​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 1 January 2019

சித்தன் அருள் - 785 - அகத்தியப் பெருமானின் அருள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று தொடங்கிய நன் நாள், என்றும் இனிமையாக, அமைதியாக, மனோபீஷ்டங்கள் நிறைவேறி, ஸ்ரீ லோபாமுத்திரா சமேத திரு அகத்தியப் பெருமானின் திருவருளும், இறைவனின் கனிவான கடைக்கண் பார்வையும், சித்தப் பெருமான்களின் ஆசியும், உங்கள் அனைவருக்கும், இனி என்றும் கிடைக்கட்டும் என வேண்டி "அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூவின் வாழ்த்துக்களுடன், உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

எல்லோரும் நலமாக, இன்புற்று, நிறைய தெய்வீக அனுபவங்களுடன் வாழ்க!

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத திரு அகத்தியர் திருவடிகள் போற்றி!

அக்னிலிங்கம்!