​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 9 February 2016

அகத்தியப் பெருமானின் "ப்ராஜெக்ட்" - வாருங்கள், ஒன்று சேருவோம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சில தினங்களுக்கு முன் ஒரு அகத்தியர் உத்தரவை கூறி, அதில் எல்லோரும் பங்குகொள்ள வாருங்கள் என்று "சித்தன் அருளில்" அழைப்பு வந்தது நினைவிருக்கும்.

ஏராளமான அகத்தியர் அடியவர்கள் அதில் பங்கு கொள்ள விரும்பி தங்கள் முகவரியை அனுப்பியிருந்தனர். இதை நடைமுறைபடுத்துகிற அடியவர்கள் இருவரும் அனைவருக்கும் "மந்திரம் DVD"ஐ அனுப்பிக் கொண்டிருகின்றனர். கூடிய விரைவில் உங்களுக்கு வந்து சேரும். சற்று தாமதித்தாலும் நிச்சயமாக அது உங்களை வந்து சேரும்.

முதலில் இதை சென்னையில் மட்டும் நடைமுறைபடுத்தி பார்த்து, பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும்/மாநிலங்களுக்கும் விரிவு படுத்தலாம் என்று நினைத்து, சென்னையில் உள்ளவர்கள் முதலில் விருப்பத்தை தெரிவியுங்கள். மற்ற அகத்தியர் அடியவர்களுக்கு பின்னர் வாய்ப்பு அளிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அகத்தியர் அடியவர்கள் இருவரின் விருப்பத்தின் பேரில், இன்று உங்களுக்கு மற்றுமோர் செய்தி.

  1. மற்ற மாவட்டங்கள், மற்ற மாநிலங்கள், வெளிநாட்டில் உள்ள அகத்தியர் அடியவர்களும் இப்பொழுது விண்ணப்பிக்கலாம். பாரதத்திற்குள் மட்டும் "மந்திரம் DVD" அனுப்பி வைக்கப்படும்.
  2. வெளிநாட்டில் வசிப்பவர்கள் விண்ணப்பித்தால் கூகிள் "டிரைவில்" சேமித்துவைக்கப்பட்ட தொடர்பு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து டவுன்லோட் பண்ணிக்கொள்ளலாம்.
அதே போல் மந்திரம் DVD கிடைத்தவுடன் ஒரு மெயில், DVD கிடைத்தது என தெரிவித்தால் நல்லது. இவர்கள் அனுப்பிவைத்துவிட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் என்று இருப்பார்கள். அது உங்களை வந்து சேராமல் இருந்தால், தகவல் தெரிந்தால்தான், அவர்களால் விசாரிக்க முடியும்.

அதே போல், மந்திரம் அடங்கிய DVD கிடைத்தவுடன் அதை எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் எடுத்து நீங்கள் விரும்பும்  கோவில்களுக்கும், உங்கள் வீட்டிற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பயன்படுத்தக் கொடுக்கலாம். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. அப்படி கொடுப்பது ஒரு இலவச முயற்சியாக மட்டும் இருக்க பார்த்துக் கொள்ளுங்கள்.

எங்கும், அகத்தியர் உத்தரவின் பேரில், அந்த மந்திரங்கள் முழங்கி இந்த உலகம் சுத்தப்படுத்த படவேண்டும் என்பதே இந்த முயற்சியின் விருப்பம்.

மேலும், DVDஐ கொண்டு சேர்த்து, இதன் தாத்பர்யத்தை அது சேரும் இடத்தில் தெரிவிப்பதே நமக்கு இடப்பட்ட வேலை. அதை ஒலிக்கச் செய்வது அகத்தியப் பெருமானின் அருளில் உள்ளது.  ஆகவே, பெருமாள் கோவிலில், சிவபெருமான் மந்திரங்கள் போடமாட்டார்களே என்கிற கேள்விகள் நமக்குள் வேண்டாம். அதை அகத்தியப் பெருமானிடம் விட்டுவிடுவோம். 

வாருங்கள், அகத்தியரின் உத்தரவை, அவர் அருளுடன் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்படுத்துவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!