​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 31 May 2014

ஸ்ரீ போகர் சித்தர் ஜென்ம நட்சத்திர விழா, பழனி!

[சமாதியின் நுழைவு வாயிலில் இருக்கும் போகர் சிலை]


[வேலுடன் இருக்கும் புவனேஸ்வரி தாயார்]

[போகர் சித்தர் பூசித்த மரகத லிங்கம்]


[போகர் திரு உருவம்]
வணக்கம் அடியவர்களே!

27/05/2014 அன்று போகரின் ஜென்ம நட்ச்சத்திரம், பழனியில் அவர் சமாதியில் மிகச் சிறப்பாக, அபிஷேக ஆராதனையுடன் கொண்டாடப்பட்டது. அது ஒரு கண் கொள்ளா காட்சி. அபூர்வமாக ஒருவருடத்தில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு. நண்பர்கள் பங்குபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எடுத்த ஒரு சில புகைப்படங்களை, அங்கு வந்து பார்க்க முடியாமல் போன அடியவர்களுக்காக தருகிறேன். அவர் அருளை நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஓம் போகர் சித்தர் பாதம் சரணம்!