​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 8 October 2016

சித்தன் அருள் - 463 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இகுதொப்ப, நலமாய், ஒவ்வொரு ஆத்மாவும், தன்னைத்தான் உணர்ந்து, ஆணவத்தை விட்டொழித்து, தன்முனைப்பை அணுவளவும் வளர்த்துக் கொள்ளாமல், பவ்யமாக, அவையடக்கமாக, தத்தம் கடமைகளை நேர்மையாக ஆற்றி, இறை பக்தியில் ஆழ்ந்து, பரிபூரண சரணாகதியிலே என்றென்றும் இருந்து, இயன்ற அளவு தர்மத்தை தொடர்ந்து வாழ்ந்து வந்தாலே, அவனவன் தலைவிதி கடுமையாக இருந்தாலும், அதை, இனிமையாக இறைவன் மாற்றுவார். இதைத்தான், யாங்கள் விதவிதமான வார்த்தைகளில் இயம்பிக் கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment