​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 25 June 2026

சித்தன் அருள் - 2235 - அன்புடன் அகத்தியர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1

நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

முழு நிகழ்வின் நேரலை :-  https://www.youtube.com/live/C5OQ5pL4GnY

இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


===========================
# இவ் பகுதி 1 வாக்கின் நேரலை :-   https://youtu.be/NqRaI13qIDU?t=12010 
===========================

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து, செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்கும், அம்மையே அனைவருக்கும், எம்முடைய ஆசிகள். கவலைகள் வேண்டாம். 

ஏன், எதற்கு, இத் தேசத்தை எவ்வாறெல்லாம் நடைபெற, எதை என்று புரியாமலும் மனிதன் இருக்கின்றான். வாழ்வது எது என்று அறிய, வாழ்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். 

ஆனாலும் அழிவு, மிகப்பெரிய அழிவுகள் காத்துக் கொண்டிருக்கின்றது. 

ஆனால் மனிதனுக்கு அவை தெரிவதே இல்லை. ஆனாலும் அதை எப்படி காப்பாற்றுவது? 

ஆனால் மனிதன் சொல்வான். ஆனால் அதை எப்படி காப்பாற்றுவது என்பதெல்லாம் தெரியாமல் போய்விடுகின்றது. 

அதனால்தான் உங்களை நிச்சயம் தன்னில் கூட அழைத்தேன். 

எப்படி எல்லாம் நிச்சயம், எவ்வாறாக எல்லாம், எதை பொருட்படுத்த முடியாமல் போகின்றது. எதை எதற்குள் வைக்க, எதை என்று புரிந்தும் கூட மனிதன் செய்வதானால், நிச்சயம் உலகத்தின், அதாவது உலக அழிவிலிருந்து காக்கலாம். 

===========================
# பேரிடர் முன்னெச்சரிக்கை……
===========================
# இறைவனால் நுண்ணுயிர் மூலம் எவ் மருத்துவரால் தடுக்க முடியாத நோய் வர உள்ளது.
===========================

நிச்சயம், அதாவது மனிதன் எதை ஏது என்று செய்ய, மனிதன் எதற்கும், அதாவது அஞ்சுவதும், பின் ஏது என்று, அதாவது மனிதனுக்கு பல வகைகளிலும் கூட நோய்கள் வரப்போகின்றது. 

ஆனால் அதை யார் தடுப்பார்? சொல்லுங்கள். 

எவ் மருத்துவராலும் முடியாது. 

ஏனென்றால் ஒரு தடவை இவை வந்துவிட்டால், ஒன்று பின் ஆள் நிச்சயம் தன்னில் கூட இறந்துவிடலாம். 

ஆனாலும் அவை இதன் உள்ளுக்குள்ளே இருந்து, இருந்து மீண்டும் அறிந்தும் கூட, எதை என்று தெரியாமல் அப்படியே 10 வருடங்கள், 15 வருடங்கள் இருக்கும். 

ஆனாலும் அறிந்தும் கூட, அதை அப்படியே நிச்சயம் தன்னில் கூட உங்களை சார்ந்தவர்கள், உறவினர்களுக்கு நீங்களும் ஏற்றிவிட்டு செல்வீர்கள். 

இப்படி இருக்க எப்படி நலமாகும்? அதனால்தான் பின் அதிவிரைவிலேயே நிச்சயம் அவ் நுண்ணுயிராயினது வரத்தான் போகின்றது, தாக்கத்தான் போகின்றது. அப்பொழுது பின் யாராலும் முடியாது. 

அதனால்தான் முன்னெச்சரிக்கையாகவே அனைவருக்கும் உண்மைகளை தெரிவித்துக் கொள்ள வைத்து, அதன் மூலம் உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவ் அழிவுகளும் கூட இறைவனே தான் தருவது. எதனால் இறைவன் தருவதை எவரால் நிறுத்த முடியும்? நீங்களே சொல்லுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? இதுல என்ன சொல்றாங்கன்னு.


அடியவர் :- ஒரு நுண்ணுயிர் கிருமி, வைரஸ் கிருமி வரப்போகுது அப்படின்றாங்க. அது வந்தா ஆளுக்கு உடனடியா மரணம். அப்படி வந்தாலும் போகாதுப்பா.

சுவடி ஓதும் மைந்தன் :- இது எப்படி சொல்றாருன்னா, மனிதன் வந்து வாழ்றேன்னு நினைச்சுட்டு இருக்காங்க. வந்து நம்ம வாழ்றோம்னு எல்லாரும் நல்லா இருப்போம்னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனால் அது முடியாதப்பா. ஆனா அழிவுகள் என்பது மனுஷனுக்கு எல்லாருக்கும் தெரியும்ன்றார். அழிவு வரப்போகுதுன்னு சொல்லலாம். எல்லாரும் சொல்லலாங்க ஐயா, அழிவு வரப்போகுதுன்னு. ஆனால் அதை எப்படி தடுப்பது என்பது யாரும் தெரியாதப்பா மனிதனுக்கு அதுதான் மனிதனோட பொய் வேஷம். 

அதுதான் மனிதனுக்கு வந்து உண்மைகள் தெரியாதுப்பா. அதனால இன்னும் சில காலம், அந்த ஒரு அந்த வைரஸ் வந்துச்சுன்னா, உள்ளுக்குள் போயிடுச்சுன்னா யாராலும் காப்பாத்த முடியாதுன்றார். ஆனா அந்த வைரஸ் எப்படியா இருக்கும் தெரியுங்களா? மருந்தோடு கண்ட்ரோல் பண்ணலாம். ஆனாலும் என்ன ஆகும்? வந்து அப்படியே தான் இருக்கும். 10 வருஷம், 15 வருஷம் அப்படியே இருக்கும். அப்ப என்ன ஆகும்னா, அடுத்து உங்க உறவினர்கள், சொந்தக்காரர்கள் எல்லாம் நீங்க நினைக்கிறீங்க இல்ல? அது அப்படியே பரவுமாம். அப்ப பரவிட்டு நீங்க எல்லாம் நினைச்சிருக்கிறீங்க. வந்து எனக்கு அண்ணன் இருக்கிறான், அக்கா இருக்கிறான், அப்படி இருக்காங்க. இவ்வளவு சொந்தக்காரங்க, பெரியம்மா, பெரியப்பா என்ன ஆகும்? 

பரவும் பொழுது அப்ப யார் கெடுக்கிறது? எல்லாரையும் மனிதன் தான் கெடுக்கிறான். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதை யாராலும்????? 

அடியவர் :- தடுக்க முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- தடுக்க முடியாது. ஏன்னா யார் கொடுக்கிறது? இதை?

அடியவர் :- இறைவன் கொடுக்கிறது. 

சுவடி ஓதும் மைந்தன் :- கடவுள் கொடுக்கிறது. 

சுவடி ஓதும் மைந்தன் :- கடவுள் கொடுக்கிறத யாராவது தடுக்க முடியுமா? 

அடியவர் :- நிச்சயம் தடுக்க முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- நிச்சயம் முடியாது. அதனால நீங்கள் சில விஷயங்கள் தெரிஞ்சுக்கோங்கப்பா. முதல்ல உங்களை நீங்க காப்பாத்திக்கோங்கன்றார். வந்து ஐயா, புரியுதுங்களா? அதனால வந்து கலியுகம் ஐயா இது.  

சுவடி ஓதும் மைந்தன் :-  உலகத்தை மனுஷனை காப்பாத்த முடியல. அப்ப என்ன பண்ணுவார்? இறைவன் வந்து கடைசில யார் வரணும்? கிளைமாக்ஸ்ல இறைவன் தான் வரணும். இறைவன் தான் வரணுங்க. ஐயா, எல்லை மீறி போயிட்டு இருக்குங்க. ஐயா, உலகத்துல 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( சில நல் விளக்கங்கள் அளித்தார்கள்  ) 

===========================
# மூளை சுறுசுறுப்பு ஆடைய ஒரு பாடல்…
===========================

குருநாதர்:- அப்பனே, அனைத்தும் அறிந்து வைத்திருக்கின்றேன். அப்பனே, அதனால் அப்பனே, முதலில் அப்பனே, மனிதனுக்கு அப்பனே, மூளை சுறுசுறுப்பு ஆகட்டும். அப்பனே, இதனால் சுறுசுறுப்புக்காக, அப்பனே, நிச்சயம் ஒரு பாடலை பாடுக. பின்பு ஒப்படைக்கின்றேன். 

பாடகர் :- ( மருதமலை மாமணியே முருகையா பாடல் பாடினார்கள்  )

நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=12684 

===========================
ஆதி ஈசனார் வேடம் அணிந்த சிவ குழந்தை, அன்புடான்  அகத்திய மாமுனிவரால்  அன்னையே , தாயே என்று அழைக்கப்பட்ட குழந்தையின் வருகை…. 
===========================

ஆதி ஈசனார் வேடம் அணிந்த சிவ குழந்தையின்  பாடல் :-  ( சுவடி ஓதும் மைந்தன் பாடல் பாட அழைத்தார்கள். அதன் பின்னர் , தனது மழலை,  வெண்கலக் குரலில் சம்போ சிவ சம்போ என்ற பாடல் அருமையாக பாட ஆரம்பித்தார்கள் ) 

( அடியவர்கள் அனைவரும் , அவசியம் இவ் மகிமை புகழ் குழந்தையின் பாடலை நேரலையில் அவசியம் ஒன்று விடாமல் காண்க. )

நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=13073 

( பாடல் பாடி முடித்தவுடன் )

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

குருநாதர்:- அப்பனே, புதுமையான விஷயங்கள் எது என்று புரிய, அப்பனே, அனைவருக்கும் புரிய வைக்கின்றேன். நல்விதமாக இவ்வாறாக, அப்பனே, புரிந்து செயல்பட்டால், வினைகளும் தீரும். எது என்றறிய நிச்சயம் தன்னில் கூட,  குழந்தைக்கும் எம்முடைய ஆசிகள். வருங்காலத்தில் உயர் ஸ்தலத்தை அடையச் செய்வேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( சிவ குழந்தையை பார்த்து,  அம்மா!!!  )  உங்களுக்கு ஆசிங்களம். வருங்காலத்தில் இன்னும் இந்த அம்மாவை, இந்த குழந்தையை வந்து என்ன பண்ணுவாரு? உயர்ந்த இடத்தை அடைய வைப்பார் சித்தர்கள்.

===========================
# சிவ குழந்தைக்கு , சுவடி ஓதும் மைந்தனுக்கு  மரியாதை செய்வித்தல்
===========================


அங்குள்ள ஒரு சிவனடியவர் மேடையின் அருகில் வந்து  சிவ குழந்தைக்கு , சுவடி ஓதும் மைந்தனுக்கு  மரியாதை செய்வித்து ஆசிகள்:- 


நேரலை -  https://youtu.be/NqRaI13qIDU?t=13480

அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள்..அதனை தொடர்ந்து வாக்குகள்   )

===========================
# ஈசன் உடுக்கை  எடுத்து,  இவ் உலகை உலுக்கப் போகின்றார்…….
===========================

நேரலை - https://youtu.be/NqRaI13qIDU?t=13505

குருநாதர்:-  குழந்தாய், அடுத்த பாடலையும் அறிந்தும் கூட அனைவருக்கும் நலம் விரும்பி, ஏனென்றால் ஈசன் உலகை—அதாவது ஒரு உடுக்கை எடுத்து உலுக்கப் போகின்றான். இதனால் அனைவரும் கவலைக்குள்ளாகி விடுவார்கள். இதனால் அனைவரும் பின் நன்றாக. அதனால் ஈசன் நினைத்து அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம், நீயே உன் மனதில் என்ன படுகின்றதோ அதைச் செய். 


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-   
(         ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
நீதி தழைக்கின்ற திருபோரூர் தனிமுதலே – நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு….. முருகா… முருகா…


நீயல்லால் தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!
முருகா நீயல்லால் தெய்வமில்லை!  )
 
நேரலை - https://youtu.be/NqRaI13qIDU?t=13619 

( பாடல் பாடி முடித்த பின்னர்..மீண்டும் குருநாதர் வாக்குகள் ஆரம்பமானது…. ) 

===========================
# தாயே….உனக்கு என்ன வேண்டும்? கூறு?
===========================

குருநாதர்:-  அறிந்தும் எதை என்று புரிய, வரும் காலத்தில் உண்மையானவை எல்லாம் அறிந்தும். இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு பல நோய்கள், பலவற்றை நிச்சயம் தன்னில் இழந்தவைகள் என்றெல்லாம் நிச்சயம் வரும் அப்பா. இதனால் நிச்சயம் தன்னில் கூட அனைவரையும் ஈசனிடம்…. (நன்றாக இருக்க வேண்டினாய்). 

===========================
# இப்போது ஒரு அம்மை அடியவர் சிவ குழந்தைக்கு மல்லிகைப்பூ மலை அணிவித்தார்கள் ……அடியவர்கள் கைதட்டல்கள் 
===========================

குருநாதர்:-  அதனால் தாயே, எதை என்று புரிய, இதை என்று அறிய, நிச்சயம் உனக்கு என்ன வேண்டும்? கூறு?. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் உனக்கு என்ன வேண்டும்னு கேட்கிறார். நீங்க நல்லா யோசித்து உடனே சொல்லுங்க. 

சிவ குழந்தை :- ( என்ன கேட்பது என்று யோசனை… )

சிவ குழந்தையின் தந்தை :- ( சில யோசனைகளை உரைக்க முற்பட்டார்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க சொல்லிக்க கூடாதுங்க ஐயா. அவங்களுக்கே, பாப்பாக்கே, குழந்தைக்கு என்ன வேணும்னு கேட்கலாம். 

===========================
# அவ் குழந்தை தாயின்,  மிக உயர்ந்த, சித்தர்கள் விரும்பும் குணம் 
===========================

https://youtu.be/NqRaI13qIDU?t=14063

சிவ குழந்தை :- “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” ( என்று சுவடி ஓதும் மைந்தனிடம் தெரிவித்தார்கள்)

மேடையில் உள்ள அடியவர்கள் :- ( மகிழ்ச்சியில் கைதட்டல்கள்…. ) 

சுவடி ஓதும் மைந்தன் :- பாத்தீங்களா, இதுதான் அகத்தியரோட வேலை. எல்லாரும் நல்லா இருக்கணும். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( மகிழ்ச்சியில் கைதட்டல்கள்…. ) 


சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விளக்க உரைகள் ) 

குருநாதர்:-  குழந்தாய், பின் இன்னும் உனக்கு தருகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- குழந்தைக்கு வந்து இன்னும் உனக்கு நான் தரேன்றார். அகத்தியர் வந்து அம்மா, உங்களுக்கு இன்னும் நிறைய மென்மேலும் படிப்பாலும் சரி, என்னாலும் சரி. வந்து உங்களுக்கு வந்து நல்லா வந்து இன்னும் மென்மேலும் உயர்வுகள் இன்னும் நிறைய பெரிய ஆயிடுவாங்க ஐயா. 

சிவ குழந்தைக்கு அன்பளிப்பு , ஆசீர்வாதங்கள் :- ( ஒரு அடியவர் மேடையின் அருகில் வந்து அன்பளிப்பு, ஆசி.  ) 

சுவடி ஓதும் மைந்தன் :- பெரிய சந்தோஷம் ஐயா. ரைட், சந்தோஷம் ஐயா. 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

குருநாதர்:-  தாயே, அனைவரும் நன்றாக இருக்க. மீண்டும் ஒரு… பின் உன்னால் அறிந்தும்… உன் ஆரோக்கியத்திற்காக இன்னும் உனக்கு அனைத்து பரிசுகளையும் நான் பெற்று தருகின்றேன். கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் வந்து உங்களுக்கு பரிசுகளையும் பட்டங்களையும் நான் வாங்கி தரேன்றார் அகத்தியர். அதேபோல, மத்தவங்களுக்காக இன்னும் ஒரு பாடலை பாடுன்றார். எல்லாரும் நல்லா இருக்கணும். வேண்டி இறைவனிடத்தில இன்னும் பாடு. நான் உனக்கு பரிசுகளும் பட்டங்களையும் அங்கங்க நான் பெற்று தரேன்றார். பாடுங்கமா. 

சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-   ( தயியற் சிறந்த கோயிலும் இல்லை ..தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை   )


===========================
# மெய்மறந்து, அன்பு உணர்ச்சிகள் பொங்க …. இவ் பாடலை… அடியவர்கள் அனைவரும் அங்கு மிகவும் ரசித்து, ரசித்து  கேட்டனர். அவசியம் இவ் குழந்தையின் பாடலை அவசியம்  கேளுங்கள் நேரலையில்……..
===========================

பாடல் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=14294 

( மீண்டும் வாக்குகள் ஆரம்பமானது )

===========================
# குழந்தைகள் இறைவனிடத்தில் உடனடியாக கேட்டால் அனைத்தும் கிட்டும்.
===========================

குருநாதர்:-  அழகாகவே குழந்தைகள் — இறைவனிடத்தில் உடனடியாக கேட்டால் அனைத்தும் கிட்டும். இதனாலே வருங்காலத்தில் கூட குழந்தைகள் நோயுடனே பிறக்கும். அதாவது, அறிந்தும் சில சில விஷயங்கள் குழந்தைகள் எதை என்று தெரியாமலே சிறுவயதிலே பாதிக்க, எது என்று புரியாமலும். ஈசனின் அருளால் தான் அனைத்தும் நடக்க வேண்டும்; இதனால்தான் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றேன். குழந்தாய், உனக்கு என்ன வேண்டும்? வரத்தை உடனே கொடுக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, நல்ல அகத்தியர் என்ன சொல்றார் என்றால், "உனக்கு என்ன வரம் வேணும்?" என்று கேட்டுக்கொண்டார் அகத்தியர். நல்லா பார்த்து கேளுங்க. அடுத்து, "உங்களுக்கு என்ன வரம்?" உடனே நான் கொடுக்கிறேன் என்றார். 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு என்ன வேணும்னா கொடுக்கிறார் அகத்தியர். கேளுங்க. 

சிவ குழந்தை :- ( அவர் எது தந்தாலும் சரிதான்) 

சுவடி ஓதும் மைந்தன் :-  பார்த்தீங்களா ( என்ன சொன்னாங்க?)  அவர் எது தந்தாலும் சரிதான். இது யாருக்குங்கய்யா வந்து மனம் வரும்? ஐயா, 

அடியவர்கள் :- கைதட்டல்கள் ……

சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் அகத்தியர். இன்னைக்கு கூட வந்து இதெல்லாம் அகத்தியர் செய்த இதுதான். பார்த்தீங்களா? யாராவது இது மாதிரி கேள்வி கேட்பாங்க. (............சில விளக்கங்கள் .................) இந்த மனசு தான் விரும்புவார்=  அகத்தியர்.  வேற எந்த மனசும் விரும்ப மாட்டார். 

===========================
# ஞானத்தின் மூலம் இவ்வுலகத்தை உன்னை பார்க்க நிச்சயம் வைப்பேன். 
===========================

குருநாதர்:-  குழந்தாய், அழகாக சொல்கின்றேன். இன்னும் ஞானத்தை கொடுக்கின்றேன். ஞானத்தின் மூலம் இவ்வுலகத்தை உன்னை பார்க்க நிச்சயம் வைப்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஞானத்தை கொடுக்கிறார் உங்களுக்கு. அறிவு கொடுக்கிறார். அகத்தியர் பணம் கொடுக்கிறேன்னு சொல்லல. உங்களுக்கு நிறைய படிப்பு கொடுக்கிறேன்னு சொல்லல. என்ன கொடுக்கிறார்? ஞானத்தை கொடுக்கிறேன். அந்த ஞானத்தின் மூலம் இந்த உலகத்தை உன்னை திருப்பி பார்க்க செய்றேன்றார்.  ரெண்டு கேள்வி கேட்டார். சரி, அடுத்து பார்ப்போம். 

குருநாதர்:-  அழகாக, குழந்தாய், கடைசி ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கின்றேன். என்ன வேண்டும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  கடைசி ஒரு சந்தர்ப்பம் உனக்கு என்ன வேண்டும்? இன்னொரு சான்ஸ். மைக்ல சொல்லுங்க. ஞானத்தை கொடுக்கிறேன்னு சொல்லிட்டாரு. 


சிவ குழந்தை :- ( ஞானம் போதும் எனக்கு) 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதுலயே போதும் எனக்கு என்று சொல்லிட்டாங்க. சரி. ஓகே, ஞானத்தை கொடுக்கிறேன்னு சொல்லிட்டு அதுல இருந்தே அவங்க பிழைச்சுப்பாங்க. பெரிய ஆளா வந்துருவாங்க. ஓகேங்களா? 

===========================
# தாயே, நீ வேண்டினால் ஈசன் நிச்சயம் இறங்குவான்.
# தாயே,  நீ வேண்டினால் நிச்சயம் ஆயிரம் பேருக்கு சமம். 
===========================

குருநாதர்:-  தாயே, அறிந்தும் அதாவது நீ வேண்டினால் ஈசன் நிச்சயம் இறங்குவான். அதாவது நீ வேண்டினால் நிச்சயம் ஆயிரம் பேருக்கு சமம். ஏனென்றால் அதுபோல் ஈசன் பலமுறை நீ பாடி இருக்கின்றாய். ஆலயத்தில் ஈசன் தாலாட்டு அறிந்தும் கூட பின் அழகாக உன்னை ஆசீர்வதித்திருக்கின்றான். அதுபோல் நிச்சயம் இங்கே நீ பாடு. ஈசன் வரட்டும். அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் தரட்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த குழந்தை நிறைய ஆலயங்கள்ல பாடி இருக்காங்களாம். அப்ப ஈசன் என்ன பண்ணிருக்காராம்? பார்த்திருக்காராம். வந்து பார்த்திருக்காரு. அதனால நீ இன்னொரு முறை பாடு. ஈசன் வந்து எல்லாரும் அந்த இறங்கணும். ஈசன் இறங்கினா எல்லாருக்கும் ஆசீர்வதிக்கணும். எல்லாம் புத்திகள் மாறட்டும்ன்றார். வந்து பாடுங்க. சிவபெருமானை நினைச்சு பாடுங்க. உங்களுக்கு என்ன தோணுதோ, உங்களுக்கு என்ன தோணுதோ, பாடுங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, நீங்க சொல்லிக் கொடுக்காதீங்க. அந்த அம்மாக்கு என்ன தோணுதோ, பாட சொல்றார். 

குருநாதர்:- தாயே, அதாவது குழந்தாய், உனக்கு என்ன தோன்றுகின்றதோ, அதை பாடு. எவ் ரூபத்திலும் எதை என்று ஈசன் தான் வருவான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாருன்னா, உனக்கு என்ன தோணுதோ, எந்த கடவுளை பத்தி வேண்டுமானாலும் பாடுங்க. ஆனா கடைசில ஈசன் தான் வரப்போறார். அதுதான் சொல்றாரு. அதனால எதை நினைச்சாலும் பாடுன்னு சொல்றாரு. ஆனா மக்களுக்கு நல்ல எண்ணங்கள் வரட்டும், நல்ல புத்திகள் வரட்டும், நல்ல ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும்னு சொல்றாரு. நீங்க பாடுனீங்கன்னா, ஈசன் என்ன பண்ணுவாராம்? ஆசீர்வாதம் கொடுத்துருவாராம். நிறைய இடத்துல நீங்க பாடி இருக்கீங்க. வந்து ஈசன் உங்களை வந்து ஆசீர்வாதம் பண்ணினார். அதனால பாடுங்க. நீங்க வந்து நல்ல மக்கள் நன்றாக இருக்கணும். உலகத்துல நிறைய தவறுகள் நடந்துட்டு இருக்குது. அதெல்லாம் காக்க இறைவனால் மட்டும்தான் முடியும். 

எத்தனையோ ( மனிதர்கள் ) , எத்தனையோ ( மனிதர்கள் ) இருந்தாலும், அவனெல்லாம் காக்க முடியாது. யாரால? நம்ம அப்பன், இறைவனால, நம்ம அப்பனால தான் காப்பாத்த முடியும். 

அதனால எல்லாரும் நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு, நன்றாக வேண்டிக்கொண்டு, இறைவன் அண்ணாமலையை, உண்ணாமலையை நல்லா வேண்டிக்கிட்டு ( பாடுங்க )...


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-   (  செல்லாத்தா ..செல்ல மாரியாத்தா …. )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=14972 

( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment