அகத்தியர் அடியவர் திரு ரவிக்குமார், பாபநாசம்-கல்யாண தீர்த்தத்தில் உறையும் அகத்தியப் பெருமானுக்கு 15/02/2014 அன்று சிறப்பு பூசை நடை பெறுவதாக அறிவித்துள்ளார். பூசை பற்றிய விவரங்களை கீழே உள்ள வலை பூவில் சென்று அறிந்துகொள்ளுங்கள். கணபதி ஹோமம், சுதர்சன ஹோமத்தில் பங்கு கொள்ளலாம். முன் பதிவு தேவை. எல்லோரும் சென்று பங்கு பெற்று அவர் அருள் பெற்று வாருங்கள்.
அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
