​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 26 June 2026

சித்தன் அருள் - 2236 - அன்புடன் அகத்தியர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2

நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1 

இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


===========================
# இவ் பகுதி #2 வாக்கின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=15242  
===========================

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

சுவடி ஓதும் மைந்தன் :- ( சிவ குழந்தையை பார்த்து..அம்மா… ) தண்ணி குடிங்க….


குருநாதர் :- அழகாகவே அறிந்தும் பயன் என்ன? இதனால் பல குற்றங்கள், பல பாவ வினைகள் அறிந்தும் சுமந்து தான் வந்திருக்கின்றார்கள். எதனால் மனம் இறங்கி, அறிந்தும் ஏது என்று புரிய, குழந்தாய் அழகாக முதலிலே பாடினாயே திருப்போரூரார் பற்றி. அதை பாடு, மக்கள் அதாவது முருகன் பெண் அனைவருக்கும் ஆசீர்வதிக்கட்டும். 


(திருப்போரூர் கந்தசுவாமி (முருகன்) மீது பாடப்பட்ட மிகவும் புகழ்பெற்ற பக்திப் பாடல். அதனையே மீண்டும் பாடுக என்று அருளினார்கள்)   


சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப நீங்க பாடுறீங்க, பார்த்தீங்களா? அதையே பாட சொல்றார். பாடுங்க…


சுவடி ஓதும் மைந்தன் :-  (மேலும் சில விளக்கங்கள் உரைத்தார்கள் அங்குள்ள அடியவர்களின் கர்ம வினைகள் நீங்க.)


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-  
 
(         ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
நீதி தழைக்கின்ற திருபோரூர் தனிமுதலே – நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு….. முருகா… முருகா…


நீயல்லால் தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!
முருகா நீயல்லால் தெய்வமில்லை!  )
 
நேரலை - https://youtu.be/NqRaI13qIDU?t=15337 

( பாடல் பாடி முடித்த பின்னர்..மீண்டும் குருநாதர் வாக்குகள் ஆரம்பமானது…. ) 


===========================
# ஞானத்தை கொடுத்து, அவ்  ஞானத்தின் மூலம் பின் நிச்சயம் உலகத்திற்கு உன்னை தெரியப்படுத்துவேன்
===========================


குருநாதர் :- அழகாக, குழந்தாய். சில பாடல்களுக்கு முருகனே, இறைவனே, நிச்சயம் இறங்குவான்., கவலை வேண்டாம். ஞானத்தை கொடுத்து, அவ் ஞானத்தின் மூலம் பின் நிச்சயம் உலகத்திற்கு உன்னை தெரியப்படுத்துவேன். கவலை வேண்டாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாருங்க, ஞானத்தை நிறைய கொடுத்துருவாரு. நீங்க வந்து அந்த ஞானத்தை நிறைய கொடுத்துட்டு, இந்த உலகத்துக்கே நான் உன்னை தெரியப்படுத்துறேன் என்றார் அகத்தியர். 


குருநாதர் :- இதனால் பின் அனைவருமே அமர்ந்து கொண்டு, அதாவது இவர்களுக்கு ஏதாவது சில கருத்துக்களை கூறு, குழந்தாய். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இவங்களுக்கு ஏதாவது கூறு. நீங்க என்ன பண்றீங்க? நீங்க இவங்களுக்கு ஏதாவது சொல்ல சொல்றாரு. சொல்லுங்க, என்ன சொல்லுவீங்க? நீங்க சொல்லுங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( சுவடியை எடுத்து அவ் குழந்தைக்கு காட்டினார் ) அம்மா, இது அகத்தியர். இங்க பாருங்க, பாருங்க. இது வந்து உங்களுக்கு காமிக்கிறேன். இது அகத்தியரே சொல்றது வந்து. ஓகேங்களா? அதனால வந்து நீங்க இவங்களுக்கு என்ன சொல்லணுமோ சொல்லுங்கன்றார். தைரியமா? அடுத்த லெவல்ல நீங்க வந்து அடுத்த ஸ்டெப் போயிடுவீங்க. வந்து அகத்தியர் உங்களை எடுத்துட்டு போயிடுவார். சொல்லுங்க.


===========================
# உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள் 
===========================

( அவசியம் பின்வரும் இவ் வாக்கினை நேரலையில் காண்க )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=15806 


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


நான் எப்பவுமே ஸ்கூல்ல வந்து, டீச்சர்ஸ் வந்து, கிளாஸ் ஆரம்பிக்க முன்னாடி சொல்லுவாங்க, "பிரேயர் பண்ணுங்க" அப்படின்பாங்க. 


நான் என்ன வேண்டுவேன்னா, எனக்கு அது ஒரு மிஸ் (ஆசிரியர்)  சொல்லித் தந்தது. எல்லாரும் நல்லா இருக்கணும், அப்படின்னு வேண்டணும். 


அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )


===========================
# எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இறைவா, உன்னை மறந்துடவே கூடாது. 
===========================


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


இப்போ நீ அந்த மாதிரி வேண்டுற, அதே மாதிரி இன்னொருத்தவங்க வேண்டுனாலும் எப்படி? உன்னையும் சேர்த்து, எல்லாரையும்னா உன்னையும் சேர்த்து வரும் இல்லையா? இப்படி எல்லாரும் வேண்டணும் அப்படின்னா, கண்டிப்பா எல்லாரும் நல்லா இருப்போம் அப்படின்னு வந்து சொல்லித் தந்தாங்க. 


அதனால எப்பவுமே, 6thல இருந்து ( ஆறாம் வகுப்பில் இருந்து )  நான் வந்து, எல்லாரும் நல்லா இருக்கணும் அப்படிதான் வேண்டுவேன். முடிஞ்ச அளவுக்கு, நம்மளால ஏண்ட அளவுக்கு, கொஞ்சம் கொஞ்சம் நம்ம பிறருக்கு உதவி செய்வோம். பக்தி செய்வோம். 


எத்தனை... நான் என்னை பொறுத்தவரைக்கும், நான் இறைவனிடம் ஏதாவது கேட்கணும் அப்படின்னா, 


—---“எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இறைவா, உன்னை மறந்துடவே கூடாது.”-------


அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா  பாருங்க, பாருங்க. யாருக்கு இந்த இது ( மனசு ) வரும்? பார்த்தீங்களா !!!!! இதுதான் !!!!!. இது எத்தனை பேருக்கு இது (மனசு) வரும்? எனக்கு அது கொடு, இது கொடு. இறைவன் கையில வந்து, ஏதோ வேலையாளு மாதிரி நம்மளுக்கு இறைவனை வந்து— சொல்லுங்க, குட்டி, சொல்லி குட்டி. சொல்லுங்க. ரைட். சோ, பேசுங்க, பேசுங்க.


===========================
# ஏன் சிவபுராணம் பாடலில் முதல் வரி  - "நமச்சிவாய வாழ்க"  என்று உள்ளது?
===========================


மீண்டும் சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


(இறைவா)  நீ நல்லா இருக்கணும் ஃபர்ஸ்ட். நீ நல்லா இருந்தா, நானும் நல்லா இருப்பேன். அப்படித்தான் வேண்டுவேன். அதான்... அதனாலதான் சிவபுராணத்துல முதல் வார்த்தையே என்னன்னு படிச்சிருக்காங்க. "நமச்சிவாய வாழ்க" அப்படின்னு பாடி இருக்காங்க இல்லையா? 


அதாவது முதல்ல சிவபெருமான், நீ வந்து, நீ முதல்ல நல்லா இருக்கணும். நீ நல்லா இருந்தாலே, நீ வந்து என்னை நல்லாதான் வச்சிருப்ப. அந்த மாதிரி ஃபர்ஸ்ட் நான் ஒரு... இங்க வந்து, திருவண்ணாமலைக்கு நேத்து போயிருந்தேன். 


===========================
# திருவண்ணாமலையார் தரிசனம் 
===========================


அங்க போன உடனே, அந்த சிவபெருமானை பார்த்த உடனே, எனக்கு என்ன கேட்கிறேனே தெரியல. ஒரே அழுகையா வந்துச்சு. அது எனக்கும் அவருக்கும் உள்ள ஒரு பாண்டிங், அவ்வளவுதான். நான் பேசவே மாட்டேன். பார்த்துக்கிட்டே இருப்பேன். அங்க அந்த லைன் போக முடிக்கிற வரைக்கும், நான் அவரை பார்த்துக்கிட்டே இருப்பேன். எதுவுமே கேட்க மாட்டேன். அவருக்கு தெரியும், நம்ம எல்லாம் என்ன கேட்கிறது? 


என்னை என்ன படிக்க வை? எனக்கு வந்து நிறைய... 


ஞானத்தை கொடுன்னு வேணா கேட்கலாம். அது கொடு, இது கொடு, இப்படின்னு எப்படி கேட்க முடியும்? 


அது அவருக்கே தெரியும். உனக்கு என்ன கொடுக்கணுமோ, அவர் வந்து கண்டிப்பா ஒரு நாள் தருவாரு. அதுக்குள்ள பக்குவம் வந்துச்சுன்னா, அவரே ஆட்டோமேட்டிக்கா தருவாரு. நம்ம எல்லாம் போயிட்டு, எனக்கு இது தா, எனக்கு அது தான்னு கேட்கிற, அவர் என்ன ஆர்டரா பண்றோம்? அப்படி கேட்கக்கூடாது. 


அவரா வந்து நம்மளுடைய மனப்பக்குவம்... அதாவது சிவபெருமான் என்ன பண்ணுவாரு? கொஞ்சம் சோதிக்கத்தான் செய்வாரு. எதுக்கு? நம்ம மனசு வந்து பக்குவம் அடைகிறதுக்காக. சோதனை தந்து, நம்ம மனசை பக்குவப்படுத்திட்டு, அதுக்கு அடுத்து, அவன் பக்குவம் ஆயிட்டானா அப்படின்னு பார்த்துட்டு தான், நமக்கு என்ன தேவையோ, அதை கண்டிப்பா தருவாரு. 


அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )


===========================
# உங்கள் கர்மவினை தீர - மிக சிறந்த வழிபாடு, கூட்டுப் பிரார்த்தனைக்கு  அடியவர்கள் அவசியம் தவறாமல் வருவது ஒன்றே ஆகும் !!!
===========================


குருநாதர் :-  குழந்தாய், அறிந்தும், பல வினைகள் தீர்ப்பதற்கு அனைவரும் ஓடோடி வந்துள்ளார்கள். இதனால் சிவபெருமானிடம் அறிந்தும், அதாவது நீ எதை என்று அறிய, அனைத்தும் பாடலாக பாடு. நிச்சயம் அவர்களை வேண்டி, பின் அதாவது ஈசனை அழகாக நிச்சயம் பின் மனதிலே நிறுத்தச் சொல். அப்பொழுது நீ பாடு, நிச்சயம் ஈசன் அருள் புரிவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் நீங்களே சொல்ல சொல்றாரு. என்ன சொல்றாரு? சொல்லுங்க. எல்லாரும் ஈசனை ஒரு மனசுல நினைச்சுக்கோங்க. வந்து என்னென்ன வேணும், என்னென்ன சொல்லி நீங்களே நினைச்சுக்கோங்க. நீங்க பாடல் பாடினீங்கன்னாவே தானா ஈசன் தேவையானதெல்லாம் கொடுப்பாருன்றாரு. வந்து நீங்க திருப்பியும் பாட சொல்றாரு. சொல்லுங்கமா. 


( அவசியம் பின்வரும் இவ் வாக்கினை நேரலையில் காண்க )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=16023 


===========================
# பக்தியின் ஒன்பது நிலைகள் 
===========================
# ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்ம நிவேதனம்.
===========================


உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


எல்லாரும் உங்க மனசுக்குள்ள, ஈசன் அவர்கள் வந்து, கண்டிப்பா நினைச்சுக்கோங்க. நீங்க நினைச்சீங்கனாலே அவர் வந்து புரிஞ்சுக்குவார். 


சரி நம்மள வந்து (இவங்க) கூப்பிடுறாரு. அதாவது, சிவபெருமான் என்ன செய்வாராம்? ஒரு நாள் இல்லனா, ஒரு நாள் கண்டிப்பா அவர் வராம். 


(சிவபெருமான் ) இவர் என்ன வரவே மாட்டேங்குறாரு?  நம்ம இத்தனை நாள் கூப்பிட்டுக்கிட்டே இருக்கோம்?  அப்படின்னு நினைக்கக்கூடாதாம். 


நாம  அவரை வந்து நினைச்சுக்கிட்டே இருக்கணும். அப்புறம் நம்ம எதுக்கு பிறந்திருக்கோம்? அவரை வந்து நினைச்சுக்கிட்டே இருக்கணும். அவர் பாடிக்கிட்டே இருக்கணும். 


பாட தெரியுதா? பாடணும். ஒன்னும் இல்ல. அதாவது, பக்தியை 9 விதமா பிரிச்சிருக்காங்க: ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்ம நிவேதனம். இப்படி 9 வகையா பிரிச்சிருக்காங்க. 


===========================
# இறைவனை அடைவதற்கான ஒன்பது வழிகளின் எளிமையான விளக்கங்கள். இவ்  வழிகள் இதுவரை தெரியாதவர்கள் , இவ் அம்மையின் வாக்குகளை நேரலையில் கேட்டு அதன் படி இறைவனை வணங்கவும்.
===========================

(1) ஸ்ரவணம் அப்படின்னா கேட்டல் அப்படின்னு பொருள். அவரைப் பத்தி பாடல்களோ, அல்லது இந்த மாதிரி உபநியாசங்களோ, இந்த மாதிரி அவரை கேட்டுக்கிட்டே இருக்கணுமாம். இந்த மாதிரி கேட்டு வழிபடுவது தான் ஸ்ரவணம்.  (1.ஸ்ரவணம்: இறைவனின் திருவிளையாடல்கள், கதைகள் மற்றும் புகழைக் காதுகளால் கேட்டல். ) 


(2) இரண்டாவது கீர்த்தனம். கீர்த்தனம்னா தான் பாடுவது. அவருடைய நாமங்களையோ, அவருடைய பாடல்களையோ பாடி வழிபடுவது தான் கீர்த்தனம்.  (2.கீர்த்தனம்: இறைவனின் புகழைப் பாடி மகிழ்தல். ) 


(3) மூன்றாவது ஸ்மரணம். இந்த ஸ்மரணம் என்னன்னா, மனசுல நினைச்சல் அப்படின்னு பொருள். இப்போ கைக்குழந்தையின் தாய் எப்படி? குழந்தை வந்து தூங்கிட்டு தான் இருப்பா. ஆனாலும் அவளோட மனசு என்ன? எங்க இருக்கும்? குழந்தை நினைப்பாவே இருக்கும். அவ வேலை செஞ்சுகிட்டே இருப்பா. குழந்தை முழிச்சிருப்பானா? தூங்கி இருப்பானா? அப்படின்னு குழந்தை நினைப்பாவே இருக்கும் இல்லையா? அதே போல தான் நம்மளும் இருக்கணுமாம். சிவபெருமானை நினைச்சுக்கிட்டே இருக்கணுமாம். என்னதான் வேலை வேலையா இருந்தாலும், சிவபெருமானை ஒரு பக்கம் நினைச்சுக்கிட்டே இருக்கணுமாம். இப்படி நினைச்சு வழிபடுவது தான் ஸ்மரணம்.  (3.ஸ்மரணம்: எப்போதும் இறைவனையே நினைவில் கொள்ளுதல் (அனுமன், மீரா போன்றவர்கள்). )


(4) நான்காவது பாத சேவனம். அவருடைய பாதாரவிந்தங்களையே வணங்குவது பாத சேவனம். (4.பாத சேவனம்: இறைவனின் திருவடிகளைச் சரணடைந்து தொண்டு செய்தல். )


(5) ஐந்தாவது அர்ச்சனம். அதாவது, நம்ம விளக்கு பூஜை எல்லாம் பண்ணுவோம் இல்லையா? 108 போற்றி, 1008 போற்றின்னு அர்ச்சனை செய்து வழிபடுவது அர்ச்சனம். (5.அர்ச்சனம்: மலர்களால் இறைவனைப் பூஜித்து வழிபடுதல். ) 


(6) வந்தனம்: இறைவனை வணங்கிப் பணிதல். 


(7) தாஸ்யம். தாஸ்யம் அப்படின்னா, கடவுள் எனக்கு எஜமான். நான் அவருக்கு ஒரு தொண்டன். இல்ல, அவருக்கு வேலைக்காரன். இப்படி நினைச்சு வழிபடணுமாம். இது வந்து தாஸ்யம். ( 8.தாஸ்யம்: இறைவனின் தாசனாக (அடிமையாக) இருந்து சேவை செய்தல் (அனுமான் , இலட்சுமணன்). ) 


(8) எட்டாவது சக்யம். சக்யம்னா, அதாவது, நான் இப்படித்தான் நினைச்சு வழிபடுறேன். நமக்கு எத்தனையோ பிரண்ட்ஸ் இருக்காங்க. அதோட சிவபெருமானையும் ஒரு பிரண்டா ( Friend / நண்பனாக )  நினைச்சுக்கணுமாம். அவர் எனக்கு ஒரு தோழன். நானும் அவருக்கு ஒரு தோழி. இப்படி நினைச்சு வழிபடுவது தான் சக்யம்.  ( சக்யம்: இறைவனோடு நட்புறவு கொள்ளுதல் (அர்ஜுனன், சுக்ரீவன்). 


( இவ்விடத்தில் அடியவர்கள் பலத்த கைதட்டல்கள் ) 


(9) ஒன்பதாவது ஆத்ம நிவேதனம். ஆத்ம நிவேதனம் அப்படின்னா, நம்மளுடைய ஆத்மாவையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்றது. அதாவது, சிவபெருமானே, நீ எல்லாத்தையும் பார்த்துக்கோ. நான் என்னத்துக்கு இருக்கேன்? நீ எல்லாத்தையும் பார்த்துக்கோ. அப்படின்னு நம்மளுடைய ஆத்மாவையே அர்ப்பணம் செய்றது. (9. ஆத்ம நிவேதனம்: தன்னையே முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்தல் (சரணாகதி) ) 


எங்க அம்மா இப்படித்தான். எங்க அம்மா நல்லா பாடுவாங்க. அவங்க வந்து கச்சேரில எல்லாம் பாடும்போது தொண்டை கட்டிடும். அப்போ சிவபெருமானை பத்தி சொல்லுவாங்க. 


சிவா, எனக்கு இன்னைக்கு தொண்டை கட்டிருக்கு. பரவாயில்லை. யாரு எனக்கு வந்து கெட்ட பேர் வந்தாலும், நீதான் வாங்கிக்கணும். நல்ல பேர் வந்தாலும், நீதான் வாங்கிக்கணும். அப்படின்னு சொல்லுவாங்க. அதே போல தான் நம்மளுடைய ஆத்மாவையே அவர்கிட்ட அர்ப்பணிக்கிறது தான் ஆத்ம நிவேதனம். 


இப்படி ஒன்பது வகைகள் இருக்கு பக்தியில். இப்போ இந்த தெப்பக்குளம் இருக்கு. நாலு படித்துறைகள் இருக்கு. அதுல எந்த படித்துறை வழியா இறங்கினாலும், தெப்பகுளத்து தண்ணில இறங்கிடலாம் இல்லையா? அதே போல தான், இந்த பக்தியும் ஒன்பது வகைகள் இருக்கு. அந்த ஒன்பது வகையில ஏதாவது ஒரு வகை நம்ம வந்து ஃபாலோ பண்ணாலும், கண்டிப்பா இறைவனை அடையலாம். இறைவன் நம்மளையே வந்து கூட்டி, அதாவது நம்மளையே ஆட்கொண்டுருவார் சிவபெருமான். இந்த மாதிரி ஒன்பது வகையில ஏதாவது ஒரு வகையில நீங்க ஃபாலோ பண்ணலாம். 


===========================
# அடியவர்களின் புரிதலுக்காக - இறைவனை அடைவதற்கான ஒன்பது வழிகளின் எளிமையான விளக்கங்கள்:-


1. ஸ்ரவணம்: இறைவனின் திருவிளையாடல்கள், கதைகள் மற்றும் புகழைக் காதுகளால் கேட்டல். (ஸ்ரீ ராம பக்த அனுமான்)
2. கீர்த்தனம்: பகவானின் புகழைப் பாடி மகிழ்தல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)
3. ஸ்மரணம்: எப்போதும் இறைவனையே நினைவில் கொள்ளுதல் (ஸ்ரீ ராம பக்த அனுமான், மீரா போன்றவர்கள்).
4. பாத சேவனம்: இறைவனின் திருவடிகளைச் சரணடைந்து தொண்டு செய்தல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)
5. அர்ச்சனம்: மலர்களால் இறைவனைப் பூஜித்து வழிபடுதல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)
6. வந்தனம்: இறைவனை வணங்கிப் பணிதல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)
7. தாஸ்யம்: இறைவனின் தாசனாக (அடிமையாக) இருந்து சேவை செய்தல் (ஸ்ரீ ராம பக்த அனுமான் , இலட்சுமணன்).
8. சக்யம்: இறைவனோடு நட்புறவு கொள்ளுதல் (ஸ்ரீ ராம பக்த அனுமான், அர்ஜுனன், சுக்ரீவன்).
9. ஆத்ம நிவேதனம்: தன்னையே முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்தல் (ஸ்ரீ ராம பக்த அனுமான், சரணாகதி). 
===========================

அதனால எல்லாரும் சிவபெருமானை மனசுல நினைச்சுக்கோங்க. ஒரு பாடல்.


உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-  


நேரலை :- https://www.youtube.com/watch?v=NqRaI13qIDU&t=16257s

திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய பாடல்:- 


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே 

……………..
……………..
……………..
……………..



( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment