​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 30 October 2016

சித்தன் அருள் - 486 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

மனிதர்கள் குற்றங்கள் செய்தால் தடுப்பதற்கு, சிறைச்சாலையை மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த சிறைச்சாலையே இல்லாத நிலை என்றாவது வந்துவிடுமா? அப்படியென்றால் குற்றங்களே இல்லாத மனிதர்கள் இருக்கிறார்கள், என்று பொருளாகிவிடும். அதைப் போல, ஆன்மாக்கள் செய்கின்ற தவறுகளுக்கு இந்த உலகிலே பிறந்து ஏற்கனவே செய்திட்ட பாவங்களுக்கு தண்டனையாக அல்லது ஒருவிதமான துன்ப அனுபவத்தை நுகர்ந்து அந்த பாவங்களை கழிப்பதற்காகத்தான், பிறவிகள் தரப்படுகின்றன. அது விலங்கு பிறவியோ, மனிதப் பிறவியோ, தேவப் பிறவியே, எந்தப் பிறவியாக இருந்தாலும், ஏற்கனவே சேர்த்த  புண்ணியத்தையும் நுகர வேண்டும், பாவத்தையும் நுகரவேண்டும்.  அப்படி நுகர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட எத்தனையோ  கூடங்களுள் இந்த பூமியும் ஒன்று. எனவே, இப்போதைக்கு குற்றங்களே செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை என்பதால், இந்த பூமி என்னும் சிறைச்சாலையை ஒட்டு மொத்தமாக அழிக்க இறைவன் இன்னும் எண்ணவில்லை. அப்படியொரு சூழலும் நிகழாது. பகுதி, பகுதியாக அழிவுகள் ஏற்படும். அதற்கு காரணம் வேறு.

2 comments:

  1. [ROUGH TRANSLATION, NOT WORD-FOR-WORD]
    Man has established jails to prevent crimes. If the day comes when there are no more jails, it would mean that there are no more criminals.
    Similarly, for the errors committed by souls, an opportunity is given to be born in this earth and to expiate past sins, by undergoing some sorrows. Whether in the body of animal, man, deva or any other body, the atma has to feel the effect of past punyas and sins. Many worlds have been created for this purpose, this earth is one such. As of now, the reality is that there are many souls with past sins. Hence the Divine has no intention of destroying this earth in totality, such a circumstance is unlikely to arise. Partial destruction may take place, there are separate reasons for it.

    ReplyDelete
    Replies
    1. Om Agatheesaya Namah.

      Thank you so much for explaining it so beautifully.

      Delete