​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 28 July 2017

சித்தன் அருள் - 715 - திரு.ஹனுமந்ததாசன் அய்யா அவர்களின் புகைப்படம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

முதன் முறையாக, பல அகத்தியர் அடியவர்கள், மறைந்த திரு.ஹனுமந்த தாசன் அய்யா அவர்களின் திருமுகத்தை காண விழைந்து, அவரது புகைப்படத்தை கேட்ட பொழுது, அகத்தியரின் பாசம் மிகுந்த மைந்தனாய் இருந்த ஒருவரை எல்லோருமே பார்க்கட்டும் என்று, அடியேனின் கைவசம் இருந்த இந்த புகைப்படத்தை "சித்தன் அருள்" வலைப்பூவில் தருகிறேன். அனைவரும் ஏற்றுக்கொண்டு இன்புறுக.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியருக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.