​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 27 October 2016

சித்தன் அருள் - 483 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

நம்பிக்கையின் அடிப்படையில்தான் பக்தியே பிறக்கிறது. "இறைவனை நம்பு" என்பதற்காக, ஒரு மனிதன் தான் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து ஒதுங்கி கொள்வது என்பது கூடாது. இந்த இறை நம்பிக்கையின் அளவு மூடத்தனமாக ஆகிவிடவும் கூடாது. அதே சமயம் .நம்பிக்கையை விட்டு விலகும் வண்ணமும் ஆகிவிடக்கூடாது. உடல் நலம் சரி இல்லை என்றால் பிரார்த்தனை செய்வதோடு, மருந்தினையும் ஏற்கவேண்டும். எப்படி ஒரு மருத்துவன் எழுதி கொடுத்த ஒரு மருந்தை ஒரு பிணியாளன் நம்பிக்கையோடு ஏற்கிறானோ, அதே போல்தான் ஆலயம் செல்வதும், பிரசாதம் ஏற்பதும். அதோடு எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணமும் இருக்க வேண்டும்.

2 comments:

  1. ROUGH TRANSLATION:
    Bhakti is born from the foundation of Faith only. “Trust the Divine” does not mean that a person should give up his responsibilities. Faith in Divine should not turn into foolishness. Same time, one should not be deviating from his faith.

    If one is not well, apart from saying prayer, he should also take medicine. Going to temples and taking prasad is just like a patient trusting the medicines prescribed by his doctor. Same time, he should have the feeling that the Divine will look after all the matters.

    ReplyDelete
  2. Om Agatheesaya Namah.

    Thank you sir for your help and support in this divine play.

    ReplyDelete