​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 20 August 2026

சித்தன் அருள் - 2289 - அகத்தியர் வாக்கு!


இறைவன் படைக்கும்பொழுதே எல்லாவற்றையும் சிறப்பாக, உயர்வாக, எல்லா மனிதர்களும் பேதமில்லாமல் இருக்க வேண்டும் என்று இக்கணம் எண்ணினாலும் எல்லாம் சுபமாக, சுவையாக, எதிர்பார்க்கின்ற விதமாக இருந்துவிடும். ஆனால் இறைவன் என்ன செய்தார்? மனிதர்களுக்கென்று சில சுதந்திரங்களையும், சிந்திக்கக் கூடிய  அறிவையும் தந்து அவனுடைய சுய அறிவால் நன்மை, தீமைகளைப் பிரித்துப் பார்த்து வாழ்ந்து விட்டு வரட்டும் என்று தந்தால் மனிதன் நன்மையை நாடுவதை விட, நன்மைக்கு மாறான விஷயங்களை நாடுவதிலே கவனம் செலுத்தி தன்னையும் கெடுத்துக்கொண்டு தன் சந்ததியையும் கெடுத்துக் கொண்டு இந்த உலகத்தையும் கெடுத்துக் கொண்டான். ஒரு வகையில் பார்த்தால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரமே அவன் அழிவிற்கு காரணமாகி விட்டது என்று கூட வேடிக்கையாக கூறலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment