகமாக குறிப்பிடுகின்றேன். அப்பா! தவறாகவே சித்தரித்துவிட்டார்கள் அப்பா! தர்மத்தை நிலை நாட்டவே, மனிதனை தலை நிமிர்த்தவே, இதற்க்கு வாக்குகள் நிச்சயம் உண்டு. பொறுத்திருக்க வேண்டும். இதனுடைய விடை, ராமாயணம் போலவே உள்ளது. நிச்சயம் இழுத்து செல்வேன். பொறுத்திருங்கள் அப்பா! 

53. ஐயா, பஞ்ச கவ்யம் உடல் ஆரோக்கியத்திற்கு நோய்களுக்கு மருந்தாக எடுத்துகொள்ளலாமா!

அப்பா! புரிந்து கொள்வீர்கள்.

54. "தமிழ்" பாரதத்தின் தேசிய மொழியாக வாய்ப்புள்ளதா?

அப்பா! இன்னும் மனிதர்களை திருத்த முடியவில்லை, திருத்திட்டு பின் இதற்கு பதிலை சொல்லுகின்றேன்.

55. பணிகின்றேன் குருவே🙏 அடியேனின் ஒரே ஒரு பொதுவான வினாவிற்கு மார்க்கம் தந்தருள வேண்டுகிறேன் இமய பர்வதத்தில் (ஷம்பாலா) என்ற தெய்வீக இடம் இருப்பதாக அறிகிறேன் அங்கு செல்ல அடியேன் விருப்பம் கொள்கிறேன் குருவே அங்கே செல்ல அடியேன் என் செய்ய வேண்டும் தயவுகூர்ந்து எடுத்துரைக்க வேண்டி தங்களை பணிகிறேன்.

நிச்சயம் உண்டு, ஆனால் இப்பொழுது இல்லை!

56.குருவே சரணம்! தலை வலிக்கான மருத்துவ தீர்வை உரைக்க வேண்டுகிறேன்!

அப்பப்பா! தலை கீழ் நிற்கச்சொல். 

57. அகத்தியர் அய்யவிற்கு வணக்கம்  உலகில் கோடிக்கணக்கான மக்கள் இறைவனை வணங்குகின்றனர்.. அதில் ஒவ்வொருவரின் செயல்களையும் யார் கவனித்து இறைவனிடம் முறையிடுகின்றனர்... திருவண்ணாமலையில் நடக்கும் அத்தனை செயல்களையும் ஈசன் கவனித்து கொண்டு தானே உள்ளார்... இல்லை மக்கள் தப்பித்து விடுகின்றனரா அனைவரின் செயல்களும் இறைவன் நோக்கி கொண்டுள்ளாரா..?

அப்பப்பா! சொல்லிவிட்டேன். அனைத்தையும், சூரியனும், சந்திரனும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அனைத்தையும் பதிவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நிச்சயம், யாரும் தப்பிக்க முடியாதப்பா. அப்பனே! இதை, பல வாக்குகளிலும் கூட உரைத்துவிட்டேன், அப்பனே! இதை ரகசியமாக எடுத்துரை, நீயும் கூட. இப்பொழுதுதான் அங்கங்கு, பதிவு, கண்காணிப்பு என்று. ஆனாலும் எப்பொழுதிலிருந்தே சூரியனும் சந்திரனும் கண்காணித்துக் கொண்டிருக்கிறானப்பா! நிச்சயம், யாரும் தப்ப முடியாதப்பா. சொல்லிவிட்டேன்! இதன் ரகசியம், ஏன் ஒருவனுக்கு அவன் முடிவு தெரியவில்லை என்றால், பத்தாண்டுகள் பதிவு செய்ததை சூரியனும், சந்திரனும் ஈசனிடம் முறையிட்டு, அதன் பின்னர்தான் ஈசனும் முடிவெடுப்பான், இவன் தன வயதை நீட்டிவைக்கலாமா? அல்லது இன்றோடு முடித்துவிடலாமா என்றெல்லாம். இதற்க்கு, சந்திரனும் கூட தீர்வுகள். சூரியனுடைய கண்கள், சந்திரனுடைய கண்கள் சாதாரணம் இல்லையப்பா. நீங்கள் தவறாக பேசலாம், யாருக்கும் தெரியவில்லையே என்று. நிச்சயம் சூரியனும், சந்திரனும் பார்த்துக் கொண்டே. இதனால், இப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது என்று யோசிக்கலாம், ஆனால் பத்து வருடங்கள் மட்டுமே. அனைத்தையும் சேகரித்து, சேகரித்து, ஒரு நாள், அப்பொழுது புரிந்து கொள்வீர்கள், ஈசனுடைய ஆட்டம்.

58. அப்பா! அப்படியானால் பத்தாண்டுகள் வரை ஒரு மனிதன் என்ன தவறை வேண்டுமானாலும் செய்து கொண்டே போகலாம் அல்லவா?

அப்பப்பா! பத்து ஆண்டுகள் என்பது சூரியனுக்கு அரை நிமிடம்.  

59. அகத்தியர் அப்பாவிற்கும் லோபா அம்மாவிற்கும் பணிவான வணக்கங்கள்!  குலதெய்வத்திற்கு முன்னோர்கள் பலி கொடுத்து வணங்கி இருந்தால் தற்போதைய சந்ததியினரும் அவ்வாறே வணங்கினால்தான் குலதெய்வம் ஏற்றுக்கொள்ளும் என்று கூறுகிறார்கள்.  இது குறித்து தாங்கள் விளக்கம் அளிக்கும்படி தங்களின் பொற்பாதங்களை பணிந்து கேட்டுக்கொள்கிறேன். அப்பா! இன்னும் விவரிக்கிறேன், இதனுடைய ரகசியத்தை.

அப்பப்பா! உங்களை பார்த்து நிச்சயம் ஒரு கேள்வியை கேட்கின்றேன். குழந்தைகள் இருக்கிறதல்லவா? சிந்தித்து செயலாற்றுங்கள் அப்பா!  நிச்சயம் அனைத்தும் இறைவனுக்கு குழந்தைகள்தான் அப்பா. 

60. தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திரம் நட்சத்தித்தில் அதிகம் நடைபெறுவதன் தாத்பரியத்தை விளக்குமாறு தங்களின் பொற்பாதங்களை பணிந்து கேட்டுக் கொள்கிறேன். நன்றி இறைவா

அப்பப்பா! சித்திரை, வைகாசி தன்னில், அறுபடை (வீடுகளுக்கு) போகச்சொல்! இதன் ரகசியத்தை பின்னர் உரைக்கின்றேன்!

61. பிரிந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் அதற்கு பரிகாரம்!

அப்பப்பா! இப்பொழுது இல்லை, இதற்கு தீர்வுகள்.

62. ஓம் அகத்தீசாய நம. சித்தர்களை வழிபடுபவர்களுக்கு என்றும் பொருளாதார பிரட்சனை மற்றும் மாந்திரீக பாதிப்புகள் இல்லாத பாதிக்காத வண்ணம் கருணை கூர்ந்து அருள் செய்யுங்கள் குருவே.

அப்பப்பா! நிச்சயம் இருக்காதுதான் அப்பனே! அப்படி இருந்தாலும், யானே வந்து அதை அகற்றிவிடுவேன் அப்பா! அதுமட்டும் இல்லாமல், யார் ஒருவன் இதை செய்கிறானோ, அதை நீங்கள் அனுபவித்தாள், அது அவந்தனுக்கு போய் சேருமப்பா. இதனால் அவனும் கூட திருந்துவதற்கு வாய்ப்பு. ஆனாலும் இவை எல்லாம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது கலியுகத்தில். ஏன் என்றால், தான் செய்த தவறுகள் எல்லாம், கலியுகத்தில் தன்னையே கொல்லும் என்றெல்லாம் அறிந்திருக்கவில்லை. கலியுகத்தில், யாங்கள் இருக்கின்றோம், கவலையை விடுங்கள் அப்பா!

63. ஐயா காலபைரவ அஷ்டகத்தைப் பற்றிக் கூறுங்கள்

அப்பா! இதை 108 நாட்கள் படித்து வரச்சொல். பின்பு உரைப்பேன், இதன் ரகசியத்தை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 28 April 2025

சித்தன் அருள் - 1848 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-4 !


38. பொதுவாக, இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வந்தால் அவர்களின் ஆசி உள்ளது என்று எடுத்துக் கொள்வதா? அல்லது நமக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வதா? 

இறந்தவர்களால் தான் மோட்சம் என்று, அப்பப்பா, அதனால் தான் அவர்கள் அனைவருக்கும் சேர்த்து இவன்/இவள் செய்ய வேண்டும் அப்பா. இதனால், மோட்சத்தை கொடு கொடு என இறையிடம் இறைஞ்சுவது பற்றி, வரும் காலத்தில் எடுத்துரைப்பேன், அன்பு மகன்களே1/மகள்கள்களே!

39. குலதெய்வமே தெரியாதவர்கள், குலதெய்வத்தை அறிந்து கொள்வதற்கான எளிய வழிமுறை உள்ளதா?

அப்பப்பா! எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டார்கள். இங்கு ஒருவன் சொன்னான், அங்கு ஒருவன் சொன்னான் என்று உண்மையை மறந்து விடுவார்கள். பின்னர் கேட்டால், அங்கு அப்படி சொல்லிவிட்டார்கள் என்று முடித்துவிடுவார்கள். நிச்சயம் அமைதியாக இருக்கச்சொல். உணர்த்துகின்றேன்! உண்மை பொருளை.!

40. அகத்தியர் டிரஸ்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கப்பட்டு அதன்மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவிட அருள் புரிய வேண்டும்!

அப்பா! உன் உழைப்பால் எது செய்தாலும் புண்ணியமே! பிறர் கொடுத்து அதை செய்தால், நிச்சயம் ஒருநாள் அது உன்னை அடிக்குமப்பா. எதற்கு, என் பெயர் வைத்து இதை செய்ய வேண்டும். ஏன் உன் பெயர் வைக்கக்கூடாதா இதற்கு? 

41. அனைத்து அகத்திய சகோதர சகோதரிகளும் இணைந்து பல நற்பணிகள் செய்ய whatsapp குழு வேண்டும்!

அப்பா! இவ்வாறு குழு ஏற்படுத்தினாலும், முதலில் நன்றாகத்தான் இருக்கும். பின்னர் அடுத்தவர், அடுத்தவர் என்று பொறாமை பட்டு பின் இதை யார் செய்தால் என்ன என்று மாறும். மற்றொருவன், யானே செய்கின்றேன் என தீர்மானிப்பான். அப்பா! போட்டிக்குள் போட்டி.  இதைதானப்பா, காலங்கள், காலங்களாக யான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஒருவனுக்காவது, ஒருத்திக்காவது பின் நல் எண்ணம் உண்டா அப்பா? 

42.சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை கடல் நீரில் உட்புகுதல் எந்த ஆண்டு நிகழும்

நிச்சயம் உண்டு! இக்கேள்விக்கான பதில் இப்போது வேண்டாம். இதன் ரகசியத்தை நிச்சயம் பின் உரைப்பேன்.

43.மனிதர்கள் வாழ்நாளில் இறுதி நாளை தெரிந்து கொள்ளாததினால் பற்பல தவறுகளையும் அநியாயங்களையும் அக்கிரகங்களையும் பாவங்களையும் செய்து கர்மாக்களை சேர்த்துக் கொள்கின்றார்கள் அப்பேர்ப்பட்ட மனிதர்கள் அனைவரும் தங்களின் வாழ்நாள் இறுதி நாளை தெரிந்துகொள்ள ஆயுட்காலத்தை அறிந்து கொள்ள உபாயம் கூற வேண்டும்

அப்பப்பா! எவன் ஒருவன் அதிக பாபங்களை செய்கிறானோ, அவனுக்கு விதி முடியப்போகிறது என்று அர்த்தம்.  இறைவன் மிக மிக கெட்டிக்காரணப்பா. அதனால் தான் சாவை மறைத்து வைத்திருக்கின்றான், தெரிவித்து விடு. 

44. இந்த இடத்தில் என்னுடைய ஒரு கேள்வி உள்ளது. நான் ஒரு வங்கியில் வேலைக்கு போகிறேன் என்றால், அறுபது வயதில் ஓய்வு பெறுவேன் என தெரியும். அது போல் ஒருத்தனுடைய மரணத்தை முன் கூட்டியே தெரிவித்து விட்டால், அவன் தவறு செய்வதை குறைத்துக் கொள்வான் அல்லவா?

அப்பப்பா! வங்கியில் நீ தவறை செய்து விடு, அவர்கள் உன்னை என்ன செய்கின்றார்கள் என்று பார்த்துக்கொள்.

45. நான் கேட்க்கும் கேள்வி என்ன வென்றால், ஒருவனுக்கு தன் முடிவுகாலம் முன்னரே தெரிந்துவிட்டால், அவன் தவறு செய்வதை குறைத்துக் கொள்கிற வாய்ப்பு கிடைக்கும் இல்லையா?

அப்பப்பா! எவன் ஒருவன் 108 திருத்தலங்களுக்கு தொடர்ந்து சென்று வருகின்றானோ, அவன் ஆயுள் பாவத்தை யான் கூறுவேன் அப்பா!  

46.குருவே திருமணத்திற்காக ஜாதகம் பார்ப்பது தமிழகத்தில் வேரூன்றி உள்ளது இங்கு ஜாதகம் சரிவர பார்க்கும் ஜோதிடர்கள் யாரும் இல்லை அவர்கள் தங்களுக்கு தெரிந்த அரைகுறை அறிவோடு கூறி பணம் பெற்றுக் கொள்கின்றார்கள் இருப்பினும் ஜாதகம் மற்றும் நட்சத்திரம் ஜாதக கட்டம் இவற்றையெல்லாம் பார்த்து திருமணம் செய்வது நடைமுறையில் அவசியமா நீங்களே கூற வேண்டும்!

காசுகள் பெற்றுக் கொள்கிறான் என்றால், அவன், பாபத்தை பெற்றுக் கொள்கின்றான் என்று அர்த்தம். ஒரு நாள் வாழ்க்கை ஏற்படுத்த வழி விட்டால், மிக புண்ணியமப்பா. அதற்க்கு கூட காசுகள் தேவைப்படுகின்றது இப்பொழுது. இறைவன் யாருக்கு யார் என்று தீர்ப்பளித்துத்தான் இங்கு பிறக்க வைக்கின்றான். அதனுள்ளே, அவசரப்பட்டு, எந்தனுக்கு திருமணம் வேண்டும், தன் மகளுக்கு திருமணம் வேண்டும், தன்  மகனுக்கு திருமணம் வேண்டும் என்று உடனடியாக செய்துவிட்டு, (வாழ்க்கை எங்கோ செல்கின்றது). அதனால் தான் அப்பா, கலியுகத்தில் திருமணம் மிக கடினம். இதற்க்கு விடிவெள்ளியாக பல வாக்குகளை சொல்லிக்கொண்டிருக்கின்றேன்! அவைகளை படியுங்கள் அப்பா! இன்னும், உண்மையை சொன்னால், அதை பொய் என்று சொல்வான் மனிதன். உண்மையை கற்பித்தால் நிச்சயம் அதை பொய்யானவன் பொய் என்று சொல்வான். அனைத்தையும் அடித்து நொறுக்கிக்கொண்டு இருக்கின்றோம், உண்மை பொருளை விளக்க. ஆகவே, நன்றாக வாழப் பழகுங்கள் அப்பா! இன்னும் விளக்கங்கள் அளிக்கின்றேன் அழகாக.

47.குருவே சரணம் பிரபஞ்சத்தில்  திருமண வயது அடைந்தும் திருமணமாகாமல் உள்ளார்கள் அவர்களின் மன துயரோடு உள்ளார்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதே மன துயரோடு உள்ளார்கள் வாழ்வே வெறுத்து விரக்தி நிலை அடைந்து உள்ளார்கள் அவர்களின் மனதுயர் நீங்க ஏதேனும் உபாயம் கூற வேண்டும்

ஏன் திருமணம் நடக்கவில்லை என்பதை அவனை கேட்கச்சொல், அவன் செய்த தவறுகளை சொல்கின்றேன்.  அப்பப்பா! சொல்லிக்கொண்டே இருக்கின்றேன்! இறைவன், தகுதியானவனுக்கு செய்வான். தகுதி இல்லை என்றால், மெதுவாகத்தான் செய்வான். அதிகமாக தவறுகளை செய்து விட்டு திருமணம் ஆகவில்லை என்று கேட்பது, அடுத்தவன் வாழ்க்கையை கெடுப்பது, நிச்சயம் அடுத்தவள் வாழ்க்கையை கெடுப்பது அப்பா! எவ்வாறு நியாயம்? இறைவன் விட்டு விடுவானா என்ன? எங்கு நியாயம் இருக்கின்றதோ, அந்த பக்கத்தில் தான் இறைவன் நிற்பான். இஜ்ஜென்மத்தில் அவரவர் செய்த கர்மா, திருமணத்தை தடுக்கிறது, என்பேன்.  

48.  தந்தையே வணக்கம்.நான் மாற்று மதத்தை சார்ந்தவன்.தந்தையே தேவமாதா கன்னி மரியாவை பற்றி வாக்கு கூறவும்.சிலர் அவரை விமர்சனம் செய்கின்றனர் தந்தையே!

அப்பப்பா! பின் ஆசீர்வாதங்கள். நிச்சயம் அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதங்கள் உண்டு.  இதன் ரகசியத்தை இன்னும் செப்புவேன்! பொறுத்திருந்தால். அனைவருக்கும் புரியும் படி சொல்கின்றேன். ஒரு கற்புக்கரசியாக இருந்து, அனைவரையும் காத்தவள். நிச்சயம் வெவ்வேறு வடிவமாக எடுத்து, நிச்சயம் இன்றளவும் தன் குழந்தைகளை காத்துக் கொண்டிருக்கின்றாள். நலமாக! ஆசிகள்! ஆசிகள்!

49. குல தெய்வக் கோவில் வழிபாட்டில் ஒவ்வொரு தலைமுறையும் அடுப்பு திறக்கும் நிகழ்வு, காது குத்துதல் நடக்கிறது. இதன் முக்கியத்துவம் என்ன ? இது முன்னோர் வழிபாட்டில் ஓர் அங்கமா? ஆம் எனில் அதை சைவ வழிபாட்டில் மேற்கொள்வது எப்படி? அங்குள்ள காவல் தெய்வ பலி வழிபாட்டை தவிர்ப்பது எப்படி? குருநாதர் அறிவுரை வீட்டு பெரியோருக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் 

அப்பா! இப்பொழுது சொன்னால் புரியாதப்பா! சிலநாட்களுக்குப் பின் இதை உரைக்கின்றேன். அப்பப்பா! புத்திகெட்ட மனிதர்களப்பா! சிலர் கேட்ப்பார்கள், சிலர் கேட்க மாட்டார்கள். இப்பொழுது தேவை இல்லை இதற்கு பதில்.

50. பொறுப்பு, கடமைகளில் ஈடுபடும்போது சிறு தயக்கமும், தடுமாற்றம் , குழப்பம் வருகிறது.தூங்க செல்லும் நேரத்தில் தூக்கமின்மையும் அதிகாலை விழிக்கும் நேரத்தில் ஆழ்ந்த உறக்கமும் அல்லது அசுப கனவு(காம) ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க குருநாதர் அருள வேண்டும்.

இதற்கெல்லாம் காரணம், முதலில் கேட்டாயே (எதிர் மறை செயல்கள்) அது தான் காரணம். அவற்றை நீக்கினால் கூற முடியும். அவற்றை நீக்கியபின் இதற்கான பதிலை கூறுகின்றேன். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1847 - அன்புடன் அகத்தியர் - மை சன் பத்ரேஸ்வரர், வியட்நாம்!









23/3/25 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: மை சன் பத்ரேஸ்வரர் தொகுப்பு சிவன் கோயில்கள்... வியட்நாம்.

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே இவ்வாறாக அப்பனே... இந்திரன் அப்பனே பல தேசங்களுக்கும் கூட அப்பனே சரி வழியாகவே அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அங்காங்கு அப்பனே... பரப்பி!!!! அறிந்தும் கூட!!

இதனால் அப்பனே பின் மீண்டும் மேல் லோகத்திற்கு சரியாகவே... சென்று அப்பனே ஆட்சி புரிந்து நல்விதமாகவே!!

அப்பனே மீண்டும் அறிந்தும் கூட இதனால் 
அப்பப்பா... அறிந்தும் எதை என்று புரிந்தும் பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே 

இவ்வாறாகவே அப்பனே பல பல அப்பனே மீண்டும் மீண்டும் அவன்.. அப்பனே பின் அதாவது..அப்பனே பின் அங்கிருந்து அதாவது..தாம் தான்...என்ன? ஏது?? தவறுகள்!!.... செய்தோம்!? என்பதையெல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... மீண்டும் அப்பனே புவி தன்னில் பிறப்பெடுத்து.. அப்பனே பின் அரசனாகி மீண்டும் அப்பனே
பின் பல வழிகளிலும் கூட இறை பலத்தை.. பரப்பினான் என்பேன் அப்பனே!!!.. அப்படிப்பட்டவர்கள் தான் பல அரசர்கள் என்பேன் அப்பனே!!

இன்னும் அப்பனே பின் அவ் அரசர்கள் எல்லாம் யார் யார் என்று!!!

(நல்லாட்சி புரிந்த அரசர்கள் எல்லாம் முற்பிறவியில் யார் யார் என்பதை)

அதாவது அப்பனே இந்திரன்.எவ்? அரசனாகப் பிறந்தான்? அதாவது மனிதரிடத்தில் அப்பனே அதாவது பூலோகத்தில் அப்பனே பின்.. அறிந்தும் கூட வரும் காலத்தில் யான் செப்புவேன் அப்பனே. விவரமாகவே அப்பனே.

அப்பொழுதுதான் உங்களுக்கு சரியாகவே பின் புரியுமப்பா!!!

அப்பனே ஏன் எதற்கு இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் பலமாக அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வாறு கிரகங்களுக்கு ஏற்பவே அப்பனே நிச்சயம் இந்திரன் சரியாகவே அப்பனே பின் அறிந்தும் கூட... பின் இவ்வாறாகவே!!!

அப்பனே இதனால் பின் அதாவது நிச்சயம் தன்னில்  கூட... காலம் நிச்சயம் அறிந்தும் கூட பின்... எப்பொழுது? பின் சூரியன் இருக்கின்றான்??? அறிந்தும் எதை என்று புரிய அப்பனே!!!

சந்திரன் இன்னும் அப்பனே... பின் அறிந்தும் அறிந்தும்.. சில நட்சத்திரங்கள் அப்பனே... அதாவது புவி இருக்கும் வரை நிச்சயம் தன்னில் கூட!!!!

இதனால் அப்பனே!!! சில மாற்றங்களால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம்.. நீரும் கூட !! அதாவது கடல் நீரும் கூட... இவ் மலையை சூழ்ந்து அப்பனே.. அப்படியே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மூடிற்று என்பேன் அப்பனே!!!

அப்பனே பல ஆண்டுகள் நிச்சயம் அப்பனே நீர்.. அப்பனே இங்கு அதாவது.. கடல் அறிந்தும் கூட பின்...இவ் மலையும் கூட மூழ்கிட்டு... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அப்படியே திருத்தலமும் மூழ்கிற்று !!! என்பேன் அப்பனே. 

இவ்வாறாக பின் இதை தன் அப்பனே பின்... அவ்வாறாகவே அப்பனே பின் அறிந்தும் எதை என்று கூட மீண்டும் அப்பனே இவை தன் கூட.. மெது மெதுவாக அப்பனே மீண்டும் அப்பனே கடல் உள்ளிழுக்க... கடலானது பின் நோக்கி செல்ல அப்பனே இவை மீண்டும் புத்துணர்ச்சி பெற்றது அப்பனே!!

(கடல் நீர் பின்வாங்கி மீண்டும் ஆலயம் வெளிவந்தது!!!.... இதனைக் குறித்து சற்று விரிவாகவே புரிந்து கொள்ளலாம்... சபரிமலையில் அன்புடன் அகத்தியர் சித்தன் அருள் 1815ல் ராஜராஜ சோழன் கடல் பயணம் மேற்கொண்டபோது கடலுக்கு அடியே ஆலயத்தின் பிம்பத்தை கண்டு அதை மனதில் வைத்துக்கொண்டு தஞ்சை பெரிய கோயிலை உருவாக்கினான் என்பதை பற்றியும் புஷ்கர் ஆலயவாக்கில் சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1778 விசுவாமித்திரர். குமரிக்கண்டம் கடலில் மூழ்கியது குறித்த வாக்குகள்... நினைவில் வரலாம். 

இறைவனுடைய கட்டளைப்படி ஒவ்வொரு கால சூழ்நிலைக்கு ஏற்ப கடல் நிலத்தை மூடி மூழ்கடிப்பதும் மூழ்கடித்த கடல் பின்வாங்கி நிலப்பகுதி நகரங்கள் தோன்றுவதும் இறைவன் ஆணைப்படி நடந்து வருகின்றது என்பதை புரிந்து கொள்ளலாம். 

அதேபோன்றுதான் இந்த வியட்நாம் ஆலயம் தேவேந்திரனால் உருவாக்கப்பட்டு பின்பு கால மாற்றங்களால் கடலால் மூழ்கடிக்கப்பட்டு மீண்டும் கடல் பின் வாங்கிய பொழுது ஆலயத்தின் நிலையை கண்டு மீண்டும் பிறவி எடுத்து வந்து ஆலயத்தை புனரமைப்பு செய்து இருக்கின்றார் இந்திரன்.

இந்த நூற்றாண்டில் அதாவது 1950 ஆண்டுகளில் தனுஷ்கோடி கடலில் மூழ்கியதும் பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதும் நமக்கு சமீப காலங்களில் கண்டறிந்த கேட்டறிந்த விஷயங்கள். 

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி ஆலயத்தின் குளங்கள் கல்வெட்டுக்கள் இன்னும் பல விஷயங்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றது.


கதிர்காம வாக்கில் சித்தன் அருள் 1787 கதிரை மலை வாக்கில் சித்தன் அருள் 1788 முருகன் கடல் நீர் வந்து மூழ்கடிகாமல் இருப்பதற்கு காவலாக இருப்பதும்... செந்தூரில் கடல் அலைகள் முருகனிடம் வேண்டிக் கொண்டு இருப்பதும் நாம் வாக்குகளில் படித்து கடந்து வந்திருக்கின்றோம் அதையெல்லாம் இதோடு ஒப்பிட்டு சிந்திக்கும் பொழுது பல விஷயங்கள் புரிய வருகின்றன




இதனால் அப்பனே மண்ணும் அப்பனே பின் அறிந்தும் கூட பின் மூடிற்று!!! என்பேன் அப்பனே இத்திருத்தலங்கள் கூட அப்பனே!!!

இதனால் அப்பனே மீண்டும் அப்பனே.. அறிந்தும் எவை என்று அறிய மீண்டும் நிச்சயம் தன்னில் கூட பின்... மனித ரூபம் (பிறவி) எடுக்க வேண்டும் பின் இவ்வாறு எடுத்தால் தான் நிச்சயம் நாம் தனே!!! (ஆலயத்தை மீண்டும் புனரமைக்க) என்று நிச்சயம் இந்திரன் கூட!!

இதனால் அப்பனே பின் அதாவது இறைவனிடத்தில்... அதாவது பூலோகத்திற்கு செல்ல வேண்டும்.. நிச்சயம் பின் அறிந்தும் என்றெல்லாம்... நிச்சயம் தன்னில் கூட ஒரு.. இளவரசியின் பின் வயிற்றில் பின் அறிந்தும் பின் பிறந்து அவந்தனுக்கும் கூட எதை என்று அறிய.. அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சரியாகவே அவந்தன் கூட நிச்சயம் சரியாகவே பின் ஒளி பொருந்திய அப்பனே பின் அறிந்தும் கூட பின் வீர வைராக்கியத்துடன் நிச்சயம் பிறந்ததற்கேற்ப நிச்சயம் பின் வெற்றி கொண்டான் அதாவது ஜெயம் கொண்டான் நிச்சயம் தன்னில் கூட!!

ஜெயம் என்றே அப்பனே பெயரும் வைத்தனர் என்பேன் அப்பனே!!!

(தேவேந்திரனின் மனித பிறவி)

(ஜெய இந்திரவர்மன் வியட்நாம் சம்பா இன பேரரசர்.. வியட்நாமை ஆண்ட அரசர்களில் குறிப்பிடத்தக்கவர் இத் தகவல் வியட்நாம் வரலாற்றில் உள்ளது) 

அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட  இவ்வாறெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஆட்சி புரிந்து நலமாகவே பின் அறிந்தும் கூட


பின் அதாவது மீண்டும் சீரமைக்கின்றான் இத்திருத்தலத்தை அப்பனே!!!

அப்பனே ஆனாலும் அறிந்தும் கூட.. பல வழிகளில் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட பரப்பினான் அப்பா அப்பனே பின் ஈசனை பற்றி எல்லாம் அப்பனே. 

நிச்சயம் அப்பனே இவ்வாறாகத்தான் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் அதாவது அறிந்தும் கூட பின் அதாவது அவ் ஜெயன் அப்பனே

 நல்விதமாக  """""""திருவாசகத்தையும் கூட பரப்பினான் என்பேன் அப்பனே!!!!

""""" கோளாறு பதிகத்தையும் கூட பரப்பினான் என்பேன் அப்பனே!!!

எதை என்று புரிய அப்பனே இவையெல்லாம்.. அப்பனே நிச்சயம் அப்பனே.... இந்திரனும் சந்திரனும் கூட.. நிச்சயம் தன்னில் கூட பிறவிகள் எடுத்து அப்பனே பல அரசர்களாக ஆண்டு வந்து அப்பனே... மீண்டும் மீண்டும் அப்பனே இறைவனிடத்தில் சென்று... மீண்டும் பிறக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!

அவ் தத்துவம் யாருக்கு புரியுமப்பா????

யாருக்கும் புரியாதப்பா!!


அப்பனே இவ்வாறாகவே அரச வழியில் வந்தவர்கள் எல்லாம் இன்னும் அப்பனே.. எதை என்று அறிய அப்பனே பின் அப்பனே இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள் அப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே இதனால்தான் அப்பனே.. பின் அவ் தேசங்கள் அப்பனே சரியாகவே பின் அறிந்தும் எதை என்று புரிய... சரியான தண்டனைகளே... மேலோகத்தில் அப்பனே இந்திரன் என்னென்ன கொடுக்கின்றானோ.. அவையெல்லாம் அப்பனே கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே 

வரும் காலத்தில் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய.. மீண்டும் அப்பனே எதை என்று புரிய... அப்பனே பின் சரியான வழியில் அப்பனே நடப்பதற்கு பல அரசர்களும் கூட நிச்சயம் பிறவிகள் எடுத்து.. நிச்சயம் மக்களை காக்கவே.. அப்பனே பின் மீண்டும் அப்பனே... அவரவர் அமைத்த திருத்தலங்களை கூட அவர்களே.. சரி செய்து விடுவார்கள் என்பேன் அப்பனே!!!

அப்பனே இதனால் அப்பனே மக்கள் ஏன் எதை என்று புரிய அப்பனே... இதற்கு பின் நிச்சயம் தன்னில் கூட... அதனால்தான் அப்பனே முன்பே பின் சித்தர்கள் யாங்கள் வந்து அப்பனே பின் மனிதர்களை நல்வழிப்படுத்தி... அப்பனே அதனுள்ளே நீங்களும் கூட புண்ணியங்கள் பெருக்கிக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே இன்னும் நலமாக... அப்பனே... உங்களுக்கு வேண்டியதெல்லாம் அப்பனே நிச்சயம் தானாகவே வரும் என்பேன் அப்பனே.

அதனால்தான் கடமையைச் செய்யுங்கள் கடமையைச் செய்யுங்கள் என்பேன். அப்பனே. 

கடமையை விட்டு இருந்தாலும் அப்பனே எதை ஏது என்று அறிய அறிய.. யார் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட திருத்தலத்தை... உருவாக்கினார்களோ !!! அப்பனே அவர்களே அப்பனே... இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் அதாவது ஒரு பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே 

தன் வினை தன்னைச் சுடும் என்று... உங்களுக்கு தெரியும் அல்லவா!!!

(அரசர்களால் உருவாக்கப்பட்ட பல பழமையான புராதனமான பவித்திரமான ஆலயங்களை அவர்களே பிறப்பெடுத்து வந்து புனரமைப்பு செய்வார்கள் இதற்கு இடையில் மனிதர்கள் தலையெடுத்து தலையிட்டு சீரமைப்பு செய்கின்றோம் என்ற பெயரில் நன்கொடைகள் இன்னும் பல காரியங்களில் ஈடுபடுவதால் வினை கண்டிப்பாக சுடும்!!

சில ஆலயங்கள் மிகப் பெரிய பழமையான ஆலயங்கள் எல்லாம் அதற்கான புனரமைப்பு பணிகள் தடைகள் ஏற்பட்டு மேலும் தொடர முடியாமல் இருப்பதற்கும் காரணங்கள் இருக்கின்றது)

அப்பனே இதனால் அப்பனே இந்திரன் சரியாகவே அப்பனே இந்திரனுக்கு பின் பல பாடங்களையும் கூட யான் சரியாகவே கற்பித்தேன்... நல்விதமாகவே அப்பனே. 

அப்பனே இதனால் எதை என்று புரிய இதனால் தான் அப்பனே நிச்சயம் இத் திருத்தலங்கள் எப்படி அமைக்கப்பட்டது என்றால் அப்பனே நிச்சயம் அதாவது அப்பனே பின் அதாவது கிரகங்கள் தன்னைத்தானே அப்பனே சுற்றுகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் ஒரு ஒளியானது அப்பனே அறிந்தும் கூட.. அதாவது பின் எதை என்று அறிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்படி சிவப்பு நிறத்திலும் அப்பனே மஞ்சள் நிறத்திலும் அப்பனே நிச்சயம் அறிந்து... இன்னும் இன்னும் அப்பனே பின் அறிந்தும்... நீல நிறத்திலும் கூட....... அப்பனே ஒவ்வொரு கிரகத்திற்கு ஏற்ப அப்பனே நிறங்களாக பிரிந்து அப்பனே நிச்சயம் அவை பூமியில் வருமப்பா!!!

அதை சரியான நேரத்தில் அமைத்து அறிந்தும் கூட... இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஒளி பொருந்தியவராக... அப்பனே பல அரசர்கள் ஏன்?... அங்கும் இங்கும் திரிந்தார்கள் என்றால் அப்பனே... நிச்சயம் அங்கங்கு.. அப்பனே. நிச்சயம் அவை தன்(ஒளி) படுகின்றது அவர்களுக்கு தெரியுமப்பா!!!

அங்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே ஆட்சி புரிந்தார்கள் என்பேன் அப்பனே... சில தோல்விகள் வருகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவர்களுக்கு புரியுமப்பா சரியாகவே!!

அதாவது எங்களை நாடி!! நாடி !!

(குருநாதரை பல அரசர்கள் நாடி நாடி ஒவ்வொன்றையும் கேட்டு அரசாட்சி புரிந்த நிகழ்வுகள் குருநாதருடைய வாக்குகளில்

சித்தன் அருள் - 1117 - அன்புடன் அகத்தியர் - நெடார். பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!

விளக்கங்கள் ஓர் முறை என்னை (அகத்தியரை) நாடினான் ராச ராச சோழன். 

இதையென்று அறிவதற்கு ""இவ்வுலகத்தை ஆள வேண்டும்,ஆள வேண்டும்  பக்திகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டறிந்தான் சோழன்.

சித்தன் அருள் - 1120 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் வாக்கு - சென்னீஸ்வரர் ஆலயம்!

ராஜேந்திர சோழன் கடைசியில் என்னிடத்திலே (அகத்தியரிடம்) வந்தான்.

இதையென்று அறியாமல், அறியாமல், இவையன்றி கூற அவந்தனுக்கும் யாங்கள் வழிகள் காண்பித்தோம்.

காண்பித்தோம்!! இப்படி செய்தாலே ...நன்று!!! என்று!!! 

சித்தன் அருள் - 1164 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்!

ஆனாலும் மகேந்திர வர்மனும் என்னுடைய பக்தனே என்று யான்!!!...கூறுவேன் 

யான் இவ்வளவு பக்தனாக இருந்து.... நிச்சயம் சில மனிதர்களையாவது யான் காக்க வேண்டும் !!
காக்க வேண்டும் நிச்சயமாய் இதையென்று கூற..... ஆனாலும் இறைவன்கள் எதை என்று கூற இன்னும் உண்மையான பக்திகளும் நல்விதமாகவே மனிதர்கள் செலுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதனால் நிச்சயம் பின் காக்க வேண்டும் நிச்சயம் மனிதர்களை!!!!!

அகத்திய முனிவரே!!!!!

ஏதாவது ஒரு வழியைச் சொல்லும்!!!!!!!

என்று கூட பின் மகேந்திரவர்மனோ என்னிடம்.!!! 

சித்தன் அருள் - 1156 - அன்புடன் அகத்தியர் - நீலகண்டேஸ்வரர்/ சௌந்தர்யேஸ்வரர் திருக்கோயில். இருகூர். ஒண்டிப்புதூர், கோயமுத்தூர்

கரிகாலசோழன்.... அகத்திய முனிவரா!!!!!! பின் அவர்தனை யான் மனதில் நினைத்துக் கொண்டே இருக்கின்றேன்!!!!

அவந்தன் அன்பு மிகப்பெரியது!!!! எந்தனுக்கு!!!....

அகத்தியன் எதை என்று கூறாமலே நிச்சயம் இவன் வந்த பொழுது பின் நிச்சயமாய் யான் முன் தோன்றினேன் கரிகால சோழன் முன்னே!!!!

பின் அவந்தனும் என்னை பின் அணைத்துக்கொண்டு எதையென்று கூற...... 

முனிவரே!!!!.... உன்னைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனாலும் நீ!!! எப்படி?? எதை என்று கூற எதனை நம்பி?? என்னிடத்தில் வந்தாய்?? என்று கூட.... எதையென்று கூட.... 

அன்பு என்றாலே எந்தனுக்கு உயிர்!!!!!!

இதையன்றி கூற இதனால் பின் இவ்வுலகத்தில் சாதிக்கக் கூடியது என்னவென்றால் அன்பின் மூலமே!!!! அதனால் நிச்சயம் ...

எதை வேண்டுமென்று சொல்!!!! என்று கூட....

பின் கரிகால் சோழனோ இதையன்றி.... நிச்சயமாய் வரும் காலங்களில் நிச்சயமாய் கலியுகத்தில் முனிவரே!!!! என்னென்ன நடக்கப் போகின்றது என்று கூட யான் அறிவேன்!!! ஈசன் ஞானத்தால்....

ஆனாலும் உந்தனுக்கே அனைத்தும் தெரியும் அதனால்...யான் மனதில் நினைத்ததை நீயே கூறு என்று கூட ...

நிச்சயம் நீ நீர் நிலைகளை ஏற்படுத்துவாய் பல மனிதர்களுக்கும் எதை எவற்றிலிருந்து வருவது என்று கூட நல்முறையாகவே நீ தாராளமாகவே ஏற்படுத்தலாம்!! உன்னை யாரும் அசைக்கவும் முடியாது!!



இன்னும் பல பல அரசர்கள் 

குருநாதர் கூறிய முன் வாக்குகளில் அரசர்கள் இன்னும் ஏனைய அரசர்கள் பாண்டியன் சூர்யவர்மன்  சத்ரபதி சிவாஜி இன்னும் எவ்வாறு எல்லாம் அகத்தியர் பெருமானை நாடி நாடி.. என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் ? என்பதை கேட்டு அறிந்து திருத்தலங்கள் அமைத்ததும் ஆட்சி புரிந்ததும் மக்களை காத்ததும்.. குருநாதரின் இவ் வாக்குகளை மீண்டும் படித்து அறிந்து கொள்ளலாம்)

அதனால் அப்பனே நிச்சயம் அவர்கள் அங்கு வந்து... அப்பனே மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மீண்டும் இளமையாகவே வாழ்ந்தார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் தான் அப்பனே பல ஆண்டுகள் ஒவ்வொரு அரசனும் அப்பனே வாழ்ந்தார்கள் என்பேன் அப்பனே!!!

(நாம் படித்த வரலாற்றில் அரசர்களுடைய ஆயுட்காலம் என்பது வேறு... மனிதர்களால் உருவாக்கப்பட்டவை எழுதப்பட்டவை!!.. ஆனால் உண்மையில் நல்லாட்சி புரிந்த பக்திமான் அரசர்கள் அனைவரும் நீண்ட காலம் வாழ்ந்து அரசாட்சி செய்திருக்கின்றனர்.. அதில் குறிப்பாக குருநாதர் சூரியவர்மன் சுமார் 500 ஆண்டுகள் வாழ்ந்து ஆட்சி புரிந்திருக்கின்றான் என்று குருநாதர் வாக்கில் கூறும் பொழுது தான் நமக்கு புரிய வருகின்றது... இன்னும் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் கரிகால் சோழன் சேரர்கள் பாண்டியர்கள்.. விஜயநகர பேரரசுகள் கிருஷ்ணதேவராயர் திருமலை நாயக்கர் சத்ரபதி சிவாஜி மகேந்திர வர்ம பல்லவன் . பாண்டியன் என இந்து தர்மத்தை காப்பாற்றவும் ஆலயங்களை பாதுகாத்தும் குறிப்பாக  அந்நிய படையெடுப்புகளால் சேதம் அடைந்த ஆலயங்களை மீட்டு புனரமைப்பு செய்து பக்தியை நிலைநாட்டியும் வந்த வரலாறு நாம் அறிந்ததே!!!

 மௌரிய பேரரசுகள் என சிறப்பாக பாரதத்தை ஆண்ட அரசர்களும் நீண்ட காலம் குருநாதர் வழிகாட்டுதல் படி வாழ்ந்து ஆட்சி செய்திருப்பார்கள்.. குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் அரசர்கள் பற்றி கூறும் பொழுது நமக்கு மேலும் தெரியவரும்... இப்படி எல்லாம் அரசர்கள் ஆயுளை நீடித்து வாழ்ந்தார்கள் அவர்கள் எந்த வழியை கடைப்பிடித்தார்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பதையும்

 வயது ஒரு விஷயமே அல்ல என்பதையும் குருநாதர் இதற்கு முன்பு கூறிய வாக்குகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம் குறிப்பாக கம்போடியா தேச வாக்குகளில் இருந்து பல உண்மைகள் நமக்கு  புரியும்)

அப்பனே ஆனாலும் இன்றைய காலகட்டத்தில்.. பின் வயதாகி விட்டது வயதாகிவிட்டது.. என்று அப்பனே ஒரு மூலையில் உட்கார்ந்து விடுகின்றான் அப்பனே மனிதன் சோம்பேறியப்பா!!!

அப்பனே அறிந்தும் இதனால் அப்பனே நிச்சயம் சாதிக்கும் திறன் அப்பனே பின் இறைவன்... மனிதனிடத்தில் கொடுத்திருக்கின்றானப்பா!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் இவ்வளவு காலம் அதாவது இன்னும் 10 20 வயது 30 வயது பின் நாற்பது வயது ஆகிவிட்டால் நிச்சயம் அவ்வளவுதான் வாழ்க்கை என்று எண்ணிக் கொள்கின்றான்ப்பா மனிதன். 

ஆனாலும் இறைவன் நீயே இப்படி எண்ணிக்கொண்டு விட்டாய்!!!

அப்படியே ஆகட்டும்!! (உன் எண்ணப் படியே) என்று வரத்தை கொடுத்து விடுகின்றான்ப்பா!!

எவ்வாறப்பா???

அதனால் நீங்கள் என்ன?? நினைக்கின்றீர்களோ... அதேபோலத்தான் அப்பனே இறைவனும் செய்வான் என்பேன் அப்பனே. 

இறைவன் கருணை மிகுந்தவன்... பார்த்தாயா???

ஆனாலும் அப்பனே பின் நாற்பது 50 வயதுகளில் நிச்சயம் தன்னில் கூட புண்ணியங்கள் செய்து கொண்டே வந்தால்.. அறிந்தும் கூட அப்பனே புண்ணியங்கள் செய்து கொண்டே வந்தால்!!!!!!!!

 அப்பனே நிச்சயம்... எங்கு ?? சென்று பின் அதாவது எங்கு மாற்ற வேண்டும்... என்பதை எல்லாம் அப்பனே இறைவன் தானாகவே மாற்றி விடுவான் என்பேன் அப்பனே!!

(குருநாதர் வாக்குகள் கிடைப்பதற்கு புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் அப்படி புண்ணியம் செய்தவர்களுக்கு குருநாதர் வாக்குகள் தரும் பொழுது தனிநபர் வாக்குகளிலும் பொது வாக்குகளிலும்!!!

இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் நீ இங்கு சென்று வழிபட்டு வா என்று!!! அங்கு சென்று வழிபட்டு வா!! திருவண்ணாமலை செல் !!திருப்பதி செல்!! காசிக்குச் செல்!! என போகச் சொல்லி அங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு குருநாதர் தரும் கருணை)

அப்பனே  நிச்சயம் அதனால் தான் அப்பனே எவை என்று அறிய கடமையை செய்யுங்கள் தன் கடமையைச் செய்யுங்கள்.. என்று அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 

கடமையைச் செய்யாமல் அப்பனே பின்.. இதைச் செய்தாலும் அப்பனே வீண்.. என்பேன் அப்பனே!!

ஒன்றும் அப்பனே பயனில்லை...!!!

அப்பனே பிறவி எடுத்ததற்கும் பயனில்லை!!! 

அப்பனே இறைவனை வணங்கினாலும் பயனில்லை!!!

என்பேன் அப்பனே!!! எதை என்று கூட மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து வர வேண்டியது தான் என்பேன் அப்பனே!!

ஆனாலும் அப்பனே ஒரே பிறவியில் அப்பனே.. எதை என்று அறிய அறிய அப்பனே கர்மத்தை அப்பனே பின் நீக்குபவன் இல்லை அப்பனே!!

(செய்த கர்மங்களை ஒரே பிறவியில் நீக்க முடியாது பல பிறவிகள் எடுத்து வந்து தான் தீர்க்க முடியும்)

நிச்சயம் பல பல பிறவிகள் என்பேன் அப்பனே!!

நிச்சயம் தன்னில் கூட இந்திரனுக்கு கூட பல பிறவிகள் அப்பனே பின் எவை என்று புரிய அப்பனே இதனால் அப்பனே... சில ஆன்மாக்களுக்கு அப்பனே பிறவிகள்.. பின் இறைவனே அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட கொடுத்திடுவான்... பின்  பிறவிகளை.

இவ் ஆன்மாக்கள் எத்தனை எத்தனை.. இதனால் எத்தனை ஏன் அப்பனே பின் இவ் ஆன்மா நிச்சயம் தன்னில் கூட எதற்காக வந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!

அவ்வாறு தெரிந்து கொண்டு வந்தால்தான் அப்பனே மோட்சம் என்பேன் அப்பனே. 

அவ்வாறு தெரிந்து கொள்ளவில்லை என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து பின் அவ் ஆன்மாவும் கஷ்டங்கள் படும்... அதாவது உடம்பைப் பெற்று பின்...அவ் ஆன்மாவை சார்ந்துள்ள அனைவரும் கஷ்டப்பட்டு எவை என்று புரிய இதனால் அப்பனே... புரியாமல் வாழ்ந்திடாதீர்கள்!!! புரியாமல் வாழ்ந்திடாதீர்கள் என்று மீண்டும் மீண்டும் வாக்குகள் செப்பி செப்பி அப்பனே இதனால் தான் அப்பனே பின்... எதற்காக இவ் ஆன்மா வந்ததென்று?? தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் சாதிக்கும் என்பேன் அப்பனே அவ் ஆன்மா. பின் உடம்பைப் பெற்று அப்பனே தேர்ந்தெடுத்து எதை என்று புரிய!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறாக தெரியவில்லை என்றால் அப்பனே... அங்கும் இங்கும் சென்று அதை செய்கிறார்கள் இதை செய்கிறார்கள் என்று அப்பனே திரிந்து கொண்டே இருக்க வேண்டியது தான் என்பேன் அப்பனே.

கடமையைச் செய்!!

அப்பனே நிச்சயம் இறைவன் பின் இவ் உடம்பை எங்கெல்லாம் அதாவது அவ் ஆன்மா எதை என்று கூட பற்று எவை என்று அறிய எங்கெல்லாம் சென்றால் நிச்சயம் பின் அதாவது பின் இவ் ஊழ்வினை (கர்மவினை) பின் அழிந்துவிடும் என்பதற்கு... அப்பனே பின் அங்கெல்லாம் தானாகவே இறைவன் அழைத்து விடுவான் அவ் ஆன்மாவை அப்பனே!!

இப்படித்தான் அப்பனே.. அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே மனிதனுக்கு வயது ஒரு தடையே இல்லையப்பா!!!

அப்பனே மனிதனே சொல்கின்றான்... எந்தனுக்கு வயதாகிவிட்டது!! எந்தனுக்கு வயதாகிவிட்டது!! என்று!!!

இறைவன் சொன்னானா?? அப்பா?? அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே

இன்னும் பல மூலிகைகள் உண்டப்பா அவையெல்லாம் உட்கொண்டால் அப்பனே... என்றும் அப்பனே இளைஞனாகவே வாழலாம் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அதனுள்ளே அப்பனே மனிதன்.. அப்பனே அதாவது.. 20 வயதுகளில் கூட.. அவனைப் பற்றி அவன் சிந்திப்பதே.. 30 வயதுகளில் கூட இன்னும்  மோக நிலைகள்...கூட!!! 40 வயதுகளில் கூட அப்பனே எதை என்று கூற ஓடி ஓடி அப்பனே இறைவனையே மறந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. 

20 வயதுகளில் அதனால் தான் அப்பனே """இளமையில் கல்!!!

எதை என்று கூட இறைவனை.. இளமையில் தேடு என்றெல்லாம் அப்பனே.. இளமையில் இறைவனை தேடி விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று கூட 40 வயதுகளில் நிச்சயம் அப்பனே இன்னும் இளைஞனாக ஆக்குவானப்பா இறைவன் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே அனைத்தையும் முடித்துவிட்டு.. 40 வயதுகளில் எனக்கு.. 40 வயது ஆகிவிட்டது என்று அப்பனே.. இறைவனிடம் புலம்புகின்ற பொழுது பின் நிச்சயம்!!.....

இறைவன் 

"""அடப்பாவி..!!!... அறிந்தும் இவ்வாறாக!!... அனைத்தும் யான் கொடுத்திட்டேனே!!!....

இப்படி எதை என்று அறிய  அறிய மீண்டும் அப்பனே!!

 """யான் என்றும் இளைஞன்!!! என்று.. இறைவனிடத்தில்.. கூறுங்கள் அப்பனே... நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட... 

எவ் நோயும் உங்களை அப்பனே அண்டாதப்பா!! சொல்லிவிட்டேன்!!


அப்பனே நல் முறைகளாக இன்னும் விளக்கங்கள் பல உண்டு என்பேன் அப்பனே.. பல அரசர்கள் அப்பனே அறிந்தும் கூட.. அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே நிச்சயம்.. தன்னில் கூட அப்பனே பிறந்து எவை என்று கூட பல வழிகளிலும் ஈசனை நோக்கி அப்பனே பின் தவமிருந்து அப்பனே அறிந்தும் கூட... அப்பனே பின் அதாவது அப்பனே பின்... ஈசன் புகழை பரப்பினார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே உயர்ந்து வாழ்ந்தார்கள் என்பேன் அப்பனே. 

அனைத்திற்கும் காரணம் ஒரே தெய்வம்!!!

எதை என்று புரிய அதை பல வழிகளிலும் கூட அப்பனே பின் பின்பற்றி அப்பனே!!

ஆனாலும் அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அரசர்கள் அப்பனே பின் இவ்வுலகத்தில் அப்பனே.. எங்கெங்கெல்லாம் எதை என்று அறிய அறிய எங்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட 
பல வழிகளிலும் கூட நன்மைகள் இருக்க எவை என்று அறிய அறிய ஏற்பாடுகள் செய்து அப்பனே... அங்கு ஈசனை வரவழைத்தார்கள் என்பேன் அப்பனே..

 இங்கே தங்கிவிடு ஈசா !! என்று!!

பின் அவ்வாறாக தவங்கள் செய்து செய்து.. ஈசன் அங்கே வந்து நிச்சயம் தங்கி இருந்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. இதனால்தான் அப்பனே உலகம் அப்பனே அழியாமல் இருக்கின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பின் அதாவது இவ் அழிவு நிலையிலிருந்து காக்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் மனிதனை சரியான வழியில் அப்பனே பின் நிச்சயம் திருத்த வேண்டும். 

அவ்வாறாக திருந்தவில்லை என்றால்!?!?!?!?!??!அப்பனே...

"""""" ஈசன் உருவாக்கியதை ஈசனே!!! அழித்துவிட்டு சென்று விடுவான்! என்பேன் அப்பனே!

 சொல்லிவிட்டேன் அப்பனே!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அப்பனே பின் செய்து கொண்டு தான் இருக்கின்றான். 

அப்பனே இதற்கு மாறாக.. நீங்கள் செய்து கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் பின் இறைவன்... நினைப்பதை பின் சரியாகவே..!!!.....

அதற்கு மாறாக நீங்கள் நடந்து கொண்டால்..!?!?!?!?!?!

. அப்பனே அனைத்தும் பதிவாகி கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!
நிச்சயம் அவை ஒரு சமயத்தில் தாக்குகின்ற பொழுது... அப்பனே எழும்பவும் முடியாதப்பா!!

நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் அதாவது பின் வலது பக்கமும் இடது பக்கமும் தப்பிக்க இயலாதப்பா!!! அப்படியே நின்று விடுவான் என்பேன் அப்பனே!!! கர்மா உன்னை சூழ்ந்து கொள்ளும் என்பேன் அப்பனே!!

பின்பு இறைவனை வணங்கினாலும்.. இறைவனை அப்பனே அதாவது வாயால் தான் அப்பனே பின் அறிந்தும் கூட.. அதாவது துதிக்க வேண்டும்.. ஈசா!! ஈசா!! என்று!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
இதை புரிந்து கொள்ளுங்கள் அப்பனே.. இன்னும் வாக்குகள் உரைக்கின்ற பொழுது செப்புகின்றேன் அப்பனே. நிச்சயம் அப்பனே.. அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது... அப்பனே அறிந்தும் கூட.. நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு பின் அதாவது ஒவ்வொரு கோளும் அப்பனே அறிந்தும் அதாவது... தன்னைத்தானே சுற்றுகின்ற பொழுது.. அப்பனே நிச்சயம் பின் அதாவது நிறங்கள்  வரும் என்பேன் அப்பனே.

அவ் நிறங்கள் இன்னும் எங்கெல்லாம் விழுகின்றது என்பதை எல்லாம் வரும் காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது அங்கங்கு சென்றால் அப்பனே... நிச்சயம் அப்பனே.. பின் இருதயத்தில் நிச்சயம் அப்பனே ஒரு வட்டம் இருக்குமப்பா!!!

அவ் நிறங்கள் அப்பனே இருதயத்தில் ஈர்க்குமப்பா!!!

அங்கு நிறங்களை ஈர்க்கும் பொழுது அப்பனே நீங்கள் சமமாகவே செயல்பட்டு அப்பனே வெற்றி அடைவீர்கள் என்பேன் அப்பனே.

நிச்சயம் ஊனம் இல்லாத வாழ்வை வாழ்வீர்கள் என்பேன் அப்பனே!!

ஆசிகளப்பா !! ஆசிகள்!! கோடிகளப்பா!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 26 April 2025

சித்தன் அருள் - 1846 - அன்புடன் அகத்தியர் - கதிரை மலை போகர் வாக்கு!






8/4/2025 அன்று போகர் சித்தர் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்.கதிரைமலை வள்ளி முருகன் மலை . ஸ்ரீலங்கா.

""குழந்தையாய் வாழுகின்ற முருகா!!!!

உம்மை தொழுகின்றேனே!!!

தொழுகின்றேனே!!!

பின் வாக்குகள் ஈகின்றேனே!!!

நின்றாடும் தணிகை மலையில்!!!!

நின்றாடும் தணிகை மலை முருகா!!!!

அறிந்தும் ஒன்றொன்றும் பின் பின வரும் வரும் என்று நினைத்தேனே!!! முருகா!!

உம்மை நிச்சயம் பின் தன்னை.. முருகா!!!

உன் தாள் பணிந்தோர்கள் நிச்சயம் தன்னில் உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தருவார்கள் முருகா!!!

உன்னை நம்பியே வாழ்கின்றார் முருகா!!!

அதுவோடு நினைத்து நிச்சயம் தன்னில் பின் வருவோருக்கெல்லாம் ஆசிகள் கொடுத்து நிறைவேற்று முருகா!!!

நிறைவேற்று முருகா!!

அதை தன் அவர்களின் கர்மத்தை போக்கு முருகா!!!

அவை தன் கர்மத்தை போக்கு முருகா!!!

வரும் வரும் காலங்கள் சோதனைகள் மனிதனுக்கு!!!

அவை நீக்க வருவாயே முருகா!!!!

அவை நீக்க வருவாயே முருகா!!!

தண்டோடு அணிந்து பின் அணைத்துக் கொள்ளும் முருகா 

தண்டோடு மனிதனை அணைத்துக் கொள்ளும் முருகா!!!

என்றென்றும் என் மனதில் வாழும் முருகா!!

என்றென்றும் என் மனதில் வாழுமே முருகா!!!

எப்பேர்பட்ட பின் நிச்சயம் வியாதிகள் ஆயினும்!!...

அதை நீக்க ஓடோடி வா முருகா!!!!

ஏன்??? இந்த அவலத்தை கொடுத்தாயே? முருகா!!!

ஏன்? இந்த அவலத்தை கொடுத்தாயே? முருகா!!

யான் கூட மருந்துகளை மனிதனுக்கு கொடுக்கையில் அதை ஏனோ?? தடுத்தாயே!! முருகா!!!

அதை ஏனோ? தடுத்தாயே!! முருகா!!

நிச்சயம் தன்னில் உன் பிள்ளைகளை நிச்சயம் தன்னில் கொன்று குவிக்க மாட்டார்கள் மனிதர்கள் யான் இங்கிருந்து சத்தியம் செய்கின்றேனே முருகா!!

யான் இங்கிருந்து சத்தியம் செய்கின்றேனே முருகா!!!

எனை வந்து ஆட்கொண்டு நிச்சயம் தன்னில் பின் அறிந்தும் ஒன்று இங்கு அழைத்தாயே முருகா!!

எனை இங்கு அழைத்தாயே முருகா!!!

என் வேலை செய் என்று கூறினாயே முருகா!!!

என் வேலை செய் என்று கூறினாயே!!

ஔஷதங்களை மனிதனுக்கு கற்பிக்க நிச்சயமாய் கூறினாயே!!

மீண்டும் அவை தன் ஏன்? இந்த அவல நிலை.. மனிதனுக்கு வருகின்ற நேரத்தில் அதை ஏனோ?? தடுத்தாயே முருகா!!

அதை ஏனோ தடுத்தாயே முருகா!!

வரங்கள் தந்து மனிதனுக்கு உயர்கின்ற நேரத்தில் நோய்களோடு வளரும் தன்மை கொடுத்திட்ட முருகா!!

நோய்களை வளர்த்திட்ட முருகா!!!

அதை நீ நிச்சயம் தன்னில் மீண்டும்  சாபத்தை மனிதனுக்கு போக்குவாயே முருகா 

மனிதரிடத்தில் குறைகள் எல்லாம் நீக்கியே முருகா!!!

யான் தனே ஔசதங்கள் கொடுக்கின்றேனே முருகா!!!

அதற்கு அதன்படி நீதான் உத்தரவு கொடு முருகா!!!

அதற்கு தகுந்தார் போல மனிதனையும் கூட சித்தர்கள் யாங்கள் வழி நடத்துகின்றோமே முருகா!!!

அன்பாலே அணைக்கின்ற முருகா!! எங்களை அன்பாலே அணைக்கின்ற முருகா! 

வெற்றி வேலுடன் அனைத்தையும் பின் சாதிப்பாயே!!!!

இப்போது அமைதியான நிலையில் ஏன் இந்த கோலத்தில்?

அமைதியான ஏன் இந்த கோலத்தில்??

அறிந்தும் அறியாமலும் செய்த பின் பிழைகளை நிச்சயம்... வருக வருக அதை தன் குறைகளாக இல்லாமல் அதை போக்கிட வருவாய் முருகா!!!

மனிதன் மீது நீயே கோபம் கொண்டாலும் அவர்கள் என்ன செய்வார்கள்? முருகா!!

இன்னும் தன்னில் மனிதனை யாங்கள் உருவாக்கி இன்னும் தன்னில் மனிதர்களை யாங்கள் பின் உருவாக்கி அவர்களின் மூலம் நிச்சயம் தன்னில்... உன் உயிர்களைக் கூட கொல்லக்கூடாது என்று பின்!!! கொல்லக்கூடாது என்று ஆணை விதிப்போமே முருகா!!!!

உன் கவலை என்ன ஏது என்று தெரிந்து கொண்டேன் முருகா!! 

உன் கவலை ஏது என்று தெரிந்து கொண்டேனே முருகா!!!

மக்களை காப்போடு காப்போடு அணைத்துக் கொள்ள வா முருகா!!

மக்களை பின் அறிந்தும் கூட கொத்து கொத்தாக இறக்கின்றார்களே முருகா!!!!

நிச்சயம் தன்னில் பின் அவை தன் மனிதனுக்கு புத்திகள் கொடுத்து அவை தன் புத்திகள் கொடுத்து அவை தன் உயிர் இல்லாததாக செய்கின்றானே மனிதன்!!

(மனிதர்களுக்கு இறைவன் கொடுத்த புத்தியை தவறான வழியில் பயன்படுத்தி தன் இஷ்டத்திற்கு ஜீவராசிகளை தன்னுடைய ருசிக்காக ஜீவராசிகளை எல்லாம் கொன்று குவித்து தின்பதை)

அதை தடுத்து நிறுத்துவோம் வரும் காலத்தில் 

அதை தடுத்து நிறுத்துவோம் வரும் காலத்தில்!!

அதனுள்ளே முருகா மனிதனை காப்பாற்று முருகா!!!

உனையே நினைத்துக் கொண்டிருக்கையில் இன்னும் கஷ்டங்கள் வருகின்றதே முருகா!! 

அவ் அவலத்தை நீக்கு முருகா!!!

அவ் அவலத்தை நீக்கு முருகா!!!

அறிந்தும் பின் அறியாத வகையிலும் கூட மனிதன் நின்று பின் உன்னை தொழுகின்ற நேரத்தில் 

அன்போடு மனிதனை அணைத்துக்கொள் முருகா!!!

அன்போடு மனிதனை அணைத்து கொண்டு முருகா!!.. அனைத்தும் செய்வாயே முருகா!!

அணைத்து செய்வாயே முருகா!!!

தர்மம் புவிதன்னில் அறிந்தும் தலைகீழாக செல்கின்றதே!!

அதை காக்க பின் ஓடோடி வாவே முருகா!!

தர்மம் தலைகீழாக ஆகின்ற பொழுது மனிதனை மனிதனே கெடுப்பானே!!!

உண்மைகள் இல்லையே!!

போட்டி பொறாமைகளோடு வாழ்ந்திருப்பானே!!

அனைத்து ஜீவராசிகளையும் கொன்று தின்று அவனும் மடிவானே!!

அப்படியெல்லாம் நடக்கின்றது கலியுகத்தில்!!!

அனைத்தும் குழந்தாய் நீயே அறிவாய் முருகா!!

அனைத்தும் நீயே அறிவாய் முருகா!!

குருவே வா வா வா வா! 

இறைவா வா வா வா வா!!

குருவே வா வா வா வா 

சூரியனே! வா வா வா வா 

நவகிரகங்களே வா வா வா வா 

பிரம்மனே வா வா வா வா 

உனை தனை இத்தனை சித்தர்கள் அழைக்கின்றார்கள் 

உனை தன் சித்தர்கள் அழைக்கின்றார்கள் 

நிச்சயம் தன்னில் மனிதர்களின் குறைகளை போக்கி போக்கி பின் அருள்கள் தர வா வா முருகா!!!

அன்போடு நினைக்கின்ற மனிதர்களுக்கு!!

அன்போடு நினைக்கின்ற மனிதனுக்கு!!!

அனைத்தும் கொடுத்து பின் காத்தருள்வாய்!!

அதர்மத்தை அறிந்தும் கூட பின் அடியோடு அழித்திட பின் அறிந்தும் கூட தர்மத்தை நிலை நாட்ட ஓடோடி வா முருகா!!

உன் மக்களை காப்பாற்ற வா வா முருகா!!!

அறிந்தும் நீ தன்!!

 பின் பிறந்து.. பிறப்பெடுத்து!!

 மக்களே பின் அழிவில் பின் ஆழ்ந்து கொண்டிருக்கின்றார்களே முருகா 

அவர்களுக்கு புத்திகளை கொடுத்திட வா வா முருகா முருகா!!

அவர்களுக்கு புத்தியை கொடுத்திட வா வா முருகா!! முருகா!!

நல்லோர்கள் பின் தீயோர்கள்.. என்று பாகு பாடு பார்க்காமல் அனைவரையும் முதலில் காப்பாற்ற முருகா!!!

முதலில் காப்பாற்று முருகா!!

நிச்சயம் இவ் பரதேசியின் குரலை பின் கேட்பாயே!!!! கேட்பாயே!!!

அதை அறிந்து பின் மக்களுக்கு சேவைகளை ஆக்க ஓடோடி வா வே முருகா!

அவையறிந்து நிச்சயம் தன்னில் இனி மேலும் மனிதனை பின் தவறுகள் செய்தாலும் 

அவர்களுக்கு தண்டனைகள் நிச்சயம் தன்னில் உடனடியாக கிடைக்கின்ற படி ஏற்படுத்துவோம் முருகா!!

சித்தர்கள் யாங்கள் ஏற்படுத்துவோமே முருகா !!!

பொய்யான பக்திகள் பொய்யான அன்புகள் 

உன்னிடத்தில் செலுத்துகின்றார்கள். இதை யான் அறிவேனே!! யான் அறிவேனே!!!

அவர்களுக்கும் யானே தண்டனைகள் கொடுக்கின்றேனே 

இன்னும் ஒன்றும் தெரியாத மனிதர்கள் கோடி கோடி அலைகின்றார்களே முருகா!!! அவர்களை காப்பாற்று நிச்சயம் தன்னில்!!

அவர்களை அணைத்துக் கொண்டு அனைத்தும் கொடுத்திட்டு நிச்சயம் தன்னில் அவர்களின் மூலம் உலகத்தை காப்பாற்ற அவர்களுக்கும் ஆசிகள் கொடுக்க வா வா!!

அவர்களுக்கு ஆசி கொடுத்திடு!!

பின்பு அனைத்தும் மாற்றிட மனிதனுக்கு மனிதன் சக்திகள் கொடுத்து பின் மனிதன் மனிதனை திருத்திட அருள் ஆசிகள் தந்திட வா வா முருகா!!!

வா வா முருகா!!

ஈசன் குழந்தையே முருகா!! பின் 

பராசக்தியின் குழந்தையே முருகா!!

எங்கள் குழந்தையே முருகா!!

எங்கள் குழந்தையே முருகா!!

அதாவது சித்தர்களின் குழந்தையே முருகா!!

பின் நீதானே அனைத்தும் பின் காலமாய் விழுகின்ற காலனை.. பின் காக்க காக்க!!

அறிந்தும்.. காலனே மிஞ்சிய நேரத்தில் யான் தான் தலைவன் என்று பின் கூறிக்கொண்டு மக்களை அடியோடு பின் அழிக்கின்றானே முருகா!!!

பின் காலனை அடியோடு அழித்திட வா வா முருகா!!

காலனை அழித்திட பின் வா வா முருகா!!


மக்கள் இன்னும் தெளிவு பெறவில்லையே!!

இறைவன் யார் என்று பின் புரிந்து கொள்ளவில்லையே! 

அதை பின் புரிந்தும் அறிந்தும் கூட சக்திகள் கொடுத்திட பின் அறிந்தும் புத்திகளோடு வாழ்ந்து  பின் அனைத்தும் பின் அறிந்து பின் வாழ்ந்திட்டு பின் மோட்சத்தை கொடுக்கின்ற பின் மோட்சத்தை அளிக்கின்ற தெய்வமே தெய்வமே கலியுக வரதனே நிச்சயம் பிரம்மாவே வா வா!!

முருகா பிரம்மனே வா வா 

முத்துக்குமரனே பிரம்மனே வா வா 

பிரம்மரிஷியே வா வா 

ஈசன் ரிஷியே வா வா 

விஷ்ணு ரிஷியனே வா வா 

சித்தர்கள் ரிஷியனே வா வா!!

மலைகளின் ரிஷியனே வா வா 

காடுகளின் ரிஷியனே

வா வா 

அனைத்தையும் மாற்றிடும் வல்லமை படைத்த முருகா 

தந்தை  தன் நிச்சயம் தன்னில் அனைத்து சக்திகளையும் உந்தனுக்கு வழங்கிட்டானே!! வழங்கிட்டானே!!

அதை நீயும் ஏன் பயன்படுத்தவில்லை?? முருகா!!!

உன் மனது கூட என்னவென்று யானே தான் ஆராய்ந்தேன்!!

உன் மனதிற்கு தகுந்தாற்போல் மக்களை யான் நிச்சயம் தன்னில்.. சித்தர்கள் யாங்கள் மாற்றுவோமே முருகா!!

உன் எண்ணத்திற்கு தகுந்தாற்போல் மனிதனை மாற்றுவோம் முருகா 

மனிதனை மாற்றுவோம் முருகா 

பின் அறிந்தும் கூட அவர்கள் செய்யும் தவறினை நிச்சயம் பொறுத்தருளி அறிந்தும் கூட காப்பாற்ற ஓடோடி வா வா!!

காப்பாற்ற ஓடோடி வா வா!!

கலியுக வரதனே கண்கண்டனே கண்டத்தில் வாழும் பின் அறிந்தவனே 

உலகத்தில் தன் அறிந்தும் கூட பின் திரிபவனே!!

மயில் மீது அழகாக பின் குடித்தனம் நடத்துபவனே!!

வா வா!! வெற்றி வேலோடு வா வா!!!

வா வா வா வெற்றி வேலோடு வா வா!!

உனை தன் பின் அறிந்தேனே!!! கந்தனே! கதிர்வேலவனே!!

கதிர் காமத்தோனே வா வா வா வா!!!

இங்கு வந்து அழகாக அமர்ந்திட்டாயே!!!

சந்தோசமாக நிச்சயம் தன்னில்.. மக்களை பின் காப்பாற்ற ஓடோடி வா வா!!!!

பின் நிச்சயம் தன்னில் தவறுகள் செய்ய மாட்டார்கள்!! மனிதர்கள் நிச்சயம் தன்னில்!!!

உன்னிடத்தில் வருவோருக்கெல்லாம்..யாங்கள் தன் மனதை மாற்றி நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட.. பின் இப்படி வாழ்ந்திட்டால்தான் இறைவன் ஆசிகள் கிடைக்க பெறும் என்பதை யாங்களே மனதை மாற்றுகின்றோம்!!

யாங்களே மனதை மாற்றுகின்றோம்!!

ஓடோடி வந்து பின் அருள் தருவாய் முருகா! 

உன் பின் படைப்பில் அனைத்தும் உன் ஜீவராசிகளே!! எங்களுக்கு தெரியும் முருகா!!

பின் அறிந்தும் கூட உன் பிள்ளைகளை கொன்று குவித்து வருகின்றார்களே என்று தானே உன் நினைப்பு!!!! என்றுதானே உன் நினைப்பு!!!

அதனால்தான் கோபம் கொண்டு பின் அறிந்தும் கூட பின் நோய்களாக பின் மாற்றுகின்ற தலைவா!!

அதனால்தான் பின் அறிந்து கொண்டு மக்கள்.. திருந்த மாட்டார்கள் அதற்கு பின்.. பதிலாக நோய்கள் தருகின்ற முருகா!!!

இனிமேலும் நிச்சயம் தன்னில்.. பின் கட்டளை இடுவோமே முருகா 

மனிதனை நிச்சயம் தன்னில் பின் உன்  பக்தன் ஒருவனை உயர்த்திட்டு பின் அவன் மூலம் கட்டளை இடுவோமே முருகா 

அவன் மூலம் கட்டளை இடுவோம் முருகா!!

(முருக பக்தன் ஒருவரை அரசு சார்ந்த இடத்தில் பதவிகள் கொடுத்து அரசாங்க ஆணையாக உயிர்களை கொல்வது உயிர்ப்பலி இடுவது அனைத்தையும் கட்டளை இட்டு நிறுத்த வைக்கப் போகின்றார்கள் சித்தர்கள்)

குறைகள் கொள்ள வேண்டாம் முருகா 

குறைகள் கொள்ள வேண்டாமே முருகா 

உன் குறைகளை தீர்க்க யாங்கள் இருக்கின்றோமே முருகா!!!

கலியுகத்தில் பின் இன்னும் அழிவுகள் ஏற்படுகின்றதே!!!

அதை தன் நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாயே முருகா!!!

நிச்சயம் தன்னில் காலனை அழித்திட வா வா முருகா 

அறிந்தும் கூட கிரகங்களை கூட கட்டுப்படுத்தினாயே முருகா 

கிரகங்களை கூட கட்டுப்படுத்தினாயே முருகா!!!

அனைத்தும் சேர்ந்த முருகா!!

அனைத்தும் சேர்ந்த முருகா பின் அருளோடு வள்ளி தெய்வானையோடு பின் வா வா முருகா!!

வள்ளி தெய்வானையோடு வா  வா முருகா!!!

மக்களுக்கு அருள் பொழிய வருக வருகவே வா வா முருகா!!!

அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் பின் கொடுத்திடாது பின் உன் ஜீவராசிகளை கொல்ல மாட்டார்கள் வரும் காலத்திலே!!

அதை பின் நிச்சயம் தன்னில் மனிதன் தெரிந்து கொண்டாலே

போதும் முருகா!!

ஏன் இந்த. வியாதிகள் வருகின்றது? என்று முருகா! 

யான் அறிவேனே முருகா!!!!

யான் அறிவேனே முருகா!!!

அதை தன் நிச்சயம் பின் உன் பிள்ளைகளை அதாவது ஜீவராசிகளை கொல்வோர்களுக்கு நிச்சயம் தன்னில் வியாதிகள் கொடுக்கின்றாயே முருகா!!!

அதற்கு கூட பின் யார் ஒருவன் துணை நிற்கின்றானோ!? அவனுக்கும் சேர்த்து கொடுக்கின்றாயே முருகா!!!

அவனிடத்தில் பேசினாலும் பின் பேசியதற்கு தண்டனைகள் கொடுக்கின்றாய் முருகா!!

இன்னும் கூட நல்லோர்கள் இருக்கின்றார்கள் முருகா!!!

அவர்களை முன்னேற்று! அவர்கள்

பெரும் பதவிகள் வகித்து இவையெல்லாம் போக்கிட வா வா முருகா 

இதையெல்லாம் போக்கிட வா வா முருகா!!

பின் அவர்களை உயர் பதவிகளில் வைத்து பின் பெரிய பெரிய கட்டளைகள் இட்டால் நிச்சயம் தன்னில் திருந்துவானே மனிதன் முருகா!!!

நிச்சயம் தன்னில் திருந்துவானே முருகா! 

அதேபோல பின் உன் கட்டளையை!!. தன் பின் நிச்சயம் தன்னில் கூட அனைவரும் பின் வாழ்வார்களே!! குடை போல பிடித்திட்ட மக்களை அன்போடு அணைக்கின்ற பின் தெய்வமே! தெய்வமே!

உள்ளே அமைதியாக நிற்கின்றாயே!!!

என் மனதில் உள்ளே அமைதியாக நிற்கின்றாயே!!

யான் உள்ளே தான் பின் உந்தனுக்கு பின் திருத்தலத்தை அமைத்தேனே!!! அதில் கூட நீ இருந்தும்!!!

 உன் அருள் இல்லையென்றால் எத்தனை எத்தனை மருந்துகள் கொடுத்தாலும் பின் நிச்சயம் தன்னில் பின் சரிப்படாது  என்று நிச்சயம் தன்னில் உணர்த்திக் கொண்டிருக்கின்றாயே!!!

(முருகன் அருள் இல்லாமல் எவ்வளவு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் நோய்கள் தீராது... இங்கு நோய்களை தந்தவரே முருகன் தான் அவருடைய பிள்ளைகளான உயிரினங்களை கொன்று குவிப்பதால் முருகனுக்கு வந்த கோபத்தால் நோயை கொடுத்துக் கொண்டிருக்கின்றார் முருகன். அப்படி நோயை குணப்படுத்துவதற்கு எந்த மருந்துகள் சாப்பிட்டாலும் முருகனுடைய அருள் இல்லாமல் நோய் சரியாகாது குணமாகாது)

ஏன் இந்த அவலம்?? முருகா!!!

ஏன் இந்த அவலம்?? முருகா!!

மக்களை பின் அணைத்திட வா வா முருகா!!!

மக்களை அணைத்திட

வா வா முருகா!!

சித்தர்களின் செல்லக் குழந்தையே!!

பாசக் குழந்தையே!!

அன்பு குழந்தையே!!

ஓடோடி வா வா முருகா! 

ஓடோடி வா வா முருகா! 

குழந்தையாகவே இருக்கின்றாயே குழந்தையாகவே இருக்கின்றாயே 

உன் குழந்தைகளை யாங்கள் காப்போமே 

உன் குழந்தைகளை யாங்கள் காப்போமே 

பின் மனிதர்களை காக்க நீ ஓடோடி வா வா முருகா மனிதனை நீ காக்க ஓடோடி வா வே முருகா!!

என் நெஞ்சில் அழகாக பின் குடி கொண்டிருக்கும் முருகா!!

என் நெஞ்சில் திருத்தலத்தை அமைத்து பின் அதில் கூட வள்ளி தெய்வானையோடு குடி கொண்டிருக்கும் முருகா!! குடி கொண்டிருக்கும் முருகா!!

சித்தர்கள் யாங்கள் அனைவரும் உந்தனுக்கு துணை இருப்போமே!!

கலியுக வரதனே!!

பிரம்மனே !!

விஷ்ணுவே!!

 ஈசனே!!

இவை மூன்றும் இணைந்த பின் குழந்தையே!!!

இவை மூன்றும் இணைந்த குழந்தையே! 

பின் தவத்தாலே கிடைத்தவனே!!!

தவத்தாலே கிடைத்தவனே!!

அனைத்தும் அறிகின்ற முருகா!!

அனைத்து கலைகளிலும் வல்லவனாக நின்ற முருகா 

அறிந்தும் அறிந்தும் கூட பின் அறிந்தும் கூட இங்கிருந்து எனை பழனிக்கு அழைத்தாயே!! யான் அமைதியாக இருந்திருப்பேனே!! நீதானே அழைத்தாயே முருகா!!! நீதானே அழைத்தாயே முருகா!!

பழனி தன்னில் இருந்து மக்களுக்கு சேவையாற்று!! என்று சொன்னாயே முருகா 

அதை நீயும் மறந்து விட்டாயே முருகா!!

அதை நீயும் மறந்து விட்டாயே முருகா!!

அதனால் தானே அறிந்தும் கூட வரவில்லையோ!? முருகா 

ஏன்? என் மீது கோபம்  முருகா!!

ஏன்? என் மீது கோபம் ஏன்? முருகா!!

உன் கட்டளைப்படி இப்பொழுது கூட வாழ்ந்து வருகின்றேனே!!

உன் கட்டளைப்படி பின் வாழ்ந்து வருகின்றேனே!!

பின் நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட...அவ் தேசம் கூட நிச்சயம் அழியப் போகின்றதே!!!

அதைக் காக்க பின் நீ அங்கு சென்று பின் காத்திட!! காத்திட!! காத்திட!! போ முருகா!!!

உன் கட்டளையை ஏற்று பின் பழனி தன்னில் இருக்கின்றேனே முருகா!!

உன் கட்டளையை ஏற்று பின் பழனி தன்னில் இருக்கின்றேன் முருகா!!

பின் அறிந்தும் கூட பின் அவ் தேசத்தை காக்க போராடுவாய் முருகா 

போரிடுவாயே முருகா!!

அறிந்தும் கூட உன் ஜீவராசிகள் நிச்சயம் தன்னில் பின் கட்டுப்படுத்துகின்றேன் முருகா 

உன் அன்பான ஜீவராசிகளை எல்லாம் அங்கு கட்டுப்படுத்துகின்றேன் முருகா!!!

அங்கு சென்று பின் மக்களை.. காப்பாற்று முருகா!!!

அங்கு மக்களை சென்று காப்பாற்று முருகா!!!

போரும் வருகின்றது முருகா !!

போரும் வருகின்றது முருகா!!

அதை நீயே தடுத்தாக வேண்டுமே குமரா!!!

குமரா! குமரா! அன்புவேல் குமரா!!

பாசவேல் குமரா!!

முத்துவேலே குமரா!!

 பின் ராஜ்யத்தை காத்திட வா வா முருகா 

உன் ராஜ்யத்தை காத்திட வா வா 

அன்போடு ஒளிந்திருக்கும் முருகா 

என் மனதில் அன்போடு ஒளிந்திருக்கும் முருகா!!

அறிந்தும் கூட படையோடு பின் அனுப்பு முருகா!! அங்கு!!

நிச்சயம் தன்னில் அங்கு படையோடு அனுப்பு முருகா!!

முருகா முருகா முருகா முருகா பின் குழந்தை முருகா!!

நிச்சயம் தன்னில் என் வேண்டுதலுக்கு ஏற்றவாறு மனிதனுக்கு நிச்சயம் செய்வான் சத்தியம் செய்வான் நிச்சயம் தெரியும் முருகா முருகா 

கோபத்தோடே இருந்தாலும் பாசத்தோடு அனைவரின் பின் மனதை மாற்றி பின் என் முருகன் செய்வானே!!!!! செய்வானே!!!!!

என் முருகன் செய்வானே!! செய்வானே!!

எனக்கு சந்தோசங்களே!! கந்தா!!

எனக்கு சந்தோசங்களே கண்ணா!! கந்தா!!

அன்போடு அன்போடு பின் துதித்தேனே!!!

என் மனதில் திருத்தலத்தை பின் கட்டினேனே.. அங்கு அன்போடு அன்போடு துதித்தேனே!!!

அன்போடு அன்போடு துதித்தேனே!!!

அன்போடு அன்போடு துதித்தேனே!!!

மக்களுக்கு அருளாசிகள் அருளாசிகள் 

ஆசிகள் ஆசிகள்!!!

 இன்னும் சித்தர்களின் ஆசிகள் ஆசிகள்..

 மத்தியில் (இதற்கிடையில் )இன்னும் பின் அறிந்தும் கூட அறிந்தும் கூட பின் யாங்கள் மக்களின் மனதை மாற்றி பின் புத்தியுள்ளவனாக மாற்றுவோம் நிச்சயம் தன்னில் கூட. 

பராசக்தியே பின் அருள்வாய் முருகா அருள்வாய் அருள்வாய் 

பராசக்தியே அருள்வாய் அருள்வாய் 

மனிதனுக்கு இங்கிருந்தே கோடிகள் கோடிகள் ஆசிகள் கொடுக்கின்றேனே!! கொடுக்கின்றேனே!! 

அதை வைத்து நல் மனதாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள் கற்றுக் கொள்ளுங்கள் 

என் குழந்தை அனைத்துமே கொடுப்பானே!! கொடுப்பானே !!

சத்தியமாய் என் குழந்தை அனைத்தும் கொடுப்பானே!! கொடுப்பானே!! 

ஆசிகள்!!!

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அதாவது 17/1/2025 அன்று குருநாதர் கதிரை மலையில்.. வள்ளி தேவி திருவிளையாடல் படலம்... முருகன் வள்ளி ஈசன் குருநாதர் அகத்தியர் பெருமான் இடையே நடந்த சம்பவங்கள் வாக்கில் உரைத்து இருக்கின்றார்.

இதுவரை மனிதர்கள் வள்ளி திருமணம் குறித்தும் முருகன் வள்ளி தேவி குறித்தும் நாடகங்களாக கதைகளாக சொல்லி கேட்டு அதை நம்பிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் குருநாதர் கூறிய வாக்கில் எந்த அளவு உண்மைகள் எப்படி எல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன என்பது தெரியவரும்..

கதிரை மலை வாக்கு சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1788 ..இவ் வாக்கினை படிக்கும் பொழுது உணர்ந்து கொள்ளலாம்.

ஆலயம் அமைவிடம்.. கதிரை மலை கதிர்காம சிகரம்  மொனராகலை மாவட்டம்.ஊவா மாகாணம்.ஸ்ரீலங்கா.

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1845 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-3 !


25. மைத்ரேய முஹூர்த்தம் : கடன் தீர்வதற்கான நேரமாக மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை அப்பா ?

அப்பப்பா! நிச்சயம் தலைகீழ் நின்றாலும் கூட விதியை மாற்ற முடியுமா என்ன? அப்பனே! ஏன் கடனை வாங்குகிறான்? கடனை தன் சுயநலத்துக்காக வாங்கிக்கொண்டு நிச்சயம் அதை கட்ட முடியவில்லை என்றால், இதை எல்லாம் செய்தால் ஒன்றும் முடியாதப்பா. பின் கஷ்டப்பட்டால்தான் வாழ்க்கையப்பா! புரிந்து கொள்ளுங்கள் அப்பா! 

26. ஒரு மனிதனுடைய இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிப்பது அவனுடைய தனிப்பட்ட ஜாதகமா ? அல்லது கோச்சாரத்தில் இருக்கும் கிரஹ நிலைகலா ? அல்லது அவனுடைய வினை பயனா ? இறைவன் / சித்தர்கள் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களுக்கு இறைவன் மற்றும் சித்தர்கள் நேரடியாக வழிநடத்துகிறார்களா ?

 அப்பா! இவற்றில் ஏதும் இல்லை என்று சொல். வருவான்/வருவாள் என்னிடத்தில், நிச்சயம் உணர்த்துகின்றேன். 

27. ஆசீவகம் மதம் பற்றி .. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களால் பின்பற்றி வந்த மதம் என்று சொல்லப்படுகிறது .. காவல் தெய்வங்களான ஐயனார், பாவாடைராயன், ஐயப்பன், கருப்ப சாமி போன்ற தெய்வங்கள் சித்தர்கள் போல் இருந்து மருத்துவம், கல்வி, தற்காப்பு மற்றும் அணைத்து கலைகளில் சிறந்து விளங்கினார்கள் என்று ஒரு வரலாற்று பதிவாக சொல்லப்படுகிறதே அப்பா .. இது எந்த அளவிற்கு உண்மை ? தமிழர்களின் பொக்கிஷங்கள் இதில் மறைந்து இருக்கிறதா ?

அப்பா! அழிந்து போய்விட்டது அப்பா! இதனை பற்றி ரகசியமாக இன்னும் வாக்குகளை செப்புவேன்.  

28. Manifestation / Visualization (காட்சிப்படுத்தல்) / Law of attraction (ஈர்ப்பு விதி) : தான் ஒரு லட்சியம் வைத்துக்கொண்டு, அது நடந்து விட்டதாக காட்சி படுத்துதல்.  பல இளைஞர்கள் இதை பின்பற்றி வருகிறார்கள். இது நேர்மறையான விளைவுகள் தருவதாக சொல்லப்படுகிறது. இது போன்ற விஷயங்கள் எவ்வளவு தூரம் உண்மை அப்பா ? இதனால் ஏற்படுவது நன்மையா அல்லது தீமையா ?

அப்பா! அனைத்தும் பொய்! சாவது மெய்!

29. குருநாதா ஒரு கேள்வி இவ்விடத்தில். மனிதனுடைய தெளிவான, நல் எண்ணங்கள் சில விஷயங்களை நடைமுறைப்படுத்தி தரும் என்பது உண்மை தானே?

அப்பா! இதற்கெல்லாம், ஒன்று இரண்டு மூன்று என வகுப்புகள் தேர்வடைந்திருக்க வேண்டும். அதனால் தான் அப்பா! முதல் வகுப்பிலே தேர்ச்சி பெறவில்லை, பத்தாம் வகுப்பு கேள்வியை கேட்கின்றார்கள் அப்பா! எப்படியப்பா? அதை சொன்னாலும் புரியாதப்பா! அதனால் தான் பதிலை சுருக்கமாக அழகாக முடித்துக் கொண்டேன் அப்பா. 

30. Time Loop concept, Dimensions, Time Travel, Past and Future time travel, Portal : ஒரு இடத்தில் இருந்து இன்னொரு உலகம் / இடத்திற்கு செல்லும் ஒரு பாதை / மார்க்கம், எதிர்காலம் மற்றும் கடந்த காலம் செல்கின்ற முறை சித்தர்கள் மரபில் இருக்கிறதா இல்லை இது வெறும் மனிதர்களின் ஒரு கற்பனை தானா அப்பா ? பல அறிவியல் ரீதியான விஷயங்கள் இதை குறித்து சொல்லப்படுகிறதே!

அப்பா! அனைத்தும் சொல்லிக்கொண்டே வருகின்றேன். அதெல்லாம் ஒதச்சொல்லப்பா. அனைத்தும் புரிந்து விடும். 

31. ராஜ ராஜ சோழனை பற்றி சிறு வயதில் இருந்தே ஒரு பிரமிப்பு. அப்பா உங்கள் பல வாக்குகள் படித்து வருகிறேன், ராஜ ராஜ சோழனை பற்றி மிகவும் பெருமையாக குறிப்பிடுகிறீர்கள். அவரை பற்றின பல ரகசியங்களையும் வாக்குகளில் கூறி வருகிறீர்கள். அவரின் சமாதி எங்கு இருக்கிறது அப்பா ? தற்போது கும்பகோணம் மாவட்டம் உடையாளூர் எனும் கிராமத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. உண்மை தானா அப்பா ? ஓர் சிவன் ஆலயத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  இந்த கேள்வியின் காரணம், வரலாற்று சிறப்புமிக்க தமிழ் மன்னனின் நினைவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான் அப்பா.

அப்பா! ஏன் எதற்கு? என் பேச்சை கேட்டானப்பா! என் பக்தனப்பா! இதனால் இப்பொழுது கூட சொல்கின்றேன். என்னை பற்றி பெருமையாக பேசக்கூடாது. இவ்வாறெல்லாம் ஆச்சி புரிய வேண்டும் என்றான். கூடு விட்டு கூடு பாயும் வித்தை எல்லாம் அவனுக்கு சொல்லியிருக்கிறேன். பல ஆலயங்கள் இருக்கின்றது. அங்கெல்லாம் உடம்பை விட்டு அடுத்தது, அடுத்து என்று (சென்றிருக்கிறான்). அவனுக்கும் சீடர்கள் பலர் இருந்தனர். அதை பற்றி ரகசியமாக எடுத்துரைப்பேன். அவனுடைய கதை நீல மானது. இப்பொழுது சொன்னாலும் புரியாது. எடுத்துரைக்கின்றேன், இப்படி இருந்தால், இவ்வுலகத்தில் அனைத்தும் சாதிக்கலாம் என்று. 

32. காவல் தெய்வம் மற்றும் எங்கள் குலதெய்வமான பாவாடைராயன் ஐயாவை பற்றி சிறு குறிப்பை/வரலாற்றை வேண்டுகிறேன் அப்பா. மேல்மலையனுர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் தனி சன்னதி கொண்டுள்ளார். இருப்பினும் வரலாறோ, குறிப்போ எதுவும் இது வரை இல்லை. இந்த தருணத்திற்காக பல ஆண்டுகள் நான் காத்துகொண்டு இருக்கின்றேன் அப்பா. திருவாய் மலர வேண்டுகிறேன்.

அப்பா! நிச்சயம் கேட்பது சரியே! நிச்சயம் அவ்வவ் இடத்தில் சொன்னால் தான் அனைத்தும் புரியுமப்பா! இதை அத்திருத்தலத்தில் வைத்து சொன்னால் தான் கேட்பவனுக்கும் நல்லது, இவ்விதழை ஓதுபவனுக்கும் நல்லது.  

33. மகாபாரதத்தில் அர்ஜுனன்  பாசுபதாஸ்திரம் வேண்டும்பொழுது சிவ நிந்தனை ஏற்பட்டதின் காரணமாக மறுபிறவியில் கண்ணப்ப நாயனாராக பிறந்தார் என்ற ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.  இது உண்மை தானா அப்பா?

அப்பா! இக்கேள்விக்கு பதில், இப்பொழுதில்லை. அப்பா! அர்ஜுனன் எப்படிப்பட்டவன்! பின்னர் கண்ணப்பன் எப்படிப்பட்டவன். இதனால், அர்ஜுனன் போர் நடத்தினான் அங்கு போய்விட்டு வரச்சொல், பின் கண்ணப்பன் இருந்த இடத்திற்கும் போய் வரச்சொல். பின் உரைப்பேன் ரகசியமாக. இன்னும் தேர்வே எழுதவில்லையாம்! கேள்விகள் கேட்கின்றானாம். 

34. நர-நாராயணர்'ன் அவதாரம் தான் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனா அப்பா!

அப்பா! அனைத்தும் நீங்கள் உணர்ந்ததே. நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

(கேள்வியை உங்களிடம் கேட்டால், எங்களிடம் பதில் சொல்லச் சொன்னால் எப்படி குருநாதா?)

அப்பா! இங்கிருக்கும் பத்மநாபனை நாடச்சொல். நிச்சயம் நவதிருப்பதிக்கு செல்லச்சொல். நிச்சயம் இதனைப்பற்றி உரைப்பேன்! அவர்களைப்பற்றி தெரிவித்துவிட்டால், நிச்சயம், சோம்பேறியாகி விடுவார்கள் மனிதர்கள். 

35. அப்பா உங்கள் வாக்கில், முன்னோர்கள் மோட்சம் அடைய,  நவராத்திரி பொழுதில் (நவ தானியங்கள் மற்றும் உப்பு) வைத்து வழிபாடு செய்து, ஐப்பசி அமாவாசையில் கடலில் விட,  மார்கழி மாதம் "விஷ்ணு சஹஸ்ரநாமம்" கேட்டு, அதை தொடர்ந்து தை மாதத்தில் ஒரு ஆன், பெண் அவர்களை வீட்டுக்கு அழைத்து அன்னமிட்டு, வேட்டி மற்றும் சேலையை சமர்ப்பிக்க சொல்லி இருந்தீர்கள். பெருமாள், முன்னோர்களை மோட்சம் அடைய செய்வார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தீர்கள் அப்பா. இதை பின்பற்றினவர்களுக்கு எப்படி உணர முடியும் அப்பா ? தங்களது முன்னோர்களுக்கு மோட்சம் கிடைத்ததா இல்லையா என்று ? இல்லை சரியாக இதை ஸ்ரத்தையோடு செய்தோமா என்று?

அப்பா! நிச்சயம் தேர்வை எழுதிவிட்டார்கள். என்றாலும், மதிப்பெண்களை ஆசிரியர் கூறினால் தானே தெரியுமப்பா? அதற்குள் இவை எல்லாம் யோசித்து யோசித்து இருந்தால், பின் விடைகள் வந்து கொண்டே இருக்குமப்பா! 

36. நவகிரக தீபம் : அப்பனே உங்கள் வாக்கின் படி, எந்த சிந்தனையும் இல்லாமல்,  மற்றவர்களுக்காக இதை செய்யச் சொன்னீர்கள். அண்ணாமலையாரும் நான் பார்த்து கொண்டு இருக்கிறேன் நீ சொல்வதை யாரெல்லாம் கடைபிடித்து வருகிறார்கள் என்று. அப்பனே உன் அருளால் எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து 4 மாதங்கள் என் தாயும், நானும் ஏற்றி வழிபட்டோம். இது போன்று பல அடியார் பெருமக்கள் கடைபிடித்து வந்தார்கள். இதனால் ஏதேனும் சிறிதளவாவது மற்றவர்களுக்கு பயன்பட்டதா ? கிரகங்களினால் ஏற்படுகின்ற விளைவுகள், மனிதர்களுக்கான பாதிப்புகள் சற்றேனும் குறைந்ததா ?

அப்பனே! நிறைய அளவுக்கு பூகம்பங்கள் வந்தது. இதை சொன்னால் மனிதன் பயப்பட்டுக் கொண்டே வாழ்வான். அதனால், எதையும் பாராமல், நிச்சயம் தீபங்கள் ஏற்றிக் கொண்டு வாருங்கள் என்று.  நிச்சயம்  அவ் புண்ணியங்கள் அவர்களை காத்து நின்றது. இருப்பினும், மனிதன் மாமிசத்தை உண்பதை விடவில்லை. அதுவே பல இடங்களில் பாதிப்பை உண்டாக்கியது. இதற்குத்தான் அப்பா. அகத்தியன் சொன்னால் ஒரு அர்த்தம் உண்டு. ஒரு ஆசிரியன் வகுப்பறையில் சொன்னால் தொடர வேண்டும். அப்படி இருந்தால் தான் தேர்விலும் தேர்ச்சி பெற முடியும். அதே போலத்தான், உங்களுக்கு சொல்வதெல்லாம், புண்ணியம் அதிகரிக்கவே. அதை கூட குற்றப்படுத்தினால் எப்படியாப்பா. புண்ணியங்களே சாரும் அவர்களை. 

37. நாம் தினசரி கடமைக்காக செய்யும் விஷயங்களில் எது தீய கர்மா என்று பகுத்தாய்ந்து தெளிவு பெறுவது மிகவும் சவாலாக உள்ளது. சிந்தித்து செயல்படு என்று குருநாதர் சொல்கிறார். நமது கர்மாவை பொறுத்து தானே நமது சிந்தனையும் அமையும்.அப்படி இருக்க , நாம் சிந்திப்பது சரியா என்பதுதான் குழப்பமாக உள்ளது. 

அப்பா! சிந்திப்பதே, நல்லதா? கெட்டதா? இருப்பினும் யான் வந்து வாக்குகள் செப்பிக்கொண்டு இருக்கின்றேன். அகத்தியன் வருவது என்பது சாதாரண விஷயமா? இதை யோசிக்கச்சொல், பின்பு உரைப்பேன் ரகசியமாக. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 24 April 2025

சித்தன் அருள் - 1844 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-2 !


13. கந்த சஷ்டி கவசம் தினமும் 36 முறை சொல்ல விருப்பம். ஆனால் நேரம் அதிகம் ஆகிறது.  சுருக்கமாக சொல்லும் விதம் இதுதான் என்று பலரும் பலவித மாக. சொல்கிறார்கள்.  இது பற்றி அருள் கூர்ந்து பதிலுரைக்க வேண்டுகிறேன்.

அப்பப்பா! சுடுகாட்டுக்கு சென்றாலும் அதிக நேரமாகின்றதே! இதற்க்கு என்ன வழி என்று நீ கூறு! 

(குருநாதா! திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வது போல் "எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்!")

நிச்சயம் தன்னில் கூட! இப்படி சொன்னால் எப்படியப்பா! பின் வேலைக்கு செல்ல சொல். அதிக நேரம் வேலை செய், பணம் தருகிறேன் என்றால் செய்வானா இல்லையா? அவனை கேள்! நிச்சயம் செய்வானப்பா! அப்பா! காசுகள் யாங்கள் கொடுக்கின்றோம்!  சொல்லச்சொல்ல!

14. குருவே இக்கலியுகத்தில் ஒருவன் நல்லவனாக இருக்க விரும்பினாலும் அவனை சுற்றி உள்ளவர்கள் அவ்வாறு இருக்க விடுவதில்லை என்ன செய்ய வேண்டும்?

அப்பா! முதலில் நீ நல்லவனாக இருந்தாலே அனைவரும் மாறி விடுவார்கள். அப்பனே! நீ நல்லவனாகவே இல்லையே! எப்படியப்பா?  முதலில் நீ நல்லவனாக இரு. யாங்கள் பார்த்துக் கொள்வோம், இப்படி ஒரு குழந்தையா என்று! உன்னை நெருங்குவாரா என்ன? எதை என்று நான் சொல்ல.

15. குருவே தங்களின் ஆசீர்வாதமும் அன்னையின் ஆசீர்வாதமும் வேண்டுகிறேன்?

நிச்சயம் இருக்கின்றதப்பா! சரியான ஆள் இவன். வரச்சொல்! ஆசீர்வாதம் உண்டு!

16. திருப்பதி ஏழுமலையானை எல்லா ராசிக்காரர்களும் வணங்கலாமா அல்லது அதில் ஏதேனும் விதிவிலக்கு உள்ளதா?

அப்பப்பா! நிச்சயம் காப்பதே அவன். வழிபடவில்லை என்றால் வாழ்க்கையே முடிந்துவிட்டது. 

17. வாயில்லா ஜீவராசிகளை அதிக அளவில் உணவாக உட்கொள்கின்றனர் இதை மனிதர்கள் தவிர்க்கவேண்டூம் ஐயா இதற்கு ஒரு வழி கூருங்கள்.

இறைவன் தான் இதற்கு சாட்டை அடி அடிப்பான். பின் நிச்சயம் எவ்வளவுக்கு எவ்வளவு உயிரினங்கள், தன் குழந்தைகள் அழுகின்றதோ, அவ்வளவுக்கு பூகம்பங்களும் கூட, கடல் நீரினாலும் கூட, மலைகளினாலும் கூட, இன்னும் இன்னும் சண்டைகளினாலும் கூட பாதிக்கும். 

18. இப்பூமியில் அதிக அளவு மழை பொழியவேண்டூம் ஐயா. 

அப்பப்பா! அதிக அளவு பெய்தாலும், நீங்கள் எல்லோரும் தண்ணீருக்குள்ளே போய் விடுவீர்கள். புரிகின்றதா ஒன்று. இங்கு நீர்தான் அதிகமாக இருக்கின்றது. அதே புரியவில்லையே. பின் இறைவனுக்கு தெரியும் எவ்வுயிரை எப்பொழுது காக்க வேண்டும் என்று. எப்பொழுது மழை பெய்விக்க வேண்டும் என்று. மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்பவே அனைத்தும் தருகின்றான், மழை ஆயினும் சரி! 

19. தியானத்தின் முதல் வகுப்பில் இருப்பவர்களுக்கு, பிரமிட் த்யானம் பயனளிக்குமா, அல்லது அது ஒரு கட்டுக்கதையா?

அப்பப்பா! முதலில் இவனை ஒழுங்காக இருக்கச்சொல். 

20. வேல் பூஜை பற்றிய விளக்கம் தேவை!

வேல் பூஜை ஒருவன் செய்து கொண்டிருந்தால், பின் சக்திகள் குவிந்துவிடும். பின் அனைத்தும் உணரும் தன்மை கிடைத்து விடும். இதனால், சக்திகள் அதிகமாகி, அனைத்தும் சாதிக்கும் திறன் வந்துவிடும். முருகனே நேரில் வந்து வேல் ஒன்றை கையில் கொடுத்துவிடுவான். எதற்கும் தைரியத்தையும், பின் வேல் நிச்சயம் காப்பு அளிக்கும். 

21. லோப முத்திரை அன்னை அகத்தியர் அப்பா பாதமே போற்றி அப்பா நவகிரக தீபம் ஏற்ற சொன்னீர்கள் மூன்று நாள்  பிரம்ம முகூர்த்த கனவு ஒரு நாள் அகத்தியர் அப்பா  லோபாமுத்திரா அம்மா இருவருக்கும் என் கையால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டேன் அப்பா இரண்டு நாள் திரு ஜானகிராமன் அய்யா ஜீவ நாடி உடன் எங்கள் இல்லத்திற்கு வருவது போல் கனவு கண்டேன் அப்பா.

அப்பா! இது கனவில்லை, நிஜம்!.

22. ஐயா வணக்கம் லோப  முத்ரா அன்னை அகத்தியர் அப்பா பாதமே போற்றி அப்பா எந்த கோவிலுக்கு சென்றாலும் வணங்கும்பொழுது அகத்தியர் அப்பா திரு ஜானகிராமன் அய்யா நன்றாக இருக்க வேண்டும் புண்ணியம் சேரவேண்டும் என்று வேண்டிக் கொண்டால் வந்து சேர வேண்டும் அப்பா அதற்கு என்ன செய்ய வேண்டும் அப்பா தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும் அப்பா

அப்பப்பா! இல்லத்தில் நானே இருக்கின்றேன்! 

23. குடும்பத்தில் அல்லது உறவினர்களில் யாரேனும் கர்பமாக இருந்தால், குல தெய்வ கோயிலுக்கு சென்றாலும் பூஜைகள் செய்யக்கூடாது என்று பொதுவாக கடைபிடித்து வருகிறார்கள் .. இது சரி தானா அப்பா ? இல்லை இது மூட நம்பிக்கையா ?

அப்பா! உண்ணக்கூடாது யாரும்! என்று சொல்லச் சொல் பார்ப்போம்! இவ்வாறு இருக்கும் பொழுது, உயிர் கொலை செய்யக்கூடாது என்று சொல்லச் சொல் அப்பா! அவன் அவன் விருப்பம் போல், வரும் காலத்தில், சாமிதான் சொல்கின்றது என சொல்வான் அப்பா! புத்திகெட்ட மனிதனப்பா! 

24. திருமண வயதில் உள்ள ஆண்/பெண்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஜோதிடர்களும் ஒவ்வொரு பலன்/கருத்து சொல்கிறார்கள். பொருத்தம் பார்ப்பது சரியான விஷயமா அப்பா ? எது சரியான முறை ? மனம் மற்றும் குணம் பார்த்தால் போதுமானதா ? சரியான முறையை அப்பா நீ திருவாய் மலரவேண்டும்.

அப்பா! இதற்கு சரியான தருணம், சரியான இடத்தில் சொல்வேனப்பா! இதன் ரகசியங்கள், நிச்சயம் எடுத்துரைக்க வேண்டும். வரும்காலத்தில் திருமணங்கள் என்பது நிச்சயம் பொய்யாக கூடும். இதனால், பிரம்மாவின் சம்மதத்துடனேயே இதை எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பா! இதனால், நிச்சயம், வருங்கால மனைவி, கணவர் பற்றி நீங்களே அறிந்து கொள்ளலாம். அதுவரை பொறுத்திரு, நிச்சயம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

Wednesday, 23 April 2025

சித்தன் அருள் - 1843 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானிடம் கேள்வியை சமர்ப்பித்து பதிலை பெற வேண்டி உங்களில் சிலர் கேள்விகளை அனுப்பி தந்தது ஞாபகமிருக்கும். சமீபத்தில், அகத்திய பெருமானின் ஜீவநாடியுடன், திரு ஜானகிராமனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த அனைத்து கேள்விகளையும் கேட்டு பதிலை பெற்றுள்ளேன். அவை கீழ்வருமாறு தருகின்றேன்! பொறுமையாக காத்திருக்கவும்!

1. வணக்கம் குருநாதா! ஏன் அஷ்டமி, நவமி திதிகளிலும், பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்றும், நல்ல விஷயங்களை செய்ய தொடங்குவதில்லை. நீங்கள் கூட இந்த நாட்களில் வாக்கு உரைப்பதில்லையே!

அப்பப்பா, நிச்சயம் தன்னில் கூட, அப்படியே பழக்கப்படுத்தி விட்டார்கள் அப்பா. அப்பா! நவமி என்றால் என்ன வென்று கூறு?

(நவமி என்பது அமாவாசையிலிருந்தும், பௌர்ணமியிலிருந்தும் ஒன்பதாவது நாள்)

அப்பப்பா! சித்தர்கள் சிலர்க்கு ஏன் கொடுப்பதில்லை என்பதற்கும், சிலருக்கு மட்டும் ஏன் கொடுக்கிறோம் என்பதற்கும், பல அர்த்தங்கள் உண்டு. இதற்க்கு விஞ்சான ரீதியாக, எங்கு உரைக்க வேண்டுமோ, அங்கு, அப்பொழுது உரைப்பேன் அப்பா! அதுவரை நிச்சயம், எம்முடைய ஆசிகள்!

2. திருச்சுனையில் உங்கள் உத்தரவின் பேரில் அன்னதானம் செய்து வருகிற உங்கள் பக்தை பாண்டி அம்மாளுக்கு உடல் நிலை சரியில்லையே. அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுங்கள் குருநாதா!

இவள் தன் இறந்திருக்க கூடியவள். அன்னத்தை இட்டாள். அதனால்தான் பிழைத்துக் கொண்டாள். பிழைக்கவும் வைத்ததே நானே! என்னிடத்திலேயே கேள்விகளை கேட்கின்றீர்களா? 

(அப்படி அல்ல! நாங்கள் பிரார்த்தனைதான் செய்து கொள்கிறோம். அன்னதானம் செய்கிற வர்கள் நீண்ட நாட்கள் இருந்து அந்த சேவையை செய்யவேண்டும்.)

அவளது கஷ்டங்களோடு, இவ்வளவுதான் என்று பிரம்மன் விதி எழுதிவிட்டான். அவள் இடத்திற்கு யானே சென்று, மருத்துவமனையில் அவளையும் காப்பாற்றி, விதியையும் மாற்றி எழுதியுள்ளேன் அப்பா. இது எவருக்கும் தெரியாதப்பா!  

3.குருமாதா சமேத குருநாதரக்கு நன்றி இந்த வாய்ப்பை அளித்தமைக்கு மற்றும் பணிவான வணக்கம். 
அப்பா  மனிதர்கள் செய்யும் தவறால்‌ அனைத்து ஜீவராசிகளும் பாதிக்கப்படுகிறார்கள். கோடையின்‌ கடுமை மார்ச் மாதத்திலே இந்த வருடம் . இதில் இருந்து‌ எல்லாரையும் காத்து அருள வேண்டுகிறோம்.

இதனால்தான் அனைவரையும் காப்பாற்ற, முன்னரே ரகசியமாக சொன்னேன், மற்றவர்களுக்காக வேண்டிக்கொண்டு நவதீபத்தை எல்லாம் ஏற்ற சொன்னேன். அகத்தியன் சொன்னவை எல்லாம் மற்றவர்களுக்காகவே என உணர்ந்து செய்தால், உங்கள் குடும்பம் செழிக்குமப்பா. பூகம்பங்கள் எல்லாம் இங்கும் வந்திருக்க கூடியது. ஆனாலும் தடுத்துவிட்டேன். அப்படியெல்லாம் நடந்தால் தான் ஒரு பயம் இருக்கும் என்றான் ஈசனும். இதன் ரகசியத்தை பின்னர் உரைக்கின்றேன்.

4.இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு இருக்கும் மாதவிடாய் மற்றும் PCOD பிரச்சனை போல ஆண்களுக்கும் வெரிகோசீல் (Varicocele) நோயால் குழந்தை பேறு தடைபெறுகிறது  ஆண்களின் வெரிகோசீல் (Varicocele) நோயால் விந்தணு எண்ணிக்கை குறைவு  மற்றும் குழந்தை பெறும் திறன் இல்லாமல் போகிறது. இந்த குறைபாட்டை சரி செய்ய சிகிச்சை முறை மற்றும்  மருத்துவ குறிப்பு முறை பற்றி குருநாத பெருமான் வழிகூறினால் இதை பற்றி விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை பற்றி பலரும் தெரிந்து கொள்ள வழி கிடைக்கும் .

ஓரிதழ் தாமரை என்று ஒரு மூலிகை உண்டு. அதை உட்கொண்டாலே போதுமானதப்பா. பாலிலிருந்து பிரித்தெடுப்பார்களே மோர் என்பது, அதை தானம் செய்திட, சில சில கர்மாக்களும் விலகும். அதனால் தான் அதை அனைவருக்கும் கொடுங்கள் என்றேன். இதை புரிந்து கொள்ள மனிதனுக்கு மனமில்லையே! உடம்பிலுள்ள அழுக்குகளை களைய, இந்த ஓரிதழ் தாமரை உதவும். மனிதன் (தகாத உணவினால்) உடலுக்குள் அழுக்கை சேர்த்துக் கொண்டே வருகிறான். இதற்கு கோரை கிழங்கு நிச்சயம் தன்னில் உதவும். இதை அதிகாலையில் வெறும் வயிற்றிலும், மாலை வேளையிலும் உட்கொண்டாலே போதுமானது. நிச்சயம் மாற்றங்கள் உண்டு! உண்டு!  

5. ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் சனீஸ்வரர் ஸ்தலம்,பொழிச்சலூர், இந்த திருத்தலத்தில் அகத்திய பெருமான்  திருவுருவ சிலை உள்ளது அதன் மகிமை பற்றி ஐயா தயவு செய்து சொல்லுங்கள்

அப்பா! அங்கு நானே இருக்கின்றேன். அதி விரைவிலேயே அங்கு வந்து வாக்குகள் செப்புவேன்!

6. மனிதர்களுக்கு தீர்வு காண முடியாத நிலை கஷ்டம் ஏன் ஏற்படுகிறது? முன்ஜென்ம பாவங்கள் செய்து இருந்தாலும் இந்த ஜென்மத்தில் நல்லவர்களாக வாழ்ந்தாலும் கஷ்டம் ஏற்படுகிறது  அத்தகைய கஷ்டத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

அப்பா! கஷ்டத்தில்தான் இறைவன் மனிதனுக்கு அருகிலேயே இருப்பான் என பல வாக்குகளில் உரைத்துவிட்டேன் யான். இன்பமாகவே இருந்தால், பின் தூரத்தில் சென்று விடுவான் இறைவன். இதற்கும் காரணங்கள் உண்டு. துன்பப்பட்டால்தான் மனம் பக்குவமடையும்.  அதாவது, இறைவனை காண வேண்டும், காண வேண்டும் என்று மனிதன் துடி துடித்துக் கொண்டிருக்கின்றான் அப்பா! துன்பம் வழியில் வந்தால் தான் நிச்சயம் இறைவனை காண முடியும். நிச்சயம் இன்பமாக இருந்தால் பாவத்தை சேர்த்துக்கொண்டு, பிறப்புகள் எடுத்து எடுத்து, இதனால் இறைவனை காண வழி, துன்ப வழி அப்பா!

7.செய்வினை பாதிப்பை  தடுக்க வழி இருக்கிறதா?

அப்பப்பா! இருக்கின்றதப்பா! உலகமே இதன் பின்னால் தான் செல்கின்றது அப்பா! ஆனால் இதன் பின்னாடி சென்றால், அனைத்தும் உடனடியாக நடக்கும். ஆனால், அனைத்தும் உடன் அழிந்து போகும். ஆனாலும் பின் இறைவனிடத்தில் வந்தாலும், தீர்வுகள் கிட்டாதப்பா! ஆனாலும் இவைதன் எடுத்துக் கூறினாலும், சித்தர்கள் தானே எடுத்து கூறுகின்றீர்கள் என்று சொல்வார்கள் அப்பா! இதற்கும் பல தீர்வுகள் உண்டு என பல வாக்குகளிலும் எடுத்து உரைத்து விட்டேன். இதனை பல வகைகளிலும் தடுக்கவே, ஒரு சித்தன் இருக்கின்றானப்பா. அதை ரகசியமாக சொல்வேனப்பா! அறிந்தும், புரிந்தும் நடந்து கொள்ளுங்கள், எங்களிடத்தில் இவை எல்லாம் பலிக்காது. எங்களிடத்தில் வந்துவிட்டாலே, இதற்கு மதிப்பு பூஜ்யமே! ஆனாலும் இதை செய்திட்டுத்தான் வருகின்றார்கள். அதனால் தான் எத்தனை ஆண்டுகள் ஆயினும் ஒன்றுமே நடப்பதில்லை.  

8.கல்வி தடை. பொருளாதர தடை.எதிரி தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?

அப்பா! கல்வித்தடை நீங்க, நிச்சயம் கூத்தனூர் தேவி, சென்று, அது மட்டும் அல்லாமல், வல்லாரை எனும் மூலிகையை எடுக்கச்சொன்னேன். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து (சில மந்திரங்களை) ஓதி வந்தாலே, படிப்பு நிச்சயம் வளரும். 

இங்கு எதிரிகள் என்றால் எவர்? நிச்சயம் தரித்திர மனிதர்களே என்பேன். அதனால் தான் அப்பா!, நிச்சயம் பொறாமை குணத்தை மாற்றுங்கள்! எண்ணத்தை உயர்வாக வைத்தால் தொழில் சாதாரணமாக கடந்து போகும் என்பேன்! உன் எண்ணங்கள் எவ்வளவு உயர்வாக இருக்கின்றதோ, உன் மனது எவ்வளவு உயர்வாக இருக்கின்றதோ, அவ்வளவு உயர்வு உன் பணிகளிலும் கிடைக்கும். நிச்சயம் தொழில் உயர்வு கிடைக்கும். ஆனால், மனமில்லையே! கூடவே உயர்வும் இல்லையே!

9. இதற்கு முன் ஒருமுறை, ஒரு ருத்ராக்ஷத்தை இரவு நீரில் இட்டுவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ருத்திரன் நீரில் இறங்கி உள்புகுந்து நம்மை காப்பான் என்றீர்கள். அப்படி செய்து பார்த்த பொழுது, அந்த நீர் வழி உள்புகுந்த அக்னியை தாங்க முடியவில்லை குருநாதா? என்ன செய்ய?

அப்பா! அதனுடன் துளசி இலையை மென்று தின்னுங்கள். 

10. .தற்போதைய காலத்தில் வளர்ந்து வரும் பிள்ளைகள் (மகள் மற்றும் மகன்) வயதுக்கு ஏற்றார் போல் உடல் பலத்தை பெற முடியாமல் தவிக்கிறார்கள் மிகவும் மெலிந்து காணப்படுதல் மற்றும் சோர்வு தன்மை, பலம் குன்றி காணப்படுதல் இது போன்ற பிரச்சனைகள் தீர குருநாதர் கருணைக்கடல் அருள வேண்டும். """"மிகவும் மெலிந்த  உடலை தேற்ற"""" தீர்வு ஒன்றினை அருளுங்கள் தந்தையே.

அப்பா! சூரியனின் வேகமானது குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தான் (உடலுக்கு) தேவையான ஒளி கிடைப்பதில்லை. இதனால் தரித்திரம் நிறைந்த வாழ்க்கையாக வாழ்ந்து வருகின்றார். இதனால் தான், சித்தனுடைய பேச்சை கேளுங்கள் என்கின்றோம். கிரகங்களின் வேகத்தை எவ்வளவு மாற்றினாலும், பின் தன்னிலைக்கே வந்து விடுகின்றது. இனியும் போகப்போக நடக்கப்போவதை தெரிவித்தால், நீங்கள் பயந்து ஓடி விடுவீர்கள். இதனால், பொறுத்திருந்து, பின் மனதை பக்குவப்படுத்தி சொல்கின்றேன். அனைத்திற்கும் தீர்வு உண்டு, இல்லையென்றால் யாங்கள் வந்து வாக்குகள் செப்ப மாட்டோம். 

10. காசியில் தங்களின் உண்மை முகத்தினை ஒருவர் ஓவியமாக வரைவார் என்று கூறியிருந்தீர் அதைக் காண அடியவர்கள் மிகவும் ஆவலாக உள்ளோம்.

அப்பப்பா! உயர் கல்வியை படிப்பதற்க்கே பின் பொறுத்து ஆகத்தான் வேண்டுமப்பா. பின் நிச்சயம். அனைத்திற்கும், பின் திருமணம் என்றாலும் பொருத்தாகத்தான் வேண்டும். ஆனால் அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடுமா என்ன? அப்பனே! புண்ணியங்கள் அதிகரித்து, அதிகரித்து காட்டுகிறேனப்பா. இன்னும் பக்குவங்கள் பட வேண்டுமப்பா!  

11. பொதுவாக்கு ஒன்றில் தாங்கள் தவம் செய்த குகையை பற்றி கூறுகிறேன் என்று வாய் மொழிந்தீர் மிகவும் ஆவலாக உள்ளோம் தந்தையே.

அப்பா! நிச்சயம் செய்கின்றேன் அப்பா! என்ன செய்வீர்கள் நீங்கள்? ஆட்களை கூட்டிக்கொண்டு அங்கு சென்று, "இங்குதான் அகத்தியன் தவம் செய்தான்! என்று கூறி பின் காசாக்குவான் மனிதன் கூட. நிம்மதியையே கெடுத்து விடுவான். 

(100 பேர் அப்படி வந்தாலும், ஒரு இரண்டு பேராவது நேர்மையாக இருக்க மாட்டானா?)

அப்பப்பா! நேர்மையானவன் கூட. மற்றவனை பார்த்து, ஏன் நேர்மையாக இருக்க வேண்டும் என சென்று விடுகின்றான், ஆடுகளை போலவே. 

(எதற்க்காக இந்த கேள்வியை கேட்டேன் என்றால், இதற்கு முன் அன்னதானம் செய்வதை பற்றி கூறும் பொழுது, நீங்களே கூறியுள்ளீர்கள். 100 பேரிடம் கொடுக்கிற பொழுது, 10 பேர்கள்தான் ஒழுங்காக பண்ணுவார்கள். மிச்சம் உள்ள 90 பேர்கள் சரியாக பண்ணமாட்டார்கள். ஆனால், இந்த 10 பேரை பிடிக்க வேண்டும் என்றால், அந்த 100 பேருக்கு கொடுத்துதான் ஆக வேண்டும் என்றீர்கள்.)

அப்பப்பா! ஒருவன் மட்டும் மேலே அமர்ந்திருக்கிறான். மற்றவர்கள் அனைவரும் கீழே அமர்ந்திருக்கிறார்கள். இதற்கு என்ன பதில் என்று நீ கூறு முதலில். 

(அவர் இன்னும் உங்களை பற்றி புரிந்து கொள்ளவில்லை)

அப்பப்பா! என்னை பற்றி நன்றாக புரிந்து கொள்ளட்டும், பிறகு, யானே அழைத்து செல்கின்றேன். 

12. வேதாரண்யம் அகத்தியன்பள்ளி கோவிலில் சரியான நேரத்துக்கு பூஜைகள் நடப்பதில்லையே?

அப்பப்பா! பின் நிச்சயம், யாங்கள் எதையுமே, விரும்புவதில்லை. நிச்சயம் மனசாட்சியோடு நடந்தால் போதுமானதப்பா. எங்களை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும்! முதலில் உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா! உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளாததால் தான் யாங்கள் வந்து, இப்படி நடங்கள், இப்படி நடங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றோம். எங்களை பார்க்க எங்களுக்கு தெரியுமப்பா. 

13. அய்யனே! ஒரு சிறு சந்தேகம். முன்பு, நீங்கள் கூறியதை ஞாபகப்படுத்தி இப்பொழுது கேட்கின்றேன். வேதாரண்யம் கடற்கரையில், ஈசான மூலையில் சென்று அமர்ந்து, அகத்தியனை நினைத்து கைநீட்டி எவன் ஒருவன் த்யானம் செய்கிறானோ, அவன் கையில் நான் எழுதிய ஓலை கிடைக்கும் என கூறியிருக்கிறீர்கள். இப்பொழுதும் கொடுக்கிறீர்களா?

அப்பப்பா! அவ் ஓலையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறான். பணத்தை சம்பாதித்து, மறைத்தது வைத்து, மற்றவர்களின் கர்மாவையும் சேர்த்துக் கொள்ளப் போகின்றான். நிச்சயம் கொடுப்பேன்! இப்பொழுது சொல்லிவிட்டால், அனைவரும் வரிசையில் வந்து நின்று விடுவார்கள். அகத்தியனே! எந்தனுக்கு, தா தா என்று! யான் கொடுக்கவில்லை என்றால், அகத்தியனா இவன் என்று சொல்லிவிட்டு போய் கொண்டே இருப்பான். பக்குவம் இல்லாமல் எதை கொடுத்தாலும், அவை வீணே! குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் என்னவென்று என ஒரு பழமொழியும் உண்டு. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!