​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 7 October 2018

சித்தன் அருள் - 769 - தாமிரபரணி புஷ்கரம் - தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தாமிரபரணி மஹா புஷ்கரம், இந்த மாதம் 11 அன்று குருபெயர்ச்சியின் பின் 22/10/2018 வரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல புண்ணிய ஷேத்ரத்திலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஏதேனும் ஒரு இடத்தில் புஷ்கர பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் அடியவர்களுக்காக, இடம், தூரம் போன்றவை குறிப்பிட்ட ஒரு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

சென்று அகத்தியர், தாமிரபரணி தாயின் அருள் பெற்று, நலமுடன் வாழ்க.


சித்தன் அருள்..................தொடரும்!