​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 9 October 2016

சித்தன் அருள் - 464 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

பக்குவமற்ற மனிதர்கள் பண்பாடு இல்லாமல் பேசுவதும், தாறுமாறான விமர்சனங்களை செய்வதும், சினம் வருவதுபோல் நடந்து கொள்வதும், இயல்பு. அவன் அப்படி நடந்து கொள்வதே சினத்தை வரவழைக்கத்தான். ஆனால், அவன் தோற்கவேண்டும் என்று எண்ணக்கூடிய மனிதன் என்ன செய்யவேண்டும்?  சினம் எழாமல் நாகரீகமாக தவிர்த்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால், அவன் வெற்றி பெற தானே ஒரு காரணமாகி விடக்கூடிய ஒரு சூழல் வந்துவிடும். எனவே, பண்பாடு இல்லாத மனிதர்களோடு நெருங்கிப் பழகாமல் ஒதுங்கி இருக்கவேண்டும். அப்படி தவிர்க்க முடியாமல் இருக்க நேரிட்டால், அமைதியான முறையிலே கூடுமானவரை மௌனத்தை கடைப்பிடிப்பதும், அகுதொப்ப, வாத பிரதிவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதுமே எம் வழி வரும் சேய்களுக்கு ஏற்றதாகும். இதை மனதிலே தெள்ளத்தெளிவாக பதிய வைத்து, தொடர்ந்து சினமில்லாமல், பதட்டமில்லாமல், கவலை இல்லாமல், கலக்கம் இல்லாமல் வேதனை இல்லாமல், வெட்கம் இல்லாமல் நாங்கள் கூறுகின்ற அனைத்து நல்ல காரியங்களையும் செய்ய எண்ணி, செய்து கொண்டு வரவேண்டும்.

No comments:

Post a Comment