​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 14 September 2016

சித்தன் அருள் - 439 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"வாழும்போது ஒரு ஆத்மா, கடைசியாக அது எந்த நிலையில் இருந்ததோ, எந்த அளவிற்கு பிராயச்சித்தம் செய்து முன் ஜென்ம பாவத்தை குறைத்து இருக்கிறதோ, எந்த அளவிற்கு புண்ணியத்தை சேர்த்து இருக்கிறதோ, எந்த அளவிற்கு ஆத்ம பலத்தை அதிகரித்துள்ளதோ, அதைப் பொறுத்தே, அந்த ஆத்மா செல்லும் தூரமும், காலமும், பரிணாமமும் இருக்கும். அப்படி எதுவும் செய்யாமல், சராசரியாக உண்டு, உறங்கி, விலங்கு போல் வாழ்ந்த ஆத்மாவால் உணரவும் முடியாது, வேறு எங்கும் செல்லவும் முடியாது. குறிப்பிட்ட இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும், அந்த ஆத்மா."


2 comments:

  1. Thiru Arunachalam,
    Kindly provide your email or contact number.
    Thanks
    Chandrasekar

    ReplyDelete