​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 2 May 2013

சித்தன் அருள் - மிகப் பெரிய ஏக முக ருத்ராக்ஷம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஏதேனும் அபூர்வ தகவல் கிடைத்தால் அதை நான் மட்டும் அனுபவிக்காமல் எல்லோரும் தெரிந்துகொள்ளட்டுமே என்கிற எண்ணத்தில் பலரிடமும் பகிர்ந்து கொள்வது உண்டு.  ஏனோ என்னால் அந்த மன நிலையை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

சமீபத்தில் ருத்ராக்ஷம் பற்றி சிறிது ஆராய்ச்சி செய்த போது மிகப் பெரிய ருத்ராக்ஷம் எங்கு இருக்கும்? என்ற கேள்வி என் மனதுள் எழுந்தது. சரி! வலைப்பூவை துழாவி பார்ப்போம் என்று நினைத்த போது கிடைத்த தகவலை கீழே தருகிறேன்.  உண்மையிலேயே ஒன்றரை அடி ருத்ராக்ஷம், அதுவும் "ஏக முகத்துடன்" ஒரு அகத்தியர் சீடரிடம் இருக்கிறது என்று அறிந்த பொழுது மனம் பூரித்து விட்டது.

தமிழக கேரளா மலை பிராந்தியத்தில் "கல்லார்" என்கிற இடத்தில் அகத்தியருக்கு ஒரு ஆஸ்ரமம் அமைத்து திரு தவயோகி தங்கரசன் சுவாமிகள் என்பவர், அந்த ஆஸ்ரமத்தில், ஒன்றரை அடி ஏக முக ருத்ரக்ஷத்தை வைத்து லிங்கமாக பாவித்து பூசை செய்து வருகிறார்.  அந்த ஒளி நாடாவை பாருங்கள்.


ஓம் அகத்தீசாய நமஹ!