​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 17 October 2016

சித்தன் அருள் - 472 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

தவறு செய்கின்ற எல்லா மனிதர்களுக்கும் தண்டனை உண்டு. அந்த தண்டனை, பிறர் கண்ணுக்குத் தெரியும்படி, பிறர் அறியத்தான் வர வேண்டும் என்பதில்லை. பிறர் அறியாமல் வருவதும் உண்டு. அப்படிப்பட்ட மனிதர்களை நீ பார்க்கவேண்டும் என்றால் இப்பொழுது யாரையெல்லாம் இழிந்த நிலையிலே, உடல் மிகவும் சோர்ந்த நிலையிலே, வியாதியினால் பீடிக்கப்பட்டு, பிறர் யாரும் திரும்பிக் கூட பார்க்காத நிலையிலே, பிற மனிதர்களால் ஒதுக்கப்பட்டு, உதாசீனப்பட்டு, அரசு மருத்துவமனைகளில், உயிருக்குப் போராடிக் கொண்டு அல்லது சாலை ஓரங்களில் உணவும், உடையும் இல்லாமலும் இருப்பார்கள். "இப்படி வாழவேண்டும் என்ற ஒரு விதி அவர்களுக்கு இருக்கும் பொழுது எதற்காக அவர்களுக்கு உதவ வேண்டும்" என்று ஒருவன் குதர்க்கமாக கேட்பான். அவர்களுக்கு உதவி செய்யும் பொழுது, கஷ்டத்தை தீர்ப்பவனின் கர்மா குறைகிறது, என்பதற்காகத்தான் அவ்வாறு கூறுகிறோம்.

No comments:

Post a Comment