அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
"உலகியல் செயல்கள் அனைத்தும், கர்ம வினைகளால் (மனிதர்கள்) ஏற்படுத்திக் கொள்பவை, ஏற்பட்டுக்கு கொண்டு இருப்பவை, என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்ற மனிதன், அந்த நிறுவனத்தை தன் இல்லமாக ஒரு பொழுதும் கருதுவதில்லை. வந்து போகின்ற இடமாகத்தான் கருதுகிறான். ஆனால், தன் இல்லம், தன் வாகனம், தன் குடும்பம் என்றால், சற்றே ஓட்டுதல் வந்துவிடுகிறது. எனவே, இந்த உலகத்தையும் ஒரு நிறுவனமாகப் பார்த்து, இங்கே சில காலம் பணிபுரிய, இந்த ஆத்மா, இந்த உடம்பு என்ற வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. வந்த பணி முடிந்தவுடன் இல்லம் திரும்புவது போல, அது செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடும் என்ற நினைவோடு வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டுவிட்டால், மனம் ஒடுங்கத் தொடங்கிவிடும்."
