"அந்த நாள் இந்த வருடம் 2019-20" என்கிற தொகுப்பில் இனி கடைசியாக இரு நிகழ்ச்சிகள் உள்ளன. அவற்றை ஞாபகப்படுத்தம் விதமாக தொகுத்து தருகிறேன்.
பாபநாச ஸ்நானம்:-
தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாச சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 17/12/2019 முதல் 14/01/2020க்குள் வருகிறது.
அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:-
13/01/2020 - திங்கட்கிழமை - மார்கழி மாதம், த்ரிதியை திதி - ஆயில்யம் நட்சத்திரம். எங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிற நாள். அன்றய தினம் அகத்தியர் கோவிலுக்கு சென்று ஏதேனும் ஒரு விதத்தில் பங்கு பெற்று, முடிந்த அளவுக்கு உழவாரப்பணியேனும் செய்து அவர் அருளை பெற்றுக்கொள்ளுங்கள்.
அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.
இந்திராக்ஷி சிவகவசம் கீழே தரப்பட்டுள்ளது. வேண்டுபவர்கள் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
INDIRAKSHI SHIVA KAVACHAM DOWNLOAD
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்....................... தொடரும்!
