​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 6 September 2012

ஓதியப்பர் (முருகர்) பிறந்தநாள் இந்த வருடம் - 12/09/2012

போகர் சித்தரின் வாக்கின்படி முருகர் பிறந்தது "ஆவணி மாதம் பூசம் முதற் காலில், திங்கள் கிழமை அன்று"..  அப்படியானால் இந்த வருடம் செப்டம்பர் மாதம் (இந்த மாதம்) பன்னிரெண்டாம் தியதி அன்று பூசம் நட்சத்திரம் வருகிறது.  அடியவர்களே அன்று முருகர் கோவிலுக்கு போய் அவரை தரிசனம் செய்யலாமே.  எங்கே? ஓதிமலையிலேயா?

ஓதிமலை எங்கிருக்குன்னு கோயம்புத்தூர் போய் விசாரிக்காதீங்க. அங்கிருப்பவர்கள் நிறைய பேருக்கு தெரியாது.  இன்டெர் நெட்டை துழாவுங்கள்.