​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 17 September 2026

சித்தன் அருள் - 2319 - சித்தர் புலம்பல்கள் - 6!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
 
  1. பட்டினி கிடந்து உயிரை விட்டால், அது மிகவும் உயர்ந்த நிலையை ஒரு மனிதனுக்கு நல்கும். இறையருளை தரும்.
  2. தாவர இனங்களை உண்பதால் குறைந்த பட்ச பாபம் வரும். எனவே இறைவனிடம் பிறவியே வேண்டாம் என வேண்ட வேண்டும்.
  3. உயிர் கொலை பாபங்கள், எந்த தர்மத்தாலும் நீற்று போகாது.
  4. பரிபூரண சரணாகதி தத்துவத்தில் ஆழ்ந்தபின், சாஸ்திரங்களை அதிகம் கவனிக்க வேண்டாம்.
  5. ஒருவன் பக்குவமடைய, அவன் கர்மவினை இடம் தரவேண்டும்.
  6. தீய செயல்களை முயற்சி செய்து வெற்றிபெற்றால் பாவமாகும். தூய செயல்களை முயற்சி செய்து தோற்றாலும் பாதகமில்லை, புண்ணியமே வரும்.
  7. இறைவனைத் தொடு, ஒருவனுக்கு பின், சிகிர்ச்சையே தேவையில்லையப்பா.
  8. ஆத்திரம் அறிவுக்கு சத்ரு. 
  9. உயர் நிலையில் நிதானம் வேண்டும்.
  10. பிறர் பிரச்சினை தீர்க்க நினைக்கின்; உன் பிரச்சினையை இறைவன் தீர்ப்பான்.
  11. செய்த பாபங்களை குறைத்துக்கொள்ளவும், இனி பாபங்கள் சேராமல் விழிப்புணர்வுடன் வாழவும் தான் இவ்வுடல் தரப்பட்டுள்ளது. 
  12. நல்ல விஷயங்களை ஒரு சித்தன் சொல்லி செய்யவேண்டியதே இல்லை.
  13. இறைவனே தவறு செய்ய தூண்டினாலும், விதியே தவறு செய்ய அழைத்தாலும், போராடி, மறுத்துவிடு.
  14. உடலுக்காக மட்டும் வாழாதே!
  15. "சித்" எனப்படும் "சித்தம்"  தெளிவடைய, உண்மையான சித்தர்களின் வழி, வாக்கு, ஏன் எதை எந்த காலத்தில் உரைக்கிறோம் என்பது தெளிவாகும்!
  16. ஒரு மனிதன் பாபத்தை நீக்குவதற்கும், பாபம் செய்யாமல் இருப்பதற்கும் போராடத்தான் வேண்டும்.
  17. நல்லவை எண்ணுதலும், நல்லவை சொல்லுதலும், நல்லவையே செய்தலும், எப்பிறவியிலும் ஒரு மனிதனுக்கு நல்லதை தேடித்தரும்.
  18. எந்த நிலையிலும் ஒரு மனிதன் விழிப்புணர்வோடு பாபங்களை செய்யாமல் இருந்தால், பிறவிச்சுழற்சியில் மாட்டிக் கொள்ளமாட்டான். 
  19. சித்த வழி தொண்டு செய்து, சித்தர் வழியில் இறையை காண வேண்டும்.
  20. உள்ளுக்குள் இறையை பார்த்துப்பழக, விதி ஒருவனுக்கு சாதகமாக மாறும்.
  21. அண்ட சராசரங்களை படைத்தது இறைவன். அந்த இறைக்கு மனிதன் தருவதற்கு என்று ஒன்றுமில்லை, தன் உள்ளத்தை தவிர.
  22. ஒரு மனிதன் பக்குவம் பெற நிறைய சோதனைகளையும், வேதனைகளையும் தாங்க வேண்டும்.
  23. சித்தர்களை போன்ற பற்றற்ற தன்மை வந்துவிட்டால் கட்டாயம், இறை காட்சி கிடைக்கும்.
  24. பரிகாரங்களை விட மனம் ஒன்றிய பிரார்த்தனைகள் அதிகம் சக்தி வாய்ந்தவை!
  25. நடக்கட்டும் நம்புகிறோம் என்பது மனிதர்கள் வாக்கு. நம்புங்கள் நடக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.
  26. ஜபத்தின் ஒரு கட்டத்தில் ஒன்றும் இல்லாத வெறுமை வரும். அதனுள் வரும் வெற்றிடம்தான் மகா சக்தி அல்லது பூரண சக்தி.
  27. காமத்தை வெல்ல - அபிராமி அந்தாதி ஓதுக.
  28. ராம நாம ஜெபம், ஒருவனுக்கு வரும் காமத்தை ஓட்டும் என்பதே உண்மை.
  29. நாராயண ஜெபமோ, நமச்சிவாய ஜெபமோ, தொடர்ந்தால், ஒருவனுள் "அந்த" தன்மையை விதைக்கும்.
  30. உருவாகும் ஒன்று பின்னர் இல்லாமல் போய்விடும் என்பதே இறை சித்தாந்தம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment