​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 29 October 2016

சித்தன் அருள் - 485 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!



அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஒரு மனிதன் எமக்கு பிரியமானவன், எமது வழியில் வருபவன் என்றால், எமது வார்த்தைகளை உள் நிறுத்தி, செவி கேட்டு, செயல் நடத்திக் காட்ட வேண்டும். ஒரு செல்வந்தன் இருக்கிறான். அவன் தனக்கு பிரியமான ஒரு உதவியாளனை அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது அவனுக்குக் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் அவன் உதவியாளனுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆயினும், அந்த உதவியாளன் தவறுகள் ஏதேனும் செய்தால், அவனை அழைத்துச் சென்ற செல்வந்தனுக்குத்தானே அந்த கேவலமும், ஏளனமும். அகுதொப்பத்தான் மிகப் பெரிய மஹான்களின் உன்னத கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும் எமக்கு, "எமது வழியில் வருபவன்  என்று கூறிக்கொண்டு, எமது வாக்கின் தன்மையை பிரதிபலிக்காமல் இருந்தால், அது எமக்கு ஏற்புடையதாக  இராது. எம்மையும், ஏளனப்படுத்துவதாகும். அப்படிப்பட்டவர்களுக்கு யாங்கள், பெயரளவுக்குத்தான் வாக்குகளை தருவோமே ஒழிய, ஆத்மார்த்தமாக அல்ல. புத்தி சொல்லி திருந்தவில்லை என்றால், "அவன் விதிப்படி வாழட்டும்" என்று விட்டுவிடுவோம். காலம், இடம், சூழல், சுற்றி உள்ள மனிதர்கள், வறுமை, வளமை, இல்லம், தொழில், இதில் எது சிக்கலாக இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, அறம், சத்தியம், இறை பிரார்த்தனையை மறவாதே. இவற்றை பின் தொடர்ந்து கொண்டே வா. யாம் உன் அருகில் இருந்து கொண்டே இருப்போம். ஆசிகள். சுபம்.

4 comments:

  1. ஒரு மனிதன் எமக்கு பிரியமானவன், எமது வழியில் வருபவன் என்றால், எமது வார்த்தைகளை உள் நிறுத்தி, செவி கேட்டு, செயல் நடத்திக் காட்ட வேண்டும். ஒரு செல்வந்தன் இருக்கிறான். அவன் தனக்கு பிரியமான ஒரு உதவியாளனை அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது அவனுக்குக் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் அவன் உதவியாளனுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆயினும், அந்த உதவியாளன் தவறுகள் ஏதேனும் செய்தால், அவனை அழைத்துச் சென்ற செல்வந்தனுக்குத்தானே அந்த கேவலமும், ஏளனமும். அகுதொப்பத்தான் மிகப் பெரிய மஹான்களின் உன்னத கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும் எமக்கு, "எமது வழியில் வருபவன் என்று கூறிக்கொண்டு, எமது வாக்கின் தன்மையை பிரதிபலிக்காமல் இருந்தால், அது எமக்கு ஏற்புடையதாக இராது. எம்மையும், ஏளனப்படுத்துவதாகும். அப்படிப்பட்டவர்களுக்கு யாங்கள், பெயரளவுக்குத்தான் வாக்குகளை தருவோமே ஒழிய, ஆத்மார்த்தமாக அல்ல. புத்தி சொல்லி திருந்தவில்லை என்றால், "அவன் விதிப்படி வாழட்டும்" என்று விட்டுவிடுவோம். காலம், இடம், சூழல், சுற்றி உள்ள மனிதர்கள், வறுமை, வளமை, இல்லம், தொழில், இதில் எது சிக்கலாக இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, அறம், சத்தியம், இறை பிரார்த்தனையை மறவாதே. இவற்றை பின் தொடர்ந்து கொண்டே வா. யாம் உன் அருகில் இருந்து கொண்டே இருப்போம். ஆசிகள். சுபம்.

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION, NOT WORD FOR WORD]

    If a person wants to earn our affection, wants to folow our (Siddha) path, he needs to listen to our advice, assimilate and heed it and implement it in day-to-day life.
    Take the case of a rich man, who is accompanied by his assistant, during his travel and meetings. This assistant receives the same respect and prestige as the rich man. But if this assistant makes some blunder, then that shame and blame falls on the rich man only. Similarly, to us Siddhars who are conveying the high philosophies of great mahaans, if a person who claims to follow our path, does not implement it in his real life, this is not acceptable to us (Siddhas). It amounts to dis-respect to us.
    To such people, we cannot give in-depth and clear-cut advice; at best, we may offer some superflous advice. If he does not change his attitude and his ways, we have no choice but to leave his life to his destiny.
    In spite of all problems/issues faced by you -- like money, family, job/business problems, social or surroundings problems, etc-- do not forget dharma (charity), truth and prayers to Divine. Keep adhering to these. We will always be beside you. Blessings. Subham.

    ReplyDelete
    Replies
    1. Om Agatheesaya Namah

      Our Mahamuni and All Siddhars are really taking care of us as Mother.

      Thank you so much for translating Supreme words of Mahamuni

      Delete
  3. Excellent transalation Brother Suresh Srinivasan, Aum Sairam, Om Agatheesaya Namaha

    ReplyDelete